பெர்சே 4 பேரணி: தியான் சுவாவுக்கு அழைப்பாணை

பெர்சே 4  பேரணி  தொடர்பில்  பிகேஆர்  உதவித்  தலைவர்  தியான்  சுவாவும்  விசாரணைக்கு  அழைக்கப்பட்டிருக்கிறார். “பெர்சே  4 பேரணி  விசாரணைக்கு  உதவ  இன்று  பிற்பகல்  மணி 3க்கு டாங்  வாங்கி   போலீஸ்  நிலையத்துக்கு  வருமாறு  கூறும்  செய்தி  போலீசிடமிருந்து  வந்துள்ளது”, என  சுவா  டிவிட்  செய்திருந்தார். விசாரணை  அதிகாரி …

செப்டம்பர் 16 பேரணிக்கு போலீஸ் தடை

சிவப்புச்  சட்டைகள்  செப்டம்பர்  16-இல்  நடத்தத்  திட்டமிட்டிருக்கும்  பேரணிக்கு  பாதுகாப்புக்  காரணங்களை  முன்னிட்டு  தடை  விதிக்கப்பட்டிருப்பதாக  போலீஸ்  படைத்  துணைத்  தலைவர்  நூர்  ரஷிட்  இப்ராகிம்  கூறியதாய்  பெர்னாமா  அறிவித்துள்ளது. அப்பேரணி  ஏற்பாடு  செய்யப்பட்டதே  ஆகஸ்ட்  29-30  பெர்சே 4  பேரணிக்கு  எதிர்ப்புத்  தெரிவிப்பதற்காகத்தான்  என்றும்  கூறப்படுகிறது. மற்றவற்றோடு …

பிரதமர்மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு குறித்து கருத்துரைக்க பண்டிகார் மறுப்பு

மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா,  பிரதமர்  நஜிப்மீதான  நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  குறித்து  இப்போதைக்கு  எந்த  முடிவும்  எடுக்க  மாட்டார்.  முதலில் தம்மிடம்  தாக்கல்  செய்யப்பட  வேண்டும்  அதன்  பின்னரே  அதன்மீது  முடிவெடுக்கப்படும்  என்றாரவர். ஆசியான்  அனைத்து  நாடாளுமன்றப்  பேரவைக்  கூட்டத்தில்  கலந்துகொண்டிருக்கும்  பண்டிகாரிடம்  நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  கொண்டு …

காணாமல்போன டிபிபி 1எம்டிபி விசாரணையில் சம்பந்தப்பட்டவரல்ல

காணாமல்போன  சட்டத்துறை  அலுவலக  வழக்குரைஞர்  அந்தோனி  கெவின் மொராய்ஸ்,  1எம்டிபி  மீதான  விசாரணையில்  எந்த  வகையிலும்  சம்பந்தப்பட்டவர்  அல்லர்  என்பதைச்  சட்டத்துறைத்  தலைவர்  முகம்மட்  அபாண்டி  இன்று  தெளிவுபடுத்தினார். “திரு  மொராய்ஸ் (இடம்)  காணாமல்போனதை  போலீஸ்  விசாரணை  செய்து  வருவதால்  அது  பற்றி  வதந்திகளைப்  பரப்ப  வேண்டாம்”, என்றவர் …

முகைதினும் ஷாபியும் அம்னோ அரசியல் பிரிவுக் கூட்டத்தில் கலந்து கொள்வர்

அம்னோ  துணைத்  தலைவர்  முகைதின்  யாசின்,  இன்று  கட்சித்  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தலைமையில்  நடைபெறும்  அம்னோ  அரசியல்  பிரிவுக்  கூட்டத்தில்  கலந்துகொள்வார். புதன்கிழமை  நடைபெறும்  அம்னோ  உச்சமன்றக்  கூட்டத்துக்கு  முன்னதாக  இக்கூட்டம்  நடைபெறுகிறது. கடந்த  ஜூலை  28-இல்,  துணைப்  பிரதமர்  பதவியிலிருந்து  முகைதின்  அகற்றப்பட்ட  பின்னர் …

ராயர்: ஐஜிபி அரசியல்வாதி போல் நடந்துகொள்ளக் கூடாது

தேசியத் தலைவர்களின் படங்களை போட்டு மிதித்ததைவிட மிக அருவருப்பான செயல்களில் ஈடுபட்ட அம்னோ மற்றும் அம்னோ சார்ந்த என்ஜிஒ-களுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப்பட வேண்டும் என்று டிஎபி செரி டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என்  ராயர் கூறினார். பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவாங் எங்கின் அலுவலகத்திற்கு…

அஸலினா, அம்பிகாவை தேசப்பற்று அற்றவர் என்கிறார்

  ஓர் அவசர நாடாளுமன்ற கூட்டம் கூட்டப்பட வேண்டுமென்பதை கோருவருதற்கு ஆதரவு திரட்ட அம்பிகா ஓன்லைன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். அதனைச் செய்ததற்காக அவரை "தேசப்பற்று இல்லாதவர்" என்று நாடாளுமன்ற விவகாரத்திற்கான அமைச்சர் அஸலினா ஓத்மான் சாடியுள்ளார். நாடாளுமன்றம் கவனம் செலுத்த வேண்டிய அளவிலான முக்கியமான பிரச்சனைகள் இல்லாதிருக்கையில் நாடாளுமன்றத்தின்…

