மூட நம்பிக்கை………………. (ஆதிநேசன்)

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

taddaanA“எங்கே போகிறாய்”..?
என்று எவரையும் கேட்காதே…!
என்றாய்….!
எங்கோ போய் கொண்டிருக்கிறது…!
எல்லை மீறி..
எங்கள் தமிழ் சமுதாயம்…!!?

“விளக்கேற்றி வீட்டை கூட்டாதே” ..!
விளக்காமல் சொன்னாய்…!
விடிந்தது..!
வீட்டை கூட்டியும்…..
வீட்டுக்குள்..
விளங்காத குப்பைகளாக……!
வாழ போகும்..
வாரிசுகள்….!!?

“குறுக்கே பூனை”…!
கடந்து போகாதே என்றாய்….!
காத்திருக்கவில்லை…..!
காகிதத்தில் வந்த வேலை…….!!
கடந்து போனது…
காலதாமதம் ஆன…..
கால்களால்…!!?

“பொருத்தம் சரியில்லை”…!
புதுக்கதைகள் சொன்னாய்…!
புரிந்து கொண்டோம்…!
பணப்பை காலி…..!
பிச்சை எடுக்க…
புதுவழியென்று…!!?

சரித்திர தமிழர்கள்
சரிந்து கிடக்கிறோம்…!
சாக்கடை என்பதை மறந்து…
சாதிக்கும் திறனும்
சிதைந்து….!!
சுயமாய்
சிந்திக்க மறந்து…!
சொல்வதில் பொருளின்றி
சுழன்று….!!!!?

– ஆதிநேசன்(எம்.எஸ்.கணேசன்), கிமிஞ்செ, நெ.செம்பிலான்

TAGS: