பெர்சே-எதிர்ப்புக் குழுவிடம் போலீஸ் விசாரணை

சிவப்புச்  சட்டை  அணிந்த  பெர்சே- எதிர்ப்புக்  குழுவினரை  போலீசார்  விசாரணைக்கு  அழைத்துள்ளனர். செவ்வாய்க்கிழமை  அவர்கள்  சோகா  பேரங்காடிக்கு  முன்புறத்தில்  ஒன்றுதிரண்டது  பற்றி  அவர்களிடம்  விசாரிக்கப்படும். “அதன்  ஏற்பாட்டாளர்களும்  அதில்  கலந்துகொண்டவர்களும்  இன்று  மூன்று  மணிக்கு  டாங்  வாங்கிக்கு  அழைக்கப்பட்டு  அவர்களிடம்  வாக்குமூலம்  பதிவு  செய்யப்படும்”  என்று டாங்  வாங்கி …

அம்பிகா: தலைவர்கள் தருவது குப்பைகள், பெர்சே அளிப்பது நம்பிக்கை!

இந்நாட்டில் மக்களின் உரிமைகள் குறித்து ஆட்சியில் அமர்ந்திருக்கும் தலைவர்களுக்கு நினைவூட்ட நடத்தப்படும் மக்கள் பேரணி என்றால் அது பெர்சே இயக்கம் நடத்தும் பேரணிதான். பெர்சேயின் ஏற்பாட்டில் ஆகஸ்ட் 29-30 இல் நடக்கவிருக்கும் பெர்சே 4 பேரணி தலைவருகளுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பேரணி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்டது என்று…

மலேசியர்கள் முட்டாள்கள் என்று எண்ணாதீர், நஜிப்புக்கு மகாதிர் அறிவுரை

  பிரதமர் நஜிப்பும் அவருடைய ஆதரவாளர்களும் மலேசியர்கள் முட்டாள்கள் என்ற எண்ணம் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும் என்று மகாதிர் கூறுகிறார். நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் போடப்பட்ட ரிம2.6 பில்லியன் ஒரு நன்கொடை என்று மலேசியர்களை நம்பவைக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும் என்று மகாதிர் அவரது அகப்பக்கத்தில் எழுதியுள்ளார்.…

போலீஸ் படைத் தலைவருக்கு உயர் அதிகாரிகளை மாற்றும் அதிகாரம் கிடையாது

போலீஸ்  படைத்  தலைவர்  ஏஎஸ்பி  பதவிக்குக்  கீழே  உள்ளவர்களைத்தான்  இடமாற்றம்  செய்ய  முடியும். அதற்குமேலே  உள்ளவர்களை  இடமாற்றம்  செய்ய  போலீஸ்  ஆணையத்தின்  ஒப்புதல்  தேவை  என்கிறார்  முன்னாள்  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்  மூசா  ஹசான். போலீஸ்  சிறப்புப்  பிரிவு துணைத்  தலைவரான போலீஸ்  துணை  ஆணையர் அப்துல் …

பெர்சே: டட்டாரானுக்குள் செல்லவில்லை. பிறகு ஏன் டிபிகேஎல் அனுமதி?

தேர்தல்  கண்காணிப்பு  அமைப்பான பெர்சே,  டட்டாரான்  மெர்டேகாவில்  பெர்சே  4 பேரணி  நடத்தப்படவில்லை  என்பதால்  அதன்   உரிமையாளரின்  அனுமதியைப்  பெற  வேண்டிய  அவசியமில்லை  எனக்  கூறியுள்ளது. இதை  கோலாலும்பூர்  மாநகர்  மன்றத்திடமும் (டிபிகேஎல்) தெளிவுபடுத்தியிருப்பதாக  பெர்சே  தலைவர்  மரியா  சின்  அப்துல்லா  தெரிவித்தார். “நாங்கள்  டட்டாரான்  மெர்டேகாவுக்குள்  நுழையப் …

நஜிப்பின் ரிம2.6 பில்லியனுக்கும் 1எம்டிபி-க்கும் தொடர்புண்டு: மகாதிர் உறுதி

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  சொந்த  வங்கிக் கணக்கில் போடப்பட்ட  ரிம2.6 பில்லியனுக்கும்  அரசாங்கத்துக்குச்  சொந்தமான  முதலீட்டு  நிறுவனமான  1எம்டிபி-க்கும்  தொடர்பு  உண்டு  என்று  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  உறுதியாக  நம்புகிறார். அப்பணத்துக்கும்  1எம்டிபிக்கும்  சம்பந்தமில்லை  அது  ஒரு  நன்கொடை  என்று  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்…

