ஏப்ரல் 15 அன்று கிள்ளான் பள்ளத்தாக்கில் 11 இடங்களில் குடிவரவுத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், வீட்டுப் பணியாளர்களைக் குறிவைக்கும் கடத்தல் கும்பலிடமிருந்து எட்டு இந்தோனேசியப் பெண்கள் மீட்கப்பட்டனர். இந்தக் கும்பல் கடந்த ஒரு ஆண்டாகச் செயல்பட்டு வருவதாக நம்பப்படுவதாக குடிவரவுத் துறை இயக்குநர் தலைவர் ஜகாரியா ஷாபான்…
ஐஜிபி: தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்
நாட்டில் தாக்குதல்கள் நடத்துவதற்கு திட்டமிட்ட பல தனிப்பட்ட நபர்கள் கிளந்தானில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை உறுதிப்படுத்திய போலீஸ் படைத் தலைவர் முகம்மட் பூஸி ஹருன், இவ்விகாரம் குறித்து ஓர் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார். கிளந்தானில் வெடிகுண்டுகள் தயாரிக்கும் திறன்வாய்ந்த பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது…
‘ஓப்ஸ் லாலாங்’ கருத்தரங்கு – சுவாராம் டாக்டர் மகாதீரை அழைக்கவுள்ளது
மலேசிய மனித உரிமை குழு (சுவாரா ரக்யாட் மலேசியா-சுவாராம்), இம்மாதம் ‘ஓப்ஸ் லாலாங்’கின் 30-வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ள கருத்தரங்கிற்கு, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் மற்றும் முன்னாள் தேசியப் போலிஸ்படைத் தலைவர் ஹனீஃப் ஒமர் இருவருக்கும் அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ளது. எதிர்வரும்…
உலகிலேயே மிக ஆபத்தான நகரங்கள் பட்டியலில் கோலாலம்பூர்?
குற்றவியல் அடிப்படையில், உலகிலேயே மிக மோசமான 30 நகரங்களின் பட்டியலில், தென் கிழக்காசியாவில் இருக்கும் ஒரே நகரம் கோலாலம்பூர் ஆகும். 2017 அரையாண்டு வரையில், பொதுமக்களின் கருத்துகளை மதிப்பிடும் ஒரு நிறுவனத்தால் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்செயல், வாழ்க்கைச் செலவீனம், மாசுபாடு, சுகாதாரம், வாழ்க்கைத் தரம்,…
பிஎன் மீண்டும் சிலாங்கூரை கைப்பற்ற காலிட் உதவப் போகிறாராம், இன்னொரு…
அடுத்தப் பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் பிடிக்க பல முன்னாள் மந்திரி பெசார்கள் முக்கியப் பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் மந்திரி பெசார்களான கிர் தோயோ, அபு ஹசான் மற்றும் முகமட் தாயிப் ஆகியோர் இதில் பங்கேற்பர் என்று சிலாங்கூர் பிஎன் தலைவர்…
மணிவண்ணன் : தீபாவளிக்குச் சிலாங்கூர் மாநிலத்தில் 2 நாள்கள் பொது…
2017 தீபாவளிக்கு, 2 நாள்கள் பொது விடுமுறையை சிலாங்கூர் மாநில அரசு வழங்க வேண்டும் எனும் சில இந்திய அரசு சார்பற்ற இயக்கங்களின் கோரிக்கையைத் தான் ஆதரிப்பதாக, காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர், ஜி.மணிவண்ணன் கூறியுள்ளார். "இதற்கான அனுமதியைப் பெற சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபூடின் இட்ரீஸ் ஷா அவர்களின்…
ஏலத்திற்குச் சென்ற தனது வீட்டை பிஎஸ்எம் உதவியுடன் சுந்தரம் கோவிந்தராஜூ…
ஏலத்திற்குச் சென்ற தனது வீடு, மீண்டும் கிடைத்ததை அறிந்து சுந்தரம் கோவிந்தராஜூ நிம்மதி பெருமூச்சுவிட்டார். மலேசிய சோசலிசக் கட்சியின் துணையுடன் அந்த வங்கியின் நடவடிக்கையை எதிர்த்து போராடியது வீண் போகவில்லை. கிள்ளான் துறைமுகத்தில் சாதாரண உடல் உழைப்பாளியான சுந்தரம், தான் வசித்து வந்த திதிடிஐ ஷாஆலாம், கம்போங்…
எம்பிபிஜே: ஹரப்பான் பேரணி நடத்த திடலைக் கொடுப்பதற்கு போலீஸ் அனுமதி…
போலீஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும், பாடாங் திமோரை ஹரப்பான் அதன் கொள்ளைக்கார ஆட்சி எதிர்ப்பு பேரணிக்கு பயன்படுத்த பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் (எம்பிபிஜே) அனுமதி அளித்துள்ளது. பெட்டாலிங் ஜெயாவிலுள்ள திடலை ஹரப்பான் அதன் பேரணிக்கு பயன்படுத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கு முன் போலீஸ் அனுமதி தேவையில்லை என்று…
பிறப்பு குறித்த காலத்திற்குள் பதிவு செய்யப்படாவிட்டால், அபராதம் ரிம1000: ஏழைக்களுக்குப்…
பிறப்பு பதிவு செய்யப்படும் விவகாரத்தில், ரிம1,000 அபராதம் விதிக்க உள்துறை அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கை சட்டப்பூர்வமானதா என்ற கேள்வியை எதிரணியினர் எழுப்பியுள்ளனர். இந்த அளவுக்கு அதிகமான அபராதம் ஏழைகளுக்கு பெரும் சுமையாக இருக்கும் என்பதோடு இந்நடவடிக்கை நாடற்ற குழந்தைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என்று அவர்கள் எச்சரிக்கை…
பாடாங் திமோரில் பேரணி நடந்தால், போலீஸ் நடவடிக்கை எடுக்கும்
பெட்டாலிங் ஜெயா, பாடாங் திமோரில் எதிர்வரும் சனிக்கிழமை "மலேசியாவை நேசிப்போம், கொள்ளைக்கார ஆட்சியை ஒழித்துக்கட்டுவோம்" பேரணி திட்டமிட்டப்படி நடத்தப்பட்டால் அதன் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக போலீஸ் "பொருத்தமான நடவடிக்கை" எடுக்கும் என்று போலீஸ் உறுதியளித்துள்ளது.. பேரணியை வேறொரு இடத்திற்கு மாற்ற அவர்கள் மறுத்தால், பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
செந்தமிழ்ச்செல்வியின் வழக்கு: நஜிப்பும் ரோஸ்மாவும் தற்காப்பு வாதத்தைத் தாக்கல் செய்ய…
காலஞ்சென்ற பி. சுப்ரமணியத்தின் துணைவியார் எ. செந்தமிழ்ச்செல்வி தொடர்ந்துள்ள வழக்கில் பிரதமர் நஜிப் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா ஆகிய இருவரும் அவர்களுடைய தற்காப்பு வாதத்தை 14 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் இதர பிரதிவாதிகளுக்கும் அதே உத்தரவை நீதிபதி…
கிளாந்தான், கோத்தா லாமா சட்டமன்றத் தொகுதிக்குப் பி.எஸ்.எம். குறிவைத்துள்ளது
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சியின் வேட்பாளர்கள் கிளாந்தானிலும் களமிறங்கவுள்ளதாகத் தெரிகிறது. துரதிஸ்டவசமாக, டிஏபி-ஐப் போலவே, கோத்தா லாமா சட்டமன்ற தொகுதியையே பி.எஸ்.எம். கட்சியும் குறிவைத்திருக்கிறது. கோத்தா பாரு நாடாளுமன்றத் தொகுதியில் இருக்கும் 3 சட்டமன்றங்களில் கோத்தா லாமாவும் ஒன்றாகும். எதிர்வரும் அக்டோபர் 14-ல், பி.எஸ்.எம்.…
ஐஜிபி: கொள்ளையர் ஆட்சி எதிர்ப்பு பேரணியை அரங்கத்தில் நடத்துங்கள்
வரும் சனிக்கிழமை பாடாங் திமோரில் நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கும் கொள்ளையர் ஆட்சி எதிர்ப்பு பேரணியை கிளானா ஜெயா அரங்கத்திற்கு மாற்றும்படி அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களை போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளது. பாடாங் திமோரில் அப்பேரணியை நடத்துவதற்கு எதிராக அங்கு வசிப்பவர்களிடமிருந்து நான்கு போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன என்று போலீஸ் படைத் தலைவர் முகம்மட்…
ஷாபியின் சகோதரர் ஐந்து நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
பார்டி வாரிசான் சாபாவின் தலைவர் முகமட் ஷாபி அப்டாலின் சகோதரர் ஹமிட் அப்டால் ஐந்து நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மஜிஸ்ரேட் ஸ்டெப்னி ஷெரோன் அப்பி இந்த ஐந்து நாள் தடுப்புக்காவலுக்கு உத்தரவிட்டார். கோத்தக் கின்னபாலு எம்எசிசி அலுவலகத்தில் கிட்டத்தட்ட மூன்று மணி நேர விசாரணைக்குப் பின்னர், ஹமிட்…
பெர்சே 4 குற்றச்சாட்டிலிருந்து மரியா சின் விடுவிக்கப்பட்டார்
பெர்சே 4 பேரணியை 2015 இல் ஏற்பாடு செய்ததற்காக பெர்சே 2.0 தலைவர் மரியா சின் மீது அமைதியாக ஒன்றுகூடுதல் சட்டம் 2012 டின் கீழ் சாட்டப்பட்டிருந்த குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு செய்திருந்த மேல்முறையீட்டை சாபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி…
ஸைட் இப்ராகிம்: அம்னோவிலிருக்கும் எவரையும்விட கிட் சியாங் சிறந்த பிரதமராக…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால், டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் பிரதமர் ஆகும் சாத்தியம் பற்றி அம்னோ தலைவர்கள் விடாது கரைந்து கொண்டிருப்பது பற்றி குறிப்பிட்ட ஸைட் இப்ராகிம், இது ஒரு தவறான கருத்தாக இருக்க முடியாது என்றார்.. இதை நாம்…
சார்ல்ஸ் சந்தியாகோ : நாட்டின் கல்வி முறை, இந்திய மாணவர்களைப்…
கல்வி மக்களின் அடிப்படை உரிமையாகும், இன அடிப்படையில் அதனை அரசியலாக்கக் கூடாது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார். உயர்க்கல்வி கூடங்களில் (ஐபிடிஏ), இந்திய மாணவர்களுக்கு 700 இடங்களை ஒதுக்க வேண்டுமென்ற, பிரதமரின் அறிவிப்பு குறித்து சந்தியாகோ கருத்துரைத்தார். நாட்டின் தற்போதையக் கல்விமுறை, ஒரு சாராருக்குச்…
‘கமுக்கமாக’ கோட்டா முறையைப் பயன்படுத்தும் பல்கலைக்கழகங்கள் இருக்கவே செய்கின்றன, தேசியக்…
ஒவ்வொரு ஆண்டும், மாணவர் சேர்க்கைக்கு ஒதுக்கீட்டு முறையைக் (கோட்டா) ‘கமுக்கமாக’ பயன்படுத்தும் பொது உயர்க்கல்வி கூடங்கள் (ஐபிடிஏ), நாட்டில் இருக்கவே செய்கின்றன என்று முன்னாள் தேசியக் கல்வி ஆலோசகர் கூறுகின்றார். இருப்பினும், மாணவர் சேர்க்கைக்கு ஒதுக்கீட்டு முறையைப் பயன்படுத்துவது அதிக அளவில் இல்லை எனவும் பேராசிரியர் தியோ கொக்…
இளம் பெண்களின் வெற்றியைக் காணமுடியாமல் இனவாதம் அம்னோவின் கண்களைக் குருடாக்கி…
