வாழ்க்கை கணிதம்……….(ஆதிநேசன்)

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

ganesanAஅன்று
உறவுகளாய் கூடினோம்…!
உண்மைகளை தேடினோம்…!

நேற்று
வாழ்க்கையை கழித்தோம்..!
வன்முறையில் ஒழிந்தோம்…!

இன்று
பிரிவுகளை வகுத்தோம்…!
பரிவுதனை மறந்தோம்..!

நாளை
பாவிகளாய் பெருகினால்..!
பாதையின்றி தவிப்போம்..!

என்றும்
விடை தேடும் …..
வாழ்க்கை கணிதத்தில்……………

அன்பை கூட்டினால் மட்டுமே..
துன்பங்கள் கழிந்திடும்..!!

நேரத்தை வகுத்தால் மட்டுமே..
வெற்றிகள் பெருகிடும்…!!!

-ஆதிநேசன்(எம்.எஸ்.கணேசன்),கிமிஞ்செ,நெ.செம்பிலான்

TAGS: