அணு ஆயுதத் திட்டங்களை விரிவுபடுத்துகிறது இந்தியா: அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்

சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை தயாரிக்கும் வகையில், அணு ஆயுதத் திட்டங்களை இந்தியா விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனத்தை (ஐ.எஸ்.ஐ.எஸ்.) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் டேவிட் ஆல்பிரைட் மற்றும் கெல்லிஹர் வெர்ஜாண்டினி ஆகியோர் இந்தியா தொடர்பாக ஆய்வு…

சீன பிராந்தியத்தில் தொடரும் பதற்றம்: அமெரிக்காவும் எச்சரிக்கை

கிழக்கு சீனக்கடல் பகுதியை வான் பாதுகாப்பு மண்டலமாக சீனா அறிவித்திருப்பதை அங்கீகரிக்க மாட்டோம் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சீனா சென்றுள்ள ஜோ பிடன், ஜீ ஜின்பிங்கை புதன்கிழமை இரவு சந்தித்துப் பேசினார். இதன் போது அமெரிக்காவின் நிராகரிப்பு விடயத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பின்னர்…

யசீர் அரபாத்தின் உயிரிழப்புக்கு நஞ்சூட்டப்பட்டமை காரணமல்ல: பிரான்ஸ்

பலஸ்தீனத் தலைவர் யசீர் அரபாத்தின் உயிரிழப்புக்கு நஞ்சூட்டப்பட்டமை காரணம் அல்லவென பிரான்ஸ் விஞ்ஞானிகளின் ஆய்வு அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவான தொற்று நோய் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக கசிந்துள்ள இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன. பலஸ்தீனத் தலைவரின் உடலில் எதிர்பாராத உயர்மட்ட அளவில் நச்சுத் தன்மை கொண்ட…

அமெரிக்கா துணை ஜனாதிபதிக்கு சீனா கடும் எச்சரிக்கை

அமெரிக்கா துணை ஜனாதிபதி ஜோ பிடன் சீனாவுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், சீன அரச ஊடகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வான் பாதுகாப்பு வலயம் குறித்து அவர் தொடர்ச்சியாக பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க துணை ஜனாதிபதி, பீஜிங்கில் சீன…

உலக அளவில் மனித உரிமைகளை மீறும் நாடுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது

தத்தம் நாட்டு மக்களின் மனித உரிமைகளுக்கு ஆபத்தைத் தோற்றுவிக்கும் நாடுகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 20லிருந்து 34ஆக உயர்ந்துள்ளதாக உலக அளவில் ஆபத்துக்கள் பற்றி பகுப்பாய்வு செய்யும் ஒரு நிறுவனம் கூறுகிறது. பிரிட்டனிலிருந்து இயங்கும் இந்த மேப்பிள்க்ராப்ட் என்ற நிறுவனம், குறிப்பாக மத்தியக் கிழக்கு மற்றும் ஆப்ரிக்கப்…

சிரிய ஜனாதிபதி போர்க்குற்றவாளி: நவநீதம்பிள்ளை குற்றச்சாட்டு

சிரிய ஜனாதிபதி பஸார் அல் அசாத் உட்பட்ட உயரதிகாரிகளுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளுக்காக சாட்சியங்களையும் முன்வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். சிரியாவின் ஜனாதிபதி அஸாத் மீது ஐக்கிய நாடுகள் நேரடியாக போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை இதுவே முதல்தடவையாகும். ஐக்கிய…

வரலாற்றில் முதன்முறையாக நடந்த துப்பாக்கி சூடு! ஒருவர் பலி

ஐஸ்லாந்து வரலாற்றிலேயே முதன் முறையாக துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. உலகிலேயே மிக குறைவான அதாவது 3,22,000 மக்கள் தொகையை கொண்ட நாடான ஐஸ்லாந்து, குற்ற விகிதங்கள் மிகவும் குறைவாக கொண்ட நாடு என்ற சிறப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று முதன் முறையாக அங்கு துப்பாக்கி சூட்டு சம்பவம்…

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயார்: சீனா

விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. சந்திரனில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்வதற்காக சீனா தயாரித்துள்ள முதல் ஆளில்லா விண்கலமான சாங் இ-3 திங்கள்கிழமை அதிகாலை 56.4 மீட்டர் உயரமுள்ள லாங் மார்ச்- 3பி ராக்கெட்டின் மூலம் ஷிசாங் விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து…

