ஏப்ரல் 15 அன்று கிள்ளான் பள்ளத்தாக்கில் 11 இடங்களில் குடிவரவுத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், வீட்டுப் பணியாளர்களைக் குறிவைக்கும் கடத்தல் கும்பலிடமிருந்து எட்டு இந்தோனேசியப் பெண்கள் மீட்கப்பட்டனர். இந்தக் கும்பல் கடந்த ஒரு ஆண்டாகச் செயல்பட்டு வருவதாக நம்பப்படுவதாக குடிவரவுத் துறை இயக்குநர் தலைவர் ஜகாரியா ஷாபான்…
சேவியர்: இந்தியச் சமுதாயத்தில் மாற்றத்தைக் கொணர்வதற்கு இத்தீபத்திருநாளில் மனதில் சபதம்…
டாக்டர் சேவியர் ஜெயக்குமார், கெஅடிலான் தேசிய உதவித் தலைவர், கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர், அக்டோபர் 17, 2017. தீபாவளி நாள் மட்டுமின்றி நம் எதிர்காலத்தையே ஒளிரச்செய்யும் மாற்றத்தை நம் குழந்தைகளுக்கு வழங்குவதே, அவர்களுக்கு நாம் வழங்கும் சிறந்த தீபாவளி பரிசாகும். இந்நாளில் நமது அடுத்த…
ஸாகிட்: மியன்மாரின் விவகாரங்களில் தலையிடுவது மலேசியாவின் நோக்கமல்ல
ரோஹிஞா இன மக்களின் அவலநிலை குறித்து மலேசியா தொடர்ந்து பேசிவருகிறது. ஆனால், மலேசியாவுக்கு மியன்மாரின் உள்விவகாரங்களில் தலையிடும் நோக்கம் இருந்ததே இல்லை என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறினார். மலேசியா அது குறித்து பேசிவதற்கான காரணம் சூழ்நிலை இப்போது ஒரு மனிதாபிமான பிரச்சனையாக மாறியுள்ளது…
நஜிப்: இந்தியச் சமூகத்தின் ஆசைகள் எம்ஐபியில் செதுக்கப்பட்டுள்ளன
தேசிய முதன்மை நிலைக்கு ஒப்ப இந்நாட்டு இந்தியச் சமூகத்தின் மீது பிரதமர் நஜிப் நிச்சயமான தாக்கத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ளார். இவ்வாண்டின் தீபாவளி கொண்டாட்டம் மிகச் சிறப்பானது ஏனென்றால் அவர்களின் எதிர்பார்ப்புகளும் விருப்பங்களும் கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட்ட மலேசிய இந்தியப் பெருந்திட்டத்தில் (எம் ஐபி) செதுக்கப்பட்டுள்ளன என்று நஜிப்…
ஹரப்பான் கொள்ளைக்கார ஆட்சி எதிர்ப்பு அலுவலக உறுப்பினருக்கு போலீஸ் அழைப்பாணை
பெட்டாலிங் ஜெயா, பாடாங் திமோரில் நடைபெற்ற கொள்ளைக்கார ஆட்சி எதிர்ப்புப் பேரணியின் அலுவலகத்தைச் சேர்ந்த உறுப்பினர் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். பெட்டாலிங் ஜெயா கழக உறுப்பினர் லிம் இ வெய், 27, அமைதியாக ஒன்றுகூடுதல் சட்டம் 2012, செக்சன் 15(1) (பிஎஎ) கீழ் விசாரிக்கப்படுகிறார் என்று வழக்குரைஞர்…
ஸாகிட்: ரோஹிங்யா அக்திகளுக்கு மலேசியா மருத்துவமனை கட்டும்
பங்களாதேஷ், கோக்ஸ் பஜாரில் ரோஹிங்யா இன அகதிகளுக்கு ரிம3.5 மில்லியன் மருத்துவமனையை மலேசியா கட்டும் என்று மலேசிய துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறினார். மலேசிய இராணுவப் படையின் மருத்துவப் பிரிவு இந்த மருத்துவமனையைக் கட்டும். தொடக்கத்தில் இது 50 படுக்கைகளைக் கொண்டிருக்கும். பங்களாதேஷ் பிரதமர் ஷீக்…
அடையாள அட்டைக்கு ஏற்பாடு செய்யவில்லை, பிறகு என்ன இந்தியர் மேம்பாட்டுத்…
