‘எஸ்ஆர்சிமீது விசாரணை தொடர்வது ஏன் என்று ஜாஹிட் விளக்க வேண்டும்’

புதிய  துணைப்  பிரதமர்  ஜாஹிட்  ஹமிடி, பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  வங்கிக்  கணக்குக்கு  மாற்றிவிடப்பட்ட  யுஎஸ்$700மில்லியனில்  ஒரு  காசுகூட  ஓய்வூதிய  நிதியிலிருந்து (KWAP)  வந்ததல்ல  எனக் கூறியுள்ளார். அந்த   யுஎஸ்$700 மில்லியனும்  மத்திய  கிழக்குக்  கொடையாளர்  ஒருவரிடமிருந்து  வந்த   பணம்  என்றும்  பல  நிறுவங்களின்  மூலமாக  அது …

பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கிறார்களே-பால் லவ் ஆதங்கம்

தாம்  பிரதமர்துறையில்  அமைச்சர்  பதவி ஏற்றதிலிருந்து  பொதுமக்கள்  தம்மிடம் அளவுக்கு  அதிகமாகவே  எதிர்பார்ப்பதாக பால்  லவ்  அங்கலாய்த்துக்  கொண்டார். தாம்  ஊழல்,  வெளிப்படைத்தன்மை,  மனித  உரிமை  விவகாரங்கள்  ஆகியவற்றுக்குப்  பொறுப்பேற்றதை  அடுத்து  வெளிப்படைத்தன்மை  காணப்பட  வேண்டும்,  ஊழல்  உடனடியாக  ஒழிக்கப்பட்டிருக்க   வேண்டும்  என்றெல்லாம்  பொதுமக்கள்  நிறையவே  எதிர்பார்த்தார்கள்  என்றாரவர்.…

ரிம2.6 பில்லியன் விவகாரத்தை மூடிமறைக்க பிரதமரின் ஏவலாளிகள் சமயத்தைப் பயன்படுத்துகின்றனர்

  பிரதமர் நஜிப்பின் வங்கிக் கணக்கில் வைக்கப்பட்ட ரிம2.6 பில்லியன் விவகாரத்தை மூடிமறைப்பதற்காக அவரின் ஏவற்காரர்கள் இஸ்லாமிய சமயத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்று டிஎபியின் தேசிய அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக் பிரதமர் நஜிப்பை குறைகூறினார். ரிம2.6 பில்லியன் குறித்து நஜிப்பின் ஏவற்காரர்கள் பல்வேறான கருத்துகள் தெரிவித்து வருவதைத்…

அம்னோ எம்பி: அரரேபியர்களின் நன்கொடை யூதர்களால் ஆதரிக்கப்படும் டிஎபியை எதிர்ப்பதற்காகும்

யூதர்களின் ஆதரவைப் பெற்றுள்ள டிஎபியை ஒழித்துக்கட்டுவதற்காக ரிம2.6 பில்லியனை அரேபியர்கள் பிரதமர் நஜிப்பிற்கு கொடுத்தனர் என்று ஶ்ரீகாடிங் அம்னோ தொகுதித் தலைவர் அப்துல் அசிஸ் கப்ராவி கூறிக்கொண்டார். இந்நாட்டில் டிஎபி இஸ்லாத்திற்கு மருட்டலாக இருப்பதுதான் அதற்குக் காரணம் என்றாரவர். "நாம் தேர்தலில் தோற்றிருந்தால், யூதர்களின் ஆதரவு பெற்ற டிஎபி…

ஸாகிட்: அம்னோ ஆட்சி தொடரவதற்காக அரேபியர்கள் ரிம2.6 பில்லியன் கொடுத்தனர்

பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட ரிம2.6 பில்லியனை நன்கொடையாக வழங்கிய அரேபிய குடும்பத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியை தாம் சந்தித்ததாக துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறிக்கொண்டார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சந்தித்ததாக கூறப்படுவதும் அதே குடும்பம்தான் என்று ஸாகிட் கூறினார். ஏன்…

சுஹாகாம்: இப்போதெல்லாம் “சட்டவிரோதமான ஒன்றுகூடுதல்” என்ற ஒன்று இல்லை

  நடைபெறவிருக்கும் பெர்சே பேரணி பற்றி கூறப்பட்டு வரும் கருத்துகளைத் தொடர்ந்து மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) பொதுமக்கள் அமைதியாக ஒன்றுகூடுதலுக்கு தடைவிதிக்க முடியாது என்று இன்று வலியுறுத்தியது. இந்நிலை போலீஸ் சட்டம் 1967, செக்சன் 27 அகற்றப்பட்டதிலிருந்து உருவாகியுள்ளது. இப்போது சட்டவிரோத ஒன்றுகூடுதல் என்று கருதப்பட்ட…

நன்கொடையாகக் கிடைத்தது 1மில்லியன்தான், ரிம2.6 பி. அல்ல: பெர்சே கிண்டல்

தேர்தல்  கண்காணிப்பு  அமைப்பான  பெர்சே,  நன்கொடைகள்   டி-சட்டை  விற்பனை  வழியாக  ஒரு  மில்லியன்  ரிங்கிட்டுக்குமேல்  திரட்டியுள்ளது. இது  பற்றிக்  கருத்துரைத்த  அதன்  தலைவர்  மரியா  சின்  அப்துல்லா  நன்கொடை  இன்னும்  ரிம2.6 பில்லியனை  எட்டவில்லை  என்று  கிண்டலடித்தார். “பெர்சே-2க்கு சுமார் ரிம200,000  கிடைத்தது, பெர்சே-3க்கு  ரிம400,000-த்திலிருந்து  ரிம500,000வரை. “இப்போது …

நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு ரபிஸியின் நிபந்தனைகள்

பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிராக  நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு  ஆதரவளிக்க  சில  நிபந்தனைகளை  முன்வைத்துள்ளார். நேற்று  முன்னாள் பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  பிஎன்  மற்றும்  எதிரணி  எம்பிகள்  சேர்ந்து  நம்பிக்கையில்லா  வாக்கெடுப்பின்  மூலாமாக  நஜிப்பை  வெளியேற்ற  வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டதை …

பெர்சே-க்கு நன்கொடை குவிகிறது: மில்லியனைத் தாண்டியது

தேர்தல்  கண்காணிப்பு  அமைப்பான  பெர்சே,  நன்கொடைகள்  வழியாகவும்  டி-சட்டை  விற்பனை  வழியாகவும்  மில்லியன்  ரிங்கிட்டுக்குமேல்  திரட்டியுள்ளது. பெர்சே-இன்  மந்திப்  சிங்  நேற்றிரவு 12.26வரை  ரிம1,221,419.02  திரட்டப்பட்டதாக  முகநூலில்  கூறியிருந்தார். “கொடை  வழங்கியவர்களுக்கு  மில்லியன்  நன்றிகள். இன்னும்  வழங்காதவர்களிடம்  வழங்குவீர்  எனக்  கேட்டுக்கொள்கிறேன்”, என்றவர்  பதிவிட்டிருந்தார். பெர்சே,  ஆகஸ்ட்  29-30-இல் …

இணையத்தை முறைப்படுத்தும் அரசாங்க நடவடிக்கையை மக்கள் ஆதரிப்பர்

ஒற்றுமை, பாதுகாப்பு,  பொருளாதார  நிலைத்தன்மை  ஆகியவற்றை  முன்னிட்டு இணையத்தை  முறைப்படுத்தும்  அரசாங்க  நடவடிக்கையை  மக்கள்  ஆதரிப்பார்கள்  என  பிஎன்  வியூகத்  தொடர்பு  இயக்குனர்  அப்துல்  ரஹ்மான்  டஹ்லான்  நம்புகிறார். அரசாங்கம்  இணையத்தை ஒழுங்குப்படுத்தவே  விரும்புகிறது. கட்டுப்படுத்த  எண்ணவில்லை  என்பதை  அப்துல்  ரஹ்மான்  வலியுறுத்தினார். “இதற்காக  எங்கள்  எதிர்காலத்தையே  பணயம் …

பணிநீக்கம் செய்யப்பட்ட ஏஜி அதிகாரி ‘அதிரடி’ சத்திய பிரமாணமொன்றைத் தாக்கல்…

சட்டத்துறைத்  தலைவர் (ஏஜி)அலுவலகத்திலிருந்து  பணிநீக்கம்  செய்யப்பட்ட  ஜெஸ்ஸிகா  கோர்,  நீதிமுறை  மேலாய்வு  கோரி  மனு  செய்வதுடன்  அதிகாரிகள்   தம்மைப் பணிநீக்கம்  செய்யவும்  தம்  நிரந்தர  வசிப்பிடத்  தகுதி(பிஆர்)யை  இரத்துச்  செய்யவும் முனைப்பாக  இருப்பதற்கான  காரணத்தை  விவரிக்கும் “அதிரடி”  சத்திய  பிரமாணமொன்றையும்  தாக்கல்  செய்வார்  எனத்  தெரிகிறது. 20 ஆண்டுகளுக்கு …