உலக கோடீஸ்வர தலைவர்களின் பட்டியல்: விளாடிமிர் புடின் முதலிடம்

உலக கோடீஸ்வர தலைவர்களின் பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதலிடம் பிடித்துள்ளார். உலகில் டாப் 20 கோடீஸ்வர தலைவர்கள் பட்டியலை Huffingtonpost வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பல நாட்டு மன்னர்கள், ஜனாதிபதிகள் இடம்பிடித்திருக்கின்றனர். ஆனால் அரசு ரீதியாக பொறுப்பு வகிக்காத சோனியா காந்தியும் இடம்பெற்றிருக்கிறார். ரஷ்ய ஜனாதிபதி…

கருப்புப் பணம்: கண்காணிப்பை அதிகரிக்கும் ஸ்விஸ் வங்கிகள்

ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணம் முதலீடு செய்யப்படுவதைத் தடுக்க, கண்காணிப்பை தீவிரப்படுத்த அந்நாட்டு வங்கிகள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து, ஸ்விஸ் வங்கி உரிமையாளர்கள் சங்கம், தமது உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சர்வதேச நெறிமுறைகளுக்கு ஏற்ற வகையில், அனைத்து வெளிநாடுகளிலிருந்தும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து செய்யப்படும் முதலீடுகள் கருப்புப்…

ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க வேண்டும்: உக்ரைனில் எதிர்க்கட்சிகள் போராட்டம் தீவிரம்

உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவோர் மீது போலீஸார் அடக்குமுறையைக் கையாள்வதாகக் கூறி, அந்நாட்டில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் வலுவடைந்து வருகிறது. அதிபர் விக்டர் யானுகோவிச் தனது பிடிவாதத்தை கைவிட்டு, ஐரோப்பிய யூனியனுடன் உக்ரைன் இணைவதற்கான ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவிக்கும்வரை போராட்டம் ஓயாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.…

அமெரிக்காவில் முழங்கும் தமிழனின் ‘பறை’

அமெரிக்காவின் முக்கிய நகரங்களின் ஒன்றான செயின்ட் லூயிஸில் வசிக்கும் தமிழ் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து தமிழர்களின் புராதன அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மிகவும் பிரபலமான திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினர் அமெரிக்காவிற்கும் பறை இசையை கொண்டு வரவேண்டும் என்று விரும்பினர். அமெரிக்காவிலும் தமிழர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வரும்…

சர்ச்சைக்குரிய பகுதிக்கு போர் விமானங்களை அனுப்பியது சீனா

கிழக்கு சீனக் கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய சென்காகு தீவுகளை உள்ளடக்கி புதிய வான் பாதுகாப்பு மண்டலம் அறிவித்த சீனா, அங்கு முதல் முறையாக போர் விமானங்களை அனுப்பி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. கிழக்கு சீனக் கடல் பகுதியில் ஜப்பான் கட்டுப்பாட்டில் உள்ள சென்காகு தீவுகளை டியாவோயு தீவுகள் என்று…

இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி: இந்தியா அழைப்பு!

இலங்கைக் கடற்படையினர் இந்தியாவில் பயிற்சி பெற வருமாறு இந்திய கடற்படைத் தளபதி டி.கே. ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் தெற்கு துறைமுகப் பகுதியான காலேயில் நடைபெறும் சர்வதேச கடற்படை மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்காக ஜோஷி இலங்கை சென்றுள்ளார். அப்போது, இலங்கை அதிபர் ராஜபட்சவை சந்தித்து டி.கே. ஜோஷி…

சந்திரனில் துளசி செடி: நாசாவின் அதிரடி திட்டம்

சந்திரனில் தாவரங்களை வளரச் செய்யும் ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் 2015ம் ஆண்டு முதல் ஈடுபட உள்ளது. இதற்கான பணிகள் தற்போதே தொடங்கப்பட்டுவிட்டது, தற்போது எந்த வகை பயிர்களை முளைக்க வைப்பது என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளது. இதில், டர்னிப் எனப்படும் சீனம் முள்ளங்கி,…

