நம்மினக்குப்பைகள்………..(ஆதிநேசன்)

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

ganesanA….வீனின் குப்பைகள்
நாடுமுழுதும்
நாறிக்கொண்டிருக்கும் வேளையில்……

எழுத்து சுதந்திரம்
என்று….
ஏன் இன்னும்
எறியப்படுகிறதோ சகதிகள்…?!!

கண்மூடித்தனமாய்
கை தூக்குவது
கண்ணியமல்ல….!
கற்புக்கும் விலைப்பேசும்..
கால வேசிகளின்..
கோமாளித்தனம்…!!

விழுந்தவைகள் மலமென்று…
வல்லினத்தில்
வந்து குவிந்துக்கிடப்பது…
வண்ணம் தீட்டப்பட்டும்..
வாடை வீசும் பிணங்கள்…!!

கண்டனத்திற்கும்
கலங்காதது வீரமல்ல….!
குருதிகளுக்கு பதிலாக
கறைகளால் ஓடும் இதயங்களின்…
குலங்கெட்ட ஈனம்…!!

காட்சிகளாக்கப்பட்டவை
கவிதைகளுமல்ல…
குழியில் வீசவேண்டிய
குப்பைகள்….!!!

சாகடித்தான்
சாக்கடை வார்த்தைகளால்…
சுல்கிப்ளி நோர்டின் அன்று ….!

சினம் மறந்த…
சாது இந்துக்களை-மீண்டும்
சமாதி கட்டுகிறான்
சலனமில்லாமல்…
சொந்த இனத்திலேயே
சாத்தான் தயா…. இன்று ….!!!

தாய் பேச்சை
தட்டிக்கெடும்
தறுதலையானாலும்….
தரங்கெட்ட
தயா….யாகிவிடாதீர்களென….
தளரும் நிலையில்
தமிழினம்….!!!

வெட்கப்பட வேண்டியவன்
வீராப்பு பேசுகிறான்…!
வேதனைப்படுகிறோம்
வாதம் செய்து……..!
வாழ்க நம்மினம்…!!!

-ஆதிநேசன் (எம்.எஸ்.கணேசன்)
  கெமெஞ்செ,நெ.செம்பிலான்.

TAGS: