பெர்சத்து தொடக்கவிழாவுக்குப் பேராளரை அனுப்பாதது ஏன்? பாஸுக்கு மாபுஸ் கண்டனம்

கடந்த   வார  இறுதியில்   பார்டி  பிரிபூமி  பெர்சத்து  மலேசியா(பெர்சத்து)   அதிகாரப்பூர்வ   தொடக்க  விழாவுக்கு   ஒரு   பேராளரைக்கூட   அனுப்பி   வைக்காத   பாஸ்  கட்சியை    மாபுஸ்   ஒமார்   கடிந்து   கொண்டார். பாஸ்   கட்சி      எதிரணிக்  கூட்டணியுடன்   உறவு    வைத்துக்கொள்ள   வேண்டும்    என்றுதான்  மக்கள்    விரும்புகிறார்கள்.  ஆனால்,  பாஸ்   பேராளரை   அனுப்பி  வைக்காதது  …

ரிம2.6 பில்லியன் ‘நன்கொடை’ வழக்கை மீண்டும் விசாரிப்பீர்: அபாண்டிக்குக் கோரிக்கை

சட்டத்துறைத்   தலைவர்    முகம்மட்  அபாண்டி   அலி   மன்னிப்பு    கேட்க   வேண்டும்    என்று  கோரிக்கை   விடுத்துள்ள   வழக்குரைஞர்    முகம்மட்   ஹனிப்   கத்ரி    அப்துல்லா,     அவருக்குப்   பிரதமர்    நஜிப்   அப்துல்  ரசாக்   மீதான    வழக்கை    மீண்டும்   விசாரணை    செய்யும்  துணிச்சல்   உண்டா    எனவும்    சவால்   விடுத்தார். சிங்கப்பூர்    நீதிமன்றம்,   1எம்டிபி மீதான   …

சீனாவின் போலீஸ் நடவடிக்கைகளைப் புகழும் ஜாஹிட்டைச் சாடினார் எம்பி

ஐயா,  குற்றங்களை    எதிர்த்துப்  போராட   சீனா  பின்பற்றும்  முறைகளைப்  புகழ்ந்துரைக்கிறீர்களே    அப்படிப்  புகழ்ந்துரைக்க     ஒரு  ஜனநாயக     நாட்டைத்    தேர்ந்தெடுத்திருக்கக்  கூடாதா    என்று   எதிரணி   எம்பி   ஒருவர் துணைப்   பிரதமர்   அஹ்மட்   ஜாஹிட்  ஹமிடியை   நோக்கி   வினவுகிறார். “நாம்   பிரமிப்பதற்கோ  கற்றுக்கொள்ளவோ   சீனா   ஒரு    முன்மாதிரி   நாடல்ல. “அது    சட்ட  …

ஜோகூர் சுல்தான்: மகாதிர் அளவுக்கு மீறிச் சென்றுவிட்டார்

  மாநிலம் (ஜோகூர்) அதன் நிலத்தை சீனர்களிடம் அடமானம் வைத்துவிட்டது என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் கூறியிருந்ததற்காக ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கண்டார் அவரை அளவுக்கு மீறிச் சென்றுவிட்டார் என்று சாடினார். த ஸ்டார் நாளிதழுக்கு அளித்த ஒரு நேர்காணலில் மகாதிர் கூறிய கருத்துகளால் தாம் கடந்த…

14 ஆவது பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெறும் என்று…

  மிகப் பிரசித்தி பெற்ற பொருளாதார வல்லுனரான ஜோமோ கவாம் சுந்தரம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் வெற்றி பெரும் என்று ஆருடம் கூறியுள்ளார். புது வருடத்தில் ஆருடம் கூறுவது வழக்கமான ஒன்று கூறிய ஜோமோ, ஏப்ரலில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் அத்தேர்தலில் எதிரணி தோல்வி…

மக்கி அழியும் நெகிழிப் பைகளுக்கு நல்ல வரவேற்பு

ஜனவரி   முதல்   மக்கி   அழியும்   நெகிழிப்  பைகள்   அல்லது   காகிதப்   பைகளைத்தான்   பயன்படுத்த    வேண்டும்    என்ற   விதிமுறை  நல்ல   வரவேற்பைப்  பெற்றுள்ளது     என்று   கூட்டரசு     பிரதேச   துணை   அமைச்சர்    லோக   பாலன்    மோகன்   கூறினார். ஆனாலும்,   இன்னும்     சில     வணிகர்களும்     வியாபாரிகளும்    அந்த   விதிமுறையைப்  பின்பற்றவில்லை.     அதனால்   பாதகமில்லை,  …

மலேசிய ஐஎஸ் போராளி சீரியாவில் கொல்லப்பட்டான்

இஸ்லாமிய   தீவிரவாத  இயக்கமான   ஐஎஸ்ஸில்   ஒரு  போராளியாக    இருந்த   மலேசியரான   சைனுரி   கமருடின்    சீரியாவில்  கொல்லப்பட்டான். இரண்டு    நாள்களுக்குமுன்  சீரியாவில்    கொல்லப்பட்ட    மூன்று  மலேசியர்களில்    தால்ஹா    என்ற  பெயரில்  பிரபலமாக   விளங்கிய   சைனுரியும்   ஒருவன்    என்பதை      புக்கிட்   அமான்   பயங்கரவாத   எதிர்ப்புப்   பிரிவுத்   துணை   இயக்குனர்   ஆயுப்   கான்  …

டத்தாரான் மெர்தேக்காதான் வேண்டும், பாஸ் பிடிவாதம்

  பாஸ் கட்சியின் சட்டம் 355 பேரணியை எங்கே நடத்துவது என்று சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் பேசுவதற்கு பாஸ் கட்சி ஒரு கூட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறது. "நாங்கள் முதலில் கூடுவோம். மிகக் குறுகிய காலத்தில் கூடுவோம். பெப்ரவரி 18 இல் டாத்தாரான் மெர்தேக்காவில் கூட்டம் நடத்துவதர்கான எங்களுடைய மனுவுக்கான டிபிகேஎல்லின்…

சட்டம் 355 கூட்டத்திற்கு பாஸ் தித்திவங்சா அரங்கத்தைப் பயன்படுத்தலாம், கு…

  ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் பரிபாலனம்) (திருத்தங்கள்) சட்டம் 1965 சம்பந்தப்பட்ட கூட்டத்திற்கு பாஸ் கட்சி கோலாலம்பூர் தித்திவங்சா அரங்கத்தைப் பயன்படுத்தலாம் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் கு நான் கூறியுள்ளார்.. யாராக இருந்தாலும் சரி, டாத்தாரான் மெர்தேக்காவை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். ரோஹின்யா முஸ்லிம் ஒற்றுமை ஒன்றுகூடுதல்…

பெர்சத்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிகேஆர் அதன் உறுப்பினர்களுக்கு பணம் தருகிறதா?

  இன்றிரவு நடைபெறும் பெர்சத்து கட்சியின் அதிகாரப்பூர்வமான தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிகேஆர் உறுப்பினர்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளதாகவும் அதற்குப் பணம் கொடுக்கப்படும் என்று கூறப்படுவதை பிகேஆர் மறுத்துள்ளது. இதை அறிவிக்கும் ஒரு போலிக் கடிதம் வலம் வந்து கொண்டிருக்கிறது. பிகேஆர் அலுவலகம் அவ்வாறான கடிதம் எதையும் வெளியிடவில்லை என்று பிகேஆரின்…

போலீஸ் லாக்கப்பில் மரணம் ஏற்படுவதைத் தவிர்க்க இருமுனை அணுகுமுறை பின்பற்றப்பட…

  லோரி ஓட்டுநர் பி. சந்திரன் 2012 ஆம் ஆண்டில் போலீஸ் லாக்கப்பில் இறந்தது பற்றிய தமது 86 பக்க தீர்ப்பில் போலீசார் லாக்கப் சட்டம் 1953 ஐ பின்பற்றத் தவறிவிட்டதுதான் காரணம் என்று நீதிபதி எஸ். நந்தபாலன் கூறியுள்ளார். அச்சட்டப்படி லாக்கப்பில் அடைக்கப்பட்டிருப்பவரின் வியாதிக்கு, குறிப்பாக மனநோயால்…

பொங்கல் நல்வாழ்த்துகள்

 செம்பருத்தி . கோம் அதன் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்காமல் நாம் கொண்டாடும் பொங்கலுக்கு அர்த்தமில்லை!

