"கிழக்கு நாடுகளுடன் நெருக்கமான உறவை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை மாநில அரசு தற்போது ஆராய்ந்து வருவதாக மூத்த மாநில அமைச்சர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா கூறுகிறார்." மேற்கு நாடுகளையும் அமெரிக்காவையும் சார்ந்திருப்பதை மாநில அரசு மறுபரிசீலனை செய்து வரும் நிலையில், வழக்கமாக அமெரிக்காவில் நடைபெறும் சரவாக் சுற்றுலா நடவடிக்கை…
பெர்காசா: ஹாடியின் படத்தைக் காலில் போட்டு மிதித்தது ‘இனவெறிச் செயல்’
பெர்சே பேரணியில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின் நிழற்படத்தைக் காலில் போட்டு மிதித்தது ஒரு இனவாதச் செயல் என பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறினார். “மரியாதை தெரியாத சீன இளைஞர்கள் ஹாடியின் புகைப்படத்தைக் காலில் போட்டு மிதித்ததையும் அவரை இழித்தும் பழித்தும் பலவகையாக எழுதி வைத்ததையும்…
அம்னோ, பிஎன் எம்பிகள் நஜிப்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: மகாதிர்…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடந்தால் அம்னோ, பிஎன் எம்பிகள் அதை ஆதரிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கேட்டுக்கொண்டிருக்கிறார். “நஜிப்பை வெளியேற்றுவதால் பிஎன் விழுந்து விடாது. பெரும்பான்மை கொண்ட கட்சியாக பிஎன்தான் தொடர்ந்து இருக்கும்”,என்றவர் தம் வலைபதிவில் கூறினார்.…
பிஎன் எம்பி: நம்பிக்கையில்லா வாக்கெடுப்பால் நஜிப்பை அசைக்க முடியாது
நாடாளுமன்றத்தில் பிரதமர் நஜிப்புக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து வெற்றிபெற முடியாது என்கிறார் பிஎன் கோட்டா பெலுட் எம்பி அப்துல் ரஹ்மான் டஹ்லான். வார இறுதி பெர்சே பேரணியில் நஜிப்புக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முழக்கமிடப்பட்டது பற்றிக் கருத்துரைத்த பிஎன் வியூக தொடர்பு இயக்குனர் …
போகும் பாதையை மாற்றிகொள்ளப்போவதில்லை: நஜிப் திட்டவட்டம்
கடந்த இரண்டு நாள்களாக கோலாலும்பூரில் ஆயிரக்கணக்கானவர் திரண்டு தம்மைப் பதவிவிலக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியபோதும் நெருக்குதலுக்குப் பணியப்போவதில்லை எனச் சூளுரைத்துள்ளார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். கோலாலும்பூர் மாநாட்டு மையத்தில் மெர்டேகா உரை நிகழ்த்திய பிரதமர் தம் புதிய அமைச்சரவையும் பிஎன்னும் மலேசியாவைத் தொடர்ந்து முன்னுக்குக் கொண்டு செல்லப் …
அரசாங்கத்தின்மீது நம்பிக்கை குறைந்து வருகிறது: மெர்டேகா செய்தியில் முகைதின்
அரசாங்கம் நம்பிக்கைக்குறைவு என்ற பிரச்னையை எதிர்நோக்கி வருவதாக முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறினார். “அரசாங்கத்தின்மீது மக்களின் நம்பிக்கை குறைந்து விட்டது”, என்றாரவர். நேர்மை, பொறுப்புடைமை போன்ற கோட்பாடுகள் சரிவுகண்டு வருவதுபோல் தோன்றுவதைக் கண்டு மக்கள் கவலை அடைந்திருப்பதாக முகைதின் தம் மெர்டேகா செய்தியில் கூறினார். “அர்ப்பணிப்பு …
பெர்சே பங்கேற்பாளர்கள் கைது செய்யப்படலாம்: ஜாஹிட் எச்சரிக்கை
பெர்சே பேரணி முடிந்து விட்டாலும் பேரணி பங்கேற்பாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் சாத்தியம் இருப்பதாக துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி எச்சரித்துள்ளார். “(பேரணியில்) யாரும் கைது செய்யப்படவில்லை என்பதால் போலீசும் கோலாலும்பூர் மாநகர் மன்றமும் மற்ற அமலாக்கத் துறைகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது பொருளல்ல. “நிலைமையைக் கண்காணித்து …
ஜாம்: நஜிப் டிஏபி-யைவிட ஆபத்தானவர் என மகாதிர் நினைக்கிறார்
தெரு ஆர்ப்பாட்டங்களை எப்போதும் எதிர்த்து வந்துள்ள டாக்டர் மகாதிர் முகம்மட் பெர்சே 4 பேரணிக்கு இரண்டு முறை சென்று வந்தது பெரும் புதிராக இருந்தது. அப்புதிருக்கு விடை கண்டுபிடித்துள்ளார் முன்னாள் தகவல் அமைச்சர் ஜைனுடின் மைடின். “துன் பெர்சே சீனா பேரணிக்குச் சென்றது ஏன்? ஏனென்றால், டிஏபி-யைவிட (பிரதமர்)…
பெர்சே 4: பிகேஆர் தியன் சுவா, “நஜிப் பதவி துறக்கும்…
இரவு மணி 11.30: மஸ்ஜிட் ஜமெக் எல்ஆர்டி நிலையத்திற்கு முன் - பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் தியன் சுவா, நஜிப் பதவி துறக்கும் வரையில் தாம் டாத்தாரான் மெர்டேக்காவை விட்டு வெளியேறப் போவதில்லை என்று சூளுரைத்தார். "நீங்கள் என்னுடன் இருக்கலாம் அல்லது போகலாம். ஆனால், ரோஸ்மா (நமது…
