கல்வி பெருந்திட்டத்தை வரைந்த நிபுணத்துவமற்ற நிபுணருக்கு ரிம20 மில்லியன்!

நாடாளுமன்றம். கல்வி அமைச்சு நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் கல்வி பெருந்திட்டத்தை வரைந்த மெக்கின்சி அண்ட் கோ நிறுவனத்திற்கு ரிம20.56 மில்லியன் மட்டுமே வழங்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. டிஎபியின் செரடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியன் மிங் எழுப்பியிருந்த கேள்விக்குக் கிடைத்த பதில் அது. இது மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகும்…

நஜிப்பின் ராயா கொண்டாட்டதிற்கான செலவு ரிம2.88 மில்லியன் மட்டுமே!

நாடாளுமன்ற செய்தி. ரிம2.28 மில்லியன். அவ்வளவுதான். மக்களின் வரிப்பணம். வேற எவரின் பணமும் இல்லை. கடந்த ராயா கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் நஜிப்பின் அதிகாரத்துவ இல்லத்திற்குச் சென்ற 80,000 விருந்தாளிகளுக்கு அளிக்கப்பட்ட விருந்துக்கான செலவு அது. நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் அளிக்கப்பட்ட பதிலில் இந்தத் தகவலை பிரதமர் துறை…

சிறைக்காவலர்கள் புடைசூழ உதயகுமார் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்

தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் கட்சியின் தலைவர் பி. உதயகுமார் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டார். அவரைச் சுற்றி ஆறு சிறை காவலர்கள் இருந்தனர். மற்ற கைதிகள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படும் போது ஒரு கைதிக்கு ஒரு காவலர்தான் உடன்வருவார். உதயகுமாரை…

தாய் இராணுவ ஜெனரல்கள்: சின் பெங் நேர்மை மற்றும் மனத்துணிவு…

மலேசிய கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமைச் செயலாளர் சின் பெங்கின் இறுதிச் சடங்கு இன்று (செப்டெம்பர் 23 )  பேங்கோக்கில் உள்ள ஒரு புத்த கோயிலில் நடந்து முடிந்தது. அந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட தாய்லாந்து இராணுவத்தின் முன்னாள் ஜெனரல்கள் கிட்டி ராத்தாசாயா, அகானிட் முவான்சவாட் மற்றும்   பிஸாம் வாட்டானா  வோங்கிரி, "சின் பெங்,…

சின் பெங் இறுதிச் சடங்கில் தாய்லாந்து முன்னாள் பிரதமர் கலந்து…

இன்று காலை மணி 10.00 அளவில் துயரார்ந்த சூழலில் தொடங்கிய மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளர் சின் பெங்கின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்த தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் சவாலிட் யோங்ஜாய்யுத்தின் வருகை சிறிய மாற்றத்தை அளித்தது. தாம் இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டது…

ஒப்ஸ் சண்டாஸ்: குண்டர் கும்பலைச் சேர்ந்த 304பேர் கைது

ஒப்ஸ் சண்டாஸ் நடவடிக்கையின்கீழ், போலீசார் நேற்று நள்ளிரவுவரை நாடு முழுக்க பல்வேறு குற்றங்களுக்காக 11,036பேரைத் தடுத்து வைத்திருப்பதாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் கூறினார். அத்துடன் 23 துப்பாக்கிகள், 14 ஏர் ரைபில்கள், ஒரு கையெறிகுண்டு, 1,238 தோட்டாக்கள், இன்னும் பல்வகை ஆயுதங்கள் ஆகியவற்றையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். கடும்…

பணக்காரர்களான 40விழுக்காட்டினர் உதவித் தொகைகளில் 80விழுக்காட்டை அனுபவிக்கின்றனர்

அரசாங்க உதவித் தொகை யாரை இலக்காக வைத்துக் கொடுக்கப்படுகிறதோ அவர்களைச் சென்றடைவதில்லை எனத்  துணை அமைச்சர் அஹமட் மஸ்லான் இன்று கூறினார். “நாட்டில் உயர் வருமானம் பெறும்  40 விழுக்காட்டினர்தான் உதவித்தொகைகளினால் கிடைக்கும் நன்மைகளில் 80விழுக்காட்டைத் துய்க்கிறார்கள்” என்றாரவர். ஆக, உதவித் தொகை  சிறந்த பயனை அளிக்கவில்லை. ஆனால்,…

லவ்: ஊழல் ஒழிய இடைத்தரகர்களை ஒழிக்க வேண்டும்

அரசாங்கத்தில் ஊழலை ஒழிக்கும் போராட்டத்தைத் தொடங்கியுள்ள பிரதமர்துறை அமைச்சர் பால் லவ், முதலில் இடைத்தரகர்களை ஒழிப்பதில் முனைப்புக் காட்டுகிறார். இடைத்தரகர்களால்தான் தொழிற் செலவுகள் தேவையில்லாமல் கூடி விடுகின்றன என்றார். ஏனென்றால் அவர்களுக்கு வேறு கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதனால் தொழிலின் மதிப்பு கூடுகிறதா என்றால் எந்த வகையிலும் கூடுவதில்லை.…

‘பினாங்கை முன்மாதிரியாகக் கொள்வீர்; நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதை நிறுத்துவீர்’

மத்திய அரசும் மற்ற மாநில அரசுகளும், பினாங்கு அரசின் மாற்றுத்தரப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்யும் முயற்சியைப் பின்பற்ற வேண்டும் என டிஏபி எம்பிகள் இருவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஜனநாயக முதிர்ச்சியை வெளிப்படுத்தும் பினாங்கு அரசின் முடிவைப் பாராட்டிய புக்கிட் மெர்தாஜாம் எம்பி ஸ்டீபன் சிம்-மும் (இடம்), புக்கிட் பெண்டேரா எம்பி…

ஜாஹிட்: இடம் அளித்தால் மடம் கட்டுவார்கள்

காலஞ்சென்ற மலாயா கம்முனிஸ்டுக் கட்சித் தலைவர் சின் பெங்கின் அஸ்தியை மலேசியாவுக்குள் அனுமதித்தால் அதை வைத்து அவருக்கு ஒரு நினைவு மண்டபமே அமைத்து விடுவார்கள் என்று உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி குறிப்பிட்டார். “அஸ்தி ஒரு பிரச்னை அல்ல.  ஆனால் அதை வைத்து யாராவது ஒருவர் அவருக்கு ஒரு…

ரபிடாவின் பிரதிநிதி என்று கூறப்படுவதை மறுக்கிறார் மஸ்னா

அம்னோ மகளிர் தலைவர் பதவிக்காக போட்டியிடும் மூவரில் ஒருவரான மஸ்னா மஸ்லான்,  முன்னாள் மகளிர் தலைவர் ரபிடா அசீசின் உரிமைபெற்ற பிரதிநிதி என்று கூறப்படுவதை மறுக்கிறார். கடந்த சனிக்கிழமை, கடைசி நேரத்தில்தான் மகளிர் பகுதி உயர்பதவிக்குப் போட்டியிட முடிவு செய்ததாகவும் அதற்காக யாருடனும் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் கூறினார்.…

கேள்விகளைத் தாக்கல் செய்வதற்கான கால நிர்ணயிப்பு ‘சர்வாதிகாரத்தனமானது’

எம்பிகள்,  நாடாளுமன்றத்துக்கான கேள்விகளை நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு 14 நாள்களுக்கு முன்னதாகவே தாக்கல் செய்யும்  நடைமுறை சரியானதல்ல என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன். அதில் ‘சர்வாதிகாரத்தனம்’ தெரிகிறது என்றாரவர். இதனால் கேள்வி களுக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்கப்படும்போது அவை பழையவையாக மாறியிருக்கும். காலத்துக்குப் பொருத்தமானவையாகவும் இருக்க மாட்டா. இரண்டு நாள்களுக்குமுன்வரை …

