ராணுவ ரகசியங்களை வெளியிட்ட அமெரிக்க வீரருக்கு 90 ஆண்டு சிறை

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவ ரகசியங்களை, விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு அளித்த, ராணுவ வீரருக்கு, 90 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவில் பிறந்தவர் ஜூலியன் அசாஞ்ச். இவர், "விக்கிலீக்ஸ்' இணையதளத்தை உருவாக்கி, அதன் மூலம், பல நாட்டு ரகசியங்களை வெளியிட்டார். இதில், அமெரிக்க ராணுவ ரகசியங்கள் அதிகம் வெளியிடப்பட்டு…

அமெரிக்க உள்ளாட்சி தேர்தல் : மூன்று இந்தியர்கள் போட்டி

நியூயார்க் : அமெரிக்காவின், நசாவ் மாவட்ட தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, மூன்று பேர் போட்டியிடுகின்றனர். அமெரிக்காவின், நியூயார்க் நகருக்கு அருகில் உள்ளது நசாவ் மாவட்டம். இப்பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் அதிகம் பேர், வசிக்கின்றனர். இந்த மாவட்ட நிர்வாகி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. மேயர் பதவிக்கு…

வேலைவாய்ப்புக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும் சீன இளைஞர்கள்

பீஜிங்: நல்ல வேலைவாய்ப்புகள் பெறுவதற்காக, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளும் பழக்கம், சீன இளைஞர்களிடையே பிரபலமடைந்து வருகிறது. நன்கு படித்திருந்தாலும், அதிக சம்பளத்தில், நல்ல வேலை கிடைப்பதற்கு, முக அமைப்பும் முக்கியம் என்ற எண்ணம், சீனாவில், பெரும்பாலான இளைஞர்களிடையே பரவியுள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள, ஜோங்டா மருத்துவமனையில்,…

வேட்டி கட்டிய இந்தியருக்கு துபாய் ரயிலில் அனுமதி மறுப்பு!

துபாயில் வேஷ்டி அணிந்து சென்ற இந்தியருக்கு அந்நாட்டு மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து அவரது மகள், அந்நாட்டு நீதிமன்றத்தில், ரயில் நிலைய அதிகாரிகளுக்கெதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தியாவை சேர்ந்த மதுமதி. துபாயில் வசித்து வருகிறார். இவரை காண, மதுமதியின் தந்தை அடிக்கடி துபாய் செல்வது…

மிக உயரமான விமான நிலையம் : திபெத்தில் அமைக்கிறது சீனா

பீஜிங் : உலகின் மிக உயரமான இடத்தில் சீன அரசு, விமான நிலையத்தை அமைத்து வருகிறது.கட்டுமான பணியில் சீனா, உலகின் முதலிடத்தை வகித்து வருகிறது. திபெத்தை தனி நாடாக அறிவிக்கக்கோரி, புத்த மதத்தலைவர் தலாய் லாமா தலைமையில், நீண்ட நாட்களாக போராட்டம் நடக்கிறது. சீன அரசை எதிர்த்து, நூற்றுக்கும்…

செக்ஸ் புகார்: அமெரிக்க இராணுவத்தில் இருந்து 60 பயிற்சியாளர்கள் அதிரடி…

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றும் 60 வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். சமீபகாலமாக அமெரிக்க இராணுவத்தில் பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 60 பயிற்சியாளர்கள் குற்றத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை…

நான்கு கோப்பை தேனீர், காபி குடியுங்கள்: ரத்த அழுத்தத்திற்கு விடைகொடுங்கள்!

லண்டன்: நாள் ஒன்றுக்கு, நான்கு கோப்பை தேனீர் அல்லது காபி அருந்துவோருக்கு ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவது மிகவும் குறைவு என, சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து வந்தனர். இதற்கு பலன்…

எவெரெஸ்ட் மலையேற புதிய விதிகளை நேபாளம் அமல்படுத்துகிறது

உலகின் மிக உயரமான சிகரமான எவெரஸ்டில் ஏற எடுக்கப்படும் முயற்சிகளை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவிருப்பதாக நேபாள சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். முதன் முறையாக, எவெரெஸ்டின் கீழ்தள முகாமில் அரசுக் குழு ஒன்று நிலை நிறுத்தப்பட்டு, அது மலையேறுபவர்களுக்கு உதவுதல், மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்தல் , சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்…

உலகில் முதல்நாடாக உருகுவே கஞ்சாவுக்கு சட்ட அனுமதி அளிக்கிறது

உலகில் கஞ்சாவை உற்பத்தி செய்யவும் விற்கவும் பயன்படுத்தவும் சட்டபூர்வமாக அனுமதிக்கும் நாடாக உருகுவே மாறவுள்ளது. கஞ்சாவை (மரிஹுவானா) சட்டபூர்வமாக்குவதற்கான சட்ட மசோதாவுக்கு உருகுவே நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை அங்கீகாரம் அளித்துவிட்டது. அடுத்தபடியாக, செனட் சபையும் அங்கீகரித்தவுடன் சட்டம் அமலுக்கு வந்துவிடும். இந்த சட்டத்தின்படி, கஞ்சாவை விற்கும் அதிகாரம் அரசுக்கு…

ஸ்நோடனுக்கு தஞ்சம் வழங்கியது ரஷ்யா

அமெரிக்காவிலிருந்து தலைமறைவான அந்நாட்டின் உளவுத்துறையின் செயல்திட்டத்தை அம்பலப்படுத்தியதாக கூறப்படும் எட்வர்ட் ஸ்நோடனுக்கு ரஷ்யாவில் தஞ்சம் கிடைத்துள்ளது. அவரது தஞ்சக் கோரிக்கைக்கான ரஷ்ய அரசின் ஆவணங்களைப் பெற்றபிறகு, இதுவரை மாஸ்கோ விமான நிலையத்தில் தங்கியிருந்த ஸ்நோடன் அங்கிருந்து வெளியேறினார். ஊடகங்களின் பார்வையில் படாமல், ஸ்நோடன் விமான நிலயத்தின் பின்புற வாயில்…

சிறையில் மறந்துவிடப்பட்ட அமெரிக்கருக்கு 40 லட்சம் டாலர்

அமெரிக்காவில் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவனுக்கு 40 லட்சம் டாலர்களுக்கும் அதிக பணத்தை இழப்பீடாகக் கொடுப்பதற்கு அமெரிக்காவின் நீதி அமலாக்கத்துறை ஒப்புக்கொண்டுள்ளது. கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், போலிஸ் சிறைக்கூடத்துக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த இளைஞனை அதிகாரிகள் முழுமையாக மறந்துபோன நிலையில் கைவிட்டிருந்தனர். இதனால் நான்கு நாட்களாக தண்ணீரும் உணவுமில்லாமல்…

வீட்டில் புகை பிடித்தவர் வீட்டை விட்டு வெளியேற்றப்படலாம் – ஜெர்மனி…

ஜெர்மனியில், வீட்டில் புகை பிடிக்கும் போது, அந்தப் புகை வீட்டை விட்டு வெளியேறி அடுக்குமாடிக் குடியிருப்பின் பொது இடங்களுக்குப் பரவினால், புகை பிடித்தவர் வீட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என்று நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது. ஜெர்மன் நகரான டசல்டார்பில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் கடந்த 40…

பாகிஸ்தான் புதிய அதிபராக மம்நூன் ஹுசைன் தேர்வு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின், 12வது அதிபராக, ஆக்ராவில் பிறந்த, மம்நூன் ஹுசைன், 73, தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அதிபர், ஆசிப் அலி சர்தாரியின் பதவி காலம், செப்., 8ல் முடிகிறது. இதையடுத்து, நேற்று, புதிய அதிபருக்கான தேர்தல் நடந்தது. ஆளும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், ஜவுளி வர்த்தகர்,…

பிரிட்டனில் தஞ்சம்கோரிய போர் குற்றவாளிகள் கண்டுபிடிப்பு

பிரிட்டனில் குடியேற விண்ணப்பம் செய்த சுமார் 100 பேர், போர் குற்றத்தோடு தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு பிபிசிக்கு அளித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான், இரான், இராக், லிபியா, ருவாண்டா, செர்பியா மற்றும் இலங்கையைச் சேரந்த சுமார் 100 பேர், போர் குற்றங்களோடு தொடர்புடையவர்கள் என்ற…

ஈராக்கில் தொடர்ச்சியாக 12 குண்டுகள் வெடித்தது: 51 பேர் உடல்…

இராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்துள்ள 8 கார்க்குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பெரும்பாலும் ஷியா மக்கள் குடியிருக்கும் பிரதேசங்களிலேயே இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. 2003-ம் ஆண்டின் இராக் மீதான படையெடுப்புக்குப் பின்னர், மோசமான குண்டுத் தாக்குதல்கள் இந்த ஆண்டில் நடந்துவருகின்றன. உள்நாட்டில்…

ஒருபால் உறவுக்காரர்களை ஓரங்கட்டக்கூடாது: போப் பிரான்சிஸ்

ஒருபால் உறவுக்காரர்கள் ஓரங்கட்டப்படக்கூடாது என்றும், மாறாக அவர்கள் சமூகத்திற்குள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் கூறியுள்ளார். ஒருபால் உறவுச் செயல்கள் பாவம் மிக்கவையே ஒழிய ஒருபால் உறவு பாலியல் விருப்பத் தெரிவு என்பது பாவம் அல்ல என்ற ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் நிலைபாட்டை அவர் வலியுறுத்தியுள்ளார். ஒருபால்…

தூக்கத்தை கெடுக்கும் முழு நிலவு: சுவிஸ் விஞ்ஞானிகள் தகவல்

சுவிஸ் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் நிம்மதியான தூக்கத்தை பாதிக்கும் ஆற்றல் பூரண சந்திரனுக்கு உண்டு என்ற தகவல் வெளியாகியுள்ளது. பஸல் பல்கலைக்கழகம் உட்பட சில ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்விற்காக 33 நபர்களின் தூக்கம் தொடர்பான விபரங்களை பகுப்பாய்வு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் புகைத்தலோ…

இத்தாலிக்கு வர முயன்ற ஆப்பிரிக்கர்கள் 31 பேர் கடலில் மூழ்கி…

லிபியாவை ஒட்டிய கடற்பரப்பில் வெள்ளிக்கிழமை இரவு படகு ஒன்று நீரில் மூழ்க, ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்குள் குடியேற முயன்றவர்கள் 31 பேர் உயிரிழந்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் கூறுகின்றன. மத்தியதரைக் கடலைக் கடந்து இத்தாலிக்குள் வர முயன்ற பெரும்பான்மையாக நைஜீரியர்கள் ஏறி வந்த ஒரு படகு இது. இப்படகு கடலில் மூழ்கியதை…

தென் ஆப்ரிக்காவில் உலகின் அதிக வயதுகூடிய பெண்மணி

உலகின் மிக வயது முதிர்ந்த பெண்மணி தென்னாபிரிக்காவில் இனங்காணப்பட்டுள்ளார். 119 வயதுடைய ஜொஹன்னா மஸிபுகோ எனும் மூதாட்டி தென்னாபிரிக்காவின் ஜொஹனஸ்பேர்கில் அமைந்துள்ள சிறு கிராமத்தில் வசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 1894 ஆம் ஆண்டு மே மாதம் 11ம் திகதி பிறந்ததாக மஸிபுகோவின் அடையாள ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 7…

எகிப்து கொந்தளிப்பின் பின்னணி

இஸ்லாமியவாத அதிபர் முகமது முர்ஸியிடம் இருந்து இராணுவம் பதவியைப் பறித்ததை அடுத்து எகிப்து மீண்டும் ஒருமுறை கொந்தளித்துவருகிறது. முப்பது ஆண்டுகளாக எகிப்தை தனது இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த ஹோஸ்னி முபாரக் மக்கள் எழுச்சியினால் தூக்கியெறியப்பட்டிருந்தார். அங்கு ஜனநாயக முறையில் முஸ்லிம் சகோதரத்த்துவக் கட்சியின் முகமது முர்ஸி ஆட்சிக்கு வந்து…

அகதிப் படகுகள் பற்றிய ஆஸ்திரேலியா கொள்கை மீது ஐநா அதிருப்தி!

ஆஸ்திரேலியாவின் புகலிடம் தொடர்பான புதிய கொள்கை, தஞ்சம் கோருவோருக்கு அளிக்கப்பட வேண்டிய போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுத்திருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. புதிய கொள்கையின்படி, ஆஸ்திரேலியா நோக்கி படகில் தஞ்சம்கோரி வருவோர் பப்புவா நியுகினிக்கு அனுப்பப்படுவார்கள். அங்கேயே அவர்களின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, அகதிகளாக அங்கீகரிக்கப்படுவோர் அங்கேயே மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள். ஆனால்,…

இத்தாலி போலிஸார் மிகப்பெரிய மாஃபியா வேட்டையில்

இத்தாலியில், ரோமிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மாஃபியா குற்றக்கும்பல்களை இலக்குவைத்து இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தேடுதல் வேட்டையை போலிஸார் மேற்கொண்டுள்ளனர். ஹெலிகொப்டர்களும் கடல் ரோந்துப் படகுகளும் புடைசூழ நூற்றுக்கணக்கான போலிஸ் அதிகாரிகளும் இந்த படை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 50க்கும் அதிகமானோர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைநகரிலும் கரையோர நகரான…

உலகிலேயே உயரமான கட்டிடத்தை கட்ட தொடங்கியது சீனா

துபாயில் உள்ள பர்ஜ் கலிபா என்னும் 828 மீற்றர் உயரமுடைய வணிக வளாகமே தற்போது உலகிலேயே உயரமான கட்டிடம் என்ற பெருமையைப் பெற்று விளங்குகின்றது. இதனைக் கட்டி முடிப்பதற்கு ஐந்து ஆண்டுக் காலம் ஆனநிலையில், இதனை முறியடிக்கும் விதமாக தற்போது சீனாவில் 838 மீற்றர் உயரமுள்ள கட்டிடம் ஒன்று…