"கிழக்கு நாடுகளுடன் நெருக்கமான உறவை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை மாநில அரசு தற்போது ஆராய்ந்து வருவதாக மூத்த மாநில அமைச்சர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா கூறுகிறார்." மேற்கு நாடுகளையும் அமெரிக்காவையும் சார்ந்திருப்பதை மாநில அரசு மறுபரிசீலனை செய்து வரும் நிலையில், வழக்கமாக அமெரிக்காவில் நடைபெறும் சரவாக் சுற்றுலா நடவடிக்கை…
மகாதிர்: ரிம2.6 பில்லியன் பற்றிய விசாரணையைத் தடுப்பது அப்பணம் சட்டவிரோதமானது…
பணத்தை 'ஹலால்' வழியில் பெற்றிருந்தால், நஜிப் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கூறுகிறார். ரிம2.6 பில்லியன் சம்பந்தப்பட்ட விசாரணையை தடுப்பதற்கு பிரதமர் நஜிப் ரசாக் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை அந்தப் பணம் சட்டவிரோதமான வகையில் பெறப்பட்டது என்பதை நிரூபிக்கிறது என்றாரவர். இஸ்லாத்தில் அனுமதிக்கப்படும் ஹலால்…
புவா: 1எம்டிபி கசிவு பற்றிப் பழிபோட நான்தான் ‘வசதியாக சிக்கிக்…
டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா, 1எம்டிபி பற்றிய தகவலை யுஎஸ் நாளேடான த வால் ஸ்திரிட் ஜர்னலுக்குக் கசியவிட்டவர் என்று தம்மீது பழி போடுவது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு ஆதரவான வலைப்பதிவர்களுக்கு வசதியாக இருக்கிறது என்றார். தேசிய கண்காய்வுத் துறை தயாரித்த இடைக்காலக் கணக்காய்வு அறிக்கை …
கைரி: அம்னோ இளைஞர்கள் சிகப்புப் பேரணியில் கலந்துகொள்ளத் தடை இல்லை
அம்னோ இளைஞர் பகுதி அதன் உறுப்பினர்கள் செப்டம்பர் 16 பேரணியில் கலந்துகொள்வதைத் தடுக்கவில்லை. “பிரதமரின் கருத்துகளை எடுத்துரைக்க விரும்புகிறேன். அதுவே கட்சியின் நிலைப்பாடாகும்”, என்று அம்னோ இளைஞர் பகுதித் தலைவரும் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சருமான கைரி ஜலாலுடின் அது பற்றி வினவியபோது கூறினார். நேற்று அம்னோ உச்சமன்றக் …
சிலாங்கூர் பாஸ் கட்சியினர் சிகப்புச் சட்டைப் பேரணியில் கலந்துகொள்ளத் தடை
சிலாங்கூர் பாஸ், அதன் உறுப்பினர்கள் செப்டம்பர் 16-இல் நடைபெறும் ‘ஹிம்புனான் மாருவா மலாயு’ என்றழைக்கப்படும் சிகப்புச் சட்டைப் பேரணியில் கலந்துகொள்ளக் கூடாது எனத் தடை விதித்துள்ளது. சிலாங்கூர் பாஸ் செயலாளர் முகம்மட் கைருடின் ஒத்மான், அக்கட்சி இன அடிப்படையில் அமைந்த பேரணிகளுக்கு எதிரி என்றார். “இனங்களுக்கிடையில் பதற்றத்தை உண்டுபண்ணும் …
2016 பட்ஜெட்டில் ஜிஎஸ்டி-யைக் குறைப்பீர்: சிறு வணிகர்கள் வலியுறுத்து
அக்டோபர் இறுதியில் தாக்கல் செய்யப்படும் 2016 பட்ஜெட்டில் பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)யில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இதுவே சிறு வணிகர்களின் எதிர்பார்ப்பு. மலேசியாகினி கிள்ளான் பள்ளத்தாக்கில் பல வணிகர்களைத் தொடர்புகொண்டு பேசியது. அவர்கள் அனைவருமே இவ்வாண்டு ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்த 6 விழுகாட்டு வரியை எண்ணிக் கவலைப்படுவது …