மலேசிய சோசியலிஸ்ட் கட்சியின் சார்பில் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். இயற்கைக்கும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் நன்றி கூறும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் இத்திருநாளை நாம் கொண்டாடுகிறோம். ஒரு நாட்டின் அடிப்படை உணவு தேவையை விவசாயிகள் பூர்த்தி செய்கின்றனர். மேலும், பொருளாதார வளர்ச்சிக்கும் இவர்களின் பங்கு இன்றியமையாதது. ஆனால், நாட்டின்…

‘குண்டு தயாரிப்பு நிபுணன்’ என்று சந்தேகிக்கப்படும் நபர் பினாங்கில் கைது

நேற்று   நிபோங்  தெபால்,  தாமான்  மினாமாவில்,  ஒரு   வீட்டில்   அதிரடிச்   சோதனை   நடத்திய   போலீசார்,    குண்டு   தயாரிப்பில்   கில்லாடி    என்று   நம்பப்படும்   ஓர்   ஆடவனை    கைது   செய்தனர். அவனுடன்   இருந்த   ஒரு  பெண்ணும்   கைது   செய்யப்பட்டார். அந்த   32  வயது   ஆடவன்மீது   ஏற்கனவே   ஆறு   குற்றப்பதிவுகள்   இருப்பதாகவும்    அவன்   …

மருத்துவமனையில் ஓவியர் லாட்

லாட்   என்ற   பெயரில்   பிரபலமாக    விளங்கும்   கேலிச்சித்திர  ஓவியர்  டத்தோ   முகம்மட்  நோர்  காலிட்  இன்று   ஈப்போ   பந்தாய்    மருத்துவமனையில்    சேர்க்கப்பட்டார்.   அவருக்கு   இருதயப்  பிரச்னை   என்று     தெரிகிறது. லாட்,65,  இன்று   காலை   அம்மருத்துவமனையின்     தீவிர    கவனிப்புப்  பிரிவில்   அனுமதிக்கப்பட்டதாக   அவரின்   இளவல்,  திரைப்பட    இயக்குனர்,  மாமாட்   காலிட்  …

செய்தியைத் ‘திரித்துக் கூறியதற்காக’ குவான் எங்குக்கு ரிம300ஆயிரம் இழப்பீடு கொடுக்க…

பினாங்கு   உயர்   நீதிமன்றம்,   பினாங்கு   முதலமைச்சர்   லிம்   குவான்   எங்   குறித்த    செய்தி  ஒன்றை  “திரித்தும்    தவறாகவும்”   வெளியிட்டதற்காக    நியு   ஸ்ரேய்ட்ஸ்   டைம்ஸ்  பெர்ஹாட் (என்எஸ்டிபி)   அவருக்கு  ரிம300,000   கொடுக்கும்படி  இன்று   உத்தரவிட்டது. செலவுத்   தொகையாக   ரிம35,000  சேர்த்துக்  கொடுக்கும்படியும்    உயர்  நீதிமன்ற   நீதிபதி    ரோசில்லா   யோப்    உத்தரவிட்டார்.…

சரவாக்குக்குப் புதிய சிஎம்

சரவாக்   மாநிலச்   சட்டப்படி      இடைக்கால   முதல்வர்    பதவி   கிடையாது  என்பதால்   அங்கு   ஒருவர்  புதிய   முதலமைச்சராக   இன்று   பதவியில்   அமர்த்தப்படுவார்   என்று     எதிர்பார்க்கப்படுவதாக    த    போர்னியோ   போஸ்ட்   கூறுகிறது. இது   அவசரமாக    செய்யப்பட   வேண்டிய  ஒன்று     என்று   தகவலறிந்த    வட்ட்டாரமொன்றை   மேற்கோள்காட்டிக்  கூறிய   அந்நாளேடு,   அடினான்   சதேமின்    இறப்பை  …

ஐஎஸ் தொடர்புடைய பொருள்கள் வைத்திருந்த எட்டு இந்தோனேசியர்கள் நாடு கடத்தப்பட்டனர்

மலேசிய   போலீசார்  எட்டு   இந்தோனேசியர்களை   நாடு   கடத்தியுள்ளனர்.  அந்த   எண்மரில்   ஒருவர்  அவரது  கைப்பேசியில்     ஐஎஸ்   படங்கள்    வைத்திருப்பது   தெரிய   வந்ததை    அடுத்து    இந்நடவடிக்கை   மேற்கொள்ளப்பட்டதாக    ஒரு   வட்டாரம்   தெரிவித்தது. அவர்களை  முதலில்  கைது    செய்தவர்கள்    சிங்கப்பூர்    அதிகாரிகள்    என்றவர்   தெரிவித்தார்.     சிங்கப்பூரின்   ஊட்லண்ட்ஸ்   சுங்க,  குடிநுழைவுத்துறையில்   பிற்பகல்   …

