மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை மக்கள் எதிர்கொள்ள உதவும் வகையில், சரவாக் அரசு புதிய நிவாரணத் தொகுப்பை வழங்கவுள்ளதாக கபுங்கன் பார்ட்டி சரவாக் (GPS) பொதுச் செயலாளர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற தனது ஹரி ராயா ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் சரவாக் பிரீமியர் அபாங் ஜொஹாரி ஓபெங் இத்திட்டத்தை அறிவித்ததாக…
மகாதிர் நஜிப்பைக் குறை சொல்வதை நிறுத்த வேண்டும்
டாக்டர் மகாதிர் முகம்மட் நஜிப்பைக் குறைசொல்லாமல் ‘வாயைப் பொத்திக்கொண்டிருக்க வேண்டும்’ என்று அரசியல் எழுத்தாளரான சைட் உசேன் அலாட்டாஸ் வலியுறுத்தியுள்ளார். 22 ஆண்டுகள் பிரதமராக இருந்த மகாதிரால் மலாய்க்காரர்களின் நிலையை மேம்படுத்த முடியவில்லை என்பதால் அவர் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றாரவர். “அவரிடம் வாயைப் பொத்திக்கொண்டிருக்கச் சொல்லுங்கள்.…
1எம்டிபி பற்றித்தான் நிறைய விசாரிக்கப்பட்டு விட்டதே: புவாவுக்கு அருளின் பதில்
நாட்டில் மிகுந்த விசாரணைக்கு இலக்கான நிறுவனமாக விளங்குகிறது 1எம்டிபி. அந்த விசாரணைகளிலிருந்து நிறைய தகவல்களைப் பெறலாமே என்கிறார் 1எம்டிபி-இன் தலைமை செயல் அதிகாரி அருள். நிறைய கடன்களைக் கொண்டிருக்கும் அந்நிறுவனம்மீது பொது விவாதம் செய்ய அழைப்பு விடுத்த பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா-வுக்கு அவர் இவ்வாறு …
‘நஜிப்புக்கு உறுதுணையாக இருப்போம்’: பிஎன் தலைவர்கள் உறுதி
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பாரிசான் நேசனலின் 13 பங்காளிக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவைப் பெற்றிருக்கிறார். இன்று புத்ரா ஜெயாவில் பிஎன் தலைவருமான நஜிப்புக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான பார்டி ரக்யாட் சரவாக் கட்சித் தலைவர் ஜேம்ஸ் மாசிங் இவ்வாறு கூறினார். “எல்லாக் …
தடையை நிறுத்திவைக்கும் எட்ஜின் முயற்சி தோல்வி
தி எட்ஜ் நிதியியல் நாளேட்டையும் தி எட்ஜ் வார இதழையும் ஜூலை 27 தொடங்கி மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யும் அரசாங்கத்தின் முடிவு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அந்தச் செய்திதாள்கள், தங்களின் நீதிமுறை மேலாய்வின் முடிவு தெரியும்வரை இடைநீக்க உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் என்று செய்திருந்த மனுவை கோலாலும்பூர் உயர் நீதிமன்றம்…
நஜிப்பை வெளியேற்ற மகாதிர், ரஸாலி கூட்டா?