ஊழல்-எதிர்ப்பு மாநாட்டைப் பிரதமர் தொடக்கிவைக்க மாட்டார்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  அடுத்த  வாரம்  கோலாலும்பூரில்  நடைபெறும்  அனைத்துலக  ஊழல்- எதிர்ப்பு  மாநாட்டைத்  தொடக்கிவைக்கப்  போவதில்லை. இதனை  அம்மாநாட்டுக்கு  ஏற்பாடு  செய்துள்ள  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம் (எம்ஏசிசி)  உறுதிப்படுத்தியது. பிரதமர்துறை  அமைச்சர்  பால்  லவ்தான்  மாநாட்டைத் தொடக்கி  வைப்பார்  என  எம்ஏசிசி  துணைத்  தலைமை  ஆணையர்…

ரஹ்மான்: பெர்சே 4ஆல் பொருளாதாரம் பாதிக்கப்படும்

பெர்சே 4 பேரணியை ஒத்திவைக்க  வேண்டும்  என  நகர்ப்புற  நல்வாழ்வு,  வீடமைப்பு,  ஊராட்சி  அமைச்சர் அப்துல்  ரஹ்மான்  டஹ்லான்  வலியுறுத்தினார். பேரணி  நடத்தினால்  பொருளாதாரம்தான்  மோசமாக  பாதிக்கப்படும்  என்றவர்  எச்சரித்தார். “பெர்சே  நடத்தப்படும்  நேரம்  சரியல்ல. மலேசியர்களுக்கு  பில்லியன்  கணக்கில்  பண இழப்பும்  வேலை  இழப்பும்  ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்…

போலீசாரின் இரட்டை நியாயம்: கெராக்கான் இளைஞர் பகுதி சாடல்

நேற்றிரவு  நாடாளுமன்றத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம்  செய்த மாணவர்கள் கைது  செய்யப்பட்டார்கள்.  அதேவேளை  பெர்சே-எதிர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில்  கலந்துகொண்டவர்கள்  கைது  செய்யப்படவில்லை. ஏன்  இந்த இரட்டை  நியாயம்    என  கெராக்கான் இளைஞர்  துணைத்  தலைவர்  எண்டி  யோங்  கேள்வி  எழுப்பியுள்ளார். மாணவர்கள்  அமைதியான  முறையில்  எதிர்ப்பைத்  தெரிவிக்கவே  நாடாளுமன்றத்துக்குமுன்  கூடினார்கள்  என …

கேஎல் சிபிஓ: பெர்சே 4 சட்ட விரோதமானது

வார  இறுதியில்  கூட்டரசுத்  தலைநகரில்  நடத்தத்  திட்டமிடப்பட்டிருக்கும்  பெர்சே 4 பேரணி  சட்டவிரோதமானது.  ஏனென்றால்  பேரணி  ஏற்பாட்டாளர்கள்  2012 அமைதிப்பேரணிச்  சட்டத்தில்  காணப்படும்  ஒரு  நிபந்தனையை  நிறைவேற்றத்  தவறிவிட்டனர். அச்சட்டத்தின்  பகுதி  9-இன்படி  ஏற்பாட்டாளர்கள்  எங்கு  பேரணி  நடத்த  நினைக்கிறார்களோ அதற்கு  அந்த  இடத்தின்  உரிமையாளர்களின்  அனுமதியைப்  பெற்றிருக்க …

பகாங் எம்பியும் எக்ஸ்கோவும் சொத்து விவரத்தை அறிவிப்பர்

பகாங்  மந்திரி  புசாரும்  அம்மாநில  ஆட்சிக்குழு  உறுப்பினர் 11  பேரும்,  விரைவில்  தங்கள்  சொத்து  விவரங்களை  அறிவிப்பார்கள்.   ஊழல்  எதிர்ப்புத்  திட்டத்தின்  ஒரு  பகுதியாக அவர்கள்  இவ்வாறு  செய்கிறார்கள். விரைவில்  சொத்து  விவரங்களை  அறிவிக்கப்  போவதாக  மந்திரி  புசார்  அட்னான்  யாக்கூப்  தெரிவித்தார்  என இன்றைய  பெரித்தா  ஹரியான் …

சிங்கப்பூர் அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்தார்

சிங்கப்பூரில்  நாடாளுமன்றம்  கலைக்கப்பட்டதாக  அந்நாட்டு  அரசாங்கம்  அறிவித்தது.  இது  அந்நாட்டில்  விரைவில்  பொதுத்  தேர்தல்  நடக்கப்போகிறது  என்பதற்கு  அறிகுறியாகும். பிரதமரின் ஆலோசனையின்பேரில்  அதிபர்  டோனி  டான்,  நாடாளுமன்றத்தைக்  கலைத்தார் என  அரசாங்க  அறிக்கை  கூறியது. -ராய்ட்டர்ஸ்  

