எலிசபத் ராணியின் கணவர் பிலிப் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்

எலிசபத் மகாராணியின் கணவரான, இளவரசர் பிலிப்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். Read More

சிரிய இராணுவ விமானத்தை சுட்டுவீழ்த்திய கிளர்ச்சியாளர்கள்

சிரியா நாட்டில் ஆட்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் தீவிர தாக்குதல் நடத்திவருகின்றனர். கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை சமாளிக்க சிரிய அரசு போர் விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில், நேற்று கிழக்கு சிரியாவில் சிரியா இராணுவ போர் விமானம் ஒன்று வெடித்துச் சிதறி, தரையில் விழுந்தது. விமானத்தில் ஏற்பட்ட…

செவ்வாய் கிரகத்தில் யாரையாவது பார்த்தா உடனே ‘இன்பார்ம்’ பண்ணுங்க :…

"செவ்வாய் கிரகத்தில் ஏதாவது உயிரினம் இருப்பதாக தெரிய வந்தால், உடனே எனக்குத் தெரியப்படுத்துங்கள். மிக மிக நுன்னிய உயிரினமாக இருந்தாலும் கூட பரவாயில்லை, அதுதான் உலகுக்கு மிகப் பெரிய செய்தி" என்று நாசா விஞ்ஞானிகளிடம் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. நாசா அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய்…

ஈரானில் பூகம்பம்! பலி எண்ணிக்கை 250 ஆக உயர்வு

டெக்ரான்: ஈரானில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பூகம்பத்தில், 250 பேர் பலியாகியுள்ளனர். ஈரானில் அஜர்பைஜான் எல்லையையொட்டிய தப்ரிஸ் நகரில் நேற்று முன்தினம், 6.4 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. அகர், ஹரிஸ், வர்சாக்வான் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பத்தால், ஆறு கிராமங்களில் உள்ள மண் வீடுகள்…

பெண்களுக்கான தனி நகரத்தை உருவாக்குகிறது சவுதி அரேபியா

ரியாத்: சவுதி அரேபியாவில் பெண்களுக்கான தனி நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் புனித யாத்திரை செல்லும் மெக்கா நகரம், சவுதி அரேபியாவில் தான் உள்ளது. எனவே, இந்த நாடு முஸ்லிம்களின் நடைமுறைகளை தவறாமல் கடை பிடிக்கிறது. குறிப்பாக, பெண்கள் விஷயத்தில் ஷரியத் சட்டம் கடுமையாக பின்பற்றப் படுகிறது. இதன்…

செவ்வாய் கிரகத்தில் அட்டகாசமாக தரையிறங்கியது ‘க்யூரியாசிட்டி’ விண்கலம்!

செவ்வாய் கிரகத்துக்கு (Mars) அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு அனுப்பியுள்ள 'க்யூரியாசிட்டி' விண்கலம் இன்று அட்டகாசமாக தரையிறங்கியது. பூமியிலிருந்து ஏவப்பட்டு 8 மாத பயணத்துக்குப் பின் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்து, பத்திரமாக தரையிறங்கியுள்ளது. அணு சக்தியில் இயங்கும் இந்த ஒரு டன் எடை கொண்ட விண்கலம்…

அமெரிக்காவில், சீக்கியர்கள் கோயிலில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில், சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவில், மர்மநபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவன் உள்பட 7 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்து போயினர். அமெரிக்காவில் கடந்த இரு வாரங்களுக்கு முன் சினிமா தியேட்டரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் சுவடு மறைவதற்குள்…

லண்டன் ஒலிம்பிக் 2012 : குத்துச் சண்டை முடிவில் சர்ச்சை!