நாடற்ற இந்தியர்களுக்கு அடையாள அட்டை வழங்க முடியாதென்றால், மலேசிய இந்தியர்கள் மேம்பாட்டுத் திட்டம் (எம்ஐபி) பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை என்று கூறுகிறார் டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங். தமிழ் இடைநிலைப்பள்ளிகளுக்கு அனுமதி அளித்தல், இந்திய மாணவர்களுக்கு நல்ல பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு மற்றும் ஒவ்வொரு…
தீயணைப்பு இலாகா: தாஃபிஸ் பள்ளிகளில் பாதி பாதுகாப்பானதல்ல
தீ மற்றும் மீட்பு இலாகா சோதனையிட்ட 956 தாஃபிஸ் பள்ளிகளில் பாதி பள்ளிகள் மட்டுமே பாதுகாப்பானவை என்று ஊடகச் செய்திகள் இன்று கூறுகின்றன. மீதமுள்ள பள்ளிகள் தீயினால் பாதிக்கக்கூடிய அபாயத்தில் இருக்கின்றன. அவை உடனடியாக தீ பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், அல்லது சட்ட…
ரிம 1.5 பில்லியன் மோசடி – விளக்கமளிக்க ‘டத்தோ’ ஒருவர்…
இன்று, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.), சபாவில் கிராமப்புற அபிவிருத்தி நிதிகளில் நடந்த மோசடி குறித்த விசாரணைகளுக்கு உதவ, ‘டத்தோ’ அந்தஸ்து கொண்ட தொழிலதிபர் ஒருவரை அழைத்தது. ஆதாரங்களின்படி, கிராமப்புற மற்றும் கூட்டரசுப் பிரதேச அபிவிருத்தி அமைச்சின் ஒப்புதல் பெற்ற, குறைந்தபட்சம் 7 நிறுவனங்களை அத்தொழிலதிபர் தனது…
அஸ்மின் அலி : நான் தவளை அல்ல, பிகேஆர்-உடன் தொடர்ந்து…
சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி, பி.கே.ஆர். கட்சியிலேயேத் தான் தொடர்ந்து இருக்கப்போவதாக கூறியுள்ளார். கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருமான அஸ்மின் அலியைக் கட்சி மாறச் சொல்லிய முன்னாள் மந்திரி பெசார் டாக்டர் அபு ஹசான் ஓமாரின் ஆலோசனைக்கு, அஸ்மின் இவ்வாறு பதிலளித்துள்ளார். “அஸ்மின் நற்குணங்கள் கொண்டிருக்கிறார். அவர் ஒரு…
காலிட்: நான் அவர்களுடன் சேரவில்லை; அவர்கள் என்னுடம் சேரலாம்
முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட் இப்ராகிம் தமக்கு முன்னாள் பாரிசான் மந்திரி பெசார்களுடன் சேர்ந்து கொள்ளும் நோக்கம் இல்லை என்று கூறுகிறார். மாறாக, அந்த மூன்று பிஎன் மந்திரி பெசார்களும், முகம்மட் கிர் தோயோ, அபு ஹசான் ஒமார் மற்றும் முகம்மட் முகம்மட் தாய்ப்,…
எம்.டி.யூ.சி. : வெளிநாட்டு தொழிலாளர்கள் இறக்குமதி விதிமுறையைத் தளர்த்தும் அமைச்சரவை…
மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்.டி.யூ.சி), உற்பத்தித் துறையில் 100% வெளிநாட்டு தொழிலாளர்களைப் பணிக்கமர்த்தும் விதியை இலகுவாக்குவதற்கான முடிவை இரத்து செய்யுமாறு அமைச்சரவையைக் கேட்டுக்கொண்டுள்ளது. அமைச்சரவையின் இந்த முடிவு, அதிர்ச்சி அளிப்பதாகவும், இது முற்றிலும் நியாயமற்ற ஒரு முடிவு என்றும் எம்.டி.யூ.சி.-யின் தலைமைச் செயலாளர், ஜெ.சோலமன் கூறினார். உள்துறை துணையமைச்சர்…
