தமிழ்த்தாய் படுகொலை

isai-priyaதன்மானம் இல்லாததமிழனே

தலை குனிந்து வெட்கப்படு!

இசைப்பிரியா படுகொலை

உலகத் தமிழர்களுக்கு

நேர்ந்த அவமானம்..

 

வெறிநாய் ஆட்சியால்

வன்முறைக்கு ஆளானது

கயவர்களால் கற்பழிக்கப்பட்டது

படுகொலை செய்யப்பட்டது

இசைப்பிரியா அல்ல

தமிழ்த்தாய்!

 

ரத்த ஆறு ஓடிய

புத்தர் மண்ணில்

கூட்டுப் படுகொலை அவலம்

சொல்லில் எழுத முடியாத

வேதனை படலம்

 

தம் சரணம் கச்சாமி  மந்திரம்

அருள் ஒளி வீசும்

புத்த பெருமான் கண்களின்

வற்றாத ரத்த ஊற்றுக்குக் காரணமானது

 

தமிழன்

உணர்ச்சியற்றமரம்தான்;

மறத்தமிழன்

மறந்தான் மறந்தான்

தன்நிலை  இழந்தான்

தன்மானம் துறந்தான்.!

 

இன உணர்வு

மொழி உணர்வு இல்லாத

தமிழினத்தில்

கூட்டுப்படுகொலை

உலகம் வேடிக்கையாய் பார்க்க

நாகரிகமாய் நடக்கும்!

– சத்யா