லண்டன்: லண்டனில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய குத்துச் சண்டை வீரர் ஒருவர் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகு அனைத்துலக குத்துச் சண்டை மன்றம் அந்த முடிவை மாற்றியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காலிறுதிக்கு முந்தைய போட்டியில் இந்தியாவின் விகாஸ் க்ருஷன் அமெரிக்காவில் எரால் ஸ்பென்சை…

சிக்கனத்தை கடைபிடிக்க விடுமுறைக்கு ரயிலில் செல்லும் பிரான்ஸ் அதிபர்

பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் பிரான்கோஸ் ஹோலண்ட், அரசு பணத்தை சிக்கனப்படுத்த விடுமுறைக்காக ரயிலில் பயணம் சென்றார். தற்போதைய அதிபர் பிராங்காய்ஸ் ஹோலன்ட், தேர்தல் பிரசாரத்தின் போது, "கடுமையான பொருளாதார நெருக்கடி காணப்படும், இந்த காலகட்டத்தில் நான் ரயிலில் பயணித்து விடுமுறைக்குச் செல்வேன்; விமானத்தில் பயணித்து அரசுப் பணத்தை வீணடிக்க…

இந்துக் கோவில்களுக்கு நிலம் வழங்க பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு

இஸ்லாமாபாத்: இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தானில் உள்ள பல இந்து கோவில்கள் பராமரிக்கப்படாமல் சேதமடைந்துள்ளன. ராவல்பிண்டியில் உள்ள சில கோவில்களில் மட்டும் வழிபாடு நடக்கிறது. இதற்கிடையே, ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரமேஷ்லால், அந்நாட்டு பிரதமர் அஷ்ரப்பை சந்தித்து இஸ்லாமாபாத்தில் இந்து கோவில்கள் கட்ட, நிலம்…

சிரியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் உச்சகட்ட போர்

அலெப்போ : சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் வர்த்தக நகரை மீட்பதற்காக அதிபர் பஷர்-அலி-ஆசாத்தின் அரசுப் படையினர் உச்சகட்ட போரை நடத்தி வருகின்றனர். இருதரப்பிலும் உயிர்ச்சேதம் அதிக அளவில் இருப்பதாக அஞ்சப்படுகிறது. முதல் முறையாக தலைநகர் டமாஸ்கசின் கிறிஸ்தவப் பகுதியில் ஆரம்பித்த இந்த சண்டையில் இதுவரை, 20 ஆயிரத்துக்கும்…

லண்டன் ஒலிம்பிக் 2012 : இறகுப் பந்துப் போட்டியில் சர்ச்சை!

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற்ற எட்டு இறகுப் பந்து வீரர்களை, அனைத்துலக இறகுப் பந்து சம்மேளம் தகுதி நீக்கம் செய்துள்ளது. மகளிர் பிரிவின் இரட்டையர் ஆட்டத்தில், காலிறுதிக்கு முந்தையப் போட்டியில் தெரிந்தே தோல்விடைய முயற்சி செய்தனர் என்கிற குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் ஆளாயினர். காலிறுதிப் போட்டியில் சுலபமாக வெற்றி பெறக்…

ஒலிம்பிக் அரங்கில் பாராசூட்டில் இருந்து குதித்த ‘ராணி எலிசபெத்’

லண்டன்: லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் துவக்க விழா அன்று காண்பிக்கப்பட்ட வீடியோவில் ஜேம்ஸ் பாண்டுடன் பாராசூட்டில் இருந்து ஒலிம்பிக் அரங்கில் குதித்தார் இங்கிலாந்து 'ராணி எலிசபெத்'. லண்டனில் கடந்த 27-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் துவங்கின. துவக்க விழா நடந்த ஒலிம்பிக் அரங்கில் ஒரு வீடியோ காண்பிக்கப்பட்டது. அதில்…

40 ஆண்டுக்கு முன் நிலவில் நடப்பட்ட அமெரிக்க கொடிகள் இன்னும்…

லண்டன்: கடந்த 40 வருடங்களுக்கு முன், அதாவது 1969-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் 6 விண்வெளி வீரர்களுடன் அப்போல்லோ-11 என்ற விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது. நிலவிற்கு வெற்றிகரமாக சென்று இறங்கிய விண்வெளி வீரர்கள், தங்கள் நாட்டின் அறிவியல் மற்றும் பொறியியல் திறமையை பறைசாற்றும் விதத்தில் அங்கு…

லண்டன் ஒலிம்பிக்: இன்று கோலாகல துவக்கம்!

