அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகால ஒப்பந்தப் பணிக்காலத்தை நிறைவு செய்த மருந்தாளுநர்களுக்கு (Pharmacists), ஒப்பந்த நீட்டிப்பு வழங்கப்படாது என்று சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. "பணி முடிவடைவதால் 45 ஒப்பந்த மருந்தாளுநர்கள் தவிப்பு" என்ற செய்தி தொடர்பாக எழுப்பப்பட்ட கவலைகளைத் தாங்கள் கவனித்துள்ளதாக அமைச்சு கூறியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்ட…
ரபிசி: எப்ஜிவி-யைப் பங்குச் சந்தையிலிருந்து அகற்றினால் ரிம7.8 பில்லியன் இழப்பு…
பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் (எப்ஜிபி) நிறுவனம் பங்குச் சந்தையிலிருந்து விலகிக்கொண்டால் அதற்கு ரிம ரிம7.8 பில்லியன் இழப்பு ஏற்படும் என பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கூறினார். இழப்பு எப்படி என்றால், எப்ஜிபி பங்குதாரர்களிடமிருந்து பங்குகளைத் திரும்ப வாங்குவதற்கு ரிம2.9 பில்லியன் கொடுக்க வேண்டியிருக்கும்; எப்ஜிபி-இல் முதலீடு …
ஜோ லோ திரும்பி வந்து 1எம்டிபி குறித்து விளக்கமளிக்க வேண்டும்:…
பினாங்கில் பிறந்தவரான லோ தெக் லோ அல்லது ஜோ லோ, நாடு திரும்பி 1எம்டிபியில் அவரது பங்கு என்னவென்பதை விளக்கிட வேண்டும் என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வலியுறுத்தினார். 1எம்டிபி விவகாரத்தால் மலேசியாவின் பெயர் கெட்டுப் போயுள்ளது. அதிகாரிகள் ஜோ லோ-வின் கடப்பிதழை இரத்துச் செய்ய …
மலாக்கா சிஎம்: விசாரணைக்கு உதவினேன், விசாரணை என்மீதல்ல
மலாக்கா முதலமைச்சர் இட்ரிஸ் ஹருன், மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மலாக்காவில் பல அரசு அதிகாரிகள்மீது விசாரணை மேற்கொண்டுள்ளது என்றும் அவர்களின் விசாரணைகளுக்குத் தாம் உதவியதாகவும் இன்று கூறினார். நேற்று அவரது அலுவலகத்துக்கு எம்ஏசிசி சென்று சிஎம்மிடம் விசாரணை செய்ததாக வெளிவந்துள்ள நாளிதழ் செய்தி குறித்து அவர் விளக்கமளித்தார்.…
டிஜி: குடிநுழைவுத் துறையில் ஊழல் ‘துரோகிகள்’ இருக்கவே செய்கிறார்கள்
குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் முஸ்டபார் அலி, அத்துறையில் ஊழலில் ஈடுபடுவோர் இன்னும் உண்டு என்று கூறினார். பணியாளர்கள் அனைவரும் நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், நேற்றிரவுகூட ஒரு சம்பவத்தில் சில அதிகாரிகள் “வேறு விதமாக நடந்து கொண்டார்கள்” என்றார். “வெளியே சில “சூத்திரதாரிகளும்” உள்ளே …
சட்டம் 355 குறித்து அச்சம் தேவையில்லை- பாஸ்
சட்டம் 355 -ஆதரவுப் பேரணியில் விரும்பத்தகாத சம்பவம் எதுவும் நடக்காது என்று பாஸ் உத்தரவாதமளிக்கிறது. அது நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் நடைபெறும் ஊர்வலம் போன்றதுதான். எனவே, பிப்ரவரி 18-இல் அப்பேரணியை டட்டாரான் மெர்டேகாவில் நடத்துவதற்கு கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று …
எம்டியுசி: உரிய சம்பளம் கொடுத்தால் அன்னிய தொழிலாளர்கள் ஓடிப் போக…