மற்ற இனப் பெண்களின் வெற்றியைக் கண்டுகொள்ள முடியாமல் இனவாதம் அம்னோவின் கண்களைக் குருடாக்கி விட்டது என்று டிஎபி இளைஞர் பிரிவுத் தலைவர் டையனா சோபியா அம்னோவின் தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் மூசாவைச் சாடினார். டிஎபியில் சாதனைப் படைத்த இளம் பெண் தலைவர்கள் வரலாறு உண்டு. அம்னோவுக்கு…
மும்முனைப் போட்டியைத் தவிர்க்க, பி.எஸ்.எம். ஹராப்பானுடன் ஒத்துழைக்க விரும்புகிறது
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் வாக்குகளைச் சிதறடிக்காமல் இருக்க, பக்காத்தான் ஹராப்பானுடன் ‘தேர்தல் கூட்டணி’ வைக்க மலேசிய சோசலிசக் கட்சி விரும்புகிறது. பி.எஸ்.எம். 15 சட்டமன்றங்களிலும் 5 நாடாளுமன்றங்களிலும் போட்டியிடும் எண்ணம் கொண்டுள்ளதால், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதைத் தவிர்க்க இது உதவும் என, பி.எஸ்.எம்.…
மகாதிர்: மலாய்க்காரர்களின் பெரும் பிரச்சனை போதைப்பொருள், மதுபானம் அல்ல
போதைப்பொருளுக்கு அடிமையாதல் மலாய்க்காரர்களின் பெரும் பிரச்சனை. அப்பிரச்சனையைத் தீர்க்க சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு முஸ்லிம்-அல்லாதவர்கள் மற்றும் பீர் விழாவைத் துரத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்று மகாதிர் முகம்மட் இன்று கூறினார். முஸ்லிம்-அல்லாதவர்கள் மதுபானம் அருந்துவதில் தமக்குப் பிரச்சனை ஏதும் இல்லை என்று மகாதிர்…
சிவநேசன் : பி.எஸ்.எம்.-உடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது
பேராக் மாநில டிஏபி உதவித் தலைவர் எ.சிவநேசன், பி.எஸ்.எம்.-உடன் ஒத்துழைப்பதால் டிஏபி-க்கு எந்தவொரு பலனும் இல்லை என்பதால், அக்கட்சியை ஹராப்பானுடன் இணைப்பதற்கான சாத்தியக் கூறுகளை நிராகரித்தார். "அவர்கள் எங்களுக்கு விரோதமாக செயல்பட்டாலும் சரி, உண்மையாக ஒத்துழைக்க நினைத்தாலும் சரி, பக்காத்தான் ஹராப்பானுக்கு அதனால் இழப்பு எதுவும் இல்லை," என்று…
டாக்டர் பூ : பி.எஸ்.எம்.-ஐ ஹராப்பான் கூட்டணியில் இணைத்துக்கொள்ள வேண்டும்
டிஏபி-ஐ சேர்ந்த ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர், டாக்டர் பூ செங் ஹாவ் மலேசிய சோசலிசக் கட்சியைப் பக்காத்தான் ஹராப்பானின் 5-வது உறுப்புக் கட்சியாக இணைத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். பி.எஸ்.எம். இணைவதால் எதிர்க்கட்சி கூட்டணியின் வலிமை அதிகரிக்கும் என்பதை, ஹராப்பான் தலைமைத்துவம் உணர்ந்து, அவர்களை அங்கீகரிக்கும் வகையில் ஹராப்பான் கூட்டணியில்…
அம்னோவுடன் ஒத்துழைப்பது மலேசியாவுக்கு நன்மை தரும், பாஸ் முன்னாள் துணைத்…
பாஸ்-அம்னோ ஒத்துழைப்பு நடைமுறைப்படுத்தக் கூடியதாகிக் கொண்டிருக்கிறது என்பதோடு அது மலேசியாவுக்கு பயன்களை அளிக்கும் என்று பாஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நஷருடின் மாட் இசா கூறுகிறார். அம்னோவும் பாஸும் ஒன்றாக இணைய வேண்டியதில்லை. அவற்றுக்கிடையிலான வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு அரசியல் நிலைத்தன்மைக்காக ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும் என்றாரவர்.…




