லண்டன்: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகலமாக துவங்குகிறது. இதில், பங்கேற்று மகத்தான சாதனை படைக்க உலக விளையாட்டு நட்சத்திரங்கள் காத்திருக்கின்றனர். பிரிட்டன் தலைநகர் லண்டனில், 30வது ஒலிம்பிக் போட்டி (ஜூலை 27-ஆக., 12) நடக்க உள்ளது. இதில், இந்தியா உட்பட 204 நாடுகளை…

சிரியாவின் போக்கு : பான் கீ மூன் கண்டனம்

பெல்கிரேட் : சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் மீது ரசாயன ஆயுதங்களை பிர‌யோகிப்பதாக கூறப்பட்டதற்க ஐ.நா. பொதுச்செயலர் கண்டனம் தெரிவித்துள்ளார். சிரியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அதிபர் பஷார் அசாத்திற்கு எதிராக மக்கள் கிளர்‌ச்சி செய்து வருகின்றனர். ஐ.நா.தூதுக்குழு அனுப்பி வைத்தும் அங்கு சண்டை ஓயவில்லை. தற்‌போது கிளர்ச்சியாளர்கள்…

லண்டனை வலம் வருகிறது ஒலிம்பிக் சுடர்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை லண்டனில் கோடைகால ஒலிக்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அந்தப் போட்டியின் சுடர், பிரிட்டனின் பல பகுதிகளில் பயணித்த பிறகு தற்போது லண்டனின் பல பகுதிகளில் அது வலம் வருகிறது. ஞாயிற்றுக்கிழமை(22.7.12), இந்த ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள கிழக்கு லண்டன் பகுதியின் பல இடங்களுக்கு இந்த ஒலிம்பிக்…

முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தினருக்கு சவுதி எச்சரிக்கை

ரியாத்: ரம்ஜான் நோன்பின் போது, முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தினர், வெளியிடங்களில் சாப்பிடுவதோ, குடிப்பதோ, புகைப்பதோ கூடாது என, சவுதி அரேபிய அரசு எச்சரித்துள்ளது. ரம்ஜான் நோன்பு நேற்று துவங்கியது. சவுதி அரேபியாவில், நேற்று முன்தினமே, இந்த நோன்பு துவக்கப்பட்டு விட்டது. சவுதி அரேபியாவில், ஒருகோடியே 90 லட்சம்…

சிரியா அதிபரின் மைத்துனர், பாதுகாப்பு அமைச்சர் கொல்லப்பட்டனர்

சிரியாவின் அதிபர் அஸ்ஸதின் மைத்துனரான அஸ்ஸிஃப் ஷெளக்கத் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகம் அறிவித்துள்ளது. அஸ்ஸிஃப் ஷெளக்கத் அந்நாட்டின் பாதுகாப்புத் துறையில் மிகவும் செல்வாக்குமிக்க நபராக இருந்துவந்தவர். தலைநகர் டமஸ்கஸ்ஸிலுள்ள தேசியப் பாதுகாப்பு பணியக தலைமைக் கட்டடத்தின்மீது நடத்தப்பட்டுள்ள தற்கொலைத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர்…

சிரியாவில் தொடரும் வன்முறை: பொருளாதார தடை விதிக்கப்படுமா?

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக போராட்டம் நடைபெறுவதை ராணுவம் ஒடுக்கி வருகிறது. இதில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகிறார்கள். இந்த வன்முறை சாவுகளை தடுக்க முக்கிய நகரங்களில் இருந்து ராணுவத்தை வாயஸ் பெற்று போர் நிறுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் அங்கு வன்முறை ஓயவில்லை. இதனை அடுத்து புதிய நடவடிக்கையாக…

94-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் மண்டேலா

வயதால் மிகவும் மெலிந்து தளர்வடைந்து மக்களின் பார்வையில் படாமல் மறைந்து வாழ்ந்து வரும் தென் ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா வரும் புதனன்று தனது 94-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக அமைதி வழியில் போராடி அதற்காக 27 ஆண்டுகள் சிறை…