கோறனி நச்சிலுக்கு  எதிரான போராட்டத்தில், நாம் வெற்றியா அல்லது தோல்வியா?

இராகவன் கருப்பையா- நம் நாட்டின் தற்போதைய பிரதான எதிரியான கோறனி நச்சிலுக்கு எதிரான போரில் நாம் வெற்றியா அல்லது தோல்வியா? அண்மைய வாரங்களாகச் சற்று மோசமாகி வரும் நிலைமையைப் பார்த்தால் ஒருவித அச்சம் நம்மை ஆட்கொள்ளத்தான் செய்கிறது. குறிப்பாக கடந்த சில தினங்களாக கிடுகிடுவென உயர்ந்து வரும் மரண எண்ணிக்கை நமக்கு மிகுந்த கவலையளிக்கும் ஒன்றாக உள்ளது.…

தமிழகத்திற்கு நிதி திரட்டும் ம.இ.கா !  

இராகவன் கருப்பையா- 'உலகத் தமிழர்களே, உயிர் காக்க நிதி வழங்குவீர்' என தமிழ் நாட்டின் புதிய முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த வாரம் அரைகூவல் விடுத்திருந்தது நம் அனைவருக்குமே தெரியும். கோறனி நச்சிலின் தற்போதைய வீரியத்தை சமாளிப்பதற்கு மருந்து வகைகள், படுக்கைகள் மற்றும் பிராணவாயு, முதலியவை அதிக அளவில் தேவைப்படுவதால் புலம்…

பெஞ்சானா கெர்ஜாய திட்டத்தில் ஊழல் என போலிஸ் புகார்!  “நடவடிக்கை எடுங்கள்” – குலசேகரன்

புதிய தொழிலாளர்களைச் சேர்ப்பதற்கான பெஞ்சானா கெர்ஜாய என்ற ஊக்கத் தொகை திட்டம் அதன் இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும், அதில் முறைகேடுகள் இருப்பதாகவும் அவை உடனடியாக சீர் செய்யப்பட வேண்டும் என்கிறார் முன்னாள் மனித வள அமைச்சர் மு.குலசேகரன். பொருளாதாரத்தை  மேம்படுத்துவதற்காகவும் அதிகமான வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே இந்த பெஞ்சானா கெர்ஜாய  திட்டமாகும். கோவிட் 19 தொற்றின் காரணமாகப் பலர்…

கல்வியின்யின் பரிணாமமும் அதில் அடைக்கலமாகும் தன்னலமும்

கி.சீலதாஸ் - ஒரு நாட்டின் கல்விக் கொள்கை, அதன் தரம் காலத்தின் மாற்றத்தைப் பிரதிபலிக்க வேண்டும். நாட்டின் கல்வி முறை சமுதாயச் சூழல்களைக் கவனத்தில் கொண்டிருக்கின்றனவா என நாட்டு நலனில் கரிசனம் கொண்ட குடிமகன் கேட்க உரிமை உண்டு. அதற்கான பதிலைச் சொல்லும் கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு. எந்த…

அறிமுகம்: சூரியா டீச்சர் – ஒரு பன்முக சாதனையாளர்

இராகவன் கருப்பையா -எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். 'மாதா பிதா குரு தெய்வம்' என பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள் உள்ளனர் என்ற போதிலும், இறைவனுக்கு சமமாக போற்றப்பட வேண்டியவர்கள்தான் ஆசிரியர்கள். வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டுள்ள எல்லாருக்குமே ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் ஆசிரியர்கள் ஏணிப்படியாக இருந்திருப்பார்கள் என்றால்…

பேய்ச்சி நாவல் குறித்த போலிஸ் புகார் சிறுபிள்ளத்தனமானது

பேய்ச்சி என்ற ம. நவீன் எழுதிய நாவல் கடந்த வருடம் (2020) அரசால் தடை செய்யப்பட்டது. அது ஒரு தரமான படைப்பாக இருந்தாலும் அதில் உள்ள சில பகுதிகளில் ஆபாசமான சொற்கள் இருப்பதால் அதைத் தடை செய்யக்கோரி புகார்கள் செய்யப்பட்டன. குறிப்பிட்ட அந்த பகுதிகளை அகற்ற நாவலாசிரியர் மறுத்து விட்டார். கலையில் அடிப்படை அம்சம் சொல்வதல்ல; காட்டுவது.…

வாங்க, சமத்துவத்திற்காக ஓடலாம்! – கோமாஸ் இயக்கம்

மலேசியாவில் சமத்துவம் என்பது ஒரு கேள்விக்குறியாகும். இருப்பினும், மலேசியர்கள் அனைவரும் ஒரு சுமுகமான வாழ்க்கையை அரவணைத்து வாழ்கிறார்கள் என்பது நிதர்சனம். விடுதலை மலேசியாவில் வாழ்கின்ற இரண்டாம்  தலைமுறையினர், ஒரு இனபேதமற்ற சமத்துவமான மலேசியாவை உருவாக்க வேண்டும் என்ற சமூக சிந்தனையின் உந்துதல், கோமாஸ் மையத்தின் (PUSAT KOMAS) ஒரு திட்டமாக உருவானது. அது…

சந்தி சிரிக்கிறது இந்திய தலைவர்களின் சர்ச்சை! – இராகவன் கருப்பையா

கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுவரும் 3 நமிடம் 42 விணாடிகளிலான ஒரு காணொலியைக் கண்டு சிரிப்பதா வெறுப்பதா வெட்கப்படுவதா கோபப்படுவதா என்றே தெரியவில்லை. முன்னாள் மனிதவள அமைச்சர் குலசேகரனும் இந்நாள் மனிதவள அமைச்சர் சரவணனும் அந்த காணொலியில் நன்றாகவே கூத்தடிக்கின்றனர் என்றுதான் சொல்ல…

நியமனத்தில் உள்ள அரசியல் கலப்பும்,   அக்ரில் சானியிடம் எதிர்பார்பதும்!

இராகவன் கருப்பையா - நாட்டின் 13ஆவது காவல்படைத் தலைவராக கடந்த 4ஆம் தேதியன்று பொறுப்பேற்ற அக்ரில் சானி மீது மக்களின் கழுகுப் பார்வை சற்று அதிகமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. கடந்த காலங்களில் புதிதாக பொறுப்பேற்ற காவல்படைத் தலைவர்களை விட இவருக்கு தீர்வு காணப்படாத வேலைகள் நிறையவே காத்திருக்கின்றன. கடந்த…

நம் நாட்டுத் தலைவர்களை மறக்கலாமா!

கி.சீலதாஸ் - இந்த நாட்டில் வாழ்ந்ததாக, வாழ்வதாகச் சொல்லப்படும் இந்தியர்கள், அவர்களின் நன்மைக்காக, உரிமைக்காக உழைத்தவர்கள் தங்களின் வாழ்க்கையையும் வாழ்நாளையும் எவ்வித சலனமும் இன்றி, கைமாறு எதுவும் எதிர்பார்க்காமல், நினைக்காமல் வாழ்ந்தவர்கள் யார்? இந்தியச் சமுதாயம் மனிதருள் மனிதராக வாழ வேண்டுமென ஏங்கினவர்கள் யார்? அவர்களின் நல்ல சிந்தைகள் கைகூடாது…

அரசனை நம்பி புருஷனை கைவிடுமா ம.இ.கா.? திக்கற்ற அரசியலில் இந்தியர்கள்!

இராகவன் கருப்பையா- நம் நாட்டின் அரசியல் வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேல் அம்னோவின் தோழமை கட்சியாக பின்னி பிணைந்து உறவாடிய ம.இ.கா. தற்போது தீர்க்கமான ஒரு முடிவு செய்யவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பக்காத்தான் அரசாங்கத்தை கவிழ்த்து கொல்லைப்புற ஆட்சியமைத்த…

தடுப்புக் காவல் மரணம்: கொலையல்ல என்பதை அரசாங்கம் நிருபிக்க வேண்டும்,

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் தடுப்புக்காவல் கைதிகள் அடையும் மர்மமான மரணங்களுக்கு இன்னமும் தீர்வு காணமுடியாமல் இருப்பது மிகவும் வருத்தமளிக்கக்கூடிய ஒன்றாகவே உள்ளது. ஆகக் கடைசியாக கடந்த வாரத்தில் 40 வயதுடைய கணபதியின் இறப்பு இந்த சோகக்தொடருக்கு மேலும் உரமூட்டியுள்ளது. ஏழு வயது மற்றும் ஐந்து வயதுடைய இரு குழந்தைகளுக்குத்…

இந்நாட்டில் திராவிட தேசியம் தேவையா? – கி.சீலதாஸ்

இந்த 2021 ஆம் ஆண்டு ஓர் அற்புதமான சங்கமத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. பொதுவாகவே தெலுங்கு புத்தாண்டான உகாதி பண்டிகை மார்ச் அல்லது ஆப்ரில் மாத காலத்திலும், வைசாக்கி தினம் ஆப்ரில் பதிமூன்றாம் தேதியிலும், மலையாளப் புத்தாண்டு விஷு ஆப்ரில் பதினான்காம் தேதியிலும் கொண்டாடப்படுவது வழக்கம். நேப்பாளத்திலும் பதினான்கு ஆப்ரில்…

பல்லினங்களின் தனித்துவ பண்பாடுகள் – நமக்கு பலமா? பலவீனமா?

கி.சீலதாஸ் - பல இனங்கள் வாழும் நாட்டில் மொழி, சமய, கலாச்சார வேறுபாடுகள் மலிந்து பிரச்சனைகளாக உருவெடுப்பது விந்தையும் அல்ல, ஆச்சரியப்படத் தக்கதுமல்ல. பல இனங்களின் மாறுபட்ட கலாச்சாரங்களில் ஒரு வகை ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த முடியுமா? அல்லது பெரும்பான்மையினரின் கலாச்சாரமே நாட்டின் மூலக் கலாச்சாரமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமா? ஒரு…

ஆறுமுகத்தின் இரண்டாவது அவதூறு வழக்கு முடிவுக்கு வந்தது!

மலேசிய நண்பன் நாளிதழ் மீது வழக்கறிஞர் கா. ஆறுமுகம் இரண்டு அவதூறு வழக்குகளைப் பதிவு செய்திருந்தார். இரண்டாவதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு நேற்று (19.4.2021) கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அக்தார் பின் தகிர் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு முன்பாக ஒரு சுமூகமான ஒப்புதல் தீர்ப்புக்கு (consent judgement)…

தமிழ் புத்தாண்டை முடிவு செய்வது யார்!

இராகவன் கருப்பையா -தலைநகர் அம்ப்பாங் வட்டாரத்தில் அண்மையில் நடந்த ஒரு உண்மை சம்பவம். 'பீசாங் கோரேங்' எனப்படும் வாழைப்பழ பலகாரம் வாங்குவதற்கு மலாய்க்கார மாது ஒருவரின் அங்காடிக்கடைக்குச் சென்ற ஒரு இந்திய இளைஞரின் திடுக்கிடும் அனுபவமே அந்த நிகழ்வு. உங்களுக்கும் இந்த பலகாரம் செய்யத்தெரியுமா என எண்ணெய் சட்டியில்…

கோவிட்-19 -க்கு எந்த தடுப்பூசி நல்லது?  

இராகவன் கருப்பையா- இவ்வாண்டு இறுதி வாக்கில் மலேசிய மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினருக்கு கோறனி நச்சிலுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்ற கணிப்பு உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒன்று. தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சம் தொடக்கத்தில் நிலவிய போதிலும் இன்னும் 2 மாதங்களில், பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கையை விட அதன்…

புத்தாண்டு குழப்பம் – சித்திரையா! தையா? -இராகவன் கருப்பையா

உலகம் முழுவதும் உள்ள சுமார் 10 கோடி தமிழர்கள்  நாளைய தினம் தங்களுடைய புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு தேவையான கடைசி நேர ஏற்பாடுகள் அனைத்தையும் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் மலேசியத் தமிழர்களுக்கு இன்னும் விடிவுகாலம் பிறக்கவில்லை என்றே தெரிகிறது. ஒரு சில நாள்களுக்கு முன் மலேசியத் தமிழ் எழுத்தாளர்…

தமிழ்ப் புத்தாண்டை அரசியலாக்குவதா? -கி.சீலதாஸ்

இந்தியா சுதந்திரம் பெற்றபோது அது பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியிருந்தது. அவற்றில் ஒன்றுதான் இந்திய ஆண்டுக் குறிப்பேடுகள் (காலண்டர்கள்). அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் முப்பது விதமான ஆண்டுக் குறிப்பேடுகள் இருந்தன; அவை ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்தன. இதைப்பற்றி குறிப்பிட்ட அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு, இந்த வேறுபாடுகள்…

ருசிகண்ட புலி பூனையான கதை!

இராகவன் கருப்பையா - மலேசியாவை அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் முன்னின்று நிர்வகித்தது மட்டுமின்றி காலங்காலமாக அரசியல் 'புலி'யாகத் திகழ்ந்த அம்னோ தற்போது மக்களின் கேலிக்கூத்துக்கு இலக்காகியுள்ள ஒரு 'பூனை'யாகிவிட்டது என்றால் அது உண்மையா அல்லது நடிப்பா! அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அதன் தலைவர்களின் சுயநலப் போக்கினால் கடந்த சில மாதங்களாக அக்கட்சி…

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் மஇகா!

இராகவன் கருப்பையா - நம் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து அதன் அரசியல் வரலாற்றில் காலங்காலமாக இந்தியர்கள் என்றால் ம.இ.கா.தான் என்ற நிலைமாறி நீண்டநாள்களாகிவிட்டன. கடந்த 2007ஆம் ஆண்டில் தலைநகரில் நடைபெற்ற ஹிண்ட்ராஃப் எழுச்சிப் பேரணி அக்கட்சிக்கு ஏறக்குறைய சாவுமணியடித்தது என்றுதான் சொல்லவேண்டும். அதற்கடுத்த ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் படுதோல்வியைத்…

நஜிப் நடந்த பாதையில் முஹிடினும் பயணம்!

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் தற்போதைய கொள்ளைப்புற அரசாங்கத்தின் தவணைகாலம் எதிர்வரும் 2023ஆம் ஆண்டில்தான் நிறைவுபெறும்.  அதனுடன் இணைந்துள்ள அரசியல் கட்சிகள், எரியும் வீட்டில் குளிர் காய்வது போல் நடந்து கொள்வது, அடுத்த பொதுத் தேர்தல் எப்போதும் நடைபெறலாம் என்றே தொன்றுகிறது. அநேகமாக இன்னும் 5 அல்லது 6 மாதங்களில்…

தேவையான தடுப்பூசிக்கு, தேவையில்லா குழப்பம்

இராகவன் கருப்பையா- கடந்த ஆண்டின் பெரும்பகுதியை கோறனி நச்சில் ஏற்படுத்திய பயத்திலேயே கடத்திய நாம், தடுப்பூசியின் வருகையால் தற்போது நிம்மதி பெருமூச்சில் திளைத்திருப்பது யாரும் மறுப்பதற்கில்லை. நோயின் தாக்கம் உலகளாவிய நிலையில் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, 'இது எங்கே போய் முடியுமோ' என்ற அச்சம் கலந்த குழப்பத்தில் திக்கற்று இருந்த நம்…