நீதிமன்றத் தீர்ப்புகள், காற்றில் கரைந்தோடுமா?

இராகவன் கருப்பையா- மலேசியாவில் அடைக்கலம் கோரியிருந்த மியன்மார் நாட்டு அகதிகளில் 1086 பேரை கடந்த வாரம் திருப்பி அனுப்பிய நமது குடி நுழைவுத் துறையின் போக்கு உண்மையில் சட்டவிரோதமான ஒரு நடவடிக்கையாகும். மியன்மார் நாட்டில் தற்போது இராணுவ ஆட்சி நடப்பில் உள்ளதால் இந்த அகதிகளின் உயிர்களுக்கு அங்கு உத்தரவாதம் இல்லை…

சமூக மேம்பாட்டுக்கு பங்காற்றியவர் உதயசூரியன்

தற்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் உள்ள கா. உதயசூரியன், ஒரு சிறந்த சேவையாளர். அவர் இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டுக்காகப் பல நிலைகளில் ஈடுபட்டுக் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகச் செயலாற்றி வருவதாக சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சமூக இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் கருத்துரைத்தனர். இன்று கிள்ளானில் ஒன்று கூடிய இவர்கள், உதயசூரியன் மீது தாங்கள் கொண்டுள்ள ஆழமான நம்பிக்கையையும் ஆதரவையும் புலப்படுத்தினர். முன்னால் நீர், நிலம்  மற்றும் இயற்கைவள அமைச்சருக்குப் பணி நிமித்தம் செயலாற்றிய இரண்டு முன்னாள்…

அரசியல் நெருக்கடியால் எஸ்பிஆர்எம் விசாரணையா?

முன்னால் நீர், நிலம்  மற்றும் இயற்கைவள அமைச்சருக்குப் பணி நிமித்தம் செயலாற்றிய இரண்டு முன்னாள் அதிகாரிகள்  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். விசேச பணி அதிகாரியாக இருந்த கா உதயசூரியன் மற்றும் அரசியல் செயலாளராக இருந்த பஸ்லி பய்சால் பின் முகமாட் ரசாலி ஆகிய இருவரும்…

மலேசியாவின் பொருளாதாரத்திற்கு அரணாக இருந்தவர்கள் சிறுபான்மையினர்

 கி.சீலதாஸ் -   இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் செழுமைக்கும் பலவகையில் கடுமையாக உழைத்தவர்கள்தான் இன்று சிறுபான்மையினர் என்ற கேலிக்குக் குறிவைக்கப்படும் சீனர்களும், இந்தியர்களும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் சபா, சரவாக் பூர்வீகக் குடியினர் கூட சிறுபான்மையினர் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீபகற்ப மலாயாவை எடுத்துக்கொண்டால் ஒரு காலத்தில் பிழைப்பை…

கம்யூனிஸ்டுகளின் குரலான சிவப்பு துண்டு – தா. பாண்டியன் காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலச் செயலருமான தா. பாண்டியன் சிறுநீரகக் கோளாறால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டுவந்தார். இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி அவரது உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இருந்தபோதும் அவரது உடல் நிலையில்…

தைமாதமா, சித்திரையா, பெரியாரா, இந்துத்துவமா? எப்போது திருந்துவோம்!  

இராகவன் கருப்பையா- கடந்த இரு வாரங்களாக நம் சமூகத்திடையே எழுந்துள்ள ஒரு புதிய சர்ச்சை எங்கு போய் முடியுமோ என்று தெரியவில்லை. மலேசிய இந்து சங்கம் ஒரு புறமும் அரசியல்வாதிகளும் அரசு சாரா இயக்கங்களும் தமிழ் ஆர்வலர்களும் சேர்ந்து மற்றொரு பக்கமுமாக வரிந்து கட்டி களமிறங்கி வாள்களைக் கொண்டு போரிடுவதைப்…

ரிம 5 லட்சம் அபராதம் – கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த…

நீதி துறையை விமர்சனம் செய்யும் வகையில் சில வாசகர்களின் கருத்துகளை பதிவு செய்ததிற்காக, மலேசியகிணி ரிம 5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூட்டரசு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கடந்த 9.6.2020-இல் மலேசியகிணியில் வெளியான, “CJ orders all courts to be fully operational from…

தமிழினப்போராளி அமைச்சியப்பன் காலமானார்

தமிழினப்போராளி செ. அமைச்சியப்பன் இன்று (18.2.2021) மாரடைப்பால் காலமானார். சிலகாலமாக இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அன்னார் இன்று மாலை கேமரன் மலையிலுள்ள தனது இருப்பிடத்தில் காலமானார். தமிழர், தமிழ்மொழி, தமிழ்தேசியம் என்ற சொற்களுக்கு இலக்கணம் வகுக்கும் வகையில் உணர்வோடும் உரிமையோடும் தனது வாழ்க்கை பாதையில் பயணித்த அமைச்சு என்ற…

களவாடிய அரசை கட்டுபடுத்த, மக்களுக்கு அவசரகாலம், முஹிடினுக்கு வாய்ப்பு!

