மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் கூறுகையில், முன்னாள் மந்திரி பெசார் அமினுடின் ஹருன் உள்ளிட்ட சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளை முழுமையாகத் திருப்பிச் செலுத்தியுள்ளனர். மாநில முதல்வர் இஸ்மாயில் லாசிம், அந்த நிதியைத் திருப்பித் தருமாறு கோரி செவ்வாய்க்கிழமை பக்காத்தான் ஹராப்பான் (PH) பிரதிநிதிகளுக்கு அறிவிப்புகள்…
பெங் ஹொக் மரணம்: அதிகாரிக்கு இரண்டாவது பதவி உயர்வா? எம்பி…
முன்னாள் அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹொக் மரணத்தில் தொடர்புள்ளதாகக் குற்றஞ் சாட்டப்பட்ட அதன் அதிகாரி ஒருவருக்கு எம்ஏசிசி மீண்டும் பதவி உயர்வு கொடுத்திருப்பதை டிஏபி எம்பி டியோ நை சிங் கண்டித்திருக்கிறார். ஹிஷாமுடின் ஹஷிம் எம்ஏசிசி உளவுப் பிரிவு இயக்குனராக பணி உயர்வு பெற்றிருப்பதாய் நேற்று அறிவிக்கப்பட்டது. …
மகாதிர் விலகல் அம்னோவை பாதிக்காது- நஜிப்
அம்னோவிலிருந்து வெளியேறும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் முடிவு கட்சியைப் பாதிக்காது என்கிறார் அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக். “பெரும்பாலும் பாதிக்காது. முதல்முறையாக இருந்தால் பாதிப்பு இருக்கும். “இரண்டாவது தடவை என்பதால் அதன் தாக்கம் அம்னோவின் நிலையைக் கெடுக்கும் அளவுக்கு இருக்காது”, என்று பிரதமர் கூறியதாக …
‘தேசிய விவகாரங்கள்’ குறித்து மகாதிர், கிட் சியாங் கூடிப் பேசினர்
தேசிய விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்காக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைச் சந்தித்ததாகத் தெரிவித்த டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் அச்சந்திப்பு நாடு எதிர்நோக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நம்பிக்கையைத் தந்திருப்பதாகக் கூறினார். அம்னோவிலிருந்து விலகிய மகாதிர், அடுத்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை வெளியேற்றும் …
ரொட்டி சானாய் விலை உயரலாம்
காலைநேரப் பசியாறலுக்கு மலேசியர்களில் பெரும்பாலோர் நாடுவது ரொட்டி சானாய்தான். அந்த ரொட்டி சானாயின் விலை இனி உயரக்கூடும். கோதுமை மாவுக்கு வழங்கி வந்த உதவித் தொகையை அரசாங்கம் இன்று முதல் நிறுத்திக்கொண்டிருப்பதாக த ஸ்டார் அறிவித்துள்ளது. இதனால் ரிம33.75 ஆக இருந்த கோதுமை மாவு(25 கிலோ கிராம் பை)…
‘அமானா, மலேசியாவைக் காக்க எல்லாருடனும் ஒத்துழைக்கத் தயார்’
பார்டி அமானா நெகாரா, மலேசியாவைப் பாதுக்காக்க பாடுபடும் எந்தத் தரப்புடனும் ஒத்துழைக்கத் தயார் என அறிவித்துள்ளது. நாட்டின் இப்போதைய நிலவரத்தைச் சுட்டிக்காட்டிய அமானா தலைவர் முகம்மட் சாபு, நாட்டின் “நன்மதிப்பை” நிலைநாட்ட நாட்டு மக்கள் அவர்களால் இயன்றதைச் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “ஊழலையும் அதிகாரமீறல்களையும் நிராகரிக்கும் எந்த …
நஸ்ரி: குவான் எங்கைத் தோற்கடிக்கக்கூடிய ஒரு தலைவர் மசீச-வுக்குத் தேவை
சீனர் சமூகத்தை வழிநடத்த ஒரு வலுவான தலைவர் மசீச-வுக்குத் தேவை என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அசீஸ் கூறினார்.. அந்தத் தலைவர் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கைவிட ஆற்றல் மிக்கவராக இருத்தல் வேண்டும் அப்போதுதான் மசீச இழந்துவிட்ட சீனர்களின் ஆதரவைத் திரும்பப் பெற முடியும் …
‘நஜிப் வழக்கு தொடுக்கவில்லை என்றால் WSJ கூற்றில் உண்மை இருக்கத்தான்…
யுஎஸ்$1 பில்லியனுக்குமேல் அவரது வங்கிக் கணக்குக்கு மாற்றிவிடப்பட்டிருப்பதாகக் கூறி இருக்கும் வால் ஸ்திரிட் ஜர்னல் மீது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வழக்கு தொடுக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் வலியுறுத்தியுள்ளார். நஜிப் வழக்கு தொடுக்கவில்லை என்றால் WSJ செய்தியில் ‘ஓரளவு உண்மை இருக்கத்தான் …
WSJ: நஜிப்பின் கணக்கில் யுஎஸ்$1 பில்லியனுக்குமேல்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கணக்கிற்கு மாற்றிவிடப்பட்ட தொகை யுஎஸ் $1பில்லியனுக்கும்மேல் என வால் ஸ்திரிட் ஜர்னல் (WSJ) கூறியுள்ளது. நஜிப்பும் மலேசிய அதிகாரிகளையும் அரசியல் நன்கொடை என்று கூறிக்கொண்டிருக்கும் யுஎஸ்$ 681 மில்லியனையும் சேர்த்தே அது யுஎஸ்$ 1 பில்லியன் என்கிறது. ஆனால், யுஎஸ் $1 பில்லியனில் …
மகாதீர்: அம்னோ தோற்கடிக்கப்பட வேண்டும், ஆனால்….
அம்னோ தொடர்ந்து பிரதமர் நஜிப்பை ஆதரிக்குமானால், அக்கட்சி அதிகாரத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். அம்னோ அதிகாரத்திலிருந்து அகற்றப்பட வேண்டுமா என்று வினவப்பட்ட போது, "ஆனால், எதிரணியிடம் பெரும்பான்மை இல்லையே", என்றாரவர். நஜிப்புக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பதை…
மகாதீரும் அவரது துணைவியாரும் அம்னோவிலிருந்து விலகினர்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீரும் அவரது துணைவியார் டாக்டர் சித்தி ஹாஸ்மா அலியும் பிரதமர் நஜிப்புக்கு தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்து அம்னோவிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளனர். "அம்னோ இப்போது அம்னோவாக இல்லை. ஆகையால் நான் அம்னோவிலிருந்து விலகிக்கொள்ள விரும்புகிறேன். அது நஜிப்பை பாதுகாப்பதற்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ள ஒரு கட்சி. "அவ்வாறான…
பினாங்கு பிரதிநிதிகள் இருவர்மீது தேச நிந்தனை வழக்கு
பினாங்கு தஞ்சோங் எம்பி இங் வை ஏய்க்கும் ஸ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயரும் தேச நிந்தனை வழக்கை எதிர்நோக்குகிறார்கள். கோத்தா சிபூத்தே எம்பி தெரேசா கொக்மீதும் கல்விமான் அஸ்மி ஷரோம் மீதும் இதேபொன்றுதான் தேச நிந்தனை வழக்கு தொடுக்கப்பட்டு பின்னர் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலியால் …
நஜிப் சவூதி அராபியாவுக்கு நான்கு நாள் பயணம்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அலுவல் பயணம் மேற்கொண்டு சவூதி அராபியா சென்றிருக்கிறார். அவர் மார்ச் 3வரை அங்கிருப்பார். மார்ச் 1-இல், ஜெட்டா பொருளாதாரக் கருத்தரங்கில் (ஜேஇஎப்) தனியார், அரசு தொழில் பங்காளித்துவம் குறித்து நஜிப் முக்கிய உரையாற்றுவார் என மலேசிய வெளியுறவு அமைச்சு கூறிற்று. பிரதமர் சவூதியில் …
