பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சரக்குக் கப்பலை இலங்கை கடற்பரப்பில் மூழ்கடித்த நிலாம் புயல்!
கொழும்பு: மியான்மரிலிருந்து இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் நிலாம் புயலில் சிக்கி இலங்கை கடற்பரப்பில் மூழ்கி விபத்துக்குள்ளானது. கப்பலில் பயணித்த 22 பேரில் 18 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும் 4 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. வியட்னாம் நாட்டுக்கு சொந்தமானது சாய்கோயின் குயின் என்ற…
ஐ.நா. துணைப் பொதுச்செயலாளரிடம் டெசோ தீர்மானம் வழங்கப்பட்டது
நியூயார்க்: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நியூயார்க் நகரில் ஐ.நா. சபை துணைப் பொதுச்செயலாளரை சந்தித்து ‘டெசோ' மாநாட்டு தீர்மானங்களை வழங்கினார். சென்னையில் நடைபெற்ற ‘டெசோ' மாநாட்டின் தீர்மானங்களையும், ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் வழங்கப்பட உள்ள மனுவினையும், கருணாநிதி சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற தி.மு.க.…
ஆஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி
ஆஸ்திரேலியாவில் இருந்து நேற்று இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒருவர் Read More
இலங்கை மனித உரிமைகள் நிலவரம்: ஐநாவில் இன்று விவாதம்
ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கை குறித்த விவாதம் நடக்கவுள்ள நிலையில் பிற உறுப்பு நாடுகள் இலங்கை மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தோற்கடிக்கப்பட்ட போதிலும் –…
ஈரான் மீதான தண்டனைத் தடைகளால் சிலோன் டீ ஏற்றுமதியில் பாதிப்பு
ஈரான் மீது விதிக்கபட்டுள்ள சர்வதேச தண்டனைத் தடைகள் இலங்கை தேயிலையின் ஏற்றுமதி விலையில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாக இலங்கையின் தேயிலை வர்த்தகர்கள் கூறுகின்றனர். இலங்கையிடம் இருந்து மிக அதிகமாக தேயிலை வாங்கும் நாடுகளில் ஒன்று இரான் ஆகும். இரானுக்கான இலங்கையின் தேயிலை ஏற்றுமதி தொழிலில் தற்போது நிலவரம்…
அரசியலில் நுழையும் எண்ணம் தற்போதைக்கு இல்லை: கே.பி
இலங்கை அரசியலில் ஈடுபடுவதற்கான எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும், தற்போது இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இயங்குபவருமான குமரன் பத்மநாதன் (கேபி) தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் - அரியாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை…
இளையராஜவின் இசை நிகழ்ச்சி ரத்தாகும் கட்டத்தில்?
இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடாவில் அடுத்த மாதம் நடக்க இருந்தது. இதில் நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர்கள் உளளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்த 100 பேர் பங்கேற்க தயாராகினர். இந்த இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகைகள் சென்னையில் நடந்து வந்தன. எனினும், இந்த இசை நிகழ்ச்சிக்கு கனடாவில் உள்ள தமிழர்களில்…
இலங்கையில் கடுமையான மழை; இயல்பு நிலை பாதிப்பு
இலங்கையின் வடபகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாக்கத்தையடுத்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. காற்று மழையுடன் கூடிய சீரற்ற காலை நிலை காரணமாக வடக்கு மற்றும் ஏனைய பகுதி மீனவர்கள்…
இலங்கைக்கு நெருக்கடிகளை கொடுக்கவேண்டும்; தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம்
ஐ. நா. மனித உரிமை பேரவையில் எதிர்வரும் முதலாம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு நெருக்கடிகளைக் கொடுக்க இந்தியா செயற்பட வேண்டும் என்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழர்களின் அரசியல் உள்ளிட்ட எந்தவொரு பிரச்னைக்கும் இலங்கை அரசு பொறுப்புடமையுடன்…
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிக்கு தீர்ப்பாயத்தில் வாதாட அனுமதி
இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிக்கு, அந்த அமைப்பின் தடையை நீக்குவது தொடர்பிலான வழக்கில் வாதாடுவதற்கு நீதிபதியின் அனுமதி கிடைத்திருக்கிறது. விடுதலைப் புலிகள் மீதான தடையினை இந்திய மத்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்து பிறப்பித்த ஆணை சரியானது தானா என்பதை ஆராய்ந்துவரும்…
மலேசிய கப்பலை கைப்பற்றுமாறு இலங்கை நீதிமன்றம் உத்தரவு
மலேசிய கொடியை தாங்கிய எம்.ரி.சாக் சீரியஸ் என்ற கப்பலை கைப்பற்றுவதற்கான பிடியாணை ஒன்றை இலங்கையின் கொழும்பு உச்சநீதிமன்றம் நேற்று பிறப்பித்துள்ளது. கப்பலில் பணிபுரிந்த ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்காமல் இருப்பதனால் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு ஒன்றில் கூறப்பட்டுள்து. இந்த கப்பலில்…
கூடங்குளம்: வடஇலங்கையிலும் எதிர்ப்பு துண்டு பிரசுரங்கள்
தமிழகத்தில் நீண்ட போராட்டத்துக்கு காரணமாகியுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான கருத்துக்களுடன் Read More
அறுபது பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்புகிறது பிரிட்டன்
பிரிட்டனிலிருந்து மேலும் ஒரு தொகுதி குடியேறிகள் இலங்கைக்குத் திருப்ப அனுப்பப்படவிருக்கின்றனர். அறுபது பேர் செவ்வாயன்று தனி விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்டவர்கள்,விசா காலம் முடிந்தும் நாட்டில் தங்கியிருந்தவர்கள் போன்றோர் தற்போது திருப்பி அனுப்பப்படுபவர்களில் அடங்குவர். திருப்பி அனுப்பப்படுகின்றவர்களில் சுமார் முப்பது பேர் கடந்த…
13ஆவது திருத்தத்தை இலங்கை நீக்கக்கூடாது என தமிழ்நாட்டில் எதிர்ப்பு
இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கு வழிசெய்யும் அந்நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13வது சட்டத் திருத்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அங்கே பல்வேறு தரப்புக்களிலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அத்தகைய முயற்சிகளுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு உருவாகியிருக்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரிவின் துணை பொதுச்செயலாளர் மகேந்திரன், இலங்கையில்…
கேபி வெளியே இருக்க நாங்கள் உள்ளே இருப்பதா? நியாயம் கேட்கும்…
இலங்கையில் பல தமிழ் அரசியல் கைதிகள் பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ள மகசின் சிறைச்சாலைக்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று அக்கைதிகளை சந்தித்தனர். இந்த சந்திப்பில், தமிழ்க் கைதிகள் தாங்கள் பல ஆண்டுகளாக விசாரணை இன்றி, அல்லது விசாரணைக்கு முடிவு இன்றி, சிறையில்…
13வது அரசியல் சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய முயலும் இலங்கை அரசு;…
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றிய 13வது அரசியல் சட்டத்திருத்தத்தை இலங்கை அரசு ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் இலங்கையில் முன்வைக்கப்பட்டுவருகின்றன. இதை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசு ஒருக்கால் 13வது சட்டத் திருத்தத்தை ரத்து செய்யுமானால் அது அரசியல் ரீதியாக பிழையான ஒரு நடவடிக்கையாக இருக்கும் என…
உரிமைக்காக போராடியவர்கள் வெள்ளத்தில்; கண்டுகொள்ள மறுக்கும் புலம்பெயர் தமிழர்கள்!
வன்னியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக போரினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களின் கூடாரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மக்கள் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு மீண்டும் இடம்பெயர்ந்து வருகின்றனர். கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக வன்னியில் கடும் வரட்சியும் நீர்பற்றாக்குறையும் ஏற்பட்டது. விவசாய நிலங்கள்…
இலங்கையின் கோரிக்கை இந்தியாவால் நிராகரிப்பு
தமிழ் நாட்டில் உள்ள கூடங்குளத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள அணு மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த பாதுகாப்புக் கண்காணிப்புக் குழுக்களில் இலங்கையரும் அங்கம் வகிக்க வேண்டுமென்ற இலங்கையின் நீண்ட காலக் கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளதாக இலங்கை அணுசக்தி அதிகார மன்றத் தலைவர் கலாநிதி ரஞ்சித் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.…
கே.பி மீது எந்த வழக்கும் இல்லை என இலங்கை அரசாங்கம்…
இலங்கையின் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, தற்போது உயிருடன் இருப்பவர்களில் மூத்த தலைவரான கே.பி எனப்படும் செல்வராசா பத்மநாதன் மீது தற்போது எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை என்றும் அவர் மீது இனிமேல் எந்த குற்றச்சாட்டுக்களையும் பதியும் எண்ணம் இலங்கை அரசுக்கு இல்லை என்றும் இலங்கை தேசிய பாதுகாப்புக்கான ஊடக…
விரைவில் அரசியல் தீர்வு காண வேண்டும்: இலங்கையிடம் பான் கி…
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்றது. இந்தப் போர் 3 ஆண்டுகளுக்கு முன்பாக முடிவுக்கு வந்தது. ஆனாலும் போரினால் நிர்மூலமாக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் மறுகுடியமர்த்துதல் பணிகள் இன்னும் முடிவு அடையவில்லை. அதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் இன்னும் முள்வேலிகளுடன்…
இலங்கையில் சீனா கட்டும் விமான நிலையத்தில் வெள்ளோட்டம்
கொழும்பு: இலங்கையின் தென்பகுதியில் உள்ள ஹம்பன்தோட்டா மாவட்டம் சீன உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஹம்பன் Read More
இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த மற்றுமொரு ஆவணம்
யேர்மனியில் நடைபெற்று வரும் உலகளாவிய மிகப் பெரிய புத்தக கண்காட்சி விழாவில் யேர்மனி வடகிழக்கு மனித உரிமை செயலகம் (NESoHR) தொகுத்து வெளியிட்ட "தமிழினப் படுகொலைகள்" என்ற நூல் ஜேர்மன் மொழியில் "Damit wir nicht vergessen...” Massaker an Tamilen 1956–2008 எனும் தலைப்பில் நேற்று ஜேர்மனியில்…
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்காது: ஐ.தே.க
இலங்கையில் 13-ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமென இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே கூறியிருக்கும் கருத்தானது, அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் அதிகாரப் பரவலாக்கலை வழங்கப்போவதில்லையென்பதற்கான உறுதியான நிலைப்பாடு ௭ன்று இலங்கையின் எதிர்க்கட்சியான ஐ.தே.க தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு பல தடவைகள் பயணங்களை மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்தா…