வான் அசிஸா: நஜிப் மீதான விமர்சனம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற…

  கடந்த வாரம் அனைத்துலக ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பிரதமர் நஜிப் பற்றி கூறப்பட்ட விமர்சனங்கள் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று கூறுகிறார். நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 'நன்கொடை' என்று கூறப்படும் அமெரிக்க $700 மில்லியன் (ரிம2.6 பில்லியன்)…

அரசாங்கம் பதவி துறப்பதை “மக்கள் சக்தி” முடிவு செய்ய முடியாது,…

  பிரதமரை தவிர வேறு எவருக்கும், மக்கள் உட்பட, அரசாங்கத்தை எப்போது கலைக்க வேண்டும் என்று கூறும் அதிகாரம் கிடையாது என்று தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறுகிறார். பிரிட்டீஷ் நாடாளுமன்ற முறை ஆட்சியில், புதிய தேர்தல் எப்போது நடத்துவது என்பதை பிரதமர் மட்டுமே…

தெங்கு அட்னான்: ஐஎசிசி மாநாட்டில் அரசாங்கத்தைக் குறைகூறியவர்கள் பீடிக்கப்பட்டவர்கள்

  புத்ரா ஜெயாவில் நடைபெற்ற 16 ஆவது அனைத்துலக ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் (ஐஎசிசி) அரசாங்கத்தைக் குறைகூறியவர்களை மூன்றாம் தரப்பினரால் பீடிக்கப்பட்டவர்கள் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் இன்று சாடினார். மூன்றாம் தரப்பினர் யார் என்று கூறாமல், அவர்களின் அரசாங்கத்திற்கு எதிரான பரப்புரைகளால்…

ஹமிடி: நஜிப்புக்கு எதிராக அடிமட்ட அம்னோ உறுப்பினர்கள் தூண்டிவிடப்பட்டுள்ளனர்

எதிரணியினர் அம்னோ தலைவர் நஜிப்புக்கு எதிராக அம்னோ அடிமட்ட உறுப்பினர்களை திருப்பி விட்டுள்ளனர் என்று அம்னோ உதவித் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். எதிரணியினரின் விஷத்தை அருந்தி விட்ட அடிமட்ட அம்னோ உறுப்பினருக்கு நஜிப்பை அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்று பாசிர் சாலாக் அம்னோ தொகுதி ஆண்டுப் பொதுக்கூட்டத்தில்…

நாஸிர்: மலேசியாவுக்கு எல்லாமே இறக்கம்தான்

  கடந்த சில மாதங்களாக, நாடு அரசியல் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கையில் ரிங்கிட் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. புகைமூட்டம் திரும்பி வந்துள்ளது, மலேசிய கால்பந்து குழு 10-0 அடிவாங்கியுள்ள வேளையில், பிரதமர் நஜிப்பும் அவரின் ரிம2.6 பில்லியன் நன்கொடை விவகாரமும் அனைத்துலக ஊழல்-எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ள…

பெர்சே தலைவர், எம்பி மற்றும் இருவர் மீது குற்றம் சாட்டப்படும்

  பெர்சே 4 இன் தலைவர் மரியா சின் அப்துல்லா மற்றும் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஸெ சின் ஆகிய இருவரும் மார்ச் 28 இல் நடைபெற்ற கித்தா லவான் பேரணியின் சம்பந்தமாக அடுத்த வாரம் அமைதியான ஒன்றுகூடுதல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுவர். பெர்சே அலுவலக…

“பெர்சே சுயேட்சையானதா?”, தேர்தல் ஆணையத் தலைவர் கேட்கிறார்

  எதிர்வரும் சரவாக் மாநில தேர்தலில் தேர்தல் ஆணையம் பெர்சேயுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது. ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை உண்டு: அந்த அமைப்பு சுயேட்சையானதாக இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அசிஸ் முகமட் யூசூப் இன்று கூறினார். "அது சுயேட்சையானதாக இருக்க வேண்டும்.…

ரபீடா: போலீஸ் பேரணியில் பங்கேற்றவர்களை விசாரித்து நேரத்தை வீணாக்கக்கூடாது

  பெர்சே 4 பேரணியில் கலந்து கொண்டவர்களை கேள்விகள் கேட்டு நேரத்தை வீணடிப்பதை அதிகாரத்தினர் நிறுத்த வேண்டும் என்று முன்னாள் அனைத்துலக வாணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ரபீடா அசிஸ் கூறினார். அதற்கு மாறாக, மக்கள் அப்பேரணியில் கலந்துகொள்வதற்கு காரணமாக இருந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அவர்கள் கவனம் செலுத்த…