கோலாலம்பூர் போலீஸ்: சரியாக 12 மணிக்கு கலைந்து செல்ல வேண்டும்,…
இரவு மணி 11.20: பெர்சே 4 அளித்திருந்த வாக்குறுதிப்படி பேரணியில் கலந்து கொண்டுள்ளவர்கள் நள்ளிரவில் கலைந்து செல்வதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் தஜுடின் முகமட் இசா பெர்சே 4 ஏற்பாட்டார்களை நினைவுறுத்தினார். அவ்வாறு செய்யாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மெர்டேக்கா கொண்டாட்டம்…
பெர்சே 4: அந்த நரி மகாதிரை நம்பக்கூடாது
இரவு மணி 10.20 அளவில் மினாரா மேபேங் அருகில் டிஎபி மேடையிலிருந்து உரையாற்றிய மூத்த தலைவர் லிம் கிட் சியாங் மலேசியாவில் இன்னொரு நஜிப் தோன்றாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அவர் மலேசியர்களை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். அதே மேடையில் பேசிய டிஎபி…
அம்பிகா: அதிகாரமும், பணமும் இல்லாமல் ஒரு பேரணியைக் கூட்டுங்கள் பார்க்கலாம்
பெர்சே 4 ஏற்பாடு செய்திருந்த பேரணியில் வெறும் 20,000 பேர் மட்டுமே பங்கேற்றனர். அரசாங்கம் விரும்பியிருந்தால் அதைவிட பெரும் திரளான மக்களை கூட்ட முடியும் என்று பிரதமர் கூறியிருந்தது பற்றி கருத்துரைத்த பெர்சேயின் முன்னாள் இணைத் தலைவர் அம்பிகா அரசாங்கம் ஏற்பாடு செய்யும் கூட்டத்திற்கும் பெர்சேயின் கூட்டத்திற்கும்…
பெர்சே 4 பேரணியில் கலந்து கொண்டதன் மூலம் மகாதிர் வரம்பை…
முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் நேற்று கோலாலம்பூரில் பெர்சே 4 பேரணியில் காணப்பட்டதன் வழி அவர் வரம்பை மீறிவிட்டார் என்று அம்னோவின் உதவித் தலைவரான ஹிஷாமுடின் ஹுஸ்ஸேன் இன்று கூறினார். போலீசாரால் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட அப்பேரணியில் அம்னோவின் முன்னாள் தலைவர் கலந்து கொண்டது அவர் 1998…
பெர்சே 4 பேரணியில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது
பெர்சே 4: பெர்சே பேரணி இன்றிரவு மணி 11.59 க்கு முடிவுக்கு வரவிருக்கும் வேளையில், டத்தாராப் மெர்தேக்காவை சுற்றி மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இரவு மணி 9.10 அளவில், 60,000 க்கும் 80,000 க்கும் இடையிலான மக்கள் அங்கு கூடியிருக்கும் இருக்கின்றனர். இன்னும் மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.…
பெர்சே 4: “நாம் இந்தத் தலைவரை விட்டொழிக்க வேண்டும், மகாதிர்…
முன்னாள் பிரதமர் மகாதிர் தாம் மக்களை ஆதரிப்பதாகவும், பிரதமர் நஜிப் பதவி துறக்கக் கோரி தெருப் போராட்டங்கள் நடத்தும் பெர்சேயை அல்ல என்று இன்று பின்னேரத்தில் கூறினார். எனினும், பெர்சே மக்களின் ஓர் அங்கமாகும் என்பதைச் சுட்டிக் காட்டிய மகாதிர், அந்த அமைப்புக்கும் கூட உரிமைகள் உண்டு…
பெர்சே 4: மகாதிர் மீண்டும் பெர்சே பேரணிக்கு வருகையளித்தார்
அரசாங்கத்தால் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டிருக்கும் பெர்சே 4 பேரணிக்கு நேற்று முன்னாள் பிரதமர் திடீர் வருகை மேற்கொண்டார். அவ்வருகையின் போது அங்கு 6 நிமிடங்கள் இருந்தார். ஆனால், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் "தொடருங்கள், தொடருங்கள்" என்று ஊக்கமூட்டிய பின்னர் அங்கிருந்து வெளியேறினார். மகாதிரின் அவ்வருகையை வெறும் 6 நிமிடம்தானே என்று…
நஜிப்: பெர்சேக்குச் சென்றவர்கள் 20,000-தான். மற்றவர்கள் அரசாங்கத்தின் பக்கம்
தம்மைப் பதவி விலகக் கோரும் பெர்சே பேரணி பற்றிப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. “மலேசியாவில் உள்ள மற்றவர்களின்” ஆதரவு தம் அரசாங்கத்துக்கே என்றவர் கூறிக்கொண்டார். சில ஊடகங்களில் வந்துள்ள செய்திகள்போல் 20,000 பேர் பேரணிக்குச் சென்றிருக்கலாம். ஆக 20,000 பேர்தான் ஓரளவுக்கு அதிருப்தியுற்றிருக்கிறார்கள். மற்ற …
ஜாஹிட்: பெர்சே 4 ஏற்பாட்டாளர்மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி
பெர்சே 4 பேரணியை ஏற்பாடு செய்வதற்கு அச்சாணியாக இருந்தவர்மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி வலியுறுத்தியுள்ளார். பேரணிக்குப் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்களையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என உள்துறை அமைச்சருமான ஜாஹிட் கூறினார். “அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பது …
பெர்சே 4 ரிம200 அலவன்ஸ் கொடுக்கிறதா?
