நிம்மதியாய் இரு! …………..(கே. இனியவன்)

orcha_185132தூங்கடா தம்பி தூங்கு
நீ விழித்தால் பசி என்று
சொல்வாய் அதை கேட்கும்
கொடுமையை விட நீ
தூக்கமாய் இருகிறாய்
என்ற நிம்மதியில்
இருப்பேன்
தூங்கடா தம்பி தூங்கு …!!!

அண்ணா நீ பேசும்
இதய ஓசை எனக்கு
கேட்கிறது
உனக்காகவே நான்
தூங்குவது போல்
நடிக்கிறேன்
எழுதிருக்க மாட்டேன்
நிம்மதியாய் இரு …..!!!

-கே. இனியவன்

TAGS: