கோவிட்-19: 153 புதிய பாதிப்புகள், 3 இறப்புகள், 113 நோயாளிகள்…

கோவிட்-19 நோய்த்தொற்றினால் இன்று 153 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்று வரை மொத்தம் 4,683 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று மேலும் மூன்று நோயாளிகள் இறந்துவிட்டதாக அறிவித்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை 76ஆக உள்ளது. 113…

ஜாலான் மஸ்ஜித் இந்தியா மூடப்பட்டுள்ளது

கோலாலம்பூரில் உள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் இரண்டு கட்டிடங்கள் தீவிர நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், அங்கு வாழும் மக்கள் கோவிட்-19 ஸ்கிரீனிங் சோதனையை மேற்கொள்ள அனுமதிக்க இப்பகுதியில் உள்ள அனைத்து வணிகங்களும் இன்று மூடப்பட்டன. இன்று காலை மலேசியாகினி நடத்திய ஆய்வில், இப்பகுதியில் உள்ள அனைத்து…

அறிக்கை: ஙாவுக்கு பதிலாகா அசாலினா துணை சபாநாயகராக நியமிக்கப்படுவார் என்று…

பெரிக்காத்தான் தேசிய கூட்டணி அரசாங்கம், ஙா கோர் மிங் என்பவருக்கு பதிலாக அசாலினா ஓத்மான் சைட்டை நாடாளுமன்ற துணை சபாநாயகராக நியமிக்கும் என்று சின் செவ் டெய்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷயத்தை அம்னோ தலைவர் அகமட் ஜாஹித் ஹமிடி அசாலினாவுக்கு அறிவித்ததாக அம்னோவிலிருந்து ஒரு ஆதாரம் மேற்கோளிட்டுள்ளது.…

கோவிட்-19: புதிய சிவப்பு மண்டலம் இல்லை

கோலாலம்பூர், ஏப்ரல் 12 - நேற்று மதிய நிலவரப்படி மொத்தம் இருபது மாவட்டங்கள் கோவிட்-19 சிவப்பு மண்டல பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. லெம்பா பந்தாய் அதிக எண்ணிக்கையிலான நேர்மறையான பாதிப்புகளை பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்பட்ட விளக்கப்படத்தின்…

சுங்கை புலோ மருத்துவமனைக்கு 150 படுக்கைகளை நன்கொடையாக வழங்கினார் பேரரசி

மாட்சிமை தங்கிய பேரரசி, துங்கு ஹஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியா அவர்கள், சுங்கை புலோ மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக 100 படுக்கைகளையும், கோலாலம்பூர் மருத்துவமனைக்கு மேலும் 50 படுக்கைகளையும் நன்கொடையாக வழங்கினார். சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா முகநூல் (பேஸ்புக்) மூலம் அவருக்கு நன்றியைத்…

கோவிட்-19: மூன்று புதிய மரணங்கள், 184 பாதிப்புகள், 165 பேர்…

கொரோனா வைரஸ் | புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை முந்தியுள்ளது. 184 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 165 ஆக உள்ளன. மூன்று புதிய இறப்புகளும் நிகழ்ந்துள்ளன. இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. சுகாதார இயக்குநர் ஜெனரல்…

உயர்க்கல்வி மாணவர்கள் வீட்டிற்குத் திரும்ப இன்னும் அனுமதி இல்லை –…

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவால் தற்போது உயர்க்கல்வி வளாகங்களில் தங்கி இருக்கும் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப இன்னும் அனுமதி இல்லை என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சரவை ஏற்கனவே உயர்க்கல்வி அமைச்சிடமிருந்து (Kementerian Pengajian Tinggi (KPT) பரிந்துரையைப் பெற்றுள்ளது…