இவ்வார தொடக்கத்தில் மகாதிர் முகமட்டும் தெங்கு ரஸாலி ஹம்ஸாவும் சந்தித்துள்ளனர். இச்சந்திப்பு பிரதமர் நஜிப்பை வெளியேற்றுவது பற்றியதாகும் என்ற ஊகம் வலுவடைந்து வருகிறது. முன்னாள் பிரதமர் மகாதிருக்கு நெருங்கிய வட்டாரம் இவர்கள் இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்ததை உறுதிப்படுத்தியது. ஆனால், வேறு எந்த விபரமும் கிடைக்கவில்லை. நஜிப்பை…
எம்டியுசி: ரிம2.6 பில்லியன் ஊழலுக்கிடையில் வேலை இழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்து…
நாட்டை உலுக்கும் பல ஊழல்களால் நம்பிக்கை இழந்த முதலீட்டாளர்கள் நாட்டைவிட்டோடுவதால் வேலையில்லாதோர் எண்ணிக்கை பெருகி வருவதை எண்ணி மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் கவலை அடைந்துள்ளது. “மலேசிய நிலவரங்களையும் அவை தொழிலாளர்கள்மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் கண்டு எம்டியுசி ஆழ்ந்த கவலை கொள்கிறது,”, என அதன் தலைமைச் செயலாளர் என். கோபாலகிருஷ்ணன் …
பேங்க் நெகாரா 1எம்டிபிமீதான விசாரணையை முடித்துக் கொண்டிருக்கிறது
அரசுக்குச் சொந்தமான 1எம்டிபி மீது பேங்க் நெகாரா நடத்திய விசாரணை பூர்த்தி அடைந்து விட்டதாக பேங்க் நெகாரா கவர்னர் ஸெட்டி அக்தார் அசீஸ் அறிவித்துள்ளார். விசாரணை ஆவணங்கள் இவ்வாரம் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலியிடம் ஓப்படைக்கப்படும் என்றாரவர். ஸெட்டி பல வாரங்களுக்குப் பிறகு இப்போதுதான் வெளியில் தோன்றியிருக்கிறார்.…
ஸெட்டி பதவி விலகவில்லை
பேங்க் நெகாரா கவர்னர் ஸெட்டி அக்தார் அசீஸ்மீது விசாரணை நடப்பதாக வதந்திகள் கூறினாலும் அவர் பதவி விலக மாட்டார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸெட்டி, தம் ஐந்தாண்டு பதவிக்காலத்தை முடித்து விட்டுத்தான் பதவி விலகப் போவதாகக் கூறினார். அது 2016-இல் முடிவடையும். “பதவிக்காலம் முடியும்வரை பதவியில் இருப்பேன்”, என …
டாலருக்கு எதிராக ரிங்கிட் சற்று ஏற்றம் கண்டது
அண்மைக் காலமாக இறங்குமுகம் காட்டிவந்த ரிங்கிட் இன்று காலை டாலருக்கு எதிராக சற்று ஏற்றம் கண்டிருந்தது. காலை மணி 9.30க்கு டாலருக்கு 3.9900/9970 என்று பரிவர்த்தனை நடந்தது. நேற்று மாலை 5 மணிக்கு அது 4.0375/0415 என்றிருந்தது. இன்று வெளியிடப்படவுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்திமீதான (ஜிடிபி) இரண்டாம் காலாண்டு…
புவா: பிரதமர்மீது செக்ஷன் 124-இன்கீழ் விசாரணை நடத்த வேண்டும்
வெளிநாட்டிலிருந்து ரிம2.6 பில்லியன் நிதி பெற்றதற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது குற்றவியல் சட்டம் பிரிவு 124-இன்கீழ் விசாரணை நடத்த வேண்டும் என டிஏபி பிரச்சாரப் பகுதிச் செயலாளர் டோனி புவா கூறினார். அதை நாடாளுமன்ற மக்களாட்சிமுறைக்குக் கெடுதல் செய்யும் செயலாகக் கருதலாம் என்றாரவர். “ஜனநாயகத்துக்குக் கெடுதல் செய்யும் …
புதிய பிஎசி உறுப்பினர்களை நியமிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் இல்லை
நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவில் காலியாக இருக்கும் நான்கு இடங்களை நிரப்புவதற்கு ஒரு சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்படாது என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது. மாறாக, அந்நடவடிக்கை எதிர்வரும் அக்டோபர் 19 இல் தொடங்கும் வழக்கமான நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்படும் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் அஸாலினா ஓத்மான்…
அரசாங்க ஜெட் விமானம் விற்பனைக்கு, ரிம80மில்லியன் திரட்டப்படும்
அரசாங்கம் அதன் 16 வயதான போயிங் பிஸ்னஸ் ஜெட் (பிபிஜெ) விற்று அதன் மூலம் ரிம80.5மில்லியனை திரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் அரசாங்கம் ஒரு புதிய ஏர்பஸ் கோர்பரேட் ஜெட் (எசிஜே320) விமானத்தை ரிம465மில்லியனுக்கும் கூடுதலான விலையில் வாங்கியதைத் தற்காத்த பின்னர், இந்த விற்பனை…
நூர் ஜாஸ்லான்: பெர்சே 4 பேரணி ஒரு பிரச்சனையல்ல
ஆகஸ்ட் 29-30 இல் நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் பெர்சே 4 பேரணி அரசாங்கத்திற்கு ஒரு பிரச்சனையல்ல. அசம்பாவிதங்கள் ஏதும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் துணை உள்துறை அமைச்சர் நூர் ஜாஸ்லான் முகமட் கூறினார். அமைதியான முறையில் நடத்தபடும் பேரணிகள் பற்றி தமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை…
பேரணியில் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி கூடாது: பெர்சே-க்கு போலீஸ் எச்சரிக்கை
பெர்சே 4 பேரணியின்போது சட்டவிரோதமான வழிகளில் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் போலீஸ் நடவடிக்கை எடுக்கும். போலீஸ் படைத் துணைத் தலைவர் நூர் ரஷிட் இப்ராகிம் இவ்வாறு எச்சரித்தார். கூட்டரசு அரசமைப்பின்படி ஒன்றுகூடும் உரிமை மக்களுக்கு உண்டு என்றாலும் சட்டமீறல்களும் நிகழத்தான் செய்கின்றன என்பதை அவர் தேர்தல் கண்காணிப்பு …
ரிங்கிட் சரிவு: நஜிப் பதவி விலகக் கோரிக்கை
ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் வேளையில் நிதி அமைச்சையும் கண்காணித்து வரும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மெளனமாக இருப்பது கண்டு வியப்படைகிறார் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர். “ரிங்கிட்டின் வீழ்ச்சிக்குக் கவலை தெரிவிக்கும் அறிக்கை ஒன்றுகூட வரவில்லை என்பது விசித்திரமாக இருக்கிறது”, இருக்கிறது என வொங் …
பிரதமர். 1எம்டிபி, இசி மீது எதிரணி வழக்கு
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தேர்தல் குற்றங்கள் புரிந்ததாக பிகேஆர் சிவில் வழக்கு தொடுத்துள்ளது. இன்று பதிவுசெய்யப்பட்ட அவ்வழக்கில், நஜிப்புடன் அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூரும் 1மலேசியா மேம்பாட்டு நிறுவனமும் (1எம்டிபி), தேர்தல் ஆணையமும் எதிர்வாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா …
பெர்னாண்டஸ்: இணையத்தை விட்டுவிட்டு ரிங்கிட்டில் கவனம் செலுத்துங்கள்
புத்ரா ஜெயா, இணையத்தில் தகவல் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைக் கைவிட்டு ரிங்கிட்டின் மதிப்பு சரிந்து வருவதைத் தடுத்து நிறுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என ஏர் ஏசியா தலைவர் டோனி பெர்னாண்டஸ் கேட்டுக்கொண்டிருக்கிறார். “அரசாங்கம் இணையத்தைக் கட்டுப்படுத்துவதை விடுத்து ரிங்கிட்டின் மதிப்பை நிலைநிறுத்துவதில் கூடுதல் நேரத்தைச் செலவிட வேண்டும்.…
