ஹாடி பிரதமரிடம் பிரியமாக இருக்கிறார் அதனால் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு வெற்றிபெறாது

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிராகக்  கொண்டுவரப்படும்  நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  வெற்றிபெறும்  என்ற  நம்பிக்கை  டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங்குக்கு  இல்லை. எதிரணியிலேயே  அதற்கு  எதிர்ப்பு  இருக்கும், குறிப்பாக  பாஸ்  அதை  ஆதரிக்காது  என்றவர்  நினைக்கிறார். அம்னோ  தலைவர்  ஒருவர் எதிரணி  மற்றும்  ஆளும்  கட்சி …

டிபிகேஎல்லிடம் ‘பணிந்து போகவில்லை’:பெர்சே வலியுறுத்து

பெர்சே  கோலாலும்பூர்  மாநகராண்மைக்  கழகத்துக்கு  விட்டுக்கொடுத்து  ‘அடிபணிந்து  போவதாக’க்  கூறப்படுவதை  அக்கூட்டமைப்பின்  தலைவர்  மரியா  சின்  அப்துல்லா  மறுத்துள்ளார். ஆகஸ்ட்  29-30 இல்  பேரணி  நடத்த  வேண்டாம்  என்றும்  பேரணியை  வேறு  இடங்களில்  நடத்துமாறும்  டிபிகேஎல்  கேட்டுக்கொண்டிருப்பதை  மரியா  சுட்டிக்காட்டினார். ஆனாலும், பெர்சே 4  பேரணி  டட்டாரான்  வட்டாரத்தில்தான் …

பெர்சே 4-குக்கு டட்டாரான் மெர்டேகாவில் இடமில்லை

டட்டாரான்  மேர்டேகாவில்  பேரணி நடத்துவது  முடியாத  செயல்  என்று கோலாலும்பூர்  மாநகராண்மைக்  கழக (டிபிகேஎல்) மேயர்  முகம்மட்  அமின்  நோர்டின்  அப்துல்  அசீஸ்  கூறினார். மெர்டேகா  தினக்  கொண்டாட்டத்துக்கான  ஒத்திகைகளுக்கும்  மற்ற  ஏற்பாடுகளுக்கும்   டட்டாரான்  மெர்டேகா  பயன்படுத்திக்  கொள்ளப்படும்  என்பதே  இதற்குக்  காரணம்  என்றும்  அமின்  நோர்டின்  கூறினார்.…

நஜிப்: மலேசியா தோல்வி அடைந்த நாடா? இல்லவே இல்லை

மற்ற  நாடுகளைவிட  சிறப்பாக  செயல்பட்டுவரும்  மலேசியா, நிச்சயமாக  ஒரு  தோல்வி  கண்ட  நாடு  அல்ல  என்கிறார்  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக். “இதில்  வேடிக்கை என்னவென்றால்  இந்தத் ‘தோல்வி கண்ட’ நாடுதான்  2014-2015 இஸ்லாமியப்  பொருளாதாரக்  குறியீட்டில் (GIEI)  முதலிடத்தில்  இருக்கிறது”, என்றாரவர். இன்று  காஜாங்கில்  அனைத்துலக வசத்தியா…

மகாதிர் பிரதமராக இருந்தால் ஊழல் தடுப்பாளர்கள் அவர் அருகில்கூட செல்ல…

டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணைய(எம்ஏசிசி)த்தின்   விசாரணையைப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கெடுக்கப்  பார்க்கிறார்  எனக்  குற்றஞ்  சாட்டுகிறார்.  ஆனால், அந்த  முன்னாள்  பிரதமர்  மட்டும்  இப்போது  பதவியில்  இருந்தால் ஊழல்தடுப்பு  ஆணையம்  அவர்மீது  விசாரணையையே  தொடங்கி  இருக்காது. நஜிப்பின்  வங்கிக்  கணக்கில்  ரிம2.6 பில்லியன் …