சிட்டி ஜைலாவின் மறைமுக ஆலோசனை தவறானது என்கிறது Sister in…

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது கணவன் மனைவியின் உறவு குறித்து, மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிட்டி ஜைலா முகமட் யூசோப்பின் ஆலோசனையின் பின்னால் மறைந்திருக்கும் செய்தியை Sister in Islam (SIS) ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று கருத்துரைத்துள்ளது. சிட்டி ஜைலாவின் அந்த…

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை உலக நாடுகள் அவசரப்பட்டு தளர்த்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இது கிருமி மீண்டும் பரவ வழிவகுக்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார். "சில நாடுகள் ஏற்கனவே மக்கள் வீட்டில்…

மத்திய மலாக்கா இப்போது கோவிட்-19 இன் சிவப்பு மண்டலமாக உள்ளது

மத்திய மலாக்கா மாவட்டம் (Melaka Tengah) கோவிட்-19 சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் சமூக ஊடகங்கள் மூலம் இன்று பகிரப்பட்ட விளக்கப்படத்தின் படி, அம்மாவட்டத்தில் 44 கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், கோலாலம்பூரின் லெம்பா பந்தாய், 427 பாதிப்புகளுடன் அதிக கோவிட்-19 நேர்மறை பாதிப்பு பகுதியாக உள்ளது.…

மாணவர்களை கவனமாக வீட்டிற்கு அழைத்து வரும் சிறந்த வழியை அமைச்சு…

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 28 வரை நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயர்க்கல்வி மாணவர்களை தங்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்கான சிறந்த வழியை இன்று ஒரு சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து அமைச்சு மட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அமைச்சரவைக் கூட்டத்திற்கு கொண்டு வரப்படும் என்று…

பெட்ரோல் விலை 5 சென் குறைகிறது, டீசல் 12 சென்…

RON95 மற்றும் RON97 பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு தொடங்கி 5 சென் குறைகிறது. ஆதலால், RON95 ஒரு லிட்டருக்கு RM1.25 ஆகவும், RON97 ஒரு லிட்டருக்கு RM1.55 ஆகவும் குறைகிறது. டீசல் விலை, லிட்டருக்கு 12 சென் குறைந்து RM1.46 ஆகிறது.

பள்ளி திறக்கப்படுவது தாமதமாகலாம்

பள்ளி திறக்கப்படுவது தாமதமாகலாம் என்று பிரதமர் முகிதீன் யாசின் இன்று அறிவித்தார். ஏப்ரல் 28 வரை தொடரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிப்பதாக இன்று அறிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார். "பள்ளி விரைவில் திறக்கப்படாது. நிலைமை மேம்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரியும் வரை பள்ளி திறப்பதை ஒத்திவைக்க…

கோவிட்-19: 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், இன்று 118 புதிய பாதிப்புகள்

குணமடைந்து வரும் கோவிட்-19 நோயாளிகள் இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளனர். இன்று 118 புதிய பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது, 220 பேர் குணமாகியுள்ளதாக பிரதமர் முகிதீன் யாசின் தெரிவித்தார். இதுவரை குணமடைந்துள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,830, அல்லது மொத்த 4,346…

குடியிருப்பாளர்கள் குப்பை, சிறுநீர் வீசுகின்றனர் எனும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் இராணுவத்…

கோலாலம்பூரில் உள்ள மூன்று குடியிருப்பு இடங்களில் தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை (eMCO) அமல்படுத்துவதில் ஈடுபட்டுள்ள இராணுவ உறுப்பினர்கள், அங்குள்ள வெளிநாட்டு குடியிருப்பாளர்களால் சிறுநீர் வீச்சால் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஹெல்மெட் அணிய வேண்டியுள்ளது என்ற குற்றச்சாட்டை இராணுவத் தலைவர் ஜெனரல் அபெண்டி புவாங் மறுத்துள்ளார். சமூக ஊடகங்களில் கூறப்படும்…

கொரோனா வைரஸ்: மலேசியாவில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா?