இராகவன் கருப்பையா- முஹிடினின் பெரிக்காத்தான் அரசாங்கம் தனது முதலாம் ஆண்டு நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அடுத்த பொதுத் தேர்தலுக்கான வியூகங்களை வரைவதற்கு  இந்தக் காலக்கட்டத்தை அவர் நன்றாகவே பயன்படுத்திக்கொள்வார். ஆகஸ்ட் 1ஆம் தேதி வரையில் அவரகாலச் சட்டம் அமலில் இருப்பதால் அடுத்த ஐந்தரை மாதங்களுக்கு எவ்விதமான இடையூறும் இல்லாமல்…

அந்தரங்க உறவில் உயர்கல்வி மாணவிகள்!

இராகவன் கருப்பையா- கோறனி நச்சிலுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகின் பல நாடுகள் அந்நோயின் கோரப்பிடியிலிருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவது மகிழ்ச்சியான ஒரு விசயம். ஆனால் நம் நாட்டில் அந்த பெருந்தொற்றின் தாக்கம் தற்போது உச்சத்தில் இருக்கும் பட்சத்தில் அடிதட்டு மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில்…

தரிசில் தேடும் நீதி – ஓர் அலசல் (updated)

கி.சீலதாஸ்  -  மலேசியா அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் டான் ஶ்ரீ டோமி தோமஸ் கடந்த ஜனவரி திங்களின் இறுதியில் வெளியிட்டுள்ள தமது “என் கதை – நீதி வனாந்தரத்தில்” என்ற தலைப்புடைய நூலில், தம்மின் இருபது மாத தலைமை வழக்குரைஞராகப் பணியாற்றியபோது கிட்டிய அனுபவங்களை விளக்கியுள்ளார். “நீதி…

பனிச்சறுக்கு தாரகை ஸ்ரீ அபிராமி சந்திரன்    

இராகவன் கருப்பையா - பனிச்சறுக்கு தாரகை ஸ்ரீ அபிராமி சந்திரனை அறியாதவர்கள் நம் நாட்டில் யாரும் இருக்க முடியாது. இப்போதுதான் அவருக்கு 9 வயதாகிறது என்ற போதிலும்  மலேசியாவை பொறுத்த வரையில் இந்த விளையாட்டில் அவர் ஒரு 'சுப்பர் சீனியர்'. அவரின் சகாசங்கள் கொண்ட காணொளிகல் இனையத்தளத்தில் உள்ளன. கடந்த…

அமுதா கருப்பண்ணனின் அபாரப் பயணம்!

இராகவன் கருப்பையா- ஆண்களை மிஞ்சும் பெண்கள் அதிசயிக்கும் சாதனைகளை புரிவது அரிது. அதிலும் சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய அளவுக்கு சாதிக்கும் தமிழ்ப் பெண்களைக் காண்பது சற்று அபூர்வம்தான். ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்து வறுமைக் கோட்டில் வளர்ந்து ஆயுள் காப்புறுதித் துறையில் ஆசிய நிலையில் உச்சத்தைத் தொட்டவர்தான் அமுதா கருப்பண்ணன்.…

அரசியல் தலையிடுவதை எதிர்த்த சாலே அபாஸ் ஒரு சகாப்தம் –…

தொண்ணூற்று ஒன்றாம் வயதைக் கடந்த மலேசியாவின் முன்னாள் தலைமை நீதிபதி, துன் டாக்டர் சாலே அபாஸ் கடந்த ஜனவரி பதினாறாம் நாள், கோவிட்-19தின் தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்தார். மலாயா, பின்னர் மலேசியா, சுதந்திரம் அடைந்த பின் பலர் நாட்டின் தலைமை நீதிபதிகளாப் பணியாற்றினர். இந்நாட்டில் பிறக்காத, இந்நாட்டின் குடிமகனாக…

தமிழ் மொழி வளர்ச்சியில் எழுத்தாளர் சங்கத்தின் பங்கென்ன?

இராகவன் கருப்பையா- மலேசியாவில் இயங்கிவரும் எண்ணற்ற தமிழ் மொழி சார்ந்த இயக்கங்களில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. கடந்த 60 ஆண்டுகளாக இந்நாட்டில் கோலோச்சி நிற்கும் தனித்தன்மை வாய்ந்த அச்சங்கம் தமிழ் இலக்கிய வளர்ச்சி, எழுத்தாளர் ஊக்குவிப்பு மற்றும் நூல் வெளியீடு, போன்ற பல்வேறு பணிகளை செவ்வனே மேற்கொண்டு…

தீவிரவாதத்திற்கு முன்னோடி இனவாதமாகும்!