மகாதிர்: பிரதமர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் பயனற்றது

  நாடாளுமன்ற மக்களவையில் எடுக்கப்படும் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் வழி பிரதமர் நஜிப் பதவியிலிருந்து அகற்றப்பட மாட்டார் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கூறுகிறார். இது மிகக் கடினமானது ஏனென்றால் கிட்டத்தட்ட அனைத்து அம்னோ உறுப்பினர்களும் அவருக்குக் கடமைப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. தீர்மானத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிக்கு போதுமான உறுப்பினர்கள்…

“குகைகள் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற தகுதி பெறவில்லை”

  பத்துமலை உலகப் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற மலேசியா மனு தாக்கல் செய்யாது. மாறாக, அந்தச் சுற்றுலா   சின்னமான அவ்விடத்தை ஒரு தேசிய பாரம்பரியத் தளமாக அறிவிக்க சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சு உறுதியளிக்கிறது என்று தஸ்டார்ஓன்லைன் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.…

அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி என்பதை ரபிடா நம்பவில்லை

அரசாங்கத்தையும்  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கையும்  கவிழ்க்க  அம்னோ  தலைவர்  ஒருவர்  சதி  செய்கிறார்  என்று  கூறப்படுவதை  முன்னாள்  அமைச்சர்  ரபிடா  அசீஸ்  நம்பவில்லை. துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  அவ்வாறு  கூறுவதைக்  கேட்டு  அதிர்ச்சி  அடைவதாக  அவர்  குறிப்பிட்டார். “சதித்  திட்டங்கள்  (தலைமையை) முடிவு  செய்வதில்லை.…

ஐஜிபி: பெர்சே புக்கிட் ஜாலில் அரங்கத்தைப் பயன்படுத்துவதே நல்லது

தேர்தல்  சீரமைப்புக்குப்  போராடும்  அமைப்பான  பெர்சே,  பெர்சே 4   பேரணியை  புக்கிட்  ஜாலிலில்  உள்ள   தேசிய  ஸ்டேடியத்தில்  நடத்துவதே  நல்லது  என்கிறார்  தேசிய  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார். 100,000 பேர்  ஒன்றுகூடுவதற்கு  புக்கிட்  ஜாலில்  அரங்கமே  சரியான  இடம்  என  காலிட்  கூறினார். பேரணியை …

அரசியல் நன்கொடைச் சட்டத்தைக் கேலி செய்கிறார் சைபுடின்

அம்னோ  உறுப்பினர்  சைபுடின்  அப்துல்லா, பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  அரசியல்  நிதி  மீதான  குழு  அமைக்கும்  திட்டத்தை  மறைமுகமாகக்  கேலி  செய்துள்ளார். “காட்டை  மொத்தமாக  அழித்து  ஏப்பம்  விட்டாயிற்று. இப்போது சுற்றுச்சூழல்  பற்றியும்  மரம்  நடுவது  பற்றியும் விவாதிக்க ஒரு  குழு  அமைக்க  முன்மொழியப்பட்டுள்ளது”, என  சைபுடின் …

நஜிப்பைக் கவிக்கத் திட்டமிடுபவர் வயதானவராம்: ஜாஹிட் கூறுகிறார்

துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி, ‘வயோதிகர்’ ஒருவர்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கவிழ்க்கச்  சதி  செய்வதாகக்  கூறினார். நேற்று  லூமுட்  அம்னோ  ஆண்டுக்  கூட்டத்தில்  இதைத்  தெரிவித்த  ஜாஹிட்  அந்த  மூத்த  சதிகாரரின்  பெயரை  வெளியிடவில்லை. “பெரிய இலட்சியத்தைக்  கொண்டவர். இப்போது ‘பின்வாசல் வழியாக’ நுழையப் …

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிகளை போலீஸ் ஆராயும்

அரசாங்கத்தைக்  கவிழ்க்கும்  இயக்கமொன்று   மேற்கொள்ளப்பட்டிருப்பதாக்  துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட் ஹமிடி  கூறியிருப்பதன்  தொடர்பில்  போலீசார்  மூன்று  புகார்களைப்  பெற்றுள்ளனர். அப்புகார்கள்மீது,   நாடாளுமன்ற  ஜனநாயகத்துக்குக்  கேடு  செய்யும்  நடவடிக்கைகள்  தொடர்பான  குற்றவியல்  சட்டம்  பகுதி  124பி-இன்கீழ்  விசாரணை நடத்தப்படும்  எனப்  போலீஸ் படைத்தலைவர்  காலிட்  அபு  பக்கார்  கூறினார்.…

சிலாங்கூரிடம் ‘யாரோ ஒருவருக்குக் கிடைத்த நன்கொடையை’விட ரிம1 பில்லியன் கூடுதலாகவே…

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி, இன்று  காலை  மாநிலக்  கையிருப்புப்  பற்றிப்  பேசியபோது  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கையும்  இலேசாகக்  கிண்டலடித்தார். பிரதமர் பெயரைக்  குறிப்பிடாமலேயே, “2015 ஆகஸ்ட்  13  முடிய.  நம்  மாநிலத்  தொகுநிதியில் ரிம3.73 பில்லியன்  உள்ளது. இது  யாரோ  ஒருவருக்குக்  கிடைத்த  நன்கொடையைவிட …

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு சட்டவிரோதமானதல்ல

நம்பிக்கையில்லா  வாக்கெடுப்பின்  வழி  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கவிழ்ப்பது  சட்டவிரோதமான  செயலல்ல  என்கிறார்  பிகேஆர்  எம்பி  ஒருவர். நம்பிக்கையில்லா  வாக்கெடுப்பு  என்பது  அரசமைப்புப்படியானது,  மக்களின்  விருப்பத்தைப்  பிரதிபலிப்பது  என  அலோர் ஸ்டார்  எம்பி  கூய் ஹிஸ்யாவ்  லியோங்  கூறினார். தேர்தல்கள்  மூலமாக  மட்டுமே  அரசாங்கத்தை  மாற்ற  முடியும் …

நஜிப்-சுல்தான் உறவை விமர்சிப்பதா? புவாட்டுக்கு இளவரசர் கண்டனம்

ஜொகூர்  சுல்தான்  இப்ராகிம் இஸ்கண்டருக்கும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கும் பிரச்னை  ஏதுமில்லை  என்று  கருத்துரைத்த  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினரை  ஜோகூர் பட்டத்திளவரசர்  துங்கு  இஸ்மாயில்  இப்ராகிம்  கண்டித்துள்ளார். நிலவரம்  அறியாமல்  புவாட்  ஸர்காஷி   அறிக்கைகள்  விடுக்கக்  கூடாது என  துங்கு  இஸ்மாயில்  கூறினார். “சுல்தானுக்கும்  நஜிப்புக்கும்  பிரச்னை …

இணையத்தில் ‘பொய்யான செய்தி’கள் தடுக்கப்படும்

இணையத்தில் “பொய்யான  தகவல்களும்  வதந்திகளும்” இடம்பெறுவதாகக்  கூறிய  தகவல், பல்லூடக  அமைச்சர்  சாலே  சைட்  கெருவாக், சமூக  வலைத்தள  நடத்துனர்களின்  உதவியுடன்   அவற்றுக்கு  முடிவுகட்டப்படும்  என்றார். “ஊடகங்களில்,  குறிப்பாக  இணையச்  செய்தித்  தளங்களில் பொய்யான  தகவல்கள்  முக்கிய இடம்பெற்று  வருகின்றன. “இதன்  தொடர்பில்,  முகநூல்,  கூகுல்,  டிவிட்டர்  ஆகியவற்றைச் …

54 பயணிகளுடன் சென்ற விமானம் பாப்புவா பகுதியில் காணாமல் போய்விட்டது

  ஐந்து விமானப் பணியாளர்கள் உட்பட, 54 பேருடன் பயணம் மேற்கொண்டிருந்த ஓர் இன்தோனேசிய விமானம் காடு நிறைந்த பாப்புவா கிழக்குப் பகுதியில் சென்று கொண்டிருக்கையில் விமானக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இன்று (ஞாயிற்றுக்கிழமை) இழந்து விட்டது என்று பாசார்னாஸ் அறிவித்தது. இருட்டி விட்டதால் விமானத்தை தேடும் பணி…

நஜிப்: அடுத்த ஆண்டில் பிஎன் எம்பிகளுக்கு கூடுதல் பணம்!

  பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புத்ராஜெயாவின் ஆண்டு நிதி ஒதுக்கீடு தற்போதைய ரிம5மில்லியனிலிருந்து அதிகரிக்கப்படும் என்று பிரதமர் நஜிப் கூறுகிறார். கெரிக் அம்னோ தொகுதி பேராளர்கள் கூட்டத்தில் பேசிய நஜிப் அது பற்றிய கூடுதல் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார். "முன்பு அது ரிம1 மில்லியனாக இருந்தது. இப்போது…

சரவாக் ரிபோர்ட் கட்டுரைகள் எந்த அளவுக்கு உண்மையானவை என்பது குறித்து…

  1எம்டிபி குறித்து பல குற்றச்சாட்டுகளை இதுவரையில் வெளியிட்டு வந்துள்ளது யுகேயை தளமாகக் கொண்டுள்ள சரவாக் ரிப்போர்ட். அதில் கூறப்பட்டுள்ளவற்றில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று பிரதமர் நஜிப் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமரின் இக்கேள்வி, நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் போடப்பட்ட அமெரிக்க$681மில்லியனில் அமெரிக்க$650மில்லியன் வெளியூருக்கு மீண்டும்…

கூ லி: அரசாங்கத்தைக் கவிழ்க்க இராணுவம் தேவைப்படும்

"அரசாங்கத்தைக் கவிழ்க்கும் திட்டம்" ஒன்று இருப்பதாகக் கூறப்படுவதை அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தெங்கு ரஸாலி ஹம்ஷா நிராகரிக்கிறார். "அதனைச் செய்வதற்கு இராணுவம் தேவைப்படும். சாதாரணமான மக்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது", என்று தெங்கு கோலாலம்பூரில் அவரது இல்லத்தில் இன்று நடந்த ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பின்…

முகைதின் யாசின்: நஜிப் கூறுவது தவறு, 1எம்டிபி மக்கள் பணம்…

  பிரதமர் நஜிப் 1எம்டிபி மக்கள் பணத்தை பயன்படுத்தவில்லை என்று கூறியிருந்த கருத்தை அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் ஏற்றுக்கொள்ளவில்லை. அது தவறு என்கிறார். தாம் பிரதமர் குறைகூறவில்லை, வெறும் கருத்து மட்டும் தெரிவிப்பதாக முத்தாய்ப்பு வைத்து கவனமாக பேசிய முகைதின், அந்நிறுவனத்திற்கு பில்லியன் கணக்கில் பெறப்பட…

கூ லி: மகாதிருடனான சந்திப்பு தனிப்பட்ட விவகாரம்

  அம்னோவின் மூத்த தலைவர் தெங்கு ரஸாலி ஹம்சாவும் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டும் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினர். அவர்கள் என்ன பேசினர் என்பதைத் தெரிவிக்க தெங்கு ரஸாலி மறுத்து விட்டார். அது தனிப்பட்டது என்றார். தெங்குவும் மகாதிரும் ஒரு காலக்கட்டத்தில் பரமவிரோதிகாளாக இருந்தனர். அவர்களுக்கிடையிலான சச்சரவு…

முகைதின் யாசின்: ரிங்கிட்டின் வீழ்ச்சிக்கு காரணம் 1எம்டிபி

  அம்னோவின் துணைத் தலைவர் முகைதின் யாசின் ரிங்கிட் மதிப்பின் வீழ்ச்சியடைந்தது 1எம்டிபி விவகாரத்தால்தானே தவிர இதர காரணங்களால் அல்ல என்று கூறுகிறார்.. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு அல்லது நமது பொருட்கள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் விலை வீழ்ச்சி மட்டும் இதற்கு காரணமல்ல. அதனை உண்டுபண்ணியது அரசியல்…