நெல்சன் மண்டேலா………..(ஆதிநேசன்)

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

ganesanAநெகிழ்ந்தேன்- நெஞ்சம் மகிழ்ந்தேன்
நேற்றுவரை நீ வாழ்ந்தவரை -மண்ணில்…!
துடித்தேன் -துயரில் மனம்வெடித்தேன்
தூக்கமில்லை இன்றளவும்-கண்ணில் ..!

nelson-mandelaஅறிந்தேன்-அமைதியை கண்டேன்..
ஆப்பிரிக்கா காந்தியென்ற உன்னில்…!
உறைந்தேன்-உண்மை உணர்ந்தேன்..
உயர்வுமில்லை தாழ்வுமில்லை என்னில்..!

விழித்தேன்-விடிவே நெல்சனென்றேன்..
விடுதலைக்கே குடையானாய் விண்ணில்..!
சிலிர்த்தேன்-சிறைசென்றதை நினைத்தேன்..
சிலைசெய்வோம் உனக்காக பொன்னில்..!

இணைந்தேன்-மனிதனாய் கலந்தேன்..
இதுஇந்த உனக்கான பன்னில்…!
மறந்தேன்-மறுப்படியும் மகிழ்ந்தேன்..
மரணமே வாழவைக்கும் உன்னை…!

-ஆதிநேசன் (எம்.எஸ்.கணேசன்)
  கெமெஞ்செ,நெ.செம்பிலான்.

TAGS: