"கிழக்கு நாடுகளுடன் நெருக்கமான உறவை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை மாநில அரசு தற்போது ஆராய்ந்து வருவதாக மூத்த மாநில அமைச்சர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா கூறுகிறார்." மேற்கு நாடுகளையும் அமெரிக்காவையும் சார்ந்திருப்பதை மாநில அரசு மறுபரிசீலனை செய்து வரும் நிலையில், வழக்கமாக அமெரிக்காவில் நடைபெறும் சரவாக் சுற்றுலா நடவடிக்கை…
பெர்சே 4: நஜிப் வெளியேற்றப்பட வேண்டும், பெக்கான் பெண்கள்
மாலை மணி 6.30 அளவில் பேரணியில் கலந்து கொண்டிருப்பவர்களை ஓய்வெடுத்துக்கொள்ளுமறு பெர்சே 4 பேரணி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்ட வேளையில், பகாங், பெக்கானிலிருந்து வந்திருந்த அலிமின் என்று மட்டும் அடையாளம் கூறிக்கொண்ட ஒரு பெண் தாம் அங்கேயே இரவைக் கழிக்கப் போவதாக கூறினார். பெர்சே இப்போது முன்னெடுத்துள்ள பிரச்சனை…
பெர்சே 4 பேரணியில் பங்கேற்க மகாதிர் …..?
கோலாலம்பூரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பெர்சே 4 பேரணியின் நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் இன்னும் முடிவெடுக்கவில்லை. ஜொகூர், பாசிர் கூடாங்கில் இன்று பின்னேரத்தில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த மகாதிர், "நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்", என்றார். இன்று முன்னேரத்தில், "மலேசியா இன்று: நாம்…
பெர்சே 4: நம்பிக்கியில்லா தீர்மானத்தை தாக்கல் செய்யுங்கள் என்கிறார் மரியா
பின்னேரம் மணி 4.20 அளிவில் பேசிய பெர்சே 4 தலைவர் மரியா சின் அப்துல்லா அக்டோபர் மாதத்தில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நம்பிக்கையில்லா (நஜிப்புக்கு எதிராக) தீர்மானத்தை தாக்கல் செய்யுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். 'அரசாங்கம் அலட்சியப்படுத்த முடியாத ஒரு செய்தியை நீங்கள் உரக்கமாக…
பெர்சே செய்திகள்
மாலை மணி 4 அளவில் சுமார் 100,000 பேர் டட்டாரான் மெர்டேகாவைச் சுழ்ந்து கொண்டிருந்தார்கள். மெர்டேகா சதுக்கத்தைச் சுற்றிக் கூட்டம் பெருகிய வேளையில் கூட்டத்தில் இருந்து சிலர் வெளியேறுவதையும் காண முடிந்தது. போலீசார் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் தலையிடவில்லை. கூட்டத்தைக் கண்காணித்துக் கொண்டு மட்டுமே இருந்தார்கள். மெர்டேகா …
பெர்சே 4 பேரணியில் ஓர் இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள்
கோலாலம்பூர், மெர்தேக்கா டாட்டாரான் - பெர்சே 4 பேரணியில் பங்கேற்பதற்காக வந்துள்ள மக்களின் எண்ணிக்கை ஓர் இலட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. பிற்பகல் மணி 4.10 அளவில் சிலர் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. பிரிக்பீல்ட்ஸ் பகுதியிபிருந்து சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு வந்து சேர்ந்த பெர்சே…
மெர்டேகாவை முன்னிட்டு கருத்துவேறுபாடுகளைத் தள்ளி வைப்பீர்: சாலே வேண்டுகோள்
மலேசியர்கள் தங்கள் அரசியல், சித்தாந்த வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு தேசிய நாளைக் கொண்டாடுவதில் ஒன்றுபட வேண்டும் எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கேட்டுக்கொண்டிருக்கிறார். “நாம் ஒன்றுபட்டிருப்பதைக் காண்பிக்க தேசிய நாளைக் கொண்டாடுகிறோம். நாடுதான் நமக்கு எல்லாமும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கும்போதுதான் நம்மால் முன்னேற …
பெர்சே பங்கேற்பாளர்கள் நாட்டுப்பற்றவர்கள்: பிரதமர் சாடல்
சட்டவிரோத பெர்சே பேரணியின் ஏற்பாட்டாளர்களையும் பங்கேற்பாளர்களையும் நாட்டுப் பற்றில் குறைந்தவர்கள் என நஜிப் அப்துல் ரசாக் வருணித்தார். அரசியல் கோட்பாடுகள் மாறுபடலாம் ஆனால், தேசிய நாள் என்கிறபோது காலனித்துவப் பிடியிலிருந்து தாய்நாட்டை விடுவித்த விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவுகூறும் வகையில் ஜாலோர் கெமிலாங்கைப் பறக்கவிட்டு கொண்டாட வேண்டும் என்று …
பேரணியில் கூட்டம் பெருகிக்கொண்டே போகிறது
பிற்பகல் 2 மணி அளவில் சுமார் 30ஆயிரம் பேர் கோலாலும்பூர் மத்தியில் திரண்டிருப்பதாக மலேசியாகினி நிருபர்கள் மதிப்பிட்டிருந்தனர். பேரணியில் கலந்து கொண்டிருப்பவர்களுக்குப் பல தரப்பினரும் ஊக்கமளித்து வருகிறார்கள். Nandos உணவகம் இலவச பானங்களை வழங்கி வருகிறது. இன்னும் சிலர் பேரணி பங்கேற்பாளர்களின் தாகத்தைத் தீர்க்க 200 பெட்டிகளில் கணிம நீர் …
பாஸ் நஜிப்மீது நம்பிக்கை போய்விட்டதை நினைத்து கவலைப்படுங்கள்; டி-சட்டை கவலை…
பிஎன் அரசாங்கம் டி-சட்டைகளைப் பார்த்து பயப்படுவது தேவையற்றது என்கிறது பாஸ். “பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீதுள்ள நம்பிக்கை, பொருளாதாரத்தின் மோசமான நிலை, நஜிப்பின் பிம்பம் சரிந்திருப்பதால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்திருப்பது ஆகியவற்றை எண்ணித்தான் அவர்கள் அஞ்ச வேண்டும்”, என பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் …
முகைதின் பேரணியில் கலந்துகொள்ள மாட்டார்
அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் பெர்சே பேரணியில் கலந்துகொள்ளப்போவதில்லை என அவரின் முன்னாள் அரசியல் செயலாளர் அறிவித்துள்ளார். முகைதின் பேரணிக்குச் செல்வார் எனச் சமூக வலைத்தளங்களில் வந்துள்ள செய்தி பொய்யானது, தீய நோக்கம் கொண்டது என்று முகம்மட் நர்டின் ஆவாங் கூறினார். “பொறுப்பற்றவர்கள் அப்படி ஒரு செய்தியைப் …
இன்று பெர்சே பேரணி
இன்னும் சற்று நேரத்தில் கோலாலும்பூர், கூச்சிங், கோத்தா கினாபாலு ஆகிய நகரங்களில் பெர்சே 4 பேரணி தொடங்கும். பேரணியும் பேரணியின் அடையாளமான மஞ்சள்நிற டி-சட்டை அணிவதும் சட்டவிரோதமானவை என போலீஸ் அறிவித்துள்ளது. என்றாலும் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குமுன் 2012ஆம் ஆண்டு பெர்சே பேரணியில் 100,000 …
சரவாக் ரிபோர்ட் ஆசிரியர்: மலேசிய போலீசாரின் கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்தது
சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல் பிரவுனுக்கு எதிராக சிவப்பு நோட்டீஸ் பெறுவதற்கு மலேசிய போலீஸ் விடுத்திருந்த கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்துள்ளது. சிவப்பு நோட்டீஸ் என்பது அனைத்துலக கைது ஆணைக்கு ஒப்பானது. இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் வெளியிட்டால் இன்டர்போலின் 190 உறுப்பிய நாடுகளுக்கும் ஒரு தனிப்பட்ட நபர்…
பெர்சே 4 டி-சட்டை அணிவதற்கு அரசாங்கம் தடை விதிக்கிறது
பெர்சே 4 டி-சட்டை அணிவது இப்போது சட்டவிரோதமாகும். இன்று மாலை அரசாங்கம் இத்தடையை அதன் கெஜட்டில் பதிவு செய்து வெளியிட்டுள்ளது. பெர்சே 4 டி-சட்டையும் பெர்சே 4 பேரணி சம்பந்தப்பட்ட இதரப் பொருள்களும் "விரும்பத்தகாதவை" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இச்செயல்முறை உத்தரவு இன்று மாலை சட்டத்துறை அலுவலக…
பெர்சே 4 பேரணியில் மகாதிர்?
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் கோலாலம்பூருக்கு வருவார் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் நம்புகிறார். "ஞாயிற்றுக்கிழமை துன் எம் (மகாதிர்) சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு வருகையளிப்பார் என்று நான் நம்புகிறேன். "இடர்பாடுகள் சூழ்ந்துள்ள இந்நேரத்தில் மக்களுடன் கலந்து கொள்வது நாட்டிற்கு நல்லதைச் செய்யும்",…
சுவாரா பூமிபுத்ரா: நன்றி, அம்பிகா
பூமிபுத்ராக்களின் எதிர்காலத்திற்காக போராடும் ஓர் அரசு சார்பற்ற அமைப்பு (என்ஜிஒ) பெர்சேயின் முன்னாள் தலைவர் அம்பிகாவுக்கு அதன் நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளது. கோரிக்கைகளை எழுப்புவதற்கு எழுச்சி பெற வேண்டும் என்பதின் முக்கியத்துவத்தை அம்பிகா எங்களுக்கு உணர வைத்தார் என்று அந்த அமைப்பின் தலைவர் சுல்கார்னாயின் மாடார் கூறினார்.…
பேரணிக்குமுன் பெர்சே இணைய தளம் முடக்கம்?