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலையைவிட்டு ஓடாதிருக்க அவர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்க வேண்டும் என்று மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியுசி) வலியுறுத்தியுள்ளது. அன்னிய தொழிலாளர்கள் ‘லெவி’யை அவர்களே செலுத்த வேண்டும் என்று மலேசிய கட்டிடக் குத்தகையாளர் சங்கம் நேற்று அறிவித்திருந்ததற்கு எதிர்வினையாக எம்டியுசி தலைமைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் இவ்வாறு கூறினார். “முதலாளிகள் …
எம்ஏசிசி மலாக்கா சிஎம் அலுவலகத்தில் ஆவணங்களைக் கைப்பற்றியது
நேற்று மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) அதிகாரிகள், மலாக்கா முதலமைச்சர் இட்ரிஸ் ஹருன் அலுவலகத்தில் அதிரடிச் சோதனை ஒன்றை நடத்தியதாக நியு ஸ்ரேட்ஸ் டைம்ஸ் செய்தி ஒன்று கூறியது. நான்கு மணிநேரம் நீடித்த அந்நடவடிக்கையின்போது சிஎம்மும் விசாரிக்கப்பட்டாராம். ஊழல்தடுப்பு ஆணையம் அங்கிருந்து “பல பெட்டிகளில்” ஆவணங்களை அள்ளிச் சென்றது. எல்லாமே …
சாயம் ‘ஸ்ப்ரே’ செய்யப்போவதாக மிரட்டியுள்ள கும்பலுக்கு எதிராக விழிப்புநிலையில் பத்துமலை…
பத்துமலை ஆலய நிர்வாகம், தைப்பூச விழாவின்போது பொருத்தமற்ற ஆடைகளை அணிந்து வரும் பெண்கள் மீது சாயத்தை ஸ்ப்ரே செய்யப்போவதாக மிரட்டியுள்ள கும்பலுக்கு எதிராக விழிப்புடன் இருக்கும். “முகநூலிலோ அல்லது வேறு எந்தத் தளத்திலுமோ எந்தத் தரப்பும் மிரட்டுவதை அதுவும் பெண்கள் இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்றும் மிரட்டுவதை …
உலாமாக்கள் மீது அவதூறு கூறுவது சமயத்தின் மீது அவதூறு கூறுவது…
1எம்டிபி-ஹாஜ் ஏற்பாதரவு திட்டத்தை தாங்கள் தற்காத்து பேசுவதால் தாங்கள் அரசாங்கத்தை மகிழ்சிப்படுத்த முயற்சிக்கிறோம் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கூறியிருப்பது பற்றி உலாமாக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆனால், மகாதிர் தாம் கூறியதிலிருந்து பின்வாங்க மறுத்து விட்டார். சமய அறிஞர்களைத் தாக்குவது மகாதிரின் மதிப்புக்கு ஒவ்வாததாகும் என்று பகாங்…
“நீதிபதிகளை ஏற்பாடு செய்தல்” என்ற அன்வார் பற்றிய செய்தி அடிப்படையற்றது,…
பிகேஆர் பெருந்தலைவர் அன்வார் இப்ராகிம் நாணையமற்றவர் என்பதுடன் பணச் சலவைச் செய்யும் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று 2013 இல் தாம் வெளியிட்ட கட்டுரைகளுக்காக வழக்குரைஞர் ரஞிட் சிங் மகிண்டர் சிங் அன்வாரிடம் மன்னிப்பு கோரினார். அக்கட்டுரைகளை வெளியிட்ட நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் அவை அடிப்படையற்றவை என்று ஒப்புக்…
1எம்டிபி விசாரணையில் ஆஸி போலீசாரும் சேர்ந்து கொண்டனர்
ஆஸ்திரேலிய கூட்டரசு போலீஸ் (ஏஎப்பி) 1எம்டிபியுடன் தொடர்புள்ள பணம் எதுவும் தங்கள் நாட்டுக்குள் வந்துள்ளதா என்று புலனாய்வு செய்து வருகிறார்கள். அதன் தொடர்பில் ஆஸ்திரேலிய குடிமகன் அல்லது அங்கு வசிப்பவர் எவரேனும் சட்டமீறல் செய்திருக்கிறாரா அல்லது அங்குள்ள நிறுவனம் எதுவும் சட்டத்தை மீறியுள்ளதா என்று ஏஎப்பி ஆராய்ந்து வருவதாக …
முன்னாள் தெக்குன் சிஇஓ குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்
இன்று ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெக்குன் நேசனல் கடனுதவிக் கழகத்தின் தலைமைச் செயலதிகாரியும் நிர்வாக இயக்குனருமான அப்துல் ரகிம் ஹசான், அவர்மீது சுமத்தப்பட்ட இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார். அந்த 62வயது நபர் 2015, ஜனவரி 13-இல், பாசடானா நிறுவனத்துக்கு ரிம 360,009. 08 …
அமனா: சட்டம் 333 குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பதே நல்லது
பாஸிலிருந்து பிரிந்து சென்ற அமனா கட்சி ஷாரியா நீதிமன்ற(குற்றவியல் நீதி)ச் சட்டத் திருத்தங்கள் குறித்து விவாதிப்பதற்கு நாடாளுமன்றமே சிறந்த இடம் என்கிறது. ஷாரியா நீதிமன்றங்களை வலுப்படுத்தும் முயற்சிகளை அமனா ஆதரிப்பதாக அக்கட்சி துணைத் தலைவர் சலாஹுடின் ஆயுப் இன்று ஓர் அறிக்கையில் கூறினார். பாஸ் சட்டம் 355-க்கு ஆதரவாக …
இவ்வாண்டில் ரிங்கிட்டின் மதிப்பு நிலையாக இருக்கும்- பிரதமர்
பேங்க் நெகரா நெகரா (பிஎன்எம்) எடுத்துள்ள நடவடிக்கைகள் ரிங்கிட்டின் மதிப்பை நிலைப்படுத்த உதவும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நம்புகிறார். ரிங்கிட்டின் ஏற்ற இறக்கம் பலருக்குக் கவலை தந்திருக்கலாம் ஆனால் அந்நிலை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறிய ஒன்று என்றாரவர். மலேசியா மட்டுமல்லாமல் உலகின் 149 நாணயங்களில் 123 …
அன்வாருக்கு ஆதரவாக 500 பேர் நீதிமன்றம் வந்தனர்
இன்று ஒரு வழக்கில் கலந்துகொள்ள பினாங்கு உயர் நீதிமன்றம் வந்த பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவிக்க சுமார் 500 பேர் பினாங்கு நகர மண்டபத்துக்குமுன் திரண்டனர். காலை மணி 9 அளவில் அவர்கள் அங்கிருந்து நீதிமன்றம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். வழி நெடுகிலும் “அன்வாரை …
உம்ராவை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய முன்னாள் சிஇஓ ஊழலுக்காக கைது…
அரசாங்க நிறுவனம் ஒன்றின் முன்னாள் தலைமை செயல்முரை அதிகாரி உம்ராவை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய மறுநாளான இன்று இலஞ்ச ஊழல் சம்பந்தமாக கைது செய்யப்பட்டார். முன்னதாக கைது செய்யப்பட்டுள்ள ஒரு மத்திய அமைச்சின் தலைமைச் செயலாளருக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த முன்னாள் தலைமைச்…
14 ஆவது பொதுத் தேர்தலில் 30 விழுக்காடு பெர்சத்து வேட்பாளர்கள்…
அடுத்து வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் பார்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா (பெர்சத்து) வின் வேட்பாளர்களில் 30 விழுக்காட்டினர் 35 வயதுக்கும் குறைவானவர்களாக இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் சைட் சடிக் அப்துல் ரஹ்மான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த எதிர்பார்ப்பு கட்சியின்…
நஸ்ரி: பாஸ் கட்சியின் சட்டம் 355 பேரணியை மசீச நிறுத்த…
ஷரியா நீதிமன்றங்கள் சட்டம் 355 க்குக்கான திருத்தங்கள் குறித்து விளக்கம் அளிப்பதற்கு பாஸ் கட்சி நடத்தும் பேரணியை மசீச எதிர்க்க முடியாது என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசிஸ் கூறுகிறார். ஒரு பேரணியை நடத்துவது பாஸின் ஜனநாயக உரிமை என்று கலாச்சாரம் மற்றும் சுற்றுலா…
ஊழல் அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டணை, தாய்லாந்து சிந்திக்கிறது
தாய்லாந்தில் தேசியச் சீர்திருத்த வழிகாட்டுதல் மன்றம் (NRSA) முன்மொழிந்துள்ள கடுந்தண்டணை அளிக்கும் சட்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், அரசாங்க அதிகாரிகள் தூக்கில் தொங்க வேண்டி வரும். முன்மொழியப்பட்டுள்ள தண்டணையின்படி ஓர் அரசாங்க அதிகாரி இலஞ்சம் பெற்று நாட்டிற்கு ஒரு மில்லியன் பாட் இழப்பை ஏற்படுத்தினால் அந்த அதிகாரிக்கு மரண…
மீண்டும் பிரதமரா? …இல்லை, இல்லை என்கிறார் மகாதிர்
எதிரணியில் பெரும்பான்மை ஆதரவு பெற்றவராக ஆய்வுகள் காட்டினாலும் தாம் திரும்பவும் பிரதமர் பதவிக்கு வரும் சாத்தியத்தை முன்னாற் பிரதமர் மகாதிர் நிராகரித்தார். இன்ஸ்டியுட் டாருல் ஏசான் கடந்த டிசம்பரில் மேற்கொண்ட ஓர் ஆயவில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம்மைவிட மகாதிர் பிரதமராவதற்கு அதிகமான மலாய்க்காரர்களின் ஆதரவு இருப்பது…
ரபிசி: ஷாரிரின் நியமனம் பெல்டாவில் நிலவரம் சரியில்லை என்பதைக் காண்பிக்கிறது
கூட்டரசு நில மேம்பாட்டு நிர்வாகத்தின் (பெல்டா) தலைவராக ஜோகூர் பாரு எம்பி ஷாரிர் அப்துல் சமட்டின் திடீர் நியமனம் அங்கு நிலைமை சரியில்லை என்பதைத்தான் காண்பிக்கிறது என்று பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கூறினார். அந்நிறுவனத்தில் நிர்வாகக் கோளாறுகள் நிகழ்துள்ளதாகக் கூறிய அவர், அவை அம்பலப்படுத்தப்பட்டு வரும் …
பாஸின் சட்டம் 355 பேரணிக்கு வாரீர்: டிஏபிக்கும் அமனாவுக்கும் அழைப்பு
ஷியாரியா நீதிமன்ற(குற்றவியல் நீதி)ச் சட்ட (சட்டம்355)த் திருத்தத்துக்கு ஆதரவாக நடத்தப்படும் பேரணியில் கலந்துகொள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் பாஸ் அழைக்கும். டிஏபிக்கும் அமனாவுக்கும்கூட அழைப்பு உண்டா என்று கேட்டதற்கு, “அனைவருக்கும் அழைப்பு உண்டு”, என பாஸ் தகவல் தலைவர் நஸ்ருடின் ஹசான் தெரிவித்தார். “பேரணியில் கலந்துகொண்டு சிறப்புச் செய்ய …
பிப்ரவரி 18-இல் சட்டம் 355 ஆதரவுப் பேரணி, பாஸ் நடத்துகிறது
பாஸ் கட்சி, ஷியாரியா நீதிமன்ற(குற்றவியல் நீதி)ச் சட்ட( சட்டம் 355)த்துக்குக் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்களுக்கு ஆதரவாக பிப்ரவரி 18-இல் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இன, சமய, அரசியல் வேறுபாடின்றி அனைத்து மலேசியரும் அதில் கலந்துகொள்ளலம் என பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறினார். சுமார் …