எம்டியுசி: முதலீடு செய்ய வேண்டியது மலேசியர்கள்மீது, வங்காளதேசிகள் மீது அல்ல
அரசாங்கம், வங்காள தேசத்திலிருந்து 1.5 மில்லியன் தொழிலாளர்களை அழைத்து வரவும் அவர்களுக்குப் பயிற்சியளிக்கவும் செலவிடும் பணத்தை மலேசியர்கள்மீது முதலீடு செய்ய வேண்டும் என மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. “உள்ளூர் மக்களுக்குப் போதுமான பயிற்சியும் நல்ல சம்பளமும் கொடுத்து 3டி - ஆபத்தான, கடுமையான, அழுக்குமிகுந்த- வேலைத் துறையில்…
‘மகாதிருக்குக் கொடுக்கப்பட்ட துபோல் நஜிப்புக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்’
1998-இல் அன்வார் இப்ராகிம் விவகாரத்துக்குத் தீர்வுகாணும் பொறுப்பு அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டிடம் ஒப்படைக்கப்பட்டதுபோல் 1எம்டிபி-க்குத் தீர்வுகாணும் பொறுப்பைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் ஒப்படைப்பதே முறையாகும் என்கிறார் திரெங்கானு மந்திரி புசார் அஹமட் ரஸிப் அப்ட் ரஹ்மான். “இன்ஷாஅல்லா, நஜிப்புக்கு அவகாசம் கொடுப்போம், அன்வார் விவகாரத்தில் …
சாலே: பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம்
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குத்தான் அரசாங்கம் இப்போது முக்கிய கவனம் செலுத்துகிறது எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் முகம்மட் சாலே சைட் கெருவாக் கூறினார். “பல சிக்கல்களை எதிர்நோக்குகிறோம். ஆனால், நாம் அதற்குக் காரணமில்லை. எண்ணெய் விலைகள் குறைந்ததுதான் காரணம். அதனால் மலேசிய ரிங்கிட் பாதிக்கப்பட்டது; வேறு பல நாடுகளும் இதேபோல் …
ரிங்கிட் டாலருக்கு ரிம4 என்ற எல்லையைத் தாண்டிச் சென்றது
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் மேலும் வீழ்ச்சி கண்டது. இன்று காலை 9.35க்கு, டாலருக்கு ரிம4.0035 என்ற அளவுக்கு ரிங்கிட் வீழ்ச்சி கண்டிருந்ததாக புலூம்பெர்க் கூறியது. ஆனால், சற்று நேரம் கழித்து 9.50க்கு டாலருக்கு ரிம3.99 என்று அது ஏற்றம் கண்டது. இது, 1997 ஆசிய நிதி நெருக்கடிக்குப் …
ரிம2.6பில்லியன் விசாரணைக்கு அரச விசாரணை ஆணையம் அமைக்க அகோங்கிடம் ஜிஎச்பி…
கெராக்கான் ஹரப்பான் பாரு (ஜிஎச்பி) பிரதமர் நஜிப் அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் ரிம2.6பில்லியன் போட்டிருப்பது குறித்து விசாரிக்க ஓர் அரச விசாரணை ஆணையம் அமைக்கக் கோரும் மனுவை இன்று பேரரசரிடம் தாக்கல் செய்தது. ஜிஎச்பியின் இளைஞர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முகமட் சானி ஹம்சான் தலைமையில் ஒரு…
கிறிஸ்துவர்களைக் குற்றம்சாட்டிய கல்வி அமைச்சருக்குக் கண்டனம்
மாட்ஸிர் காலிட் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டு ஒரு மாதம்கூட ஆகவில்லை அதற்குள் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். சரவாக் ரிப்போர்ட் செய்திகள் முஸ்லிம்களைப் பிளவுபடுத்த கிறிஸ்துவர்களும் யூதர்களும் மேற்கொண்டிருக்கும் முயற்சி என்று சொல்லி வம்பில் மாட்டிக் கொண்டிருக்கிறார். அது ஒரு அநியாயமான கூற்று எனத் திருச்சபைகள் மன்றம்…