ஏஎம்பேங்க் நிறுவனர் நஜாடியின் கொலையாளி பிடிபட்டான்

அரேப் மலேசியன் பேங்க் நிறுவனர் அஹ்மட் உசேன் நஜாடி-யை கோலாலும்பூரில் சுட்டுக்கொன்றதாகக் கூறப்படும் 44-வயது ஆடவனை போலீசார் கைது செய்துள்ளனர். “நாலு கண்” என்றழைக்கப்படும் கொங் சுவீ குவானும் மேலும் இருவரும் இன்று காலை தைப்பிங்கில் கைது செய்யப்பட்டதாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. அக்கொலைச் செயலுக்கு ஏற்பாடு செய்தவர்…

மரண விபத்து……..ஓராண்டுக்குப் பின்னர் விசாரணை

கடந்த ஆண்டு, செப்டம்பர் 3-இல், கிள்ளான், ஜாலான் பெர்சியாரான் தெங்கு அம்புவான் ரஹிமா-வில்  டான் மே தெங் என்பாரை ஒரு கார் மோதித்தள்ளியதில் அவர் உயிர் இழந்தார். மோதிய கார் நிற்காமல் ஓடி விட்டது. டானின் குடும்பத்தார் போலீசில் புகார் செய்துவிட்டுக் காத்திருந்தார்கள். விசாரணை நடப்பதாக தெரியவில்லை. குடும்பத்தாரின்…

‘எண்ணெய் விலை உயர்வுக்கு அரசாங்கம் பொறுப்பல்ல’

எண்ணெய்க்கு வழங்கிவரும் உதவித்தொகையைக்  குறைத்தது மட்டுமே அரசாங்கம். மற்றபடி, எண்ணெய் விலை உயர்வுக்கு அது பொறுப்பல்ல என  நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் விளக்கியுள்ளார். “உலகச் சந்தைதான் எண்ணெய் விலையை நிர்ணயிக்கிறது, அரசாங்கம் அல்ல”. இன்று, நாடாளுமன்றத்தில்  மாபுஸ் ஒமார் (பாஸ்- பொக்கொக் சேனா) கேட்ட கேள்விக்குப்…

மஇகா ஆளும் கட்சியா, எதிர்க்கட்சியா?

மஇகா இந்தியர்களை கடந்த 30 வருடங்களாக ஏமாற்றிவிட்டது என்றும் அது தற்போது ஆளும் கட்சியில் இருந்து கொண்டு எதிர் கட்சி போல் நடந்து கொள்வதில் பயன் இல்லை என்றும். மஇகாவை பிரதிநிதித்து அரசாங்கத்தில் இரண்டு முழு அமைச்சர்களும் இரண்டு துணை அமைச்சர்களும் இருக்கின்ற பொழுது அமைச்சரவையில் இந்தியர்களின் தேவைகளுக்கும்…

உதவித் தலைவர்கள்: இருக்கும் நிலை தொடர்வதே அம்னோவுக்கு நல்லது

அம்னோ உதவித் தலைவர் பதவிக்கான தேர்தல் அறுமுனை போட்டியாக மாறலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில், இருக்கும் நிலை தொடர்வதே கட்சிக்கும் உறுப்பினர்களுக்கும் நல்லது என்று நடப்பு உதவித் தலைவர்கள் மூவரும் கூறினர். அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, ஹிஷாமுடின் உசேன், முகம்மட் ஷாபி ஆகிய அம்மூவரும் புத்ரா உலக வாணிக…

பக்காத்தானில் ‘தலைசிறந்த’ தலைவர்கள் உண்டு: முக்ரிசுக்கு நினைவுறுத்து

பக்காத்தான் தலைவர்களை “டைனோசர்கள்” என்று குறிப்பிட்ட முக்ரிஸ் மகாதிரை பிகேஆர் மகளிர் தலைவர் சுரைடா கமருடின் சாடினார். அவர்களுக்குப் பின்னரும் பொறுப்பேற்க  தங்களிடம் “தலைசிறந்த” புதிய தலைமுறை தலைவர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்களை எண்ணித்தான் முக்ரிஸ் போன்றோர் கவலைப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். புதிய தலைவர்களில் துணிச்சலாக…

