மசீசவிடமும் மஇகாவிடமும் ஏதாவது கொஞ்சமாகிலும் இருந்தால், வெளியேற வேண்டும், அம்பிகா

அம்னோ அமைச்சர் என்ற முறையில் எவ்விதத் தண்டணையும் இன்றி இனவாதக் கருத்துகளைக் கூறலாம் என்ற நிலை இருப்பதால், பாரிசான் பங்காளிக் கட்சிகள் எப்படி இதனைச் சகித்துக் கொண்டு இன்னும் தொடர்ந்து அக்கூட்டணியில் இருக்கின்றன. பாரிசானின் இரு முக்கிய கட்சிகள் தங்களுடைய சுயமரியாதை உணர்வை வலுப்படுத்த வேண்டும் என்று பெர்சே…

‘இழுத்து மூடுவேன்’ என்று சொன்னதை ஜாஹிட் மீட்டுக்கொள்ள வேண்டும்

உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, செய்தித்தாள்கள் இழுத்து மூடப்படும் என்று விடுத்த மிரட்டலை மீட்டுக்கொள்ள வேண்டும் என  சீன நாளேடுகளின் செய்தி ஆசிரியர்கள் சங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது. . மலாக்காவில் ஒரு விளக்கமளிப்புக் கூட்டத்தில்  அமைச்சர் அவ்வாறு கூறியது வருத்தமளிப்பதாக  சீன நாளேடுகளின் ஆசிரியர்கள் நேற்று ஓர்…

மாணவர்களின் ஆங்கிலமொழி தரம் குறித்து மகாதிர் கவலை

மாணவர்களிடையே ஆங்கிலத்தின் தரம் தாழ்ந்து போயிருப்பது குறித்து டாக்டர் மகாதிர் முகம்மட் கவலை தெரிவித்தார். அது, அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றாரவர். உயர்க்கல்வி நிலையங்களில் பயின்ற பலர் அம்மொழியில் புலமை பெறவில்லை என்பதால் சரியான வேலை வாய்ப்புகளைப் பெறுவதில்லை என அந்த முன்னாள் பிரதமர் கூறினார். அண்மையில் 333…

இந்தியர்களிடையே குண்டர்தனத்துக்குத் தீர்வுகாண அரசாங்கத்துக்கு உண்மையில் அக்கறை இருக்கிறதா?

உங்கள் கருத்து “அதுதான், உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி இந்தியர்களை வேட்டையாடலாம் என்று சட்டப்பூர்வமாக உரிமை கொடுத்துவிட்டாரே. முதலில் சுட்டுத்தள்ளுவோம், பிறகு பேசுவோம் என்று கூறும் ‘கவ்பாய்கள்’ மலேசியாவில் வந்திறங்கி விட்டார்கள்”. இந்தியரிடையே குண்டர்தனத்துக்குத் தீர்வுகாண பிஎஸ்சி அமைப்பீர் விழிப்பானவன்: கே.குலசேகரன், இந்தியர்களிடையே நிலவும் குண்டர்தனத்தைத் தீர்க்க உருப்படியாக…

சோசலிசக் கட்சி தலைவர்களுக்கு அரசாங்கமும் போலீசும் ரிம2 இலட்சம் தர…

ஆறு சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) கட்சி தலைவர்கள் 2011 ஆம் ஆண்டில் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்காக அரசாங்கத்திற்கும் இதர 81 பிரதிவாதிகளுக்கும் எதிராகத் தொடர்ந்த சிவில் வழக்கில் இன்று ஓர் உடன்பாடு தீர்வு கண்டனர். அந்த உடன்பாடு இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி ஹு…

வாங்க! தமிழில் பேசுவோம்! – சொல்வேந்தர் மையம்!

‘டோஸ்ட் மாஸ்டர்ஸ்’ என்றால் தோசை சுடுபவர்தான் ஞாபகம் வரும். ஆனால் டோஸ்ட் மாஸ்டர்ஸ் என்பது மேல்குடி மக்கள் ஆங்கிலத்தில் அழகாக அரட்டை அடிக்க உண்டாக்கப்பட்ட ஒரு சமூகக் குழுவாகும். இதில் பங்கு பெற்றவர்கள்  தங்களது பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டனர். 1924 இல் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்ட ‘டோஸ்ட் மாஸ்டர்ஸ்’ இன்று ‘சொல்வேந்தர்…

இப்ராகிம் அலிக்கு இந்திய சீன வர்த்தக உறவு வேண்டும்; சீனர்களும்…

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 7, 2013.   மலாய்க்காரார்கள் இன்னும் ஏழ்மை நிலையிலேயே இருப்பார்களேயானால் இன்னொரு கலவரம் மே 13ல் நிகழ்ந்தது போல வர வாய்ப்புள்ளது என்று பெர்காசாவின் தலைவர் இப்ராஹிம் அலி அண்மையில் மலேசியன் இன்சைடெர் ஊடகத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.   நாட்டின்…

கொலை செய்ய போலீசை ஜாஹிட் தூண்டுகிறார், பிகேஆர் சாடுகிறது

குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படுவோரை முன்னெச்சரிக்கையின்றிச் சுட்டுக் கொல்வதில் தவறில்லை என்று கூறிய அஹ்மட் ஜாஹிட் ஹமிடிக்கு பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் கடும் கண்டனம்  தெரிவித்துக் கொண்டார். உள்துறை அமைச்சர் கொலை செய்ய போலீசை தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டிய சுரேந்திரன், போலீசால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் வழக்குகளைத் திரும்ப விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை…

குற்றவாளிகளை முதலில் சுடுவதுதான் நல்லது என ஒப்புக்கொள்கிறார் அமைச்சர்

சமூக அமைப்புகள், போலீசார் குற்றவாளிகளைச் சுடும் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகக் கடந்த பல ஆண்டுகளாக  கூறி வருகின்றன. அக்கூற்றை மெய்ப்பிக்கிறது உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியின் பேச்சு. முதலில் சுடுவது பிறகு விசாரணை என்பதே சரி என்றவர் கூறினார். கடந்த சனிக்கிழமை, சமூகத் தலைவர்களுக்குப் பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்கும்…

‘இனவாத மருத்துவர்கள் எனக் கூறியதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடுப்போம்’

பினாங்கு மாநிலத்தில் இனவாத மருத்துவர்கள் பற்றிக் கூறியதை சுகாதாரத் துணை அமைச்சர் டாக்டர் ஹில்மி யஹ்யா மீட்டுக்கொள்ள வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால், அவருக்கு எதிராக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வழக்கு தொடுப்பார். ஹில்மி தாம் கூறியதை மீட்டுக்கொள்ள ஏழு நாள் அவகாசம்…

இந்தியரிடையே குண்டர்தனத்துக்குத் தீர்வுகாண பிஎஸ்சி அமைப்பீர்

குண்டர்தனத்தில் இந்திய மலேசியர்கள் பெரிய எண்ணிக்கையில் ஈடுபட்டிருக்கும் பிரச்னைக்குத் தீர்வுகாண நாடாளுமன்ற தேர்வுக்குழு(பிஎஸ்சி) ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று டிஏபி உதவித் தலைவர் எம்.குலசேகரன் கேட்டுக்கொண்டிருக்கிறார். குண்டர்கும்பல் உறுப்பினர்களில் 29,000 பேர் இந்தியர்கள், சீனர்கள் 9,000 பேர், மலாய்க்காரர்கள் 3,000 பேர் என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட்…

டிவி விவாதத்துக்கு முக்ரிஸ் சம்மதிக்கிறார்; ஹிஷாம் மறுக்கிறார்

அம்னோ உதவித் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் தொலைக்காட்சியில் விவாதமிடுவது தேவையற்றது என்று நினைக்கிறார் ஹிஷாமுடின் உசேன். அது பற்றிக் கருத்துரைத்த நடப்பு உதவித் தலைவர்களில் ஒருவரான ஹிஷாம், “உலகம் கூடி அம்னோ தலைவிதியை முடிவு செய்யப்போவதில்லை. அம்னோ உறுப்பினர்கள் அத்தனை பேரும்கூட வாக்களிக்கப் போவதில்லை”, பிறகு எதற்கு…

பொதுநல இலாகாவால் வேண்டுமென்றே இழிவுபடுத்தப்பட்டதால் உடல் ஊனமுற்றவர் படியில் தவழ்ந்தே…

உடல் ஊனமுற்ற ஒருவர் தமது மகஜர் ஒன்றை கெடா பொதுநல இலாகாவிடம் (ஜேகேஎம்) தாக்கல் செய்வதற்காக பல படிகளை தவழ்ந்தே ஏறிச் சென்றார். அவருக்காக அவரது மன்றம் எடுத்துக் கொண்ட முயற்சியை அவ்விலாகா இயக்குனர் வேண்டுமென்றே இழிவுபடுத்தியதால், அவர் இந்நடவடிக்கையை மேற்கொண்டார். பெர்சத்துவான் ஒகேயு செத்தியா டெயரா கூலிம்…

வீட்டுப் பணி தொழிலாளர்களுக்கு எதிரான செயல்கள் கொடூரமாகிக் கொண்டிருக்கின்றன, ஐரின்…

வீட்டுப் பணி தொழிலாளர்களுக்கு எதிரான செயல்பாடுகளின் கொடூரம் அதிகரித்துக் கொண்டு வருவதோடு உயிருக்கு மருட்டலாகவும் இருக்கிறது என்று தெனகானித்தாவின் செயல்முறை இயக்குனர் ஐரின் பெர்னாண்டிஸ் கூறுகிறார். கடந்த ஆண்டில், 96 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாரவர். "இத்தொழிலாளர்கள் கம்போடியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாட்டை சேர்ந்தவர்கள். காப்பாற்றப்பட்டவர்களில்…

அன்வார்: டிஎபி கிறிஸ்துவ மதத்தை பர்ப்புகிறது என்பது பொய்

பினாங்கில் கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்கு டிஎபி முயற்சித்தது என்று கூறுவோரை எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் வன்மையாகக் கண்டித்தார். தாம் அது போன்ற முயற்சி எதனையும் கண்டதில்லை என்றாரவர். செபராங் ஜெயா சந்தைக்கு வருகையளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், அக்கட்சி மற்றும் பினாங்கு முதல்வர் லிம் குவான்…

ம.இ.கா பரிந்துரை செய்யுமா ?

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 6, 2013. 2013 ஆம் ஆண்டு குற்றச் தடுப்பு சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பொழுது, சில திடுக்கிடும் தகவல்களை உள்துறை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி நாட்டில் எல்லா இனத்தைச் சார்ந்தவர்களும் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாகவும், ஆனால் அதில் அதிகமானோர் இந்தியர்கள்…

மலேசியாகினி: எங்கள் செய்தியாளர்களுக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்துங்கள்

சுயேட்சை செய்தி இணையதளத்தின் செய்தியாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடியை மலேசியாகினி கேட்டுக்கொண்டுள்ளது. மக்கள் நலன் கருதி கேள்வி கேட்கும் அடிப்படை உரிமை செய்தியாளர்களுக்கு உண்டு. அக்கேள்விகளுக்கு பதில் கூறும் கடப்பாடு அமைச்சர்களுக்கு உண்டு என்று மலேசியாகினியை கூட்டாக தோற்றுவித்தவர்களான பிரமேஷ் சந்திரனும் ஸ்டீவன்…

கைரியின் தாராளக் கொள்கையே அவருக்கு எதிரி

நடப்பு அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடினின் தாராளக் கொள்கைகள் இளைஞர் பகுதியின் மூல நோக்கத்துக்கே குழிபறிப்பதுபோல் இருப்பதால்தான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவதாக அக்ராம்ஷா முவாம்மார் உபைடா கூறியுள்ளார். ஒத்துப்போவதும் விட்டுக்கொடுப்பதுமான கைரியின் அணுகுமுறை கட்சியின் மூல நோக்கத்துக்கு எதிரானது என்று அக்ராம்ஷா குறிப்பிட்டார். “அம்னோ இளைஞர் பகுதி…

தொலைந்துபோன துப்பாக்கிகள் பற்றிக் கேள்விகேட்கும் உரிமை வரிசெலுத்துவோருக்கு உண்டு

உங்கள் கருத்து  ‘ஜாஹிட் அவர்களே, இது தேசிய நலன் சம்பந்தப்பட்ட விவகாரம். அந்த ஆயுதங்கள் எப்படிக் காணாமல் போயின என்பதை விளக்குவது உங்கள் பொறுப்பு. நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அதைப் பற்றிப் பேசுவோம்’ தொலைந்துபோன போலீஸ் துப்பாக்கிகள் பற்றி இனி யாரும் பேசக்கூடாது கிம் குவேக்:  போலீஸ் தலைவர்…

போலீசார் சுரண்டப்படும் பூர்வீகக் குடிமக்களை பாதுகாக்க வேண்டும்

முரும் அணைக்கட்டு கட்டப்படும் இடத்திற்குச் செல்லும் சாலையில் சுமார் 300 பெனான்கள் முற்றுகையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அந்த முற்றுகையை நிறுத்துவதற்கு கிட்டத்தட்ட 30 போலீசார் சென்றனர் என்று சுவராம் ஒருங்கிணைப்பாளர் தேவராஜன் இன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார். பெனான் சமூகத்தினர் எஸ்இபியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பெனான்…

ஹுவா பெங்: சுவாவை எதிர்த்தேன்; விலக்கப்பட்டேன்

நேற்று மசீசவிலிருந்து நீக்கப்பட்ட  மத்திய செயல்குழு உறுப்பினர்,  லீ ஹுவா பெங்,  கட்சித் தலைவருக்கு  எதிராக  ஏபிசி இயக்கம் ( Anybody But Chua Soi Lek)  தொடங்கியதுதான் தாம் கட்சியிலிருந்து தூக்கப்பட்டதற்கான காரணம் என்கிறார். மூன்று நாள்களுக்கு முன்னர்தான் அந்த இயக்கம் தொடக்கப்பட்டது என்றும்  அதன் தொடர்பில்…

தன் முதுகு தனக்குத் தெரியாது: பக்காத்தானைச் சாடுகிறது மசீச

தலைமைக் கணக்காய்வாளர்  அறிக்கையில்  பக்காத்தான் ரக்யாட்  ஆட்சி செய்யும்  மாநிலங்களிலும்  பல தவறுகள் நிகழ்ந்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  ஆனால், அவற்றை அக்கூட்டணி கண்டுகொள்வதில்லை. அதே வேளை,  மத்திய அரசின் நிதி நிர்வாகத் தவறுகளை மட்டும் அது  தவறாமல் குறைகூறும் என மசீச மத்திய செயல்குழு உறுப்பினர் லோ செங் கொக்…

இறந்துபோனவர்களுக்கு பண உதவியும் வீட்டு வசதியும் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது

கடந்த ஆண்டு கணக்கறிக்கையின்படி, காலமான பின்னரும்கூட பலருக்கு சமூகநல உதவியும் வீட்டு வசதியும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. நெகிரி செம்பிலான் சமூக நலத் துறை 2008-க்கும் 2012-க்குமிடையில் இறந்துபோன 40 பேருக்குத் தொடர்ந்து பண உதவி செய்து வந்துள்ளதாக 2012 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை கூறுகிறது. பினாங்கு முனிசிபல் மன்றம்…