நாடு ஆற்றல்மிகு தலைவரை இழந்து விட்டது: பிரதமர் இரங்கல்

சரவாக்   முதலமைச்சர்   அடினான்   சதேம்  இறப்பினால்     நாடு   திறமைமிக்க    தலைவர்   ஒருவரை   இழந்து     விட்டது   எனப்  பிரதமர்    நஜிப்     அப்துல்   ரசாக்   கூறினார். சரவாக்    மக்கள்   அடினானை   மிகவும்    நேசித்தார்கள்    அதனால்      அவர்களுக்கு   இது   மிகப்   பெரிய   இழப்பாகும்     என்றாரவர். “அவரது   நிர்வாகத்தில்   பல   மாற்றங்கள்    நிகழ்ந்துள்ளன. “அவரின் …

சரவாக் சிஎம் அடினான் சதேம் காலமானார்

சரவாக்    முதலமைச்சர்    அடினான்   சதேம்   இன்று   காலமானார்.  அவருக்கு   வயது   72. அவர்    அண்மையில்   கோத்தா    சமராஹானில்,  சரவாக்   பொது   மருத்துவமனையில்   இருதய    சிகிச்சை  மையத்தில்    அனுமதிக்கப்பட்டிருந்ததாக    தெரிகிறது. அடினான்,  2014,   பிப்ரவரி-இல்   அப்துல்   தயிப்  மஹ்மூட்டிடமிருந்து   முதலமைச்சர்   பதவியை  ஏற்றார். அவருடைய   இறப்புக்கான    காரணம்   இன்னும்      சரியாகத்  …

பினாங்கு தைப்பூசத்தில் சாயத்தை ‘ஸ்ப்ரே’ செய்வோருக்கு இராமசாமி எச்சரிக்கை

பினாங்கு   இந்து   அறவாரிய (பிஎச்இபி)  தலைவர்   பி.இராமசாமி,  “தைப்பூசத்தில்   குழப்பம்  விளைவிக்கப்    புறப்பட்டிருக்கும்   ஸ்ப்ரே  கும்பல்”   குறித்து   அடுத்த   வாரம்   போலீசைச்   சந்தித்து    பேசப்   போவதாகக்   கூறினார். தைப்பூசத்துக்குப்  பெண்கள்    ஆடை   அணிந்து  வரும்   முறை    என்றும்   ஒரு   பிரச்னையாக     இருந்ததில்லை   என்றாரவர். “இப்போது,  திடீரென்று   தங்களைச்   சமூகக்  …

சிறுவனை வீட்டில் தனியே விட்டுச் சென்ற பெண்ணுக்கு ரிம10,000 அபராதம்

தன்  பராமரிப்பில்    விடப்பட்டிருந்த    மூன்று வயது    சிறுவனை   வீட்டில்    தனியே   விட்டுச்  சென்ற    பெண்ணுக்கு   கோலா   பிலா   செஷன்ஸ்    நீதிமன்றம்     10,000 ரிங்கிட் அபராதம் விதித்து    240  மணி   நேரம்   சமூகச்   சேவை   செய்யவும்   உத்தரவிட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால்    அப்பெண்   ஓராண்டுச் சிறை தண்டனையை அனுபவிக்க  நேரும்.…

மலேசியப் பொருளாதாரம் 4.3விழுக்காடு வளர்ச்சி காணும்: உலகப் பொருளகம் ஆருடம்

உலகப்    பொருளகம்,   2017க்கான   மலேசியாவின்   பொருளாதார   வளர்ச்சி  4.5  விழுக்காடாக   இருக்கும்    என்றும்    அடுத்த    ஆண்டில்   அது   4.5 விழுக்காடாக   உயரும்   என்றும்    ஆருடம்   கூறியுள்ளது. இவ்வட்டாரத்தில்   உள்ள   மூலப்  பொருள்   ஏற்றுமதி     நாடுகளில்   பொருளாதார   வளர்ச்சி    மேலோங்கும்    என்று    எதிர்பார்ப்பதாக     அப்பொருளகம்  ஓர்    அறிக்கையில்   கூறியது. “முடிவடைந்த    …