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட நோய்த் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனினும் நேற்று 23 வயது இளம்பெண் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளது மலேசியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுயதொழில் புரிவோரில் 50 விழுக்காட்டினருக்குக் கடும் பாதிப்பு இதற்கிடையே மலேசியாவில்…

ஹுலு சிலாங்கூர், 25வது சிவப்பு மண்டலம்

ஹுலு சிலாங்கூர் இப்போது 43 நேர்மறை பாதிப்புகளை பதிவு செய்த பின்னர் கோவிட்-19 சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கையை 25 ஆக உயர்த்தியுள்ளது. 40க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்படும். ஆரஞ்சு மண்டலங்கள் (20-40 பாதிப்புகள்), மஞ்சள்…

PTPK தலைவராக பாசீர் மாஸ் எம்.பி. நியமிக்கப்பட்டார்

கே. சரஸ்வதிக்கு பதிலாக Lembaga Pengarah Perbadanan Tabung Pembangunan Kemahiran (PTPK)-வின் புதிய தலைவராக பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் பத்லி ஷாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விஷயத்தை இன்று காலை மலேசியாகினிக்கு பாஸ் இளைஞர் தலைவர் உறுதிப்படுத்தினார். "இதுவரை அப்படித் தான் கூறப்பட்டுள்ளது. ஆனால் தொலைபேசி…

MCO: இன்று மாலை 4 மணிக்கு பிரதமரின் சிறப்பு செய்தி

அடுத்த செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வரும் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு குறித்து சிறப்பு செய்தி உள்ளது. பிரதமர் முகிதீன் யாசின் இன்று மாலை 4 மணிக்கு சிறப்பு செய்தி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சகம் பெற்ற தரவுகளின் அடிப்படையில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நீட்டிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை சுகாதார…

ஹாடியின் கடிதம்: ‘அவதூறுகளுக்கு முன் உண்மைகளை சரிபாருங்கள்’ அன்வார் அறிவுறுத்துகிறார்

போர்ட் டிக்சன் எம்.பி.யை ஃப்ரீமேசன் (Freemason) இயக்கத்துடன் இணைத்த அப்துல் ஹாடி அவாங்கின் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த பின்னர், பாஸ் தலைவர் பெற்ற தகவல்கள் பொய்யானவை என்று பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார். நேற்று இரவு தனது பேஸ்புக் பதிவில், அன்வார், "சிவில் சர்வீஸ் லாட்ஜ் எண் .143"…

கோவிட்-19: மலேசியாவில் 23 வயது பெண் மரணம்

23 வயதான பெண் ஒருவர் கோவிட்-19 பாதிப்பில் இறந்த இளையவர் என்று சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, அந்த மலேசியப் பெண், தைராய்டு நோயின் வரலாற்றைக் கொண்ட ‘2864 நோயாளி’ ஆவார். இவர் கூச்சிங் சரவாக் தேவாலய கூட்டத்துடன்…

கோவிட்-19: 109 புதிய நோய்த்தொற்றுகள், 2 இறப்புகள், 121 பேர்…

மலேசியாவில் 109 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 4,228-ஆக கொண்டுள்ளது என்று சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். 121 கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் நூர் ஹிஷாம் தெரிவித்தார். இது மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை…

ஜி.எல்.சியில் இருந்து பல திறமையான பெண்கள் நீக்கப்பட்டதால் ரபீதா ‘வெறுப்படைந்துள்ளார்’

முன்னாள் மூத்த மந்திரி ரபிதா அஜீஸ் இன்று, பெரிக்காத்தன் கூட்டணியின் அரசாங்கம், அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களில் (GLC) இருந்து பல மூத்த அதிகாரிகளை நீக்குவது குறுத்து தனது வெறுப்பை வெளியிட்டுள்ளார். இன்று முகநூலில் (பேஸ்புக்கில்) தனது கருத்துக்களை வெளிப்படுத்திய ரபீதா, பல "திறமையான பெண்களை" உயர்மட்ட ஜி.எல்.சி பதவிகளில்…