எல்லையில் ஏவுகணைகள் நிலை நிறுத்த ரஷ்யா முடிவு

மாஸ்கோ: எல்லை பகுதிகளில், கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய, 22 நவீன ஏவுகணைகளை வைக்க, ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது. பனிபோர் நடந்த காலத்தில், அமெரிக்காவும், ரஷ்யாவும் போட்டி போட்டுக்கொண்டு ஆயுதங்களை தயாரித்தன. 2010ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், ஆயுதங்களை குறைக்கும் நோக்கில், அமெரிக்காவும், ரஷ்யாவும், அணு ஆயுத…

பசும்பாலுக்கு பதிலாக மூஸ் இன பால்! ஐ.நா முடிவு

உலக நாடுகளில் பெரும்பாலும் பசும்பால் தான் உணவுப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை தவிர சிலர் ஒட்டகம், ஆடுகள், கழுதைகள் மற்றும் எருமைகளின் பால்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் ஐ.நாவால் அங்கீகரிக்கப்பட்ட பாலாக பசும் பால் திகழ்கிறது. ஏனெனில் அதில் கொழுப்பு, புரோட்டீனுடன் லேக்டோஸ் என்ற சத்தும் உள்ளது. இந்நிலையில்…

இப்படியும் திருடனா! சீனாவில் நிகழ்ந்த வினோத சம்பவம்

திருடர்களுக்கும் மனசாட்சி உண்டு என்பதை நிரூபிக்கும் விதமாக சீனாவில் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஷோயூ என்பவர் சமீபத்தில் வாடகைக் கார் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது, ஐபோன் காணாமல் போனது. தனக்கு பின் அமர்ந்திருந்த ஒருவரின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் கொண்ட ஷோயூ, தனது நண்பரின்…

அகதிப் பெண்களை சீரழிக்கும் நாடு

லெபானான் நாட்டில் சிரியாவை சேர்ந்த அகதிப் பெண்கள் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. சிரியாவில் நேர்ந்த வன்முறையிலிருந்து தப்பித்து வந்த அந்நாட்டு பெண்கள் லெபனான் நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். இப்பெண்கள் அந்நாட்டு பணியாளர்கள், நில உரிமையாளர்கள்,உள்ளூர் உதவி குழுவினரால் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என மனித உரிமை…

சுதந்திர ஸ்காட்லாந்து குறித்த வரைவு நகல் வெளியானது

ஸ்காட்லாந்து பிரிட்டனிலிருந்து பிரிந்து தனி நாடாக வேண்டும் எனும் தமது அரசின் வரைவு நகலை அதன் முதலமைச்சர் அலெக்ஸ் சால்மண்ட் வெளியிட்டுள்ளார். அந்தத் திட்டத்தில், பிரிட்டனுக்கு வெளியே ஸ்காட்லாந்து எப்படி செயல்படும் என்பதை அவர் விளக்கியுள்ளார். சுதந்திர ஸ்காட்லாந்து சொந்தமாக வரிகளை வசூலிக்கும் என்றாலும், பவுண்ட் ஸ்டெர்லிங் நாட்டின்…

நேபாளத்தில் மிகப் பழமையான பௌத்த ஆலயம் கண்டுபிடிப்பு

புத்தர், கிறிஸ்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக் கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு நேபாளிலுள்ள லும்பினியில் செங்கல்லால் கட்டப்பட்ட கோயிலின் கீழே, மரத்தால் செய்யப்பட்ட ஒரு வழிபாட்டுத் தலத்தின் இடிபாடுகளுக்கான…

சத்தமில்லாத ஹெலிகொப்டர்: ஜேர்மன் நிறுவனம் வடிவமைத்தது

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் பறக்கும் ஹெலிகொப்டரை ஜேர்மன் நிறுவனம் வடிவமைத்துள்ளது. பொதுவாக ஹெலிகொப்டர்கள் புறப்படும் போதும், பறக்கும் போதும் கடுமையான அதிர்வுகளையும், சத்தத்தையும் எழுப்புகின்றன. இதனால் பறக்கும் தூசு, சத்தம் போன்றவற்றால் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றது. சத்தம் ஏதும் இல்லாமல், அதிர்வுகள் இன்றி பறக்கும்…

போராட்டம் தீவிரம்: தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்

தாய்லாந்தில் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலகக்கோரி தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்கள், நிதியமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து தலைநகர் பாங்காக்கில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பாங்காக்கில் நேற்று திரண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அங்குள்ள நிதியமைச்சக அலுவலகம், வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்திற்குள்…