அன்புள்ள நஜிப், நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்

பி. குணசேகரம் – அன்புள்ள டத்தோஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக்,  அல்லது நான் உங்களை “அப்பா மாலு போஸ்-கு” என்றும் அழைக்கலாம். அப்படி அழைப்பதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவது போல் தெரிகிறது. வெளிப்படையாகச் சொன்னால்  நீங்கள் வெட்கம் அல்லவா பட வேண்டும். மலேசியாவில் உள்ள மற்ற எவரையும் விட மிகவும் வெட்கப்பட வேண்டும்.

ஏனென்றால் நீங்கள் இந்த நாட்டில் இருந்து பல பில்லியன் ரிங்கிட்டை திருடியதாகவோ அல்லது திருடப்பட்டதாகவோ குற்றம் சாட்டப்பட்டது, ஒரு வரலாற்றுச் சாதனையாகும்..

அரசாங்க உத்திரவாதங்களைக் கொண்ட கோல்ட்மேன் சாக்ஸ் பண்டு பத்திரங்களிலிருந்து மட்டும் 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தற்போதைய மாற்று விகிதத்தில் RM27.3 பில்லியன்) மற்றும் SRC இன்டர்நேஷனல் RM4 பில்லியன் – உலகிலேயே மிகப் பெரிய அரசியல் ஊழல் அரசாங்கத்தை (கிளெப்டோகிராசியை) உண்டாக்கிய பெருமையை    நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். இதுவரை மட்டும் RM31.3 பில்லியனாக உள்ளது,

2009 முதல் 2018 வரை, நீங்கள் முதலிடத்தில் இருந்த அந்த ஒன்பது வருடங்களில் அதிக சேதத்தை ஏற்படுத்திய மலேசியாவின் மிக மோசமான, அழிவுகரமான பிரதமராக நீங்கள் பதிவாகி உள்ளீர்கள்.

ஆம், 22 ஆண்டுகள் ஆட்சி செய்தவரை விடவும், 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2018 இல் அவரே மேலும் 22 மாதங்களுக்கும் மேலாக, இந்த நாட்டின் செல்வத்தை பறித்த அவரையும் மிஞ்சி முதலிடம் பிடித்தீர்கள்.

அளப்பரிய வகையில் அவரது நண்பர்கள் பயனடைய திட்டங்களை வழங்கி அவர் அதைச் செய்தார்.

​​​​நீங்கள் ஒரு புதிய வழிமுறையை கொண்டு வந்தீர்கள். சீரழிவின் புதிய ஆழத்திற்கு நாட்டை கொண்டு சென்றீர்கள். இது உலக வரலாற்றில் ஒரு புதிய சாகாப்தம்.

கடன் வாங்குதல் – இதுதான் உங்களின் திட்டம். அரசாங்கத்தின் கீழ் நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் வழி கடன் வாங்குதல். உலக சந்தையில் பணத்தை கடன்களை வாங்கி வாங்கி அதற்கு அரசாங்கத்தின் உத்தர்வாதத்தை கொடுத்தீர்கள்.

நீங்கள் உருவாக்கிய நிறுவனங்களின் வழி கடனாக வாங்கிய பணத்தை முதலீடு என்ற பெயரில் பலவகையான மாயை திட்டங்களின் வழி உங்களின் கட்டுப் பாட்டில் இருந்த வங்கி கணக்குகளில் அந்தப்பணம் வந்து சேர வழி வகுத்தீர்கள்.

பின்னர் இல்லாத திட்டங்களுக்காகவும், உங்கள் கூட்டாளியின் கட்டுப்பாட்டில் உள்ள கணக்குகளிலும் மோசடியாக பணத்தை நிறுவனத்திலிருந்து வெளியேற்றவும் பயன் படுத்தவும் வழி வழி செய்தீர்கள்.

உங்கள் சதியின் தோழர் ஜோ லோ. அவர் மலேசியாவில் உள்ள உங்கள் கணக்குகளுக்கு பில்லியன் கணக்கான ரிங்கிட்டை அனுப்பினார்.

1MDB கடனாக பெற்ற பணம் திருடப்பட்டதை அமெரிக்க நீதித்துறை கண்டறிந்தது, ஜோ லோவின் கணக்கிலிருந்து US$700 மில்லியன் (தற்போதைய மாற்று விகிதத்தில் RM2.94 பில்லியன்) உங்கள் கணக்கிற்கு நகர்த்தப்பட்டது அம்பலமானது.

மலேசியாவிற்கு மட்டுமல்ல, உலகிற்கே அரசியல் நிர்வாகத்த்ன் வழி மிகப்பெரிய கொள்ளை அடிக்கும் தரத்தை நீங்கள்தான் அமைத்துள்ளீர்கள் .

ஜோகூர் பிரச்சாரம்

அம்னோவுக்காக ஜோகூர் பிரச்சாரம் செய்வதையும், அங்கு நடக்கும் மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெறுவதன் மூலம் உங்களை ஒரு ஹீரோவாக ஆக்கிக்கொள்ள முயற்சிப்பதும் தெரிகிறது.

நீங்கள் எப்படி வேறுவிதமாக நினைக்க முடியும்? மலேசியர்கள் எதிர்காலத்தில் இன்னும் பல குற்றங்களில் தண்டனை பெறக்கூடிய ஒரு குற்றவாளியை ஆதரிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?

உங்கள் சீனர்களுக்கு எதிர்ப்பு நிலைப்பாட்டோடு இருந்தபோதிலும், 2009 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை நீங்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படும் வரை, 1MDBயின் கட்டுப்பாட்டை அப்போதைய 28 வயதான சீனர்ம் களவாடியிடம் ஒப்படைப்பதில் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

நீங்கள் அவருடன் இணக்கமாக இருந்தீர்கள். அவருக்காகவும் உங்களுக்காகவும் நீங்கள் நாட்டில் இருந்து பணத்தை திருடினீர்கள். மலாய்க்காரர்கள் அல்லது மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள், மலேசியா அல்லது வேறு யாரைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள்?

உங்கள் மனைவி மற்றும் உங்கள் சதிகாரர்கள் தான் எல்லாவற்றுக்கும் மேலாக உங்களுக்கு முக்கியமானவர்கள்.

இந்த ஜோ லோ வெளியே சென்று பில்லியன் ரிங்கிட் படகு ஒன்றை வாங்கி, ஓவியங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பிரபலங்கள் நிகழ்வுகளில் இருப்பதற்காக பணம் செலுத்துதல் போன்ற பெரும் செலவினங்களை மேற்கொண்டார். உங்கள் மனைவிக்கு ஒரு நெக்லஸுக்காக US$27 மில்லியன் (RM113 மில்லியன்) செலவழிக்கப்பட்டது! என்ன ஒரு ஊதாரித்தனம், எல்லாம் பொதுப் பணத்தில்.  தப்பியோடிய ஜோ லோவுக்கு சீனா புகலிடம் அளித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

1MDBயில் உள்ள ஓட்டையை மறைக்க நீங்கள் சீனாவுடன் ஒரு மோசமான ஒப்பந்தம் செய்துள்ளீர்கள், கிழக்கு கடற்கரை ரயில் இணைப்புக்கான RM55 பில்லியன் ஒப்பந்தத்தை RM20 பில்லியன் அதிக விலை கொடுத்து, கிட்டத்தட்ட RM10 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தத்தில் நுழைந்து, எந்த இடத்துக்கும் செல்லாத ஒரு பைப்லைனுக்காக நாட்டு மக்களின் பணம் மொத்தம் RM30 பில்லியனை தாரை வார்த்தீர்கள். இதைவிட மட்டமாக எதுவும் இல்லை!

ரத்தினங்கள் மற்றும் கைப்பைகள்

பின்னர் 2018 மே மாதம் உங்களின் பல்வேறு வீடுகளில் காவல்துறையினரால் சோதனை நடத்தப்பட்டது. அதில், RM900 மில்லியன் முதல் RM1.1 பில்லியன் மதிப்புள்ள மதிப்புள்ள பொருட்களைக் கண்டுபிடித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இதில் 26 கரன்சிகளில் சில RM117 மில்லியன் ரொக்கம், 12,000 நகைகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட டிசைனர் கைப்பைகள் இருந்தன. இவை பரிசுகள் என்ற உங்கள் கூற்று நம்பமுடியாதது. பரிசுகளாக இருந்தால் நீங்கள் குறைந்தபட்சம் அவை புகார் செய்திருக்க வேண்டும் அல்லது அவற்றை சரணடைய வேண்டும் என்பது நிச்சயமாக உங்களுக்குத் தெரியும், ஆனால் நீங்கள் அவற்றை பல்வேறு வளாகங்களில் பதுக்கி வைத்தீர்கள்.

நாட்டுக்கு எதிராக நீங்கள் செய்த அனைத்திற்கும் வெட்கத்தால் தலை குனிந்து அழ வேண்டும். நீங்கள் மனிதராக இருந்தால், நீங்கள் உங்கள் தண்டனையை அனுபவித்து, உங்கள் பாவங்களுக்கு சிறையில் பரிகாரம் காண வேண்டும் – இங்கே அல்லது  மறுபிறப்பில் (நீங்கள் அதை நம்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்). மன்னிப்பு வழங்கப்படலாம்.

ஆனால் நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும், இல்லையா? உங்கள் மீதுள்ள வழக்குகள் நீர்த்துப் போகாதவையாக இருப்பதால், உங்கள் விரக்தியை மறைக்க நாளை இல்லை என்ற நினைப்பில் நாடு முழுவதும் சுற்றித் திரிந்தீர்கள்.

நாளை வரும், ஆனால் நீங்கள் அதை அதிகாரத்தின் வழியும்  செல்வாக்கை கொண்டும் தவிர்க்க முயற்சிக்கிறீர்கள். நீங்கள் வெற்றிபெற மாட்டீர்கள் – மலேசியர்களான எங்களுக்கு உங்களைப் பற்றி அதிகம் தெரியும்.

உங்களுக்குச் சரியான இடம் சிறைதான்.