கிட் சியாங்: இந்த நூற்றாண்டில் மலாய்க்காரர்-அல்லாதவர் பிரதமராக வரப் போவதில்லை

  டிஎபி நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங் தாம் இந்நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற இலட்சியத்தைக் கொண்டிருந்ததே இல்லை என்றார். இந்நாட்டில் இந்த நூற்றாண்டில் ஒரு மலாய்க்காரர்-அல்லாதவர் பிரதமர் ஆவார் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று அவர் மேலும் கூறினார். அமெரிக்காவை எடுத்துக்காட்டாக கூறிய அவர், ஒரு…

அம்னோ எம்பியின் தீபாவளி அன்பளிப்பு: 6,000 சேலைகள்

  பாலிங் நாடாளுமன்ற தொகுதியிலுள்ள 6,000 இந்தியர்களுக்கு சேலைகள் மற்றும் குர்தாஸ்கள் தீபாவளி அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இன்று, 3,000 க்கு மேற்பட்ட இந்தியர்கள் நன்கொடைகளைப் பெற்றனர். இது எட்டாவது முறையாக நடத்தப்படுகிறது. திருவிழா காலத்தில் அச்சமூகத்தின் நிதிச் சுமையைக் குறைப்பதற்கு இது உதவுகிறது என்று பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர்…

பி.எஸ்.எம். : தேர்தல் இருக்கை விவாதத்தில் அஸ்மின் உண்மையாக இல்லை

14-வது பொது தேர்தல் தொகுதி விவாதத்தில், சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி உண்மையாக இல்லை என்பதால், அவரின் அழைப்பை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. பி.எஸ்.எம். மத்தியச் செயற்குழு உறுப்பினரான எஸ் அருட்செல்வன், அஸ்மின் கட்சிக்குக் கொடுத்த பழைய வாக்குறுதிகளையே ‘மறுசுழற்சி செய்வதாக’ கூறினார்.…

5 மடங்கு அதிக வாக்குகளோடு, பாகான் டத்தோவைத் தக்கவைக்க ஷாஹிட்…

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், கடந்த பொதுத் தேர்தலைவிட 5 மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று, பாகான் டத்தோ நாடாளுமன்ற தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ள துணைப் பிரதமர், ஷாஹிட் ஹமிடி இலக்குக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. 13-வது பொதுத் தேர்தலில், பாகான் டத்தோ தொகுதியை 2,108 பெரும்பான்மை ஓட்டுகளில் அவர்…

நோ ஓமார் : சிலாங்கூர் மந்திரி பெசார் ஆகும் ஆசை…

எதிர்வரும் பொதுத் தேர்தலில், பாரிசான் நேசனல் சிலாங்கூரைக் கைப்பற்றினாலும், மந்திரி பெசார் ஆகும் ஆசை தனக்கு இல்லை என, அம்மாநிலத்தின் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் நோ ஓமார் கூறியுள்ளார். இதுநாள் வரை, சிலாங்கூர் மாநில மக்களுக்குத் தானும் பாரிசானும் வழங்கிய சேவைகள் நேர்மையானவை, எந்தவொரு பிரதிபலனையும் பதவியையும்…

எம்எசிசி: லிம் பெற்றதாக கூறப்படும் ரிம1 பில்லியன் பற்றி விசாரிக்க…

  டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட் ரிம1 பில்லியன் கையூட்டு கொடுத்ததாக கூறப்படுவது பற்றி விசாரணை மேற்கொள்ள முடியாது என்று மலேசியா ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் துணை தலைமை ஆணையர் (நடவடிக்கைகள்) அஸாம் பாக்கி கூறினார். எம்எசிசி சட்டம்…

டிஎபி கிறிஸ்துவ அரசை உருவாக்குவது சாத்தியமற்றது, மாட் சாபு

  டிஎபி ஒரு கிறிஸ்துவ அரசை மலேசியாவில் உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று கூறப்படுவது முற்றிலும் சாத்தியமற்றது என்று அமனா தலைவர் முகமட் சாபு பினாங்கு, கம்போங் பினாந்தியில் நேற்றிரவு கூறினார். "மலேசியாவை நேசிப்போம்", கொள்ளைக்கார ஆட்சியை ஒழிப்போம்" என்ற தலைப்பிலான ஒரு செராமாவில் பேசிய மாட் சாபு,…

அந்த “எச்” யார் என்று தமக்குத் தெரியும் என்கிறார் மகாதிர்

    பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் (பெர்சத்து) இளைஞர் பிரிவின் தலைவர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மானுக்கு கட்சியை விட்டு வெளியேறுவதற்கு ரிம5 மில்லியன் கொடுக்க முன்வந்ததாகக் கூறப்படும் அந்த மர்ம மனிதர் யார் என்று தமக்குத் தெரியும் என்று மகாதிர் கூறினார். ஆனால், அந்த "எச்"…

இருக்கை மாற்றம் குறித்து மஇகாவுடன் பேச மைபிபிபி தயார்

  எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் 'இருக்கை மாற்றங்கள்' குறித்து மஇகாவுடன் பேசுவதற்கு மைபிபிபி தயாராக இருப்பதாக அதன் தலைவர் எம். கேவியஸ் கூறினார். ஒற்றுமை மற்றும் பிஎன்னுடன் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சி என்ற முறையில், தமது கட்சி இவ்விவகாரம் குறித்து மஇகா தலைவர்…

டிஎபியின் மறுதேர்தலை நடத்த அமெரிக்க தணிக்கையாளர்

  டிஎபி அதன் மத்திய செயற்குழுவிற்கான தேர்தலை நவம்பர் 12 இல் நடத்தும். அத்தேர்தலை நடத்துவதற்காக ஓர் அமெரிக்க தணிக்கை நிறுவனத்தை அது நியமித்துள்ளது. மன்றங்கள் பதிவகம் (ரோஸ்) அந்த நியமனத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. சுயேட்சை நிறுவனம் (கிராண்ட் தோர்ண்டன்) தணிக்கையாளராக நியமிக்கப்பட்டதை ரோஸ் ஏற்றுக்கொள்கிறது டிஎபியிடம் தெரிவிக்கப்பட்டது என்று…

அடுத்த வாரம் வருகிறது 200 ஆண்டு பழமையான நாசி பிரியாணி!

    மலேசிய தேசிய நூலகம் (பிஎன்எம்) மலாய் கையெழுத்துப் பிரதிகள் மீதான மூன்று நாள் அனைத்துலக மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில் 200 ஆண்டு பழமைவாய்ந்த மலாய் சமையல் குறிப்புகளில் காணப்படும் நாசி பிரியாணி பற்றியும் விவாதிக்கப்படும். இந்த மாநாடு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.…

எம்.ஏ.சி.சி. : 2008-ல் இருந்து, உறுப்பினர்கள் அதிகரிப்புக்காகக் காத்திருக்கிறோம்

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.), 2008-ல் தொடங்கப்பட்ட போது உறுதியளித்தது போல், தங்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5,000-மாக உயர்த்த வேண்டுமென விரும்புவதாக அதன் துணை ஆணையர் கூறினார். எம்.ஏ.சி.சி.-யின் துணை ஆணையர் (தடுப்பு) ஷாம்ஷுன் பஹாரின் முகமட் ஜமில், தற்போது உள்ள 2,800 பணியாளர்களின் எண்ணிக்கை போதுமானதாக…

‘டிஏபி & புலாவ் பினாங்’ கருப்பொருளுடனான நிகழ்வு – கல்வி…

பினாங்கு மாநிலக் கல்வி இலாகா, ‘டிஏபி & புலாவ் பினாங்’ எனும் கருப்பொருள் கொண்ட நிகழ்வுக்கு அனுமதி கொடுக்க மறுத்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை, புத்ராஜெயாவில் ஓர் ஆரம்பப்பள்ளியில் ‘அம்னோ & சுதந்திரம்’ எனும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதன்பால் ஈர்க்கப்பட்ட, பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தன்னார்வக்…

நோ ஒமார் நினைத்திருந்தால் ஒரு தொலைபேசி அழைப்பில் வீட்டுடைப்பை நிறுத்தியிருக்கலாம்-…

புதன்கிழமை   சுல்தான்   அப்துல்  அசீஸ்   விமான  நிலையத்துக்கு    அருகில்   மூன்று  வீடுகளும்   இரண்டு    கடைவீடுகளும்   உடைக்கப்பட்டதைத்   தடுக்கத்   தவறிவிட்டதாகக்  குற்றஞ்சாட்டும்   சிலாங்கூர்   மந்திரி   புசார்  முகம்மட்   அஸ்மின்  அலி ,    அது   மாநில    அரசாங்கத்தின்   அதிகாரத்துக்கு    உள்பட்ட  விவகாரம்  அல்ல   என்றார். “அது   கூட்டரசு   அரசாங்கத்தின்  நிலம்.  அவரைச் …

மகாதிர்: தியான் சுவா மேல்முறையீடு செய்திருந்தால் சிறைத்தண்டனை நீட்டிக்கப்பட்டிருக்கும்

சிறைத்தண்டனை     விதிக்கப்பட்ட      பத்து   எம்பி   தியான்  சுவா,  மேல்முறையீடு   செய்தால்   தண்டனைக்  கூட்டப்படலாம்   என்று   நினைத்தார்,  அதனால்தான்   தண்டனையை   எதிர்த்து   மேல்முறையீடு   செய்யவில்லை   என  பக்கத்தான்   ஹரபான்   தலைவர்    டாக்டர்    மகாதிர்  முகம்மட்   கூறினார். மலேசிய   நீதித்துறையின்மீது   அவருக்கு  நம்பிக்கை   இல்லை. சிறை   செல்லுமுன்னர்  சுவா   தொலைபேசி  வழி   …

‘டிஏபி & புலாவ் பினாங்’ கருப்பொருளுடன் நிகழ்வு நடத்த குழு…

பினாங்கு மாநிலத்தில், ஜனநாயகச் செயற்கட்சியின் (டிஏபி) 10-ஆம் ஆண்டு ஆட்சி நிறைவையொட்டி, அடுத்த ஆண்டு மாநிலம் முழுவதிலும் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் ‘டிஏபி & புலாவ் பினாங்’ எனும் கருப்பொருளுடன் ஒரு போட்டியை நடத்த அனுமதி கேட்டு, டிஏபி தலைவர் ஒருவர் கல்வி இலாகாவிற்குக் கடிதம் அனுப்பியுள்ளார். தன்னோடு…

சுப்ரா: இருக்கை பரிமாற்றம் குறித்து பிஎன்னுடன் விவாதிக்க மஇகா தயார்

  எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் இருக்கைகளைப் பரிமாற்றம் செய்துகொள்வதற்கு பாரிசான் நேசனல் பங்காளித்துவக் கட்சிகளுடன் விவாதிக்க மஇகா தயாராக இருப்பதாக அதன் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் கூறுகிறார். தற்போது பின்பற்றப்பட்டு வரும் இருக்கை ஒதுக்கீட்டு முறை நிலைநிறுத்தப்பட வேண்டும், ஏனென்றால் எந்த ஒரு மாற்றமும்…

50 பாஸ் உறுப்பினர்கள் அம்னோவில் சேர்ந்தனர்

  கிளந்தானில் தென்டோங் மாநில தொகுதியைச் சேர்ந்த 50 பாஸ் கட்சி உறுப்பினர்கள் அம்னோவில் சேர்வதற்கான தங்களின் மனு பாரங்களைக் கொடுத்தனர். பாஸ் கட்சி மாறிவிட்டது. அதன் முதன்மையான இலட்சியத்திலிருந்து விலகிச் சென்று விட்டது, குறிப்பாக ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் காலமான பின்னர்,…

வாரிசான் உதவித் தலைவருக்கு 5 நாள் தடுப்புக்காவல்

  பார்டி வாரிசான் சாபாவின் உதவித் தலைவர் பீட்டர் அந்தோனி மற்றும் இன்னொரு 52 வயதான வணிகர் ஆகிய இருவரையும் ஐந்து நாள்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) பெற்றுள்ளது. அந்த இருவரின் வாக்குமூலங்களை சாபா எம்எசிசி தலைமையகத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர்…

ஷாஹிட் : பள்ளியில் நடந்த ‘அரசியல்’ நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சை,…

அண்மையில், புத்ரா ஜெயாவில் ஒரு தேசியப்பள்ளியில், ‘அம்னோ மற்றும் சுதந்திரம் # நெகாராகு’ என்ற கருப்பொருளில் நடந்த மாணவர்கள் வகுப்பு அலங்கரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சி போட்டி குறித்து கருத்துரைக்க துணைப் பிரதமர் அஹ்மட் ஷாஹிட் ஹமிடி மறுத்துவிட்டார். இன்று, கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர் மாநாட்டில், இது போன்ற…

பீர் போத்தல்களை அடித்து நொறுக்கிய குற்றத்திற்காக ஜமால் கைது செய்யப்பட்டார்

நேற்று ஷா ஆலாம், சிலாங்கூர் செயலகக் கட்டிடத்திற்கு  வெளியில் பீர் போத்தல்களை அடித்து நொறுக்கியக் குற்றத்திற்காக சுங்கை பெசார் அம்னோ தலைவர், ஜமால் யூனுஸ் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். “செகிஞ்சாங்கில், அம்னோ தொகுதி கூட்டம் நிறைவடைந்த பிறகு, நான் போலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டேன். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு மூர்க்கமான…

எம்.ஏ.சி.சி. ‘வாரிசான்’ உதவித் தலைவரைத் தடுத்து வைத்தது

பார்ட்டி வாரிசான் சபா (வாரிசான்) உதவித் தலைவர் பீட்டர் அந்தோணி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.ஏ.சி.சி.) தடுத்து வைக்கப்பட்டார். நேற்று மாலை, கோத்தா கினாபாலு எம்.ஏ.சி.சி. அலுவலகத்திற்கு, விசாரணைக்கு வந்த அவர் தடுத்து வைக்கப்பட்டதை எம்.ஏ.சி.சி. உறுதிபடுத்தியதாக ஃப்ரி மலேசியா டுடே செய்தி கூறியது. நாளை காலை,…

மகாதிர்: துங்குவின் அம்னோ சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது; இன்றைய அம்னோ…

  நாட்டிற்குச் சுதந்திரம் பெற்றுத்தந்ததில் கட்சியின் பங்கு பற்றி அம்னோ தலைவர்கள் தற்பெருமை அடித்துக்கொள்கிறார். ஆனால், இன்றைய அம்னோ அதற்கு எதிர்மாரானதைச் செய்கிறது என்று மகாதிர் கூறுகிறார். "இன்றைய அம்னோவிலிருக்கும் கயவர்களைப் போன்றவர்களால் சுதந்திரத்தைப் பெற்றிருக்கவே முடியாது. நல்லகாலமாக, அதை துங்கு அப்துல் ரஹ்மான் வழி நடத்தினார். "அதை…