தலைமன்னார்- தனுஸ்கோடிக்கு பாலம் அமைக்கப்படுவது உறுதி!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் முகமாக தலைமன்னாருக்கு தனுஸ்கோடிக்கும் இடையிலான பாலம் அமைப்பது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மூன்று நாள் பயணமாக புதுடெல்லி சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜையும்…

மன்னார் ஆயருக்கு நடந்தது என்ன??? வெளிவந்தது உண்மை! அதிர்ச்சித் தகவல்

மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் மன்னார் ஆயருக்கு கொடுத்த தேனீரை அருந்திய பின்னரே அவர் சுகயீனமுற்றுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழ் தேசிய போராட்ட வாழ்வில் மன்னார் ஆயரின் பங்கு என்ன என்பதனை அனைத்து தமிழ் மக்களும் நன்கு அறிந்துள்ளதோடு, மன்னார் ஆயரின் பலம் தொடர்பில் சர்வதேச…

இந்தியா தொடர்ந்தும் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சிகளை வழங்கும்! இந்தியப் பிரதமர்…

இலங்கை இராணுவத்திற்கான பயிற்சிகளை இந்திய அரசாங்கம்  தொடர்ந்தும் வழங்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மூன்று நாள் பயணமாக நேற்று புதுடெல்லியைச் சென்றடைந்தார். இன்று காலை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த அவர், பின்னர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப்…

வெளிநாட்டு நீதிபதிகளினால் உள்ளக விசாரணை நடந்தால் மட்டுமே தமிழருக்கு நீதி…

வெளிநாட்டு நீதிபதிகளின் குழுக்கள் கொண்ட குழுவினரால் உள்ளக விசாரணை நடைபெற்றால் மட்டுமே தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும். இல்லாவிட்டால் நீதி கிடைக்காது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார். ஐ.நா. விசாரணை வேண்டுமென வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர்களால் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரையான…

புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கின்றாரா?

இறுதி யுத்தம் முடிந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிய செய்தி 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி இலங்கை முழுவதும் ஒரு பரபரப்பான செய்தியாக வெளியானது. அதாவது கடந்த 30 ஆண்டுகளாக வடகிழக்கில் நிலவி வந்த விடுதலைப் புலிகளின் யுத்தம் முடிவடைந்து விட்டது. புலிகளின் தலைவர்…

வடக்கு முதல்வரின் கால்களை கட்டிப்பிடித்தவாறு கண்ணீர்மல்கிய உறவுகள்

“ஐயா.. எங்கள் பிள்ளைகளை மீட்டு கொடுங்கள்” எனக்கேட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் முதலமைச்சரின் கால்களை கட்டிப்பிடித்தவாறு கண்ணீர்மல்க கதறியழுத சம்பவம் இன்று முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. சர்வதேச விசாரணை பொறிமுறையினை கோரி கிளிநொச்சி நகரில் ஆரம்பமான நடைபயணம் இன்று நிறைவுக்கு வந்த நிலையில், குறித்த நடை பயணத்தில் பங்கெடுத்த காணாமல்போனவர்களின்…

தமிழர்களை மீண்டும் கைவிடும் ஐ.நாவும் தமிழர்களுக்கு முன்னுள்ள பணிகளும்..

வன்னி பெருநிலப்பரப்பில் மனிதாபிமான பணிகளை முன்னெடுத்து வந்த ஐ.நா உட்பட்ட சர்வதேச மனிதாபிமான அமைப்புகள், சிறீலங்கா அரசாங்கத்தின் பணிப்பின் பேரில் 2008 செப்டெம்பர் 16 ம் திகதி வன்னியை விட்டு வெளியேறின. இந்த வெளியேற்றம் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் ஆகின்ற நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முப்பதாவது…

குற்றம் சுமத்தப்படும் இராணுவ அதிகாரிகள் பணியாற்றிய பகுதிகளும் ஐநா அறிக்கையில்…

குற்றம் சுமத்தப்படும் இலங்கை இராணுவ அதிகாரிகள் பணியாற்றிய பகுதிகளும் ஐநாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் போர்க்குற்றச் செயல் அறிக்கையில் படையினர் கடமையாற்றிய வலயங்கள் பற்றிய விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள்…

மங்கள, மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்தார்! ஐ.நா அறிக்கைக்கு 5…

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச உள்ளிட்டு இலங்கையின் இராஜதந்திரிகள் நேற்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்துள்ளனர். ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசைனுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கை, இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறை…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இலங்கையிடம் கையளிப்பு

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வு நாளை மறுதினம் (14) ஆரம்பமாகவுள்ளதுடன் அதன்போது குறித்த அறிக்கையை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அறிக்கை…

உள்ளக விசாரணையில் சாட்சியங்களுக்கு பாதுகாப்பில்லாத போது நீதியான விசாரணை நடக்காது!…

உள்ளக விசாரணையில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க கூடிய நிலையில் இலங்கை இல்லாத நிலையில் எவ்வாறு நீதியான விசாரணை நடக்கும். இது முழுமையாக ஏமாற்று வேலையே என்பதனை தமிழரசுக்கட்சியின் தலைமையும் அறிய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் அக் கட்சியின் அலுவலகத்தில் வாக்களித்த…

இலங்கைக்கு எதிரான சர்வதேச போர்க்குற்ற விசாரணை முடிவுக்கு வருகிறது? ஜெனீவா

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பான போர்க்குற்ற அறிக்கையை இறுதிப்படுத்தியதை அடுத்து இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அதிகாரிகள்  இதனை தெரிவித்துள்ளனர். தமது இறுதி அறிக்கையின் இரண்டு பிரதிகளை ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள்  இலங்கையிடம் கடந்த வெள்ளிக்…

முள்ளிவாய்க்கால் முடிவில் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த இலங்கை!