பிரான்ஸ்: ரீயூனியனில் காணப்பட்டவை எம்எச்370சின் சிதைந்த பாகங்கள்தான்

இந்திய பெருங்கடலிலுள்ள ரீயுனியன் தீவில் கரைசேர்ந்திருந்த ஒரு விமானத்தின் சிதைந்த பகுதி சேதமடைந்த மலேசிய ஏர்லைன்ஸ்சின் ஒரு பாகம்தான் என்று விதிமுறைகள்படி அடையாளம் காணப்பட்டுள்ளது என்று நேற்று பாரிஸில் குற்றவியல் அரசு வழக்குரைஞர் கூறினார். ரியூனியன் தீவில் ஜூலை 29, 2015 காணப்பட்ட அந்த விமானத்தின் சிதைந்த பாகம்…

தேர்தல் செலவுகள்: பிகேஆர் தொடுத்துள்ள வழக்கில் பதில் அளிக்க நஜிப்புக்கு…

  2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் செலவுகள் குறித்து பிகேஆரும் இதர எதிரணித் தலைவர்களும் தொடுத்துள்ள வழக்கில் பிரதமர் நஜிப் எதிர்வரும் அக்டோபர் 1க்குள் அவரது தற்காப்பு வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று உத்தவிட்டது. இந்த வழக்கில் பாரிசான் அதன் தற்காப்பு…

வான் அசிஸா: நஜிப்பை அகற்ற பாஸ்சுடனும் அந்த “மனிதருடனும்” சேர்ந்து…

  பிரதமர் நஜிப்பை பதவியிலிருந்து அகற்ற எதிரணி எவருடனும் இணந்து உழைக்க விரும்புகிறது என்று டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் கூறுகிறார். "எவருடனும்" என்பது டாக்டர் மகாதிர் முகமட்டையும் உள்ளடக்கியதா என்று வான் அசிஸாவிடம் கேட்டதற்கு அவர், "தயவு செய்து, நீங்கள் சொல்ல விரும்புவதை என்னை சொல்ல…

டிஎபி: லியோ அம்னோவின் இனவாத இசைக்கு நடனமாடுகிறார்

  பெர்சே 4 சம்பந்தப்பட்ட அம்னோவின் இனவாத இசைக்கு மசீச தலைவர் லியோ தியோங் லாய் நடனமாடுகிறார். நடந்து முடிந்த பெர்சே 4 பேரணியில் பங்கேற்றவர்களில் இருவர் பிரதமர் நஜிப் மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆகியோரின் படங்களை மிதித்துத் துவைத்த சம்பவத்திற்கு லியோ டிஎபி…

நஜிப்: மகாதிர் ஒதுங்கிக்கொள்ள வேண்டும்

  மகாதிர் முகமட் இந்நாட்டின் தலைமைத்துவ பொறுப்பில் இருக்கவில்லை, ஆகவே, அவர் தம்மை முன்நிலைப்படுத்திக் கொள்வதிலிருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நஜிப் ரசாக் இன்று கூறினார். உலக மூலதன வாணிகச் சந்தைகள் கருத்தரங்கில் முக்கிய உரையாற்றிய நஜிப் ரசாக் இவ்வாறு கூறினார். தமக்கு முன்பு பதவியிலிருந்தவர்களில் ஒருவர்…

அனினாவை அம்னோ உச்சமன்றம் மட்டுமே நீக்க முடியும்

அனினா, லங்காவி, கம்போங் பாடங் மாட்ஸிராட் அம்னோ கிளை உறுப்பினர், பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் வைக்கப்பட்ட அரசியல் நன்கொடை என்று கூறப்படும் ரிம2.6 பில்லியன் குறித்து பிரதமர் நஜிப்பை கடுமையாகச் சாடியிருந்தார். அதன் பின்னர், அனினா பிரதமர் நஜிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். அதனைத்…

உலக ஊழல் எதிர்ப்பு அமைப்பின் தலைவர் நஜிப்பை சாடினார்

  பிரதமர் நஜிப்பை சுற்றியிருக்கும் ஊழல் விவகாரத்திற்கு பதில் வேண்டும் என்று டிரேன்ஸ்பேரன்ஸி இண்டர்நேசல் (டிஐ) தலைவர் ஜோஸ் உகாஸ் கூறுகிறார். இன்று, புத்ரா ஜெயாவில் 16 ஆவது அனைத்துலக ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் தொடக்க உரையாற்றிய உகாஸ் ஊழலை கையாள்வதற்கு மலேசியா பல நடவடிக்கைளை எடுத்துள்ளது என்றார்.…

பெர்சே மகாதிரை தற்காக்கும்

  ஆகஸ்ட் 29-30 இல் கோலாலம்பூரில் நடைபெற்ற பெர்சே 4 பேரணிக்கு முன்னாள் பிரதமர் மகாதி முகமட் வருகையளித்திருந்திருந்தார். அங்கு அவர் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்திருந்தார் என்றும் அதற்காக அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் இன்று போலீஸ் அறிவிப்பு செய்திருந்தது. அது குறித்து கருத்து தெரிவித்த…