புவா: 1எம்டிபி காணாமல்போன யுஎஸ்$1.4 பில்லியனுக்கு தான் பொறுப்பல்ல என்பதை…
அபு டாபியில் உள்ள இண்டர்நேசனல் பெட்ரோல் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்துக்கு (ஐபிஐசி) வழங்கப்பட வேண்டிய யுஎஸ்1.4 பில்லியன் காணாமல் போனதற்கு 1எம்டிபி பொறுப்பல்ல என்றால் அந்நிறுவனம் அதை நிரூபிக்க வேண்டும் என்று பெட்டாலுங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறினார். வால் ஸ்திரிட் ஜர்னல் நேற்று வெளியிட்டிருந்த செய்தியில், …
WSJ செய்திகள் பொய்யென்றால் எம்சிஎம்சி நடவடிக்கை எடுக்கும்
1எம்டிபி மீது பொய்யான செய்திகளை வெளியிட்டதாக தெரிய வந்தால் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம்(எம்சிஎம்சி) வால் ஸ்திரிட் ஜர்னல்மீது நடவடிக்கை எடுக்கும். “அச்செய்திகள் தீய நோக்கம் கொண்டவை என்பதால் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எம்சிஎம்சி பணிக்கப்படும்”, என தொடர்பு, பல்லூடக அமைச்சர் சைட் கெருவாக் இன்று புத்ரா ஜெயாவில் …
மகாதிர்: பெர்சே பேரணிக்குச் சென்றதற்காகக் கைது செய்ய வேண்டுமா, தாராளமாக…
பெர்சே 4 பேரணியில் கலந்துகொண்டதற்காக போலீசார் தம்மைக் கைது செய்ய விரும்பினால் தாராளமாகக் கைது செய்யலாம் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். “அது அவர்களின் உரிமை. கைது செய்வதாக இருந்தால் செய்யுங்கள். இதில் ஒத்துழைக்க என்ன இருக்கிறது”, என மகாதிர் சுபாங் வீமான நிலையத்தில் …
முஸ்லிம்-அல்லாதார் சிவப்புச் சட்டைப் பேரணியைத் தவிர்ப்பது நல்லது
பெர்சே பேரணிக்கு எதிர்ப்பாக செப்டம்பர் 16-இல் நடைபெறும் பேரணியின்போது முஸ்லிம்- அல்லாதார் கோலாலும்பூரில் இல்லாமலிருப்பது நல்லது என மலாய் என்ஜி-கள் கூட்டமைப்பின் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் கூறினார். குறிப்பிட்ட தேதியில் முஸ்லிம்- அல்லாதார் மாநகர் மையப் பகுதியைவிட்டு விலகி இருக்க வேண்டும் என்று கூறும் செய்திகள் வலம் …
பாஸ் ஆதரவாளர் மன்றம் ஆயர் பூத்தேயில் குவான் எங்கை எதிர்த்து…
பாஸ் ஆதரவாளர் மன்றம் (டிஎச்பிபி), அடுத்த பொதுத் தேர்தலில் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கை எதிர்த்து அவரது மாநிலச் சட்டமன்றத் தொகுதியான ஆயர் பூத்தேயில் களமிறங்கத் தயாராக உள்ளது. பாஸ் அத்தொகுதியில் ஒருவரைக் களமிறக்க முடிவு செய்தால் தாங்கள் அதற்கு ஆயத்தமாக இருப்பதாக டிஎச்பிபி தலைவர் என்.…
நஜிப் பதவி விலகிக் கட்சிக்காக தியாகம் செய்ய வேண்டும்: அம்னோ…
இன்று கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் அம்னோ மகளிர் தலைவர் ஒருவர், கட்சியிலிருந்து வெளியேற வேண்டியவர் அம்னோ தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக்தான் என்றார். நஜிப்தான் கட்சிக்காக தியாகம் செய்ய வேண்டும் அடிக்கடி கூறி வருகிறார். அதற்கேற்ப, அவரே பதவி விலகி தியாகம் செய்திட வேண்டும் என…
