ஜாஹிட்: பெரும்பாலான பிஎன் கட்சிகள் வேட்பாளர் பட்டியலைக் கொடுத்து விட்டன

அம்னோ   உள்பட,    பெரும்பாலான  பிஎன்  கட்சிகள்   14ஆம்  பொதுத்   தேர்தலுக்கான   அவற்றின்   வேட்பாளர்   பட்டியலைச்   சமர்ப்பித்து    விட்டதாக  பிஎன்   துணைத்    தலைவரும்    துணைப்பிரதமருமான    அஹமட்   ஜாஹிட்  ஹமிடி   கூறினார். வேட்பாளர்களை   ஆய்ந்து   தேர்ந்தெடுக்க   அம்னோவும்   பிஎன்னும்   ஒரு   தனிக்  குழுவை   அமைத்திருப்பதாக    அவரை  மேற்கோள்காட்டி   த    ஸ்டார்   கூறியது.…

வேதாவை அடுத்து பழனிவேல் ஆதரவாளர்களுக்கு வலை வீசுகிறார் மகாதிர்

முன்னாள்   பிரதமர்    டாக்டர்   மகாதிர்    முகம்மட்   எதிர்வரும்    பொதுத்   தேர்தலில்   பக்கத்தான்   ஹராபானுக்கு   இந்திய  வாக்காளர்களின்  ஆதரவைப்  பெறும்   முயற்சியில்  மஇகா  முன்னாள்    தலைவர்    ஜி.வடிவேலின்   ஆதரவாளர்களுக்கு   வலைவீசுவதாக   செய்தி   வந்துள்ளது. இதன்   தொடர்பில்  பார்டி  பிரிபூமி   பெர்சத்து   அவைத்  தலைவர்  மகாதிர் பழனிவேலைச்   சந்திக்க   விரும்பி   அவருக்கு  …

‘சமுதாயச் சுடர்’ ஹாஜி தஸ்லிம் முகமட் இப்ராஹிம் மறைவு ஈடுகட்டமுடியாத…

நியாட் எனப்படும் தேசிய இந்தியப் போராட்ட அமைப்பின் தலைவர் சமுதாயச் சுடர் ஹாஜி தஸ்லிம் முகமட் இப்ராஹிம் அவர்கள்  இன்று இரவு டாமன்சாரா கேபிஜே மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மலேசிய இந்தியர்கள் உற்ற தோழரை இழந்து விட்டனர் என்று சேவியர் ஜெயக்குமார் அவரது இரங்கல் செய்தியில் கூறுகிறார். "அவர் ஓர்…

நாடு ஒரு சமூகப் போராளியை இழந்தது!

டத்தோ ஹஜி  தஸ்லிம் என பலரால் அழைக்கப்படும், 68 வயதுடைய  ஹஜி தஸ்லிம் முகமட் இப்ராஹிம் அவர்களின் மறைவு  சமூகத்திற்கு  ஒரு மாபெரும் இழப்பாகும். தலையில் ஒரு சொங்கோவையும் கையில் ஒரு தடியையும் வைத்துக்கொண்டு, ஊடுருவும் விழிகளுடன் நடமாடிய இவரின் பிரிவு சமூகப் போரட்ட களத்தில் ஒரு வெற்றிடத்தை…

‘சமுதாயச் சுடர்’ ஹஜி தஸ்லிம் காலமானார்

நாடறிந்த சமூகச் சேவையாளர், ‘சமுதாயச் சுடர்’ ஹஜி தஸ்லிம் முகமட் இப்ராஹிம் அவர்கள் சற்றுமுன், நோயின் காரணமாகக் காலமானார். அன்னாருக்கு வயது 68. நுரையீரலில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கடந்த சில நாட்களாக, கே.பி.ஜே. டாமான்சரா ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மையத்தில் (ஐ.சி.யு.) அவர் சிகிச்சை பெற்று…

மெமாலி சம்பவம் : முதலில் இறந்தது போலிஸ்காரர்கள், மகாதீர் கூறுகிறார்

மெமாலி சம்பவத்தில் முதலில் தாக்கப்பட்டது போலிஸ்காரர்களே என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் குற்றஞ்சாட்டியுள்ளார். கிராமவாசிகள் போலிஸ்காரர்களை மறைந்திருந்து தாக்கியதாகவும், அத்தாக்குதலில் சார்ஜன் ஒருவரும் இன்ஸ்பெக்டர் ஒருவரும் இறந்ததோடு, இன்னொரு கான்ஸ்டபல் படுகாயம் அடைந்ததாக அச்சமயத்தில் இடைக்காலப் பிரதமராக இருந்த முசா ஹீத்தாம், சம்பவம் நடந்து முடிந்த மறுநாள்…

மெமாலி மீது ஆர்சிஐ : வரவேற்கிறார் மூசா ஹித்தாம், ஆனால்…

முன்னாள்   துணைப்   பிரதமர்     மூசா   ஹித்தாமுக்கு  18  பேரின்  உயிரை   உறிஞ்சிய   மெமாலி  சம்பவத்தை   விசாரிக்க   அரச   ஆணையம்   அமைக்கப்படுவதில்   ஆட்சேபனை   எதுவும்  இல்லை. ஆனால்,  அரசியல்வாதிகள்   அதை   வைத்து  அரசியல்    ஆதாயம்    தேடிக்கொள்வதைத்   தவிர்க்க,    அந்த   ஆர்சிஐ   பொதுத்  தேர்தலுக்குப்   பின்னரே  அமைக்கப்பட   வேண்டும்    என்றவர்   கருதுகிறார்.…

பிகேஆர் எம்பி அரசியல் செயலகத்திலிருந்து விலகினார்

பிகேஆர்   கட்சியில்   உள்ள   சிலருக்கு   அது  பாஸ்  கட்சியுடன்   பேச்சு   நடத்துவது   பிடிக்கவில்லை.   அதன்  விளைவாக    அக்கட்சியில்  விரிசல்   பெரிதாகிக்கொண்டு   வருகிறது. பாஸுடன்   பேச்சு   நடத்தப்படுவதற்கு   எதிர்ப்புத்    தெரிவித்து   பிகேஆர்   எம்பி   வில்லியம்   லியோங்  கட்சியின்   அரசியல்    செயலகத்திலிருந்து     விலகிக்  கொண்டிருப்பதாக  அறிவித்தார். “ என்னால் (பாஸுடன்  ஒத்துழைப்பதைத்  …

14வது பொதுத் தேர்தலில் இளைஞர்கள் ஆதரவு பிஎன்னுக்கே- சாலே

தொடர்பு,  பல்லூடக    அமைச்சர்    சாலே   சைட்    கெருவாக்,  வாக்காளர்களில்   பாதிப்பேர்   இளைஞர்கள்    என்றும்    அவர்களின்   ஆதரவு   பிஎன்னுக்குத்தான்   என்றும்   நம்புகிறார். கடந்த  ஆண்டு    நடைபெற்ற    கோலா  கங்சார்,   சுங்கை    புசார்   இடைத்தேர்தல்களை  வைத்து    அவர்   இம்முடிவுக்கு   வந்துள்ளார்.  அவ்விரு   தொகுதிகளிலும்   பிஎன்   கூடுதல்   பெரும்பான்மையுடன்     வெற்றி   பெற்றது. “அந்த  …

காலிட் செப்டம்பர் 5-இல் பணி ஓய்வு பெறுகிறார்

நான்காண்டுகள்   போலீஸ்   படைத்    தலைவராக   பணியாற்றிய  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்   போலீஸ்   காலிட்   அபு   பக்கார்,  செப்டம்பர்   5-இல்  60-வயதாவதைத்   தொடர்ந்து    பணி   ஓய்வு   பெறுவார். “இது   என்  சொந்த   முடிவு. ஓய்வுகொள்ள   வேண்டிய   தருணம்   வந்து   விட்டது”,  என   காலிட்  பெரித்தா   ஹாரியானிடம்    தெரிவித்தார். காலிட்,  1976-இல், …

ரபிசி குற்றவாளி என்ற தீர்ப்பை உயர் நீதிமன்றம் நிலைநிறுத்தியது

இன்று    கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம்,    அதிகாரப்பூர்வ  இரகசிய  சட்ட(ஓஎஸ்ஏ)க் குற்றச்சாட்டில்    பாண்டான்   எம்பி   ரபிசி   ரம்லி  குற்றவாளிதான்   என்பதையும்  அவருக்கு   கொடுக்கப்பட்ட   18மாதச்   சிறைத்தண்டனையையும்    நிலைநிறுத்தியது. அதேவேளை,  நீதிபதி   அஸ்மான்   அப்துல்லா,      செஷன்ஸ்   நீதிமன்றத்தில் ரபிசிமீது   சுமத்தப்பட்ட   இரண்டாவாது   ஓஎஸ்ஏ   குற்றச்சாட்டிலிருந்து    அவரை   விடுவித்தார். பிகேஆர்   உதவித்   தலைவருமான    ரபிசி  …

ஊடகச் சுதந்திரம் இப்போது சிறப்பாக உள்ளது? அடிப்படையற்றக் கூற்று, முன்னாள்…

டாக்டர் மகாதிர் முகமது தலைமைத்துவக் காலத்தைவிட, தற்போது ஊடகச் சுதந்திரம் சிறப்பாக உள்ளது என்று துணைப் பிரதமர் அஹ்மாட் ஷாஹிட் ஹமிடி கூறுவது தவறு என்று இரண்டு மூத்தப் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். டாக்டர் மகாதீர், மாதத்தில் ஒரு முறையாவது பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என உத்துசான் மலேசியா…

முகமட் ஹசான் : திருவள்ளுவர் சிலையை மூடச் சொன்னதில் எந்த…

சிரம்பானில், ஒரு தமிழ்ப்பள்ளியில் திருவள்ளுவர் சிலையை மூடச் சொன்னதில் எந்தவொரு தீய எண்ணமும் இல்லையென, நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் முகமட் ஹசான் இன்று தெரிவித்தார். சமீபத்தில் லாடாங் ஷாங்காய் தமிழ்ப்பள்ளிக்கு முகமட்டின் வருகைக்கு முன், திருவள்ளுவர் சிலை மூடச்செய்ததற்கு, மந்திரி பெசாரின் அலுவலகம்தான் காரணம் எனக்கூறி, எதிர்க்கட்சி…

மகாதிர் ஐசியுவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது உண்மையல்ல, பெர்சத்து கூறுகிறது

  மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ள முன்னாள் பிரதமர் மகாதிர் புத்ரா ஜெயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் செய்தியில் உண்மையில்லை என்று பெர்சத்து மீடியா யுனிட் இன்றிரவு ஒரு முகநூல் பதிவில் கூறுகிறது. ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மகாதிர் சிலாங்கூர், பூச்சோங்கிற்கு…

தெரேசா கொக்: டிஏபி கட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம்

செப்டம்பர்  10இல்  நடத்தத்   திட்டமிடப்பட்டிருந்த   கட்சி   மறுதேர்தல்    ஒத்திவைக்கப்படலாம்    என்று   கூறினார்   டிஏபி    உதவித்   தலைவர்    தெரேசா   கொக். தேர்தல்   தேதிக்கு   சங்கப்  பதிவக(ஆர்ஓஎஸ்) த்திலிருந்து    அதிகாரப்பூர்வ   ஒப்புதல்  கிடைத்த  பிறகுதான்   தேர்தலை   நடத்த   முடியும். நேற்று    ஆர்ஓஎஸ்   தலைமை   இயக்குனர்    முகம்மட்    ரஸின்   அப்துல்லாவைச்   சந்தித்துப்   பேசியபோது …

லாக்-அப் சட்டை அணியச் செய்வது போலீஸ் எஸ்ஓபியை மீறும் செயல்

சந்தேகத்துக்குரியவர்களை  லாக்-அப்  சட்டை   அணிய  வைத்து    நீதிமன்றம்  அழைத்து  வருவதற்கு    போலீஸ்  படைத்   தலைவர்   காலிட்    அபு   பக்கார் அளித்த  விளக்கத்தை   மறுத்துரைத்தார்  பாடாங்  செராய்   எம்பி    என். சுரேந்திரன். போலீசார்   சந்தேகத்துரியவர்களை   செவ்வூதா  நிற  லாக்-அப்  சட்டை  அணியச்  செய்து   நீதிமன்றத்துக்கு    அழைத்து வருவது    வழக்கமான  ஒன்றுதான் …

நூர் ஜஸ்லான்: பொகா வேறு ஐஎஸ்ஏ வேறு

குற்றச்செயல்  தடுப்புச்   சட்டம்(பொகா)  கோடூரமானது    என்றும்    அதுவும் உள்நாட்டுப்  பாதுகாப்புச்   சட்டம்(ஐஎஸ்ஏ)   போன்றதுதான்   என்றும்  கூறப்படுவதில்    உண்மையில்லை    என   உள்துறை   துணை   அமைச்சர்   நூர்  ஜஸ்லான்   முகம்மட்    குறிப்பிட்டார். தடுப்புக்காவலில்  வைக்கப்படுவோருக்கு  ஐஎஸ்ஏ  வழங்குவதைக்  காட்டிலும்   பொகா   கூடுதல்   பாதுகாப்பு   உரிமைகளை   வழங்குவதாக   நூர்  ஜஸ்லான்    கூறினார். “முன்பு  …

சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் எம்ஏசிசி அதிரடிச் சோதனை

இன்று   மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையம்(எம்ஏசிசி)      சிலாங்கூர்  பல்கலைக்கழக(யுனிசெல்)த்தில்   அதிரடிச் சோதனை   ஒன்றை   நடத்தியது. அங்கு   சோதனை   நடந்து  கொண்டிருந்த     வேளையில்    யுனிசெல்லுடன்   தொடர்புள்ள      மந்திரி  புசார்   இன்கொர்பரேடட்(எம்பிஐ),   ஜனா  நியாகா    சென்.  பெர்ஹாட்   ஆகியவற்றிலும்      சோதனைகள்     நடந்தன. யுனிசெல்லுக்கும்   ஜனா  நியாகாவுக்குமிடையிலான    சச்சரவு   தொடர்பில்   சிலாங்கூர்  மந்திரி  புசார்  …

ரிம 2.6 பில்லியன் ‘நன்கொடை’, கேள்வி எழுப்பிய ரஃபிஷியைப் போலிஸ்…

பிரதமர் நஜிப் ரஷாக்கின் சொந்த வங்கிக் கணக்கில் இருந்த 2.6 பில்லியன் ரிங்கிட் குறித்து, தனது வலைப்பதிவில் கருத்து தெரிவித்ததன் விழைவு, மக்கள் நீதி கட்சியின்  உதவித் தலைவர் ரஃபிஷி ரம்லி, இன்று டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் விளக்கமளிக்க அழைக்கப்பட்டார். சவுதி அரேபியா, மெக்காவில் மெட்ரோ…

பாஸ்: மெமாலி மீதான ஆர்சிஐ-யை வரவேற்கிறோம், அதேபோல் 1எம்டிபிக்கும் ஒன்று…

டாக்டர்    மகாதிர்    முகம்மட்     பிரதமராக     இருந்தபோது    கெடாவில்     நிகழ்ந்த    மெமாலிச்  சம்பவத்தை   விசாரிப்பதற்கு   அரச   விசாரணை   ஆணையம்   அமைக்க   அரசாங்கம்    தயாராக   இருப்பதை   பாஸ்  வரவேற்கிறது. அதேபோன்று  1எம்டிபிக்கும்   ஒரு   ஆர்சிஐ   அமைக்கப்பட   வேண்டும்    என்று  அக்கட்சியின்   துணைத்    தலைவர்   துவான்   இப்ராகிம்    கூறினார். ஆழமாக   விசாரணை   நடத்தி  …

‘நேர்மைக்கு அல்லாமல் இனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் ஹாடி’

பாஸ்   தலைவர்    அப்துல்   ஹாடி   ஆவாங்,   ஒரு  தலைவர்   நேர்மையானவராக   இருக்க    வேண்டும்    என்று   கூறாமல்  குறிப்பிட்ட   இனத்தைச்   சேர்ந்தவராகத்தான்   இருக்க   வேண்டும்    என்று   கூறுவதை    பக்கத்தான்   ஹராபான்   இளைஞர்    தலைவர்கள்   சாடினர். பாஸ்    தலைவர்     நேற்றைய    திறந்த    மடலிலும்   கடந்த    வாரம்  ஒரு    அறிக்கையிலும்    நாட்டை    வழிநடத்துவோர்  …

செப்டம்பர் 10-இல் கட்சித் தேர்தலை நடத்த டிஏபி உத்தேசம்

டிஏபி   அதன்   கட்சித்   தலைமைக்கான   தேர்தலை   செப்டம்பர்   10-இல்   நடத்த  உத்தேசிக்கிறது.  ஆனால்   சங்கப் பதிவகமோ (ஆர்ஓஎஸ்)   அதற்குமுன்   சில  விவங்களைத்   தெளிவுப்படுத்திக்கொள்ள   விரும்புகிறது. டிஏபி   உதவித்   தலைவர்  தெரேசா    கொக்   இதனைத்   தெரிவித்தார்.  அவர்   இன்று  காலை   ஆர்ஓஎஸ்   தலைமை  இயக்குனர்   முகம்மட்  ரஸின்   அப்துல்லாவுடன்  90-நிமிடச் …

சீ விளையாட்டு போட்டியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது

தென்கிழக்காசிய   விளையாட்டுப்   போட்டி(சீ  போட்டி)களுக்கு    ஸ்குவாஷ்   ஆட்டக்காரர்களை   ஏற்றிச்சென்ற   ஒரு   பேருந்து    விபத்துக்குள்ளானதாக   த   ஸ்டார்  செய்தி  ஒன்று   கூறியது. பேருந்து   புத்ரா  ஜெயாவில்  உள்ள   ஒரு   தங்கு  விடுதியிலிருந்து   மியான்மார்,  பிலிப்பீன்ஸ்,  தாய்லாந்து   ஆகிய    நாட்டு   விளையாட்டாளர்களுடன்   புக்கிட்   ஜலில்  தேசிய   ஸ்குவாஷ்    மையம்  நோக்கிச்   சென்று …