‘சின் பெங்கின் அஸ்திக்கு மறுப்புத் தெரிவிப்பதைப் பார்த்து உலகம் சிரிக்கும்’

சின் பெங்கின் அஸ்தி நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கு அனுமதியளிக்க அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வந்தால் உலகின் கேலிக்கு  ஆளாவோம் என முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ், ரஹிம் முகம்மட் நூர் எச்சரித்துள்ளார். 1980-களில், போலீஸ் சிறப்புப் பிரிவுத் தலைவராக இருந்த ரஹிம், அப்போது கம்முனிஸ்டுகளுடன் நடத்தப்பட்டுவந்த அமைதிப் பேச்சுகளுக்குத்…

மலேசியாவில் அரசியல் கட்சிகளுக்கு “அதிக அளவில்” தொழில் ஈடுபாடு உண்டு

மலேசியாவில் அரசியல் கட்சிகள் தொழில்களில் ஈடுபடுவதும் நிறுவனங்களை வைத்திருப்பதும் மிகப் பரவலாகவே உள்ளது எனக் கல்வியாளர் ஒருவர் பெர்சேயின் மக்கள் நடுவர் மன்றத்தில் கூறினார். “அரசியல் கட்சிகள் பரவலான வர்த்தக ஈடுபாடு கொண்டிருப்பதும் நிறுவனங்களை நடத்துவதும் இந்நாட்டில் மட்டுமே காணக்கூடிய ஒன்றாக தெரிகிறது”, என மலாயாப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல்துறை…

கேஎல் மக்கள்தொகை இரண்டு மில்லியன்; எலிகள் 8 மில்லியன்

கோலாலும்பூரில் ஒரு மனிதருக்கு நான்கு எலிகள் வீதம் இருக்கின்றன. எலிகளால் ஏற்படும் சுகாதாரக் கேடுகளை விளக்கும் இயக்கத்தைத் தொடக்கிவைத்த மாநகர் மேயர் அஹமட் பீசல் தாலிப் இதனைத் தெரிவித்தார். கோலாலும்பூரில் இரண்டு மில்லியன் மக்களுடன் எட்டு மில்லியன் எலிகளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என டிபிகேஎல் மதிப்பிட்டிருப்பதாக பெரித்தா ஹரியான்…

அம்னோ இளைஞர் தலைவர் பதவிக்கு நால்வர் போட்டி

அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் பதவிக்கான தேர்தல் நான்கு-முனை போட்டியாக உருவெடுத்துள்ளது. அதன் இப்போதைய தலைவரான இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் அபு பக்காரை எதிர்க்கப் போவதாக முன்னாள் அம்னோ தலைமைச் செயலாளரான சனுசி ஜூனிட்டின் புதல்வர் அக்ராம்ஷியா உபைடா சனுசி ஏற்கனவே கூறியிருந்தார், இப்போது…

டோனி புவா: நஜிப்பின் நிஜ முகம் வெளிப்பட்டுள்ளது

நஜிப் அப்துல் ரசாக்கை, பிஎன் ஆதரவாளர்கள் “சீர்திருத்தவாதி” என்று போற்றிப் புகழ்ந்தார்கள். எதிர்த்தரப்பு ஆதரவாளர்கள்கூட அம்னோவில் உள்ள சுறாமீன்கள் கூட்டத்தில் அவர் சாதுப் பிராணி, ஒரு மிதவாதி,  என்றே நினைத்தார்கள். ஆனால், அடுத்தடுத்து வந்த இரண்டு அறிவிப்புகள் அவருடைய உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டிக் கொடுத்து விட்டன என்கிறார்…