பினாங்கு ஒரு தாலிபான் நாடல்ல, குவான் எங் கூறுகிறார்
மலேசியன் ஜெர்மன் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 45 ஆவது அக்டோபர்பெஸ்ட் விழா எவ்வித தடங்கலும் இன்றி நேற்றிரவு பினாங்கில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில், பினாங்கு ஒரு தாலிபான் நாடல்ல என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார். சிலாங்கூர் அல்லது கோலாலம்பூரில் அக்டோபர்பெஸ்ட்டை தடை செய்வதில்…
பிறப்பை, குறித்த காலத்தில் பதிவு செய்யாவிட்டால், ரிம 1000 அபராதமா? …
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், அக்டோபர் 15, 2017. பாரிசான் அரசும், தேசியப் பதிவு இலாக்காவும், அதன் இயலாமைக்கு மக்களைத் தண்டிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மக்களின் குறைகளைச் செவிமடுக்காத செவிடர்களால் மட்டுமே, பிறப்பு பதிவு காலதாமதத்துக்கு ரிம 1000 அபராதம் விதிக்க முடியும் என்றார் கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற…
கோத்தா லாமா சட்டமன்றத்தில், பி.எஸ்.எம். வேட்பாளராக ‘ரோயல்டி’ ஆர்வலர்
அரசு சார்பற்ற அமைப்பான ‘ரோயல்டி’யின் ஆர்வலர், கைரூல் நிஷாம் அப்துல் கானி (வயது 36), கோத்தா லாமா சட்டமன்றத்தின் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு, கிளாந்தான் மாநில மக்களுக்கு பி.எஸ்.எம். ஒரு தேர்வை வழங்கியுள்ளதாக , பி.எஸ்.எம். கட்சியின் மத்தியச் செயலவை…
ஹரப்பான் பேரணி: நஜிப் நாட்டின் எதிரி
இன்று பெட்டாலிங் ஜெயா, பாடாங் திமோரில் நடைபெற்ற ஹரப்பான் பேரணியில் இறுதி உரையாற்றிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட், மலேசியப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் "நாட்டின் எதிரி" என்று கூறினார். இன்று பிற்பகல் மணி 4.00 அளவில், பெட்டாலிங் ஜெயா, பாடாங் திமோரில் தொடங்கிய ஹரப்பான்…
‘டெங்கி’ காய்ச்சல் – முதலிடத்தில் இருக்கும் சிலாங்கூருக்கு உதவ பிரதமர்…
‘டெங்கி’ பிரச்சனைக்குத் தீர்வு காண, வடிகால் மற்றும் வடிகால் அமைப்புகளை நிர்வகிப்பதில் சிலாங்கூர் அரசாங்கத்திற்கு உதவ, பிரதமர் நஜிப் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார். ஏடிஸ் கொசுக்களை ஒழிக்கத் தெரியாமல், நாட்டின் மிக அதிகமான டெங்கிக் காய்ச்சல் சம்பவங்கள் பதிவான மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. பக்காத்தான் ராக்யாட் நிர்வாகம், இப்பிரச்சனைக்குத்…
லியு சின் தோங் : ஜொகூரின் மெகா திட்டங்கள், சாதாரண…
ஜனநாயக செயற்கட்சியின் ஜொகூர் மாநிலத் தலைவர், லியு சின் தோங், இஸ்கண்டார் மேம்பாட்டுப் பகுதியில் நடந்துவரும் மெகா மேம்பாட்டுத் திட்டங்களால் சாதாரண மக்களுக்கு எந்தவொரு பயனுமில்லை என்று கூறியுள்ளார். இத்தகைய மேம்பாட்டுப் பெருந்திட்டங்களால், பொருளாதார நிலை சீராக இருப்பதாக மாநில அரசாங்கம் கூறுவதையும் அவர் மறுத்துள்ளார். மாநகராட்சி சேவைகள்…
