மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை மக்கள் எதிர்கொள்ள உதவும் வகையில், சரவாக் அரசு புதிய நிவாரணத் தொகுப்பை வழங்கவுள்ளதாக கபுங்கன் பார்ட்டி சரவாக் (GPS) பொதுச் செயலாளர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற தனது ஹரி ராயா ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் சரவாக் பிரீமியர் அபாங் ஜொஹாரி ஓபெங் இத்திட்டத்தை அறிவித்ததாக…
பொறாமை கொண்டவர் மகாதிர்: தெங்கு அட்னான் சாடல்
மலேசியா இன்று அடைந்துள்ள வெற்றியைக் காண டாக்டர் மகாதிருக்குப் பொறுக்கவில்லை என்கிறார் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர். கோலாலும்பூரில் ஒரு நிகழ்வில் பேசிய தெங்கு அட்னான் ஒரு சிறு கூட்டத்தினர் நாட்டுக்குக் குழிபறிக்கிறார்கள் என்றார். “அவர்கள் பிரதமரைக் குறை கூறுகிறார்கள். நாட்டைப் பலவீனப்படுத்த பலவற்றைக் …
செம்பூர்ணா அம்னோ அதன் ஆண்டுக்கூட்டத்துக்கு முகைதினை அழைத்துள்ளது
வார இறுதியில் நடைபெறவுள்ள அதன் ஆண்டுக் கூட்டத்துக்கு அம்னோ தலைவர் நஜிப்புக்கு விடுத்திருந்த அழைப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்ட அம்னோ செம்பூர்ணா, கூட்டத்தை முகைதின் யாசின் தொடக்கி வைப்பதை விரும்புகிறதாம். அம்னோ செம்பூர்ணா அடிநிலை உறுப்பினர்கள், அம்னோவை எதிர்நோக்கும் பிரச்னைகள் பற்றி கட்சித் துணைத் தலைவர் முகைதினும் உதவித் தலைவர் …
ஜோகூர் சுல்தான் நஜிப்புக்குத் தடைபோட்டார் என்பதை மறுக்கிறார் உதவியாளர்
பிரதமர்துறை உதவியாளர் ரிஸால் மன்சூர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் விமானம் ஜோகூரில் தரையிறங்க மாநில சுல்தான் தடைபோட்டார் என்று கூறப்படுவதை மறுத்தார். அதை அவதூறு என்று குறிப்ப்ட்ட ரிஸால், நஜிப்பின் பெயரைக் கெடுப்பதற்காக அப்படி ஒரு கதை கட்டிவிடப்பட்டிருக்கிறது என்றார். பாசிர் கூடாங் அம்னோ தொகுதிக் கூட்டத்துக்கு …
மகாதிர்: நஜிப்பை வெளியேற்ற தெருப் போராட்டம் கடைசி நடவடிக்கையாக இருக்க…
பிரதமர் நஜிப் ரசாக்கை வெளியேற்ற தெருப் போராட்டைத்தை நடத்தலாம். ஆனால், அது கடைசி நடவடிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் கூறினார். நஜிப்பின் ராஜினாமாவை கோரிய ஆகஸ்ட் 1 பேரணி மற்றும் ஆகஸ்ட் 29 மற்றும் 30 நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் பெர்சே…
ரிம2.6 பில்லியன் நன்கொடை என்பதை ‘bulls**t’ என்கிறார் மகாதிர்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ரிம2.6 பில்லியன் நன்கொடையாகக் கிடைத்தது என்று கூறிக்கொள்வதைக் கேலி செய்யும் கூட்டத்தினருடன் டாக்டர் மகாதிரும் சேர்ந்து கொண்டிருக்கிறார். “மலேசியப் பிரதமருக்கு ரிம2.6 பில்லியன் நன்கொடை கொடுப்பவர் யார், ஐயா? “ஒபாமாவால் அவரது அதிபர் தேர்தலுக்குக்கூட இவ்வளவு பெரிய தொகையைத் திரட்ட முடிந்ததில்லை. அரபுக்காரர் …
இளைஞர்கள்: அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க காரின் முன்விளக்குகளை எரிய விடுங்கள்
இளைஞர் அணி ஒன்று அரசாங்கத்துக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க ஒர் எளிய வழியைக் கண்டுபிடித்திருகிறது: பட்டப்பகலில் காரின் முன்விளக்கைப் பளிச்சென எரியவிடுவதுதான் அது. மலேசியாவைக் காப்போம் இளைஞர் அணியினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட ஐந்து தீர்மானங்களில் இதுவும் ஒன்று. அதன் இதர நான்கு தீர்மானங்கள்: -பெர்சே 4.0 பேரணிக்கு …
இடமாற்றம் செய்யப்பட்ட எம்ஏசிசி அதிகாரிகள் பழைய பணிக்கே திரும்பிச் சென்றனர்
வெள்ளிக்கிழமை பிரதமர் துறை அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் இருவர் அவர்களின் பழைய பணியிலேயே இன்று திரும்பவும் அமர்த்தப்பட்டனர். அவ்விருவரும் அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சாவையும் பொதுச்சேவைத்துறை தலைமை இயக்குனர் முகம்மட் ஸபிடி சைனாலையும் சந்தித்த பின்னர் இது நடந்தது. எம்ஏசிசி …
‘ஜனநாயகம் செத்து விட்டது, நஜிப்பை விசாரிப்பீர்’
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஆட்சியில் மக்களாட்சி செத்து விட்டது என்று அறிவித்திருக்கிறார் டாக்டர் மகாதிர் முகம்மட். “அது செத்து விட்டது. ஏனென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஒருவர் அரசாங்க அமைப்புகளைத் தலைகீழாய்ப் புரட்டிப்போட்டு அவற்றைத் தம் பதவியைக் காத்துக்கொள்ளும் கருவிகளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். “இனி ஜனநாயகத்துக்கு யாரும் குழிபறிக்க …
‘அரசியல் குறுக்கீட்டுக்கு இடந்தரக்கூடாது’- போலீசுக்கு சுஹாகாம் வலியுறுத்து
போலீஸ் எந்தவொரு அரசியல் தலையீட்டுக்கும் இடந்தராமால் செயல்பட வேண்டும் என மனித உரிமை ஆணையம்(சுஹாகாம்) வலியுறுத்துகிறது. “போலீஸ், காவல் பணிகளைச் செய்வதில் அரசியல் குறுக்கீடு எதுவுமின்றிச் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும், மற்ற குடிமக்களைப் போலவே சட்டத்தையும் மதிக்க வேண்டும்”, என்று அது கூறிற்று. மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி)மீது போலீஸ் …
மாட் சாபு: அம்னோவை ஆதரிப்போருக்கு ஜிஎச்பி-இல் இடமில்லை
கெராக்கான் ஹராபான் பாரு(ஜிஎச்பி) அதன் உறுப்பினர்கள் பகைக் கட்சியான அம்னோவுடன் நட்புகொள்வதையோ அதற்கு ஆதரவு அளிப்பதையோ பொறுத்துக்கொள்ளாது. ஜிஎப்பி-இன் இடைக்கால நிர்வாகக் குழுத் தலைவர் மாட் சாபு இவ்வாறு தெரிவித்தார். “அம்னோவுடன் உறவு பாராட்டுவோர் வெளியில் செல்ல வேண்டியதுதான்”, என நேற்றிரவு செபராங் பிறையில் ஹரி ராயா விருந்து …
எதிரணியுடன் இணைந்து சதியா?, முகைதின் மறுக்கிறார்
பிரதமர் நஜிப்புக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்களுடன் சேர்ந்து ஒரு நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை நடத்த முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுவதை அவர் மறுத்தார். இதற்கு முன்னதாக நேற்று இரு எதிரணித் தலைவர்கள், டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் மற்றும்…
அரசியல் கட்சி நிதி: பிரதமரின் சவாலை டிஎபி ஏற்றுக்கொள்கிறது
அம்னோ அதன் அரசியல் நிதிக் கணக்கை காட்டத் தயார். டிஎபி அதன் அரசியல் நிதிக் கணக்கை காட்டத் தயாரா என்று பிரதமர் நஜிப் ரசாக் டிஎபிக்கு சவால் விட்டிருந்தார். அந்தச் சவாலை ஏற்றுக்கொள்வதாக டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று அறிவித்தார். கடந்த 2013…
பிஎசிக்கு புதிய தலைவர் விரைவாக நியமிக்கப்படுவதை ஹிசாமுடின் ஆதரிக்கிறார்
ஒரு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டி பொதுக்கணக்குக் குழு (பிஎசி) தலைவரை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ள ஆலோசனையை அம்னோ துணைத் தலைவர் ஹிசாமுடின் ஆதரிக்கிறார். இவ்வாறு செய்வதன் மூலம் பிஎசி 1எம்டிபி மீதான விசாரணையைத் தொடங்கலாம். இல்லையென்றால் அக்குழுவில் ஏற்பட்டிருக்கும் காலியிடத்தை நிரப்ப அடுத்த வழக்கமான…
நஜிப்: அரசியல் நிதி விவகாரத்தில் நடைமுறையைத்தான் பின்பற்றினேன்
அரசியல் நிதி பெறுவது கட்சியின் வழக்கமான நடைமுறை. அம்னோவின் தலைவர் என்ற முறையில் தாம் அதனைத் தொடர்ந்து பின்பற்றியதாக நஜிப் இன்று கூறினார். கட்சி மற்றும் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நிதி திரட்டுவது கட்சித் தலைவரின் கடமையாகும். இதற்கு முன் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதே இல்லை…
தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும்என்கிறார் அம்னோ அமைச்சர்; மஇகா சுகாதார அமைச்சர்…
மலேசியாவின் புதிய துணைப் பிரதமராகப் பதவி ஏற்று சில நாள்கள்கூட ஆகாத நிலையில் அஹமட் ஸாகிட் ஹமிடி கிளப்பி இருக்கும் சர்ச்சை அவர் அந்தப் பதவிக்கு இலாயக்கற்றவர் என்பதைக் காட்டுகிறது. நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளை மூட வேண்டும். அப்போதுதான் நாட்டில் இனங்களுக்கிடையில் ஒற்றுமை தழைத்தோங்கும் என்று…
ஊட்டிய கையைக் கடிக்காதீர், நஜிப் வேண்டுகோள்
நஜிப்பின் விசுவாசிகள் அவரின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் வைக்கப்பட்ட ரிம2.6பில்லியன் அம்னோவுக்காக அளிக்கப்பட்ட நன்கொடை என்பதை வலியுறுத்தியதைத் தொடர்ந்து, தாம் தேடிப் பெற்ற நிதியிலிருந்து அம்னோ தலைவர்களும் பயனடைந்துள்ளதை அவர்களுக்கு இன்று நஜிப் நினைவுறுத்தினார். அவ்வாறு பயனடைந்தவர்கள் தாம் தாக்கப்படும் போது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றக்கூடாது…
ஜோகூரில் நஜிப்-எதிர்ப்புப் பதாதைகள்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வங்கிக் கணக்கில் ரிம2.6பில்லியன் மாற்றிவிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வேளையில் ஜோகூரில் இன்று காலை நஜிப்- எதிர்ப்பு பதாதைகள் வாகனமோட்டிகளை வரவேற்றன. ஸ்கூடாய் நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் பாதசாரிகளின் பாலம் ஒன்றில் தொங்க விடப்பட்டிருந்த ஒரு பதாதையில் ‘நஜிப்: நன்கொடை மன்னர்’ என்ற வாசகம் காணப்பட்டது. செனாய், தாமான் …
கேஜே: எம்ஏசிசி அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டது ஒரு மிரட்டல் நடவடிக்கை
இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின், மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) அதிகாரிகள் இருவர் பிரதமர் துறை அலுவலகத்திற்கு திடீரென இடம் மாற்றப்பட்டதைக் கண்டித்திருக்கிறார். “இப்படிப்பட்ட நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எம்ஏசிசி-யை மிரட்டும் வேலையும் நிற்க வேண்டும்”, என்றாரவர். எம்ஏசிசியைப் பலவீனப்படுத்த அதற்கு எதிராக நெருக்குதல் …
பிரதமர்: அம்னோ சமூக வலைத்தளங்களை நிரப்ப வேண்டும்; பொய்ச் செய்திகளை…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அம்னோ கட்சியினர் சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்தி கட்சிக்கும் தலைவருக்கும் எதிரான “பொய்யான கருத்துகளை” எதிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். “முகநூல் டிவிட்டர் கணக்குகள் திறங்கள். வலைப்பதிவர் ஆகாவிட்டாலும் முகநூல் டிவிட்டர் பழக்கமே போதுமானது. “பொய்யான கருத்துகளைக் கண்டால் அவற்றை எதிர்க்கலாம்”. செராஸில் …
‘ஒரு அம்னோ தலைவர் கட்சியைக் குழிதோண்டிப் புதைக்கக் கங்கணம் கட்டிக்…
வெளியில் செல்ல வேண்டிய அம்னோ தலைவர் ஒருவர் கட்சியைக் குழிதோண்டிப் புதைப்பதில் முனைப்பாக இருக்கிறார் என்று ஜோகூர் அம்னோ தலைவர் ஒருவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார். “அவரின் தந்தையும் தாயாரும் கட்சிக்காகப் போராடியவர்கள் ஆனால், இந்தத் தலைவரோ அம்னோவை அழிக்கப் பார்க்கிறார். “இந்தத் தலைவர் விடுப்பில் செல்ல வேண்டும், பதவி …
தி எட்ஜ் தடை செய்யப்பட்டதற்கு 300பேர் கண்டனம்
கடன்களால் தொல்லையுறும் 1எம்டிபி பற்றிச் செய்திகள் வெளியிட்டதற்காக தி எட்ஜ் பத்திரிகை இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டிக்க முன்னூறுக்கும் மேற்பட்டோர் இன்று ஒன்று திரண்டனர். கோலாலும்பூர் செண்ட்ரல் மார்க்கெட்டில் கூடிய எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள வழக்குரைஞர் மன்றக் கட்டிடத்துக்கு அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் அறிவிப்பு அட்டைகளை …
ஆமாம் சாமிகளால் தன்னை மறந்திருப்பவர்கள் பதவி இறங்க மாட்டார்கள்
நேற்று பாகோ அம்னோ ஆண்டுக் கூட்டத்தில் முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசினின் பேச்சு தம் முன்னாள் ‘போஸை’க் குத்திக் காட்டுவதுபோல் இருந்தது. “சில நேரங்களில் நம்மைச் சுற்றியிருக்கும் ஆதரவாளர்கள், ‘பராவாயில்லை சார், எல்லாம் நல்லா இருக்கு, கவலையே வேண்டாம் சார், ஆமாம் சார்’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.…
அன்வார்: விசாரணையாளருக்குத் தொல்லை கொடுக்காதீர்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சொந்தக் கணக்கில் போடப்பட்டதாகக் கூறப்படும் ரிம2.6 பில்லியன் பற்றி விசாரணை செய்து வரும் விசாரணையாளர்களுக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார். சுங்கை பூலோ சிறையிலிருந்து தம் வழக்குரைஞர் மூலமாக வெளியிட்ட அறிக்கை …


