அரசு ஊழியர்கள் வேலைக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், எரிபொருளைச் சேமிக்கவும் உதவும். மேலும், தற்போதுள்ள வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கையை விட இது நீண்ட காலத்திற்குச் சிறந்த…
கல்வி அமைச்சு பள்ளிக்குச் சென்றது, 4 ஆசிரியர்களிடம் விசாரணை
இன்று, பினாங்கு மாநிலக் கல்வி இலாகா அதிகாரிகள், எம்.வசந்தபிரியா படித்து வந்த பள்ளிக்குச் சென்றுள்ளனர். கல்வி அமைச்சின் அதிகாரிகள், நான்கு ஆசிரியர்களுடன் கலந்துபேசி உள்ளனர், அச்சம்பவம் தொடர்பான தகவல்களை ஆசிரியர்கள் பகிர்ந்து கொண்டனர் என்று நம்பகமான ஆதாரங்கள் கூறுகின்றன. வசந்தபிரியாவின் உறவினர் ஒருவரும் கல்வி அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்து…
RM27.5 மில்லியன் சதி – ‘டத்தோ ஶ்ரீ’ , ‘டத்தோ’…
கோலாலம்பூர் - பினாங்கு வட்டாரங்களில், RM27.5 மில்லியன் மோசடி தொடர்பான தங்கம் மற்றும் எண்ணெய் முதலீட்டில் கைதான 6 பேரில் ‘டத்தோ ஶ்ரீ’ மற்றும் இரண்டு ‘டத்தோ’ க்களும் அடங்குவர். அக்டோபர் 2015 முதல் டிசம்பர் 2017 வரை, நாடு முழுவதிலும் இருந்து பெற்ற 193 புகார்களுக்குப் பின்னர்,…
நஜிப் : ஜிஇ14 – ஜூலை 14-ம் தேதிக்குள் நடைபெறலாம்
நாட்டின் 14-வது பொதுத் தேர்தல், ஜூலை 14-ம் தேதிக்குள் நடைபெறலாம் எனப் பிரதமர் நஜிப் இன்று கோடி காட்டினார். மெக்காவுக்குச் செல்வதற்கு முன்னதாக, யாத்ரீகர்கள் 2 ‘பெருநாள்கள்’-ஐக் கொண்டாடுவர் என்றும் அவர் சொன்னார். "ஜூலை 14 என்றால், 2 நிகழ்வுகள் நடந்து முடிந்துவிடும். ஒன்று ஹரி ராயா அய்டில்ஃபிட்ரி…
கண்ணீர் வடிய வசந்தபிரியாவின் இறுதிச் சடங்கு
பினாங்கு, நிபோங் திபாலுள்ள அவரின் வீட்டில் எம். வசந்தபிரியாவின் இறுதிச் சடங்கில் 1,000 க்கு மேற்பட்டோர் கண்ணீர் வடிய கலந்து கொண்டனர். தற்கொலை செய்துகொள்ள அவர் எடுத்துக்கொண்டு முயற்சியின் விளைவாக ஏற்பட்ட காயங்களுக்கு அவர் பலியானர். அங்கு குழுமியிருந்தவர்களில் அந்த ஒன்றாம் பாரம் மாணவியின் சகமாணவர்களும் அடங்குவர்.…
எல்எப்எல்: பொய்ச் செய்திகளுக்கு எதிரான போராட்டம் வீணானது
சுதந்திரத்துக்காக போராடும் வழக்குரைஞர்கள் அமைப்பு(எல்எப்எல்) புத்ரா ஜெயா பொய்ச் செய்திகளை ஒடுக்கும் சட்டங்களை வரைய ஒரு குழுவை அமைத்திருப்பது குறித்து கவலையுறுகிறது. “இணையத்தளத்தில் உண்மை எது பொய் எது என முறைப்படுத்த முயல்வது வீண்வேலை, உண்மைக்கு யாரும் தனியுரிமை கொண்டாட முடியாது”, என அதன் செயல் இயக்குனர் எரிக் …
எஜிசி ஷரியா, சிவில் சட்டத்திற்கிடையில் இணக்கம் காண ஒரு பிரிவை…
சட்டத்துறை தலைவர் அலுவலகம் (எஜிசி) ஷரியா மற்றம் (சிவில்) சட்டங்களுக்கிடையில் இணக்கம் காணும் ஒரு பிரிவை அமைத்துள்ளது. அதன் நோக்கங்களின் ஒன்று சிவில் மற்றும் ஷரியா நீதிமன்றங்களுக்கிடையிலான பிணக்கைத் தீர்த்து வைப்பதாகும். இந்தப் பிரிவை அமைப்பது முக்கியமாகும், ஏனென்றால் இது எஜிசிக்கு அனுப்பப்படும் ஷரியா பிரச்சனைகளுக்கான ஒரு…
‘கம்பமே என் கதறலைக் கேட்டிருக்கும்’ -மகளின் இறப்பை நினைவுகூர்ந்த தந்தையின்…
தன் 14-வயது மகள் எம். வசந்தபிரியா கழுத்தில் துப்பட்டாவை இறுக்கிக் கொண்டு தொங்கியதைக் கண்டதும் அவரின் தந்தை வாய்விட்டுக் கதறினார். “என் கதறலை மொத்த கம்பமும் கேட்டிருக்கும். “உடனடியாக முதலுதவி செய்துவிட்டு என் தம்பியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்” என்று ஆர். முனியாண்டி த ஸ்டார் ஆன்லைனிடம் இன்று …
தைப்பூச விழாவில் பட்டாசு கொளுத்திய சம்பவம் தொடர்பில் நால்வர் கைது
நேற்று சுங்கை பட்டாணி ஸ்ரீசுப்ரமணிய சுவாமி ஆலய தைப்பூச விழாவில் பட்டாசு கொளுத்திய சம்பவம்மீதான விசாரணையில் உதவ போலீசார் நால்வரைத் தடுத்து வைத்துள்ளனர். அச்சம்பவத்தில் 26பேர் காயமடைந்தனர். ஆலயத்திலிருந்து இரதம் புறப்பட்டு வீதி உலா வந்து கொண்டிருந்தபோது அச்சம்பவம் நிகழ்ந்தது. 25க்கும் 34 வயதுக்குமிடைப்பட்ட அந்நால்வரும் நள்ளிரவு வாக்கில் …
ஐ-போன் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட மாணவி வசந்தப்பிரியா மரணம்
ஆசிரியரின் கைத் தொலைபேசியைத் திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட எம்.வசந்தப்பிரியா, இன்று அதிகாலை உயிர் இழந்தார். பினாங்கு, செப்ராங் பிறை மருத்துவமனையில், எம்.வசந்தபிரியாவின் உடலைப் பார்த்தபின்னர், மலேசியத் தமிழர் குரல் இயக்கத்தின் தலைவர் டேவிட் மார்ஷல் பாக்கியநாதன், “இறந்தவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்,” என தனது முகநூலில் குறிப்பிட்டிருந்தார். "இனி,…
இந்திரா: மகள் முஸ்லிமாகவே இருக்கட்டும், என்னிடம் திரும்பி வந்தால் போதும்
கூட்டரசு நீதிமன்றம் குழந்தைகள் ஒருதலைப்பட்ச மதமாற்றம் செல்லாது என்று தீர்ப்பளித்திருந்தாலும் தன் மகள் பிரசன்னா திக்ஷா விரும்பினால் அவர் முஸ்லிமாகவே இருப்பதில் தனக்கு மறுப்பு இல்லை என எம்.இந்திரா காந்தி கூறினார். “என் பிரசன்னா எந்த மதத்தில் இருக்க விரும்பினாலும் எனக்குக் கவலை இல்லை. அவள் விரும்பினால் முஸ்லிமாகவே …
பெர்சத்துவை இளைஞர்கள் ஆதரிக்கிறார்கள் ஆனால் மகளிர் ஆதரவு இல்லை
பெர்சத்து கட்சி மலாய் இளைஞர்களின் வரவேற்பைப் பெறுவதில் வெற்றி கண்டுள்ளது ஆனால், பெண்களின் ஆதரவைப் பெறத்தான் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்கிறார் அரசியல் ஆய்வாளர் வான் சைபுல் வான் ஜான். அக்கட்சியின் 200,000 உறுப்பினர்களில் 55 விழுக்காட்டினர் 35 வயதுக்கும் குறைவானவார்கள் என வான் சைபுல் சிங்கப்பூர் ஸ்ரேய்ட்ஸ் …
ஜி25: கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பு சரியே
