அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகால ஒப்பந்தப் பணிக்காலத்தை நிறைவு செய்த மருந்தாளுநர்களுக்கு (Pharmacists), ஒப்பந்த நீட்டிப்பு வழங்கப்படாது என்று சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. "பணி முடிவடைவதால் 45 ஒப்பந்த மருந்தாளுநர்கள் தவிப்பு" என்ற செய்தி தொடர்பாக எழுப்பப்பட்ட கவலைகளைத் தாங்கள் கவனித்துள்ளதாக அமைச்சு கூறியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்ட…
355 சட்டம்மீதான திருத்தம் குறித்து சரவாக் பிஎன்னுக்கு இன்னும் விளக்கப்படவில்லை
1965 ஷியாரியா நீதிமன்ற(குற்றவியல் நீதி) சட்டம் அல்லது சட்டம் 355க்குக் கொண்டுவரப்படவுள்ள திருத்தம் குறித்து சரவாக் பிஎன் தலைவர்களுக்கு இன்னும் விளக்கம் அளிக்கப்படவில்லை என த ஸ்டார் பிரதமர்துறை அமைச்சர் நன்சி ஷுக்ரியை மேற்கோள்காட்டி அறிவித்துள்ளது. சரவாக் தலைவர்களைப் பொறுத்தவரை அச்சட்டத் திருத்தத்தை நிராகரிப்பதென்னும் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள் …
பிரதமரின் உதவியாளருக்கு எதிரான முக்ரிஸின் வழக்கு விசாரணைக்கு வருகிறது
கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் உதவியாளர் தெங்கு ஸரிபுடின் தெங்கு அஹ்மட்டின் பத்திரிகை அறிக்கைகள்மீது முக்ரிஸ் மகாதிர் தொடுத்திருந்த அவதூறு வழக்கில் முதலிரு பத்திரிகை அறிக்கைகள்மீதான வழக்கைத் தள்ளுபடி செய்தது. ஆனால், மூன்றாவது நான்காவது அறிக்கைகள் கெடாவின் முன்னாள் மந்திரி புசார் முக்ரிஸைத்தான் குறிப்பிடுகின்றன …
அன்வார்- ஆதரவு கூட்டத்துக்கு வருவோருக்குப் பணமா? மறுக்கிறது டிஏபி
அடுத்த வாரம் பிகேஆர் பெருந் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வோருக்கு ஆளுக்கு ரிம50 கொடுக்கப்படும் என்று கூறும் இணையச் செய்தியை பினாங்கு டிஏபி மறுக்கிறது. வாட்ஸ்எப் பில் வந்த அனாமதேய செய்தியை நம்பி KLxpress அச்செய்தி யை வெளியிட்டிருக்கிறது என மாநில டிஏபி விளம்பரப் …
பாஹ்ரியின் கூற்றை மறுத்ததேன், எம்ஏசிசி விளக்க வேண்டும்
செவ்வாய்க்கிழமை மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) சிறப்பு நடவடிக்கை பிரிவு இயக்குனர் பாஹ்ரி முகம்மட் சின், அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை வெளியிட்டார். 2919-இல் பணி ஓய்வு பெற வேண்டிய அவர் முன்கூட்டியே ஓய்வு பெற முடிவு செய்ததாகக் கூறினார். அதற்கு அவர் தெரிவித்த காரணம்தான் அதிர்ச்சி அளித்தது. …
அமைச்சின் தலைமைச் செயலாளரும் இரு மகன்களும் ஏழு நாள் தடுத்து…
புத்ரா ஜெயா மெஜிஸ்திரேட் நீதிமன்றம் ஓர் அமைச்சின் தலைமைச் செயலாளரையும் அவரின் மகன்கள் இருவரையும் விசாராணைக்காக ஏழு நாள்களுக்குத் தடுத்து வைத்தது. அரசு உயர் அதிகாரி அவரின் 34, 29 வயது மகன்களுடன் காலை மணி 9.38க்கு நீதிமன்றம் வந்தார். அவர்களை செக்ஷன் 117-இன்கீழ் 14 நாள் தடுத்து …
தலைமைச் செயலாளர் கைதானார், சரி ஆனால் எஸ்ஆர்சி-இல் யாரும் கைதாகவில்லையே,…
ஓர் அமைச்சின் தலைமைச் செயலாளரைக் கைது செய்ததன்வழி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் அதிகாரி பாஹ்ரி முகம்மட் சின்னின் பரபரப்பூட்டும் செய்தியால் ஏற்பட்டுள்ள கவலையை - முடிவுக்குக் கொண்டு வந்துவிட முடியாது என்கிறார் பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான்.. எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனத்தை …
சீனப்பள்ளிகளுக்கான ரிம50 மில்லியன் நிதி: பிரச்சனையைத் தீர்த்து வைக்க நஜிப்…
சீனப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு விவகாரத்தை விரைவில் தீர்க்கப் போவதாக பிரதமர் நஜிப் வாக்குறுதி அளித்திருக்கிறார். இதை மசீச தலைவர் லியோ தியோங் லை தெரிவித்ததாக சின் சியு டெய்லி செய்தி கூறுகிறது. லியோவும் மசீச துணைத் தலைவர் வீ கா சியோங்கும் இவ்விவகாரம் குறித்து பிரதமரைச் சந்தித்துள்ளனர்.…
விடுமுறையைக் கழிக்க அரசாங்க ஜெட்டை பயன்படுத்த இது உகந்த நேரமல்ல,…
பிரதமரின் கும்பத்தினர் ஆண்டு-இறுதி விடுமுறையைக் கழிக்க அரசாங்க ஜெட் விமானத்தைப் பயன்படுத்துவதற்கு இது சரியான நேரமல்ல என்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நஜிப் ரசாக்கை குறைகூறியுள்ளனர். துணை உள்துறை அமைச்சர் நூர் ஜாஸ்லான் பிரதமர் நஜிப் அரசாங்க ஜெட் விமானத்தை பயன்படுத்துவதற்கான உரிமையைப் பெற்றிருக்கிறார் என்று நஜிப்பை…
எம்எசிசி அமைச்சின் தலைமைச் செயலாளரை கைது செய்துள்ளது
ஊழல் குற்றத்திற்காக "டத்தோக்" பட்டம் பெற்றுள்ள ஓர் உயர்மட்ட அரசாங்க அதிகாரியை மலேசிய இலஞ்ச எதிர்ப்பு ஆணையம் யுஎஸ்எ சுபாங் ஜெயாவிலுள்ள அவரது இல்லத்திலிருந்து கைது செய்துள்ளது என்று த ஸ்டார் ஒன்லைன் செய்தி கூறுகிறது. இலஞ்சம் பெறுவதற்காக 50 வயதான பெடரல் அமைச்சின் தலைமைச் செயலாளரான…
காலிட் சாமாட்: பாஸ் முக்கோணப் போட்டியைத் திணிக்க முயல்கிறது
அமனா கட்சியுடன் ஒத்துழைப்பதற்கு எதிராக பிகேஆரையும் பெர்சத்துவையும் பாஸ் கட்சி மிரட்டி வருவதன் மூலம் அடுத்தப் பொதுத் தேர்தலில் முக்கோண போட்டியைத் திணிக்க அக்கட்சி முயல்கிறது. இருக்கை ஒதுக்கீடு குறித்து பாஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வராமல் இருப்பதால் அடுத்தப் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கடுமையான விளைவுகளைச்…
பள்ளி ஆண்டு தொடங்கி விட்டது ஆனால் சீனப்பள்ளிகளுக்கான நிதி இன்னும்…