பெர்சே என்றால் கொதித்துப் போகும் ஜாஹிட் ‘சிகப்புச் சட்டை’ குறித்து…
சிகப்புச் சட்டை பெர்சே-எதிர்ப்புப் பேரணியில் தடையின்றிக் கலந்துகொள்ள அம்னோ உறுப்பினர்களுக்கு துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி அனுமதி அளித்திருப்பது குறித்து டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பியுள்ளார். “பெர்சே 4 பேரணில் கலந்துகொள்வோர் தண்டிக்கப்படுவார்கள் என மிரட்டிய ஜாஹிட், இப்போது சிகப்புச் சட்டைப் …
காற்றின் தரம் சீரடைந்தது
இன்று காலை நாட்டில் பல இடங்களில் காற்றின் தரம் நல்ல நிலையில் அல்லது மிதமான நிலையில் இருந்தது. ஆனால், மூன்று இடங்களில் மட்டும் காற்று உடல்நலனுக்குக் கேடு செய்யும் வகையில் இருந்தது. இன்று காலை 8 மணிக்கு மலாக்கா நகரம் (112), புக்கிட் ரம்பாய் (107)ம் நீலாய் (103)…
பாஸ் ‘சிவப்புச் சட்டை’ ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாது
செப்டம்பர் 16-இல் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் ‘சிவப்புச் சட்டை’ப் பேரணியில் பாஸ் பங்கேற்காது. அப்பேரணி மலேசிய தினத்தில் நடத்தப்படுவது ஏற்கத்தக்கதல்ல என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறினார். “மலேசிய தினத்தைச் சமய, இன, பண்பாடு, அரசியல் நிலைப்பாடு போன்ற வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களும் ஒரு சுதந்திர நாளாகக் …
சிவப்புச் சட்டைப் பேரணி ஏற்பாட்டாளர் யார்? மர்மம் நீடிக்கிறது
பெர்சே 4 பேரணிக்கு எதிர்ப்பாக நடத்தப்படும் செப்டம்பர் 16 பேரணியில் 100,000 மேற்பட்ட மலாய்க்காரர்கள் கலந்துகொள்வார்கள் என அம்னோ தலைவர்கள் இருவர் ஆருடம் கூறியுள்ளனர். ஆனால், கூட்டரசுப் பிரதேச அம்னோ இளைஞர் தலைவர் முகம்மட் ரஸ்லான் ராபீ, சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் …
யுபிஎஸ்ஆர் தேர்வு தொடங்கியது
இன்று தொடங்கி மூன்று நாள்களுக்கு நாடளாவிய நிலையில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் யூ.பி.எஸ்.ஆர் தேர்வை எழுதுகின்றனர். சில இடங்களில் காற்றின் தரம் குறைந்திருப்பதால் மாணவர்கள் முகமூடி அணிந்துகொண்டே தேர்வை எழுதுகின்றனர். நாடு முழுக்க 455,929 மாணவர்கள் 8.134 தேர்வு மையங்களில் இத்தேர்வை எழுதுவதாகக் கல்வி அமைச்சர் மஹாட்ஸிர் காலிட் …
செப்டம்பர் 16 பேரணியின் நோக்கம் என்ன? தெளிவுபடுத்துவார்களா சிவப்புச் சட்டைகள்’
‘பிகேஆர் அமைதிப் பேரணிகளை எதிர்க்கவில்லை. ஆனால், சிவப்புச் சட்டைகள் செப்டம்பர் 16-இல் பேரணி நடத்த விரும்பினால் பேரணியின் நோக்கம் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என நினைக்கிறது. “நாங்கள் அமைதிப் பேரணியை எதிர்ப்பவர்கள் அல்ல.”, என பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறினார். “ஆனால், பேரணியின் நோக்கம் என்னவென்பதை …