பணி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரிகளைக் கொண்ட குழுவான ஜி25, எம்.இந்திரா காந்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் “பெற்றோர்” என்ற சொல்லுக்கு அளித்த பொருள் விளக்கத்தையும் ஷியாரியா நீதிமன்றத்தின் எல்லை எது என்பதைத் தெளிவுபடுத்தியிருப்பதையும் பாராட்டியுள்ளது. “கூட்டரசு நீதிமன்றம் அரசமைப்பின் பகுதி 12(40)- இல் இடம்பெற்றுள்ள ‘பெற்றோர்’ …
தைப்பூசத்தில், கண்டனத்துக்கு உள்ளான ‘மிருக வதை’
பினாங்கு தைப்பூசத்தில், இரதத்தை இழுக்க பயன்படுத்தப்பட்ட இரு காளைகள் குறித்து, பினாங்கு இந்து ஆலோசனை அறவாரியம் (எல்.பி.எச்.பி.) கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு முதல், சமூக ஊடகங்களில் பரவலாக உலாவந்த, அந்த ‘விலங்கு வதை’ வீடியோ கிளிப், பலரின் விமர்சனத்துக்கு ஆளானது, அச்செயலைப் பார்த்து பலர் ஆத்திரமடைந்தனர். அந்த…
மாபுஸ்: வாக்காளர்களே, தொங்கு நாடாளுமன்றத்தின் வழி பாஸை முடிவெடுக்கும் மன்னராக்கி…
எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் ஒரு தொங்கு நாடாளுமன்றம் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கிவிட வேண்டாம் என்று வாக்காளர்களை, குறிப்பாக பாஸ் கட்சியின் ஆதரவாளர்களை, பாஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாபுஸ் ஒமார் எச்சரித்துள்ளார். அவ்வாறு செய்வது நாட்டின் ஜனநாயக நடைமுறையை சேதப்படுத்திவிடும் என்றாரவர். பாஸ்…
நஜிப் : இந்தியச் சமூகத்தை உயர்த்துவதற்கான பி.என். வாக்குறுதிகள், அர்த்தமற்றவை…
இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், இந்த நாட்டில் இந்திய சமூகத்தை முன்னேற்றவும் பாரிசான் நேஷனல் (பிஎன்) அரசாங்கம் முன்னெடுக்கும் பிரதான செயற்பாடுகள் ஒரு தொடர்ச்சியான முயற்சியாகும். அதனை இரண்டு நாட்களுக்குள் அடைந்துவிட முடியாது என்று பிரதமர் நஜிப் கூறினார். காரணம், அது வெளி வளர்ச்சியை மட்டும் சார்ந்தது அல்ல;…
ஷாஹிட் : பழைய கதையை மறந்து, பி.என்.-னுக்கு இந்திய சமூகம்…
வரவிருக்கும் ‘பெரு நாளில்’, பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்திலான பாரிசான் நேசனல் (பி.என்.) அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு துணைப் பிரதமர் அஹ்மட் ஷாஹிட் ஹமிடி இந்திய மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். ‘பெரு நாள்’ என்று 14-வது பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பேசிய அவர், பழையக் கதைகளை மறந்து, தற்போது அரசாங்கம்…
அமனாவைக் குறைத்து மதிப்பிடக் கூடாது: பாஸ் கிளந்தானுக்கு அறிவுறுத்து
பாஸ் கிளந்தான் அமனா போன்ற கட்சிகளைச் சாதாரணமாக எண்ணி விடலாகாது என்று பாஸ் உதவித் தலைவர் முகம்மட் அமார் நிக் அப்துல்லா எச்சரித்தார். “பக்கத்தான் ஹரபான் உறுப்புக் கட்சிகளான அமனா, பெர்சத்து போன்றவை பலம்குறைந்த கட்சிகளாக தோன்றலாம். ஆனால், எதிரிகளைக் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது”, என கிளந்தான் துணை …
சாமிவேலு: மகாதிர் நல்ல தலைவர், நல்ல மனிதர்