மெமாலி சம்பவம் குறித்து விசாரிக்க அரச விசாரணை ஆணையம் வேண்டும்…
கெடா, மெமாலியில் 1985 ஆண்டு நடந்த துயரச் சம்பவம் குறித்து விசாரிக்க ஓர் அரச விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஸ் மீண்டும் விடுத்துள்ளது. இச்சம்பவம் குறித்து பல குழப்பமான அறிக்கைகள் விடப்பட்டுள்ளன. அது பற்றிய உண்மையை வெளிக்கொணர்வதற்கு ஒரு நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை…
ஹரப்பான் பேரணி: பிஎன் அமல்படுத்திய திட்டங்களில் 99 விழுக்காடு மக்களை…
மணி 6.50: பிஎன் அமல்படுத்திய திட்டங்களில் 99 விழுக்காடு மக்களை ஏமாற்றும் வஞ்சக நோக்கம் கொண்டது என்று ஹரப்பான் பேரணியில் பேசிய பெர்சத்து உதவித் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் கூறினார். "ஆச்சரியப்படாதீர்கள் (நான் உங்களிடம் சொல்வது பற்றி). நான்தான் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர்.…
ஹரப்பான் பேரணி: சகோதரிகளே, அழாதீர்கள்
மணி 6.20: "பெண்களே, அழுவதை நிறுத்துங்கள். போராடுங்கள்" என்று ஹரப்பான் பேரணியில் உரையாற்றிய பிகேஆர் வனிதா தலைவர் ஸுரைடா கமாருடின் கூறினார். ஜிஎஸ்டி மற்றும் பொருட்களின் விலை ஏற்றத்தால் கவலையடைந்திருக்கும் பெண்கள் அழுவதை நிறுத்துங்கள். பிஎன்னுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து உங்களுடைய உரிமைகளை வலியுறுத்துங்கள் என்று அவர்…
ஹரப்பான் பேரணி: கூட்டம் மெதுவாக வந்துகொண்டிருக்கிறது; இளைஞர்கள் எங்கே?
ஹரப்பான் ஏற்பாடு செய்துள்ள "கொள்ளைக்கார ஆட்சி எதிர்ப்பு" பேரணி திட்டமிட்டிருந்துவாறு மணி 4.10 க்கு பெட்டாலிங் ஜெயா, படாங் திமோரில் பக்கத்தான் ஹரப்பான் இளைஞர் பிரிவுத் தலைவர்களின் உரையாற்றலுடன் தொடங்கிற்று. நூறு பேர்களுக்கு மேற்பட்டவர்கள் மேடைக்கு அருகிலிருந்தவாறு நிகழ்ச்சிகளைக் கவனித்தனர். மற்றவர்கள் பாடாங்கைச் சுற்றியுள்ள நிழற்பகுதியில் இருந்தனர்.…
‘லிட்டல் இந்தியா’வில் வியாபாரம் சரிந்துவிட்டது, வியாபாரிகள் புகார்
தீபாவளியைக் கொண்டாட இன்னும் ஒருசில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், கிள்ளான் ‘லிட்டல் இந்தியா’வில் வியாபாரம் திருப்திகரமாக இல்லை என வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனர். கடந்த 2 ஆண்டுகளாக, கிள்ளான் நகராண்மைக் கழகம் (எம்.பி.கே) ஒதுக்கி கொடுத்திருக்கும் இடத்திற்கு, வியாபாரத்தை இடம் மாற்றியதில் இருந்து வியாபாரம் சரிவு கண்டதாக திருமதி…
எல்லாவற்றையும் சொல்லிவிடுவோம், காலிட், எச்சரிக்கிறார் தெங்
14 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்துடன் சிலாங்கூர் பாரிசான் நேசனல் அம்மாநிலத்தின் நான்கு முன்னாள் மந்திரி பெசார்களை, குறிப்பாக காலிட் இப்ராகிம்மை, பயன்படுத்தவிருக்கிறது. நாளை, ஞாயிற்றுக்கிழமை, காலிட் இப்ராகிம் 14 ஆவது பொதுத் தேர்தலில் அவரது நிலைப்பாடு குறித்து அறிவிக்கப் போவதாக…






