பெர்சே 4 பேரணியில் பங்கேற்றிருப்பவர்கள் ரிம200 அல்வன்ஸை பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் கோலாலம்பூர் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்திற்கு (KLSCAH)செல்லுமாறு வாட்ஸ்அப் மூலமாக பரப்பப்பட்டு வரும் செய்தி போலியானது என்று பெர்சே அறிவித்துள்ளது. "உங்களுக்கு நன்கொடை வேண்டுமென்றால், நஜிப்பிடம் செல்லுங்கள். நாங்கள் நன்கொடை அளிப்பதில்லை. நாங்கள் எங்களுடைய சுய…
பெர்சே 4 டி-சட்டை அணிந்திருந்ததற்காக 12 பேர் கைது
தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் பெர்சே 4 டி-சட்டையை அணிந்திருந்ததற்காக மலாக்காவில் போலீசார் 12 பேரை கைது செய்துள்ளனர். நேற்றிரவு மணி 10.30 அளவில் பண்டார் ஹிலிரில் நடந்த பேரணியின் போது 9 பேர் கைது செய்யப்பட்டதாக மலாக்க போலீஸ் தலைவர் சுவா கீ லய் கூறினார். மற்ற…
பெர்சே 4, 2 ஆவது நாள்: நாளிதழ்கள் மஞ்சள் நிறமாகின
நேற்று டாத்தாரான் மெர்தேக்காவில் களமிறங்கிய ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட பெர்சே 4 பேரணியினர் தலைநகர் கோலாலம்பூரை மஞ்சள் நிறமாக்கினர். இன்று அப்பேரணி குறித்த செய்திகளை வெளியிட்ட நாளிதழ்களின் முன்பக்க செய்தித் தலைப்புகள் பெர்சே 4 இயக்கத்தின் மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தன. சீன மற்றும் தமிழ் நாளிதழ்கள் அவற்றின் முன்பக்க…
பெர்சே 4: “புத்ரா ஜெயா, தூய்மையாக இரு”
பெர்சே 4 இன் இரண்டாவது நாள் நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. அதிகாலையிலிருந்தே பெர்சே 4 பேரணியினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இரவெல்லாம் தூங்காமல் பலர் சித்திரம் வரைவது போன்றவற்றில் ஈடுபட்டிருந்தினர். ஜாலான் ராஜா பகுதியில் பலர் தங்களுடைய உறக்கத்திலிருந்து எழுந்து அங்கிருந்த 4,000 க்கு மேற்பட்ட…
மக்கள் சக்தியின் முன் மத குருவின் மந்திரம் எடுபடாது, மகாதிர்
பிரதமர் நஜிப் ரசாக் "ஆர்எம்" என்ற ஒருவரின் வசியத்திற்கு உட்பட்டிருப்பதாக மகாதிர் கூறிக் கொண்டார். ஆனால், அவர் எவருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. "நஜிப் ஆர்எம்மின் வசியத்திற்கு ஆளாகியிருப்பது மட்டுமல்ல. ஆர்எம்முக்கு உலகம் முழுவதும் பல மத குருக்கள் இருக்கிறார்கள். அவர்கள் நஜிப் (அதிகாரத்திலிருந்து) விழ மாட்டார் என்று வாக்குறுதி…
இதுதான் “மக்கள் சக்தி”. சித்தி ஹஸ்மா கூறுகிறார்
இன்று கோலாலம்பூரில் பெர்சே 4 பேரணிக்கு வருகையளித்திருந்த முன்னாள் பிரதமர் மகாதிரின் துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மா பெர்சே 4 பேரணியை "மக்கள் சக்தி" என்று வர்ணித்தார். இப்பேரணி பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று வற்புறுத்திக் கேட்டதற்கு இதுதான் மக்கள் சக்தி என்றாரவர். சித்தி ஹஸ்மா…