பக்கத்தான் ஹரபான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் நல்ல தலைவர், நல்ல மனிதர் என்று முன்னாள் மஇகா தலைவர் ச.சாமிவேலு கூறினார். ஆனால், தம்முடைய ஆதரவு நடப்பு ஆட்சிக்குத்தான் என்றார் அந்த மூத்த அரசியல்வாதி . மகாதிர் ஹரபானின் பிரதமர் வேட்பாளராக அரசியலுக்குத் திரும்பி வந்துள்ளது பற்றிக் கருத்துரைக்குமாறு …
பேராக்கில் இரண்டு இடங்களுக்கு பிகேஆர், பெர்சத்துவுக்கிடையில் போட்டி
பேராக்கில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் தங்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என பிகேஆரும் பெர்சத்துவும் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கு மத்திய தலைமைதான் தீர்வு காண வேண்டும் என பேராக் பக்கத்தான் ஹரபான் கேட்டுக்கொண்டிருக்கிறது. லூமுட் நாடாளுமன்றத் தொகுதியின்கீழ் வரும் பங்கோர், கம்பார் நாடாளுமன்றத் தொகுதியில் இடம்பெற்றுள்ள துவாலாங் சேகா ஆகியவையே …
ஜிஇ14 எப்போது? உத்வேகத்திற்காக நஜிப் காத்திருக்கிறார்
14-வது பொதுத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்க, பிரதமர் நஜிப் ஓர் உத்வேகத் தீப்பொறிக்காகக் காத்திருக்கிறார். “நான் காத்திருக்கிறேன், எனக்குத் தெரியவில்லை (ஜிஇ எப்போது என்று). காத்திருக்கிறேன், ஓர் உத்வேகம் அல்லது ஒரு தீப்பொறி அல்லது ஒரு சரியான நேரம் வரும்வரை. "எப்போதும் போல அரசியலமைப்பை நாம் பின்பற்றுவதால், ஜூன்…
தேர்தல் அமைப்பு முறைமை வெளிப்படையானது, ஏமாற்றுவதற்கான வாய்ப்பில்லை
தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) தேர்தல் முறைமையை மேம்படுத்தி உள்ளதால், மோசடிக்கு வாய்ப்பில்லை என்று பிரதமர் நஜிப் கூறியுள்ளார். டாக்டர் மகாதீர் காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போது தேர்தல் முறைமை மிகவும் வெளிப்படையாக உள்ளது என்று அவர் கூறினார். முன்னதாக, சமீபத்தில் தலைநகரில் 16 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் டாக்டர் மகாதிர்…
புத்ரா ஜெயா பசார் மாலத்தில் மகாதிருக்கு வரவேற்பு
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் அரசாங்கத்திற்கு எதிரியாக இருக்கலாம், ஆனால் அவர் நாட்டின் தலைநகரான புத்ரா ஜெயாவில் இன்னும் பிரசித்தி பெற்றவராகவே இருக்கிறார். பிரிசிங்ட் 2 இன் இரவுச் சந்தையில் வியாபாரிகளும் வருகையாளர்களும் ஒருவர்பின் ஒருவராக மகாதிரின் கையைக் குலுக்கியதோடு அவருடன் செல்பியும் எடுத்திக்கொண்டனர். அவர்…
செந்தமிழ்ச் செல்வியின் வழக்கை தள்ளுபடி செய்வதில் நஜிப் தோல்வியுற்றார்
காலஞ்சென்ற பிஐ பாலாவின் துணைவியார் செந்தமிழ்ச் செல்வி பிரதமர் நஜிப் மற்றும் அவரது துணைவியார் ஆகியோருக்கு எதிராகத் தொடந்திருக்கும் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இம்முடிவை அவரது அறையில் எடுத்த நீதிபதி ஹு சியு கெங் இவ்வழக்கிற்கான…
