#கித்தா லவான் பேரணியில் கலந்துகொண்டதற்காக மரியா மேலும் எண்மர்மீது குற்றச்சாட்டு
பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, பிகேஆர் பாயான் பாரு எம்பி சிம் ட்ஸெ ட்ஸின் ஆகியோர் மீதும் மேலும் எழுவர்மீதும் #கித்தா லவான் பேரணியில் கலந்து கொண்டதற்காக அமைதிப் பேரணிச் சட்டம் (பிஏஏ) 2012-இன்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் குற்றச்சாட்டை மறுத்தனர். அவர்களை ரிம500 பிணையில் …
பாஸ் எம்பி: இன அடிப்படையிலான பேரணிகள் வேண்டாம்
பல இனங்கள் வாழும் மலேசியா போன்ற நாட்டில் இன அடிப்படையில் பேரணி நடத்துவது ஏற்கத்தக்கதல்ல என்கிறார் பாஸ் எம்பி மாபுஸ் ஒமார். “அது (பேரணி நடத்துவது) அவர்களின் உரிமை. ஆனால், மலேசியா ஒரு இனத்துக்குத்தான் உரியது என்ற எண்ணம் கூடாது. “அது முடிவில் இனங்களுக்கிடையில் பதற்றத்தை உருவாக்கும்” என்றாரவர்.…
பிகேஆர்: புதிய எதிரணிக் கூட்டணிக்கு பாஸ் கட்சி வேண்டும்
புதிதாக அமைக்கப்படும் எதிரணிக் கூட்டணியில் பாஸ் கட்சியும் இடம்பெற்றிருப்பதையே பிகேஆர் விரும்புகிறது. “ஆம். தலைவர் (டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தெளிவாக, தெள்ளத் தெளிவாகவே இதைத் தெரிவித்துள்ளார்”, என சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி இன்று ராவாங்கில் கூறினார். பாஸ் புதிய கூட்டணியில் இடம்பெறுவதை ஒப்புக்கொள்ள …
தியன் சுவா: செஞ்சட்டையினர் பேரணி நடத்த அனுமதியுங்கள்
பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா செஞ்சட்டையினர் செப்டெம்பர் 16 இல் நடத்தத் திட்டமிட்டிருந்த பேரணியை போலீசார் தடை செய்திருப்பது தமக்கு ஏமாற்றமளிப்பதாகக் கூறினார். அமைதியாக ஒன்றுகூடுதல் சட்டத்திற்கு ஏற்ப போலீசார் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். தாம் செஞ்சட்டையினரின் சினமூட்டும் பேச்சுகளால் எரிச்சலடைந்திருந்தாலும், சமுதாயம் இது…
ஆறு மாதங்கள் காத்திருந்த பின்னர் பதவி துறந்தார் 1எம்டிபி ஆலோசகர்
அரசு நிறுவன விவகாரங்கள் குறித்து தமக்கு விளக்கம் அளிக்குமாறு ஆறு மாதங்களுக்கு மேலாக கேட்டுக்கொண்டும் அது பற்றிய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் 1எம்டிபியின் முன்னாள் ஆலோசகர் பதவியை விட்டு விலகிக் கொண்டார். "நான் 1எம்டிபி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக ஜனவரி 25, 2015 இல் நியமிக்கப்பட்டேன்", என்று அப்துல்…
பெர்சே 4 எதிர்ப்பு செஞ்சட்டையினர் மலாய்க்காரர்களை பிரதிநிதிக்கவில்லை, முஸ்லிம் குழு…
பெர்சே 4 பேரணிக்கு எதிர்ப்பேரணி நடத்தத் திட்டமிட்டிருக்கும் செஞ்சட்டை அணிந்திருக்கும் கூட்டத்தினர் மலாய் முஸ்லிம்களின் கருத்தைப் பிரதிநிதிக்கவில்லை என்று முஸ்லிம் தொழிலியர்கள் குழு கூறுகிறது. இனப் போராட்டத்தைத் தூண்டும் எந்த ஒரு நடவடிக்கையையும் உடனடியாக கையாளப்பட வேண்டும். இந்த நிலையற்ற நேரத்தில் அமைதியையும் கட்டுப்பாடையும் நிலைநிறுத்த போலீசார்…