சீனமொழி தொடக்கப்பள்ளிகளுக்கு 2016 ஆண்டுக்கு மத்திய அரசாங்கம் வழங்க உறுதியளித்திருந்த நிதி இருக்குமிடம் எங்கே என்று பினாங்கு முதல்வர் லிம் எங் குவாங் கேள்வி எழுப்பியுள்ளார். இப்போது புத்தாண்டின் மூன்றாவது நாளில் இருக்கிறோம், ஆனால் மத்திய அரசாங்கம் அந்நிதியை இன்னும் கொடுக்காமல் இருக்கிறது. "அவர்கள் 2016 ஆம்…
அமைச்சு: டீசல் இல்லாததால் 369 பள்ளிகளுக்கு மின்சார விநியோகம் இல்லை
டீசல் இல்லாததால் சரவாக்கில் மொத்தம் 369 கிராமப்புற பள்ளிகளுக்கு மின்சார விநியோகம் இல்லாமல் போய்விட்டது. டீசல் விநியோகம் செய்ய வேண்டிய குத்தகையாளர்கள் அவர்களுடைய குத்தகை ஒப்பந்தம் கடந்த ஆண்டில் முடிவுக்கு வருவதற்கு முன்பு டீசல் விநியோகம் செய்யத் தவறி விட்டனர் என்று கல்வி அமைச்சு கூறுகிறது. 30…
நூருல் ஜஸ்லான்: அரசு ஜெட் விமானத்தைப் பயன்படுத்தும் உரிமை பிரதமருக்கு…
பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆஸ்திரேலியாவில் பல இடங்களில் ஆண்டு-இறுதி விடுமுறையைக் கழித்தனர். அதற்கு அரசாங்க ஜெட் விமானத்தை நஜிப்பும் அவரது குடும்பத்தினரும் பயன்படுத்தியதை துணை உள்துறை அமைச்சர் தற்காத்துள்ளார். நஜிப் பிரதமர் என்ற முறையில் அரசாங்க ஜெட் விமானத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமையைப் பெற்றிருக்கிறார்…
சீனப்பள்ளிகளுக்கு நிதி: புத்ராஜெயாவுக்கு கடன் கொடுக்க பினாங்கு அரசு முன்வந்துள்ளது
பினாங்கு மாநில அரசு புத்ராஜெயாவுக்கு ரிம50 மில்லியன் கடன் கொடுக்க இன்று இரண்டாவது முறையாக முன்வந்துள்ளது. நிதி பற்றாக்குறையினால் சீனமொழிப்பள்ளிகளுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரிம50 மில்லியனை கல்வி அமைச்சு முடக்கியுள்ளது. பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் மாநில அரசு 2008 ஆம் ஆண்டிலிருந்து உபரி…
நான் இனவாதியா? நிரூபியுங்கள்- அம்னோவுக்கு கிட் சியாங் சவால்
டிஏபி பெருந் தலைவர் லி கிட் சியாங் அம்னோவுக்கும் அதன் கையாள்களுக்கும் சவால் விடுத்துள்ளார். கடந்த 51 ஆண்டுகளில் தம் எழுத்திலும் பேச்சிலும் “மலாய்க்காரர்களின் எதிரி, இஸ்லாத்துக்கு எதிரி, மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிரி” என்பதற்கான ஆதாரம் எங்காவது இருந்தால் தேடிப் பிடித்துக் காட்டுங்கள், பார்க்கலாம் என்பதுதான் அவர் விடுத்துள்ள …
‘வெளிநாடுகளில் கோல்ப் விளையாடா’க் கொள்கைக்கு கியூபெக்ஸ் ஆதரவு
அரசு அதிகாரிகள் கோல் விளையாட வெளிநாடுகள் செல்வது தொடர்பில் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விடுத்துள்ள எச்சரிக்கைக்கு அரசாங்க ஊழியர் தொழிற்சங்கம் (கியூபெக்ஸ்) ஆதரவு தெரிவித்துள்ளது. அதை ஒரு விதியாகக் கொள்வது ஊழலையும் அதிகார மீறல்களையும் தடுக்க உதவும் என கியூபெக்ஸ் தலைவர் அசீஸ் மூடா கூறினார்.