நஜிப்பின் ரிம2.6 பில்லியன் பற்றி விவாதிக்க வழக்குரைஞர் மன்றம் அவசரக்…

வழக்குரைஞர்  மன்றம்,  விசாரணைகளில்   நிகழ்ந்துள்ள குறுக்கீடுகள்  பற்றி  விவாதிப்பதற்காக அவசரக்  கூட்டமொன்றை  நடத்த  முடிவு  செய்துள்ளது. அதில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  சொந்தக்  கணக்கில்  போடப்பட்டதாகக்  கூறப்படும்  ரிம2.6 பில்லியன்  பற்றியும்  விவாதிக்கப்படும். கடந்த  வெள்ளிக்கிழமை  நடந்த  ஒரு  சிறப்புக்  கூட்டத்தில்  அவசரக்  கூட்டம்(இஜிஎம்)  நடத்துவது  பற்றி …

ரபிடா: ரிம2.6 பில்லியன் அம்னோவில் அந்நியர் செல்வாக்குக்கு வழிகோலியதா?

முன்னாள்  அமைச்சர்  ரபிடா  அசீஸ், பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  மத்திய  கிழக்குக்  கொடையாளர்  ஒருவர்  கொடுத்ததாகக்  கூறப்படும்  ரிம2.6 பில்லியனைப்  பெற்றுக்கொண்டிருப்பது  அந்நியர்கள்  அம்னோவில்  ஆதிக்கம்  செலுத்த  இடமளித்து  விடாதா  என்று  கேள்வி  எழுப்பியுள்ளார். “பிஎன்  அரசாங்கத்தின்  முதுகெலும்பே  அம்னோதான். அம்னோவில்  செல்வாக்குடன்  இருந்தால்  அரசாங்கத்திலும்  செல்வாக்கு …

முகைதினின் துணைத் தலைவர் பதவிக்கு ஆபத்து?!

அம்னோ  உச்சமன்றக்  கூட்டம்  நடைபெறவுள்ள  செப்டம்பர் 9ஆம்  நாள்  நெருங்கி  வரும்  வேளையில்  முகைதின்  யாசின்  அம்னோ  துணைத்  தலைவர்  பதவியிலிருந்து  தூக்கப்படலாம்  என்ற  வதந்தியும்  வலுத்து  வருகிறது. இதைப்  பற்றி  தம்  வலைப்பதிவில்  எழுதியுள்ள  அம்னோ  சமூக  ஆர்வலர்  ஷாபுடின்  உசேன்,  உச்சமன்றக்  கூட்டத்தில் என்ன  நடக்கும் …

பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்: ஜோகூர் சுல்தான் கோரிக்கை

நாட்டின்  நிலைத்தன்மை  சீர்குலைந்து  வருவதையும்   ரிங்கிட்டின் மதிப்பு  சரிவடைந்துவருவதையும் தடுத்து  நிறுத்த வேண்டும்  என ஜோகூர்  சுல்தான்  சுல்தான்  இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார். ஆட்சியாளர்கள்  அரசாங்கத்திடம்  இப்படிக்  கோரிக்கை  வைப்பது  வழக்கத்தில்  இல்லாத  ஒன்று. ஆட்சியாளரான  தாம்  அரசியலில்  தலையிடக்  கூடாத  என்பதை  சுல்தான்  ஒப்புக்கொண்டார்.  ஆனாலும்  மக்களின்  கவலையை …

அன்வார் குடும்பத்தில் பில்லியன் கணக்கில் பணம் என்று கூறியவருக்கு வழக்குரைஞர்…

அன்வார்   இப்ராகிமின்  குடும்பத்தார்  கணக்கில்  பில்லியன்  கணக்கில்  பணம்  குவிந்து  கிடப்பதாகக்  கூறிய  அம்னோ  தொகுதித்  தலைவருக்கு  வழக்குரைஞர்  கடிதம்  அனுப்பப்பட்டது. அவ்வாறு  கூறியதற்காக  கெப்போங்  அம்னோ  தலைவர்  ரிஸுவான்  அப்ட்  ஹமிட்  மன்னிப்பு  கேட்க  வேண்டும்  என  அன்வாரின்  மனைவியும்  பிகேஆர்  தலைவருமான  டாக்டர்  வான்  அசிசா…

அம்னோ உறுப்பினர்: நஜிப்பால்தான் மலாய்க்காரர்களுக்கு இழிவு

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  வெளியேற்றப்படாமல்  தொடர்ந்து  பதவியில்  இருந்தால்  அதுதான்  மலாய்க்கார்களுக்கு  “இழிவு”  என்கிறார்  பத்து  கவான் அம்னோ  முன்னாள்  உதவித்  தலைவர்  கைருடின்  அபு  ஹசான். “நஜிப் தொடர்ந்து  ஆட்சியில்  இருப்பதுதான் மலாய்க்காரர்களுக்கு  இழிவு. நஜிப்பை  வெளியேற்றாவிட்டால்  மலாய்க்காரர்கள்  பிளவுபடுவார்கள்,  இழிவுக்கு ஆளாவார்கள். “நஜிப்  தங்குதடையின்றி …

அன்வார் செய்த ‘குற்றத்தையே’ நஜிப்பும் செய்கிறார்

பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  1999-இல் எந்தக்  குற்றத்துக்காக  தண்டிக்கப்பட்டாரோ  அதே  குற்றத்தை  நஜிப்பும்  செய்ய  முனைகிறார் என  டிஏபி பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா எம்பி  டோனி  புவா  ஒருவர்  கூறினார். 1எம்டிபி  விவகாரத்தில்  தாம்  எந்தத்  தவறும்  செய்யவில்லை  எனக்  கூறுமாறு மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையத்துக்குப் …

தவறான ஆலோசகர்களை விலக்குவீர்: நஜிப்புக்கு அறிவுறுத்து

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அவருக்குத்  தவறான  ஆலோசனைகளைக்  கூறிவோரைப்  பணிநீக்கம்  செய்ய  வேண்டும்  என்கிறார்  விவசாயம்  விவசாயம்  சார்ந்த  தொழில்  துணை  அமைச்சர்  தாஜுடின்  அப்துல்  ரஹ்மான். “எனக்கு  அவர்களில்  இரண்டு  மூன்று  பேரைத்  தெரியும். (தேர்தலில்) அம்னோவின்  வெற்றி தோல்வி  பற்றிக்  கவலையே  பட  மாட்டார்கள்.…

பாசிர் கூடாங்கில் மகாதிருக்கு வரவேற்பு எப்படி இருக்கும்?

ஆகஸ்ட்  9-இல்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பாசிர்  கூடாங்கில்  அத்தொகுதி  அம்னோ  பேராளர்  கூட்டத்தைத் தொடக்கிவைத்து  உரையாற்றினார்.  ஆகஸ்ட்  29-இல்,  அதே  பாசிர்  கூடாங்கில்  நஜிப்பின்  அரசியல்  குருவும்  அவரைக்  கடுமையாகக்  குறைகூறிவருபவருமான  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  உரையாற்ற  விருக்கிறார். மகாதிர் அங்கு  Malaysia Hari Ni,…

சரவாக்கில் புகைமூட்டம் மோசமடைகிறது

நேற்றிரவு  8  மணிக்கு  சரவாக்கில்  கூச்சிங், ஸ்ரீஅமான்  ஆகிய இடங்களில் காற்றின்  தரம்  உடல்நலனுக்குக்  கேடு  செய்யும்  அளவுக்கு  மோசமடைந்திருந்தது. கூச்சிங்கில்  காற்றின்  தூய்மைக்கேட்டுக்  குறியீடு(ஏபிஐ)  107ஆகவும்  சமாராஹானிலும்  ஸ்ரீஅமானிலும்  120 ஆகவும்  பதிவானதாகச்  சுற்றுச்  சூழல்  துறை  அதன்  அகப்பக்கத்தில்  அறிவித்திருந்தது. ஏபிஐ-இல் 0- 50வரை  என்றால் …

எஸ்ஆர்சி சாட்சிகள் சில சக்திகளால் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்

எஸ்ஆர்சி இண்ட்ர்நேசனல்  ஊழலில்  சம்பந்தப்பட்ட  முக்கிய  சாட்சிகள்  ‘சில  சக்திகளால்’  மறைக்கப்பட்டிருப்பதாக  போலீஸ்  சிறப்புப்  பிரிவு (எஸ்பி)  துணை இயக்குனர்  அப்துல்  ஹமிட்  படோர்  கூறினார். அதைப்  பற்றி  மேலும்  விவரிக்காமல்,  முக்கியமான  சாட்சிகளில்  ஒருவர்  முன்பு  இந்தோனேசியாவிலும்  தாய்லாந்திலும்  மறைத்து  வைக்கப்பட்டிருந்ததாகவும்  இப்போது  அவர்  நியு  சிலாந்தில் …