நேற்று மாலையிலிருந்து பெர்சே இணைய தளத்தை(www.bersih.org)த் திறக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. மலேசிய தொடர்ப்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) வாரக் கடைசிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெர்சே பேரணியை ஊக்குவிக்கும் இணையத் தளங்களும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலகக் கோரிக்கை விடுக்கும் இணையத் தளங்களும் முடக்கப்படும் என்று…
அஸ்மின்: ஆண்டு இறுதி வாக்கில் நாட்டின் தலைமை மாறலாம்
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி ஆண்டு இறுதிக்குள் நாட்டின் உயர்த் தலைமைத்துவம் மாறும் என்று நம்புகிறார். நாடாளுமன்றத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதில் பிஎன் எம்பிகளுடன் சேர்ந்து கொள்வாரா என்று வினவப்பட்டதற்கு அஸ்மின் இவ்வாறு கூறினார். “இப்போது பக்கத்தான் ரக்யாட் …
பெர்சே நஜிப்புக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு வலு சேர்க்கும்
பிஎன் எம்பிகளும் எதிரணி எம்பிகளும் சேர்ந்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டுவரும் திட்டம் இப்போதைக்கு வேண்டுமானால் சாத்தியமற்ற ஒன்றாக தோன்றலாம். ஆனால், வாரக் கடைசி பெர்சே 4 பேரணிக்குப் பிறகு நிலமை மாறலாம் என்கிறது எக்கோனமிஸ்ட் சஞ்சிகை. நஜிப்பை வெளியேற்றும் மற்ற வழிகள் …
ரிம2.6 பில்லியனில் பெரும்பகுதியைத் திரும்பப் பெற வேண்டும்: நஜிப் மீது…
அம்னோவைப் பிரதிநிதிப்பதாகக் கூறிக்கொள்ளும் கட்சி உறுப்பினர் ஒருவர், கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். அதில் அவர், கட்சிக்குக் கொடையாக வழங்கப்பட்ட ரிம2.6 பில்லியனில் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படும் பணத்தில் பெரும்பகுதியை மீட்டெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் …
‘1எம்டிபி பற்றிப் பேச அஞ்சேன்’, முன்னாள் எஸ்பி அதிகாரி
போலீஸ் சிறப்புப் பிரிவு முன்னாள் துணை இயக்குனர் அப்துல் ஹமிட் படோர், அப்பிரிவிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டது பற்றிச் செய்தியாளர்களிடம் பேசியதற்காக என்ன தண்டனை கொடுக்கப்பட்டாலும் ஏற்கத் தயாராக உள்ளார்.. “கொஞ்சம்கூட அஞ்சவில்லை. “எந்தத் தண்டனை என்றாலும் ஏற்கத் தயார். நான் ஒரு போலீஸ் அதிகாரி. அதற்குரிய கண்ணியத்துடன் நடந்து …
பெர்சே 4 பேரணியை ஊக்குவிக்கும் இணையத்தளங்கள் முடக்கப்படும்
பெர்சே 4 பேரணியை பிரபலப்படுத்தியும் அது பற்றிய செய்திகளை வெளியிட்டும் அதில் சேருமாறு மக்களை ஊக்குவித்தும் வரும் இணையத்தளங்களை மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) முடக்கும். அந்த இணையத்தளங்களால் நாட்டின் நிலைத்தன்மைக்கு மிரட்டல் ஏற்படலாம் என்று கூறும் உள்துறை அமைச்சின் அறிக்கை ஒன்றை ஆணையம் சுட்டிக்காட்டியது. “எனவே …
அவசரகாலம் பிரகடனப்படுத்தப்பட்டால் பெர்சே 4-இல் இராணுவம் தலையிடும்
அரசாங்கம் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தினால் வாரக் கடைசியில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள பெர்சே பேரணியில் இராணுவம் தலையிடும் என்று ஆயுதப்படைத் தலைவர் சுல்கிப்ளி முகம்மட் ஸின் கூறினார். “அவசரகால நிலை அறிவிக்கப்பட்டால் மட்டுமே ஆயுதப்படை தலையிடும். “பொது ஒழுங்குக்கு மிரட்டல் என்ற நிலைமையில்தான் நிலைமையைக் கட்டுப்படுத்த நாங்கள் போலீசின் பணியை …
சைபுடின்: மாணவர்களுக்கு பெர்சே 4-இல் கலந்துகொள்ள உரிமை உண்டு
முன்னாள் உயர்க் கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா பல்கலைக்கழக ,மாணவர்கள் பெர்சே 4 பேரணியில் கலந்துகொள்வதைத் தடுக்கும் பல்கலைக்கழகங்களைக் கண்டித்துள்ளார். “சில பல்கலைக்கழகத் தலைவர்கள் அம்னோ தலைவர்கள்போல் நடந்து கொள்கிறார்கள். மாணவர்கள் பெர்சே 4 பேரணியில் கலந்துகொள்ளக் கூடாது என்று அறிக்கை விட வேண்டியதில்லையே. “அது அவர்களை…