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் 2009இல் நடந்த இறுதி யுத்தத்தின் வெற்றிக்காக இலங்கை இந்தியாவுக்கு நன்றி தெரிவித்ததாக  வாசகர் ஒருவரின் கேள்விக்கு விகடன் சஞ்சிகையின் கழுகார் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்‌ச அமைச்சரவையில் அங்கம் வகித்த கருணா, பிரபா கணேசன் போன்ற முன்னாள் அமைச்சர்கள், இலங்கையில் போர் நடத்தியதும் நடக்கக் காரணமாக…

சகலரும் ஏற்கக் கூடிய உள்ளக விசாரணை விரைவில் ஆரம்பம்!- பாதுகாப்பு…

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று தேவையில்லை. மாறாக சகலரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளக விசாரணை வெகு விரைவில் நடத்தப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நேற்று ருவான்…

இலங்கையை இந்திய மாநிலமாக மாற்ற முயல்வதாக குற்றச்சாட்டு

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சிபா (Comprehensive Economic Partnership Agreement (CEPA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் விரிவான பொருளாதார கூட்டுறவுக்கான ஒப்பந்தம் ஏற்பட்டால் அதனால் இலங்கை மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய அழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. வியாழனன்று மாலை கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது…

“இலங்கை நீதிக்கான தேடல்” கலம் மக்ரேவின் அடுத்த ஆவணப்படம் வெளியீடு

இலங்கையின் போர்க்குற்றங்களை, சனல் 4 தொலைக்காட்சி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படுத்தியவர்களில் ஒருவரான போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தின் இயக்குனர் கலம் மக்ரே, மற்றொரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார். “இலங்கை நீதிக்கான தேடல்” (Sri Lanka: The Search For Justice) என்ற தலைப்பில் இந்த அரை மணிநேர ஆவணப்படம்…

போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் நடைமுறை! அமெரிக்காவின் விசேட தூதுவர் கோரிக்கை

இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ரெப் கோரிக்கை விடுத்துள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கான அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ரெப் இந்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார். இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணைப் பொறிமுறையில்…

ஐ.நா கூட்டத் தொடருக்கு அனுப்பப்படுகிறது வட மாகாண சபையின் இனப்படுகொலைத்…

வட மாகாண சபையில் 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான இரண்டு தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத்தொடரை முன்னிட்டு மனித உரிமைகள் ஆணையகத்திற்கு அனுப்ப ஏற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. இதேவேளை தமிழ் மக்கள் இலங்கையில் எதிர்கொண்டுள்ள ஒடுக்குமுறை சார்ந்த இரு தீர்மானங்கள் 47 உறுப்பு நாடுகளிலும்…

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு போதியளவு ஆதரவு கிடைக்கும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு போதியளவு ஆதரவு கிடைக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு ஆதரவு கிடைக்கும் என நம்;புவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் மீது…

வடமாகாண சபையின் தீர்மானம்! ஐ.நா சபை மற்றும் அங்கத்துவ நாடுகளுக்கு…

வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இன அழிப்பு தொடர்பான முக்கியமான இரு தீர்மானங்கள், முதலமைச்சரின் கடித தலைப்பு மற்றும் கையெழுத்துடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கும், 47 அங்கத்துவ நாடுகளுக்கும் கையளிக்க முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஒப்புதல் வழங்கிருந்தார். இந்நிலையில், குறித்த இரு தீர்மானங்களையும், தனது கையொப்பத்துடன் இன்றையதினம் மாகாணசபை…

தமிழர் பிரச்சினையை வெறுமனே பொருளாதார பிரச்சினையாக கருத முடியாது: மனோ…

பொருளாதார பிரச்சினை என்று கூறி தமிழர் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியாது என்று தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, வைத்தியசாலைகளை அமைத்தல் மற்றும் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி என்ற அடிப்படைகளை மேற்கொண்டால், இனப்பிரச்சினையை தீர்த்து விடலாம் என்று வாதிடுகின்றனர். எனினும் அதிகாரப்…

மண்டையில் சுடும் சிங்கள ராணுவத்தை அடையாளம் காண முற்படுகிறதாம் இலங்கை…

இலங்கை அரச படைகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கும் சனல்4 ஆவணப்படங்களில் இடம்பெறும் இராணுவ உறுப்பினர்களை அடையாளம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத் தொடர் ஜெனீவா நகரில் இடம்பெறவுள்ள நிலையிலேயே இலங்கை இராணுவ நீதிமன்று இந்த…

யாழ்ப்பாணத்தில் முளைவிட்டுள்ள அரசியல் மோதல் – இந்திய நாளிதழ்

2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் வெளியேற்றத்தின் பின்னர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் அரசியலில் ஈடுபட்டுள்ள மிதவாதிகளுக்கும் கடும்போக்காளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது என்று இந்திய நாளிதழ் ஒன்று எழுதியுள்ளது. இந்த மோதல் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன்,  தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்தே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.…