பினாங்கு மெர்டேகா கொண்டாட்டங்களைப் புறக்கணிக்க பள்ளிகளுக்கு உத்தரவு

பினாங்கில்  உள்ள  பள்ளிகள் டிஏபி அரசாங்கம்  ஏற்பாடு  செய்துள்ள மெர்டேகா  கொண்டாட்டங்களில்  கலந்துகொள்ளக்கூடாது  என  மாநிலக்  கல்வி இயக்குனர்  ஒஸ்மான் ஹுசேன் பணித்துள்ளார். என்ன  காரணம்? பினாங்கின்  கருப்பொருள்  கூட்டரசு  கருப்பொருளுடன்  முரண்படுகிறது. அதுதான்  காரணம்  என்றாரவர். பினாங்கு  அரசாங்கம்   இவ்வாண்டு  மெர்டேகா  கொண்டாட்டத்துக்காக  தேர்ந்தெடுத்துள்ள  கருப்பொருள்  ‘பெர்சே(தூய்மை’…

தமிழ்ப்பள்ளிகளிலும் தேசியப்பள்ளிகளிலும் சமநிலை மலாய் மொழி பாடத் திட்டம்: சுப்ரமணியம்-,…

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஆகஸ்ட் 21, 2015     மலேசிய கல்வி  அமைச்சு  தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளில் மலாய் மொழியின் தரமும்  தேசியப்பள்ளிகளின்  தரமும் ஒன்றிணைக்கப்படும்  என அறிவித்துள்ளது.   தமிழ் மற்றும் சீனப்பள்ளிகள் இந்த நாட்டில் 100 ஆண்டுகள்  வரலாறு கொண்டவை. அவற்றுக்கென்று  தனித்தன்மைகளும் சிறப்பு அம்சங்களும் உள்ளன.  …

ரபிஸி: நான் அம்னோவைப் பற்றிப் பேசியதெல்லாம் உண்மையே

அம்னோவைச்  “சீண்டிவிடும்” வகையில்  பேசியதாகக்  குற்றம்  சாட்டப்பட்டு  வழக்கு  தொடுக்கப்பட்டுள்ள  பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி,  அம்னோ  பற்றித்  தாம்  சொன்ன  அத்தனையும்  உண்மையே  என்று  எதிர்வழக்காடுகிறார். “அமைதியை  உடைக்கும்  நோக்கில்  வேண்டுமென்றே  பழித்துரைத்தார்”  என  ரபிஸிமீது  குற்றம்  சாட்டப்பட்டுள்ளது. அவர்  குற்றவாளி  எனத்  தீர்ப்பளிக்கப்பட்டால் ஈராண்டுச் …

‘உலகிலேயே சகிப்புத்தன்மை மிகுந்தவர்கள் மலேசியப் போலீசாரே’

மலேசியப்  போலீசாரே  “உலகில்  மிகவும்  சகிப்புத்தன்மை  நிறைந்தவர்கள்” எனப்  போற்றிப்  பாராட்டுகிறார்  உள்துறை  துணை  அமைச்சர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட். துணை  அமைச்சராகி  மூன்று  வாரங்களே  ஆகும்  பொதுக்  கணக்குக்குழுவின்  முன்னாள்  தலைவரான  நூர்  ஜஸ்லான்,  பெர்சே 4-க்குத்  தடை விதிக்கும்  போலீசின்  முடிவை  ஆதரிப்பதாகக்  கூறினார். அப்படிக்…

பிரதமர்: ஜிஎஸ்டி தொடரும்

பொருளாதாரம்மீது  பலவிதமான கவலைகள்  தெரிவிக்கப்பட்டாலும்  அரசாங்கம் பொருள்,  சேவை வரிவிதிப்பைத்  தொடர்வது  என்ற  முடிவில்  இருக்கிறது. இதைத்  தெரிவித்த   எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், அந்த வரி  நாட்டின்  பற்றாக்குறையைக்  குறைக்கும்  நிதிச்  சீரமைப்பின் ஒரு  பகுதியாகும்  என்றார். நாட்டின்  பொருளாதாரம்  குறித்து  அமைச்சரவைக்  கூட்டத்தில் விவாதித்து,  …

பேங்க் நெகாரா சுதந்திரமாக செயல்படும்: பிரதமர் உத்தரவாதம்

பேங்க்  நெகாரா  மலேசியா எவ்வித  தலையீடுமின்றி  சுதந்திரமாக  செயல்பட  அனுமதிக்கப்படும்  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  உத்தரவாதம்  அளித்துள்ளார். “நாட்டின்  பணக்  கொள்கையை  நிர்வகிப்பது பேங்க்  நெகாராவின்  பொறுப்பு. “அந்த  வகையில் பேங்க்  நெகாரா  மலேசியா  சுதந்திரமாக  செயல்படுவதை  அரசாங்கம்  ஆதரிக்கிறது”,  என  நஜிப்  கூறினார். பேங்க் …

ஷா ஆலம் பாஸ் தலைவர்கள் பதவி துறப்பு

சிலாங்கூரில்  பாஸ்  அடிநிலை  தலைவர்கள்  பதவிவிலகும்  படலம்  தொடர்கிறது. நேற்றிரவு  ஷா  ஆலம்  தொகுதித்  தலைவர்கள்  பதவி  விலகுவதாக  அறிவித்தனர். ஷா  ஆலம்  தொகுதித்  தலைவர்  அஸ்லி  யூசுப்,  துணைத்  தலைவர்  சுல்கிப்ளி  முகம்மட்  நானி,  உதவித்  தலைவர்  முகம்மட்  ஜமில்  அப்ட்  ரஹிம்  ஆகிய  மூவரும்  நேற்றைய …

எம்பிகளின் ஆதரவை வாங்கப் பார்க்கிறாரா, நஜிப்?

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  பிஎன்  நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்காக  ஒதுக்கப்படும்  நிதி  அதிகரிக்கப்படும்  என்று  அறிவித்திருப்பதை  டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  சாடியுள்ளார். இது பணத்தைக்  கொடுத்து  பிஎன்  நாடாளுமன்ற  உறுப்பினர்களின்  ஆதரவை “விலைக்கு வாங்கும்”  முயற்சி  என்று  அவர்  கடிந்து  கொண்டார். “அடுத்த  ஆண்டில் …

பாஸ் பிரதமர் பதவியைக் கொடுக்க முன்வந்ததாம்: கூ லி அதை…

தேர்தலில்  வெற்றி பெற்றால்  பிரதமர்  பதவி  ஏற்க  வேண்டும் என்று  பாஸ்  கேட்டுக்கொண்டதை  அம்னோ குவா  மூசாங்  எம்பி  தெங்கு  ரசாலி  ஏற்றுக்கொண்டாராம். பாஸ் தலமைச்  செயலாளர்  முஸ்டபா  அலி  இத்தகவலை  வெளியிட்டிருக்கிறார். 13வது பொதுத்  தேர்தலுக்கு  முன்பாக  நடந்த  கதை  இது.  ஆனால், பிகேஆர்  அதற்கு  மறுப்புத் …

நஜிப்பின் அரசியல் நிதி திட்டம்: எதற்கு?, கேட்கிறார் மகாதிர்

  பிரதமர் நஜிப் அறிவித்துள்ள அரசியல் நிதி விதிமுறைக்களுக்கான ஒரு தேசியக் குழு தேவையற்றது என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கருதுகிறார். "இது குழுக்கள் அமைப்பது பற்றியதல்ல. ஆகவே, குழுக்கள் அமைக்க வேண்டிய தேவையில்லை. "அப்படியே (அவர்கள்) அவரை (நஜிப்பை) விசாரித்தாலும், அது தூக்கி எறியப்படும்", என்று மகாதிர்…

நூருல்: தந்தைக்குச் சிறையில் கெடுபிடிகள் அதிகரிக்கின்றன

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கவிழ்க்கும்  சதித் திட்டம்  ஒன்று  இருப்பதாகக்  கூறப்பட்டதை  அடுத்து  சிறை  அதிகாரிகள்  அன்வார்  இப்ராகிமுக்கு  அதிகமதிகமான  கட்டுப்பாடுகளை   விதித்து  வருகிறார்களாம். இதனைச்  செய்தியாளர்களிடம்  தெரிவித்த  நூருல்  இஸ்ஸா  அன்வார்,  தம்  தந்தையார்  நீதிமன்றங்களுக்கு  வரும்போது  லிம்  கிட்  சியாங்,  ரபிஸி  ரம்லி,  சிலாங்கூர் …

மலேசியாகினிக்குத் தடை போட என்ஜிஓ கோரிக்கை

அரசாங்க- ஆதரவு  என்ஜிஓ-வான  Pertubuhan Minda dan Sosial Prihatin (பிஎம்எஸ்பி)  இணையச்  செய்தித்தளமான  மலேசியாகினிக்கு   உடனடியாக  தடை  விதிக்க  வேண்டும்  என மலேசியத்  தொடர்பு,  பல்லூடக  ஆணையத்திடம்(எம்சிஎம்சி) வலியுறுத்தியுள்ளது. அந்த  என்ஜிஓ-வின்  ஆலோசகர்  ராமேஷ்  ராவ், 13வது  பொதுத்  தேர்தலிலிருந்து  அச்செய்தித்  தளம்  “முரணான,  குழப்பம்தரக்கூடிய,  அவதூறு …