நஸ்ரி: பெரும்பாலோர் முகைதினை வெளியேற்றவே விரும்பினர்
அம்னோ உச்சமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோர் துணைத் தலைவர் முகைதின் யாசினைக் கட்சியிலிருந்து வெளியேற்றுவதையே விரும்பியதாக நஸ்ரி அப்துல் அசீஸ் கூறுகிறார். ஆனால், சுற்றுலா, பண்பாட்டு அமைச்சரும் உச்சமன்றத்தின் நியமன உறுப்பினருமான நஸ்ரிக்கு அந்த நோக்கம் இருந்ததில்லை. அவரை இடைநீக்கம் செய்யும் நோக்கிலேயே உச்சமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்ததாக அவர் …
‘முகைதின் அவர்களே, உங்களால் அன்வாரைக்கூட வெல்ல முடியவில்லையே’
1998-இல் அன்வார் இப்ராகிம் அரசாங்கப் பதவியிலிருந்தும் அம்னோவிலிருந்தும் வெளியேற்றப்பட்டபோது நாடே அல்லோலகல்லோலப் பட்டது. ஆயிரகக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இப்போது முகைதின் யாசின் இரண்டாவது இடத்திலிருந்து கழட்டி விடப்பட்டப்போது எவ்வித சலசலப்பும் இல்லை. இரு சம்பவங்களை ஒப்பிட்டு அன்வார் அளவுக்கு முகைதினிடம் செல்வாக்கு இல்லை என்று அம்னோ-…
எஸ்ஆர்சி-இலிருந்து பணம் மாற்றிவிடப்பட்டது உண்மை என்பதை முன்னாள் ஏஜி-இன் மெளனம்…
முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேலின் மெளனம், அவர் அரசுத் தொடர்புடைய எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனத்திலிருந்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வங்கிக் கணக்குக்குப் பணம் மாற்றிவிடப்பட்டதற்கான ஆதாரத்தை முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசினிடம் காண்பித்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. இதைத் தெரிவித்த பாஸ் பொக்கோக் சேனா …
ஜோகூர் ‘சிங்கே’ விழாவில் 300,000 பேர் கலந்துகொண்டு வரலாறு படைத்தனர்
நேற்றிரவு ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் அல்மர்கும் சுல்தான் இஸ்கண்டர் தொடக்கிவைத்த ‘சிங்கே’ விழாவில் 300,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உள்ளூர் மக்களும் சுற்றுப்பயணிகளும், குறிப்பாக இளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் அவ்விழாவுக்கு வந்திருந்தது “பிரமிக்கத்தக்கது” என மாநில சுற்றுலா, வர்த்தகம், பயனீட்டாளர் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினர் டீ …
கொள்ளையர்களின் தாக்குதலில் காயமுற்ற போலீஸ்காரர்
காஜாங், தமிங் சாரி சாலைச் சந்திப்பில் போலீஸ்காரர் ஒருவரைக் கொள்ளையர்கள் தாக்கிக் காயப்படுத்தினர். காலை மணி 6.30க்கு, அப்பகுதியில் காவல் சுற்றில் இரு போலீஸ்காரர்களில் ஒருவர் சாலையை மறித்துக்கொண்டு இரண்டு கார்கள் நிற்பதைக் கண்டனர். அவர்களில் ஒருவர் கார்களை அணுகி அந்த இடத்தைக் காலி செய்யுமாறு அதில் உள்ளவர்களிடம் …
ஷரிசாட்: முகைதின் கூட்டத்துக்குச் சென்று தன்னைத் தற்காத்துக் கொண்டிருக்கலாம்
அம்னோ துணைத் தலைவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதற்குமுன் தம்மைத் தற்காத்துக்கொள்ள முகைதினுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டும் அவர் அதைப் பயன்படுத்திக் கொள்ளாதது ஏன் என்று அம்னோ மகளிர் தலைவர் ஷரிசாட் அப்துல் ஜலில் வினவினார். இடைநீக்கம் முறைப்படி செய்யப்படவில்லை என்று முகைதின் குறிப்பிட்டிருப்பதற்கு ஷரிசாட் இவ்வாறு எதிர்வினை ஆற்றினார்.…
முகைதின்: முன்னாள் ஏஜி, நஜிப்புக்கும் எஸ்ஆர்சிக்கும் எதிரான ஆதாரங்களைக் காண்பித்தார்;…
அரசுத் தொடர்புள்ள எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனத்திலிருந்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வங்கிக் கணக்குக்குப் பணம் மாற்றிவிடப்பட்டதற்கான ஆதாரங்கள் தம்மிடம் காண்பிக்கப்பட்டதாக இடைநீக்கம் செய்யப்பட்ட அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் கூறுகிறார். அந்த ஆதாரங்களிலிருந்து ஒரு குற்றச்செயல் நிகழ்ந்திருப்பது தெளிவாக தெரிகிறது என்றாரவர். “எஸ்ஆர்சி இண்டர்நேசனலிலிருந்து நஜிப்பின் …
ஒரு சர்வாதிகாரி உருவாகிறார்: முகைதின் எச்சரிக்கை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதிகாரங்களைத் தம் கைக்குள் வைத்துக்கொண்டு ஒரு சர்வாதிகாரியாக மாறி வருகிறார் என அம்னோ துணைத் தலைவர் பதவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட முகைதின் யாசின் கூறுகிறார். “மக்களின் ஆத்திரத்தை எதிர்நோக்கும் நஜிப், கருத்து மாறுபடுவோரையும் குறைகூறுவோரையும் ஒடுக்க தம்மிடமுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார். “உண்மையில் …
நஜிப்: இது சர்வாதிகார அரசல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு
அரசாங்கம் சர்வாதிகாரமாக நடந்து கொள்வதில்லை. மாறாக, நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பின்பற்றி அரசியல் நிலைத்தன்மைக்குத்தான் அது முன்னுரிமை அளித்து வருகிறது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வலியுறுத்தினார். “இது யதேச்சாதிகார அரசாங்கமுமல்ல; நாங்கள் சர்வாதிக்காரத்துடன் நடந்து கொள்வதுமில்லை. “நாம் நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பின்பற்றுகிறோம்; ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை …
இடைநீக்கம் முறைப்படி செய்யப்படவில்லை: முகைதின் காட்டம்
அம்னோ துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முகைதின் யாசின், தம்மைப் பதவிநீக்கம் செய்த உச்சமன்றம் அதை முறைப்படிச் செய்யவில்லை என்று சாடியுள்ளார். பதவிநீக்கம் செய்யுமுன்னர் விளக்கம் கேட்டு கடிதம் கொடுக்கப்படவில்லை, தற்காத்துக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றாரவர். “ஒழுங்கு வாரியத்தின் விசாரணைக்கு என்னை அனுப்பவில்லை. சாதாரண உறுப்பினர்களுக்குக்கூட அவர்களைத் …
இரு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமது வழக்கு விசாரணையிலிருந்து விலகிக்கொள்ள இந்திரா…
பாலர்பள்ளி ஆசிரியர் இந்திரா காந்தி இஸ்லாத்திற்கு மாறி விட்ட அவரது முன்னாள் கணவர் அவரது குழந்தைகளை ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்தது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். உச்சநீதிமன்ற விசாரணையின் போது அந்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் - தலைமை நீதிபதி அரிப்பின் ஸாக்காரியா மற்றும் மேல்மூறையீட்டு நீதிமன்றத்தின்…