கோல்ப் விளையாட வெளிநாடு செல்லாதீர்: அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்து
அரசாங்க அதிகாரிகள், குறிப்பாக உயர் பதவியில் இருப்பவர்கள் கோல்ப் விளையாடுவதற்காக வெளிநாடுகளுக்குச் செல்வதை நிறுத்த வேண்டும் என மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) தலைவர் சுல்கிப்ளி அஹமட் கேட்டுக் கொண்டிருக்கிறார். “அரசு அதிகாரிகள் கோல்ப் ஆடுவதற்காக இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. “அவர்கள் ஒன்றும் தொழில்முறை கோல்ப் …
திரெங்கானுவில் வெள்ளம் மோசமடைகிறது
திரெங்கானுவில் நேற்றிரவு பத்து மணிக்கு 3,292ஆக இருந்த வெள்ள அகதிகளின் எண்ணிக்கை இன்று காலை மணி 8க்கு 4,062 ஆக உயர்ந்தது. நேற்றிரவு மேலும் ஒன்பது துயர்த்துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டதாக மாநில நலவளர்ச்சித் துறை அகப்பக்கம் தெரிவித்தது. அவற்றையும் சேர்த்து இன்று காலை 8மணி முடிய மொத்தம் 52 …
அன்வார்- ஆதரவு பதாதைகள் வைத்தவர்கள்மீது நிந்தனைக் சட்டம் பயன்படுத்தப்படுவதற்குக் கண்டனம்
பினங்கு, புக்கிட் மெர்தாஜாமில் ‘அன்வாரை விடுவிப்பீர்’ பதாதைகளை வைத்தவர்கள்மீது 1948ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுவதை கெராக்கான் ஹாபுஸ் அக்டா ஹசுதான் (ஜிஎச்ஏஎச்) கண்டித்துள்ளது. விசாரணை செய்யப்படும் மூவரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவிக்க ஜனவரி 9-இல் நடைபெறவுள்ள பேரணியில் கலந்து …
2017 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்
செம்பருத்தி . கோம் அதன் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் அதன் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காண்கிறது
பெட்ரோல் நிலயங்களில் ஜனவரியிலிருந்து ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை ஒரு லீட்டருக்கு 20 சென் உயர்வு காண்கிறது. இந்த விலை ஏற்றத்தினால் ஒரு லீட்டர் ரோன்95 பெட்ரோல் ரிம2.10 க்கும், ஒரு லீட்டர் டீசல் ரிம2.05 க்கும் விற்கப்படும். ரோன்97 பெட்ரோல் விலை ஒரு…
மலேசியா பற்றிப் பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன: சாலே சாடல்
2017 “ஆருடங்களுக்கு அப்பாற்பட்ட ‘ஆபத்தான’ ஆண்டாக விளங்கும்” எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறுகிறார். மத்திய கிழக்குச் சண்டைச் சச்சரவு, ரஷ்யாவும் அமெரிக்காவும் முறுக்கிக் கொண்டிருப்பது, மலேசியாவைப் பற்றிய பொய்யான செய்திகள் போன்றவை அப்படி நினைக்க வைப்பதாக அவர் சொன்னார். மத்திய கிழக்கில் சண்டை…
இன்றுடன் முடிவுக்கு வருகிறது வாட்ஸ் அப் சேவை!
பழைய மொடல் ஸ்மார்ட்போன்களில் இன்றுடன் வாட்ஸ் அப் சேவை வேலை செய்யாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சமூகவலைதளங்களில் முன்னணி வகிக்கும் வாட்ஸ் அப்பை உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் குறிப்பிட்ட சில மொடல்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களில் 2016 வருடத்தின் கடைசி நாளான இன்றுடன் வாட்ஸ் அப்…