இரயன் சுவா (KOMAS) - அன்மையில் மலேசியாவில் இயங்கும் கோமாஸ்  (KOMAS) என்ற மனித உரிமை சார்புடைய அமைப்பு தனது 10 வது தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்தது. மெய்நிகர் கூட்டமாக நடைபெற்ற இந்நிகழ்வில் ‘இனவாதம் தீவிரவாதத்தைத் தூண்டுகிறதா?’ எனும் தலைப்பில், பல இன மக்கள் வாழும் தற்போதைய மலேசியா…

சிறையில் பாலியல் கொடுமை: ஜீரணிக்கமுடியாத கொடூரம்

 இராகவன் கருப்பையா - நம் நாட்டில் நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாமல் இருக்கும் ஒரு பிரச்னை போலீஸ் தடுப்புக்காவலில் தொடர்ந்தார்போல் நிகழ்ந்துவரும் மரணங்கள். இப்பிரச்சனையைக் களைவதற்கு தேசிய முன்னணி ஆட்சி செய்த காலம் தொடங்கி பின்னர் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தற்போதைய பெரிக்காத்தான் அரசாங்கம் வரையில் பல்வேறு தரப்புகள் அரசாங்கத்திற்கு…

விளிம்பில் வாழும் அரசியலும் – அவதிப்படும் மக்களும் – இராகவன்…

மார்ச் 2020 -இல் தனது அமைச்சரவையை அறிவித்த முஹிடின் இன்னமும் அரசியலில் நிலைத்திருப்பது அவரின் பலம் என்பதை விட பெரும்பான்மை பெற்றும் கோட்டைவிட்ட அரசியல் சாணக்கியர்களின் பலவீனம் என்பதே சரியாகும். ஏறக்குறை 46 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமைச்சரவையில் இடம் கிடைத்த களிப்பில் அந்த அரிய வாய்ப்பை பாலைவன சோலையாக பாஸ் கட்சியினர் ஏற்றுக்கொண்ட போதிலும்,  அமைச்சரவை நியமனங்களில் அம்னோ திருப்தியடையவில்லை. இந்த…

சேவியர் ஜெயக்குமாரின் பொங்கல் வாழ்த்து

தோட்டப்புற ரம்மியமான சூழலோடும் கால்நடைகளோடும் பொங்கல் திருநாளைக் கொண்டாடிய காலம் போய் இப்போது முகக்கவரி, கூடல் இடைவெளி, அடிக்கடி கை கழுவதல் என புதிய கட்டுப்பாடுகளுடனும் இயல்புடனும் வாழ்கின்றோம். பொங்கல் திருநாளை குடும்பத்தினர்களுடன் மகிழ்வுடன் கொண்டாடுவோம்,  வாழ்வில் மறுமலர்ச்சியும் மகிழ்ச்சியும் மேம்பட தற்போதுள்ள  இடர்பாடுகளிலிருந்து விடுபட்டு, நாட்டு மக்களுக்கு…

 கவுன்சலர்கள் கௌரவத்துடன் மக்களுக்கும், மாநிலத்துக்கும் சேவையாற்ற வாழ்த்துகள் – சேவியர்…

இவ்வாண்டு ஊராட்சி மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாகப் பதவியைப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், கடந்த தவணை முதல் தொடர்ந்து பதவியில் இருந்து மக்களுக்கு நல்ல சேவையாற்றி வரும் ஊராட்சி மற்றும் மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித்…

2020ல் மலேசியாவை ஆட்கொண்டது கொரோனாவா அரசியலா!

இராகவன் கருப்பையா - 2020ஆம் ஆண்டு ஒரு நிறைவுக்கு வந்துள்ள நிலையில் உலகிலுள்ள கிட்டதட்ட எல்லா நாடுகளிலுமே கோறனி நச்சிலுக்கு எதிரான போராட்டங்களைத் தவிரத் திரும்பிப் பார்ப்பதற்குப் பெரிய அளவில் குறிப்பிடத்தக்க விசயங்கள் வேறு ஏதும் இருக்க வாய்ப்பில்லை. அனைத்துலக ரீதியில் பார்க்கப்போனால் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலும் அதில் தோல்வியுற்ற நடப்பு அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாலிகையை…

தாய்மொழிப் பள்ளிகளும் அரசமைப்புச் சட்டமும் – கி.சீலதாஸ்

மலாயா சுதந்திரம் பெறுவதற்கு முன்னமே தாய்மொழிப் பள்ளிக்கூடங்களைப் பற்றிய விவாதம் ஆரம்பித்துவிட்டது. அதற்கு முன்பு தாய்மொழிப் பள்ளிகள் இயங்குவதைக் காலனி அரசு தடுக்கவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னரும் அந்த அமைப்புகளின் மீது தடை ஏதும் இருந்ததில்லை. அதுமட்டுமல்ல, சுதந்திரத்திற்குப் பிறகு, தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள் இயங்குவதற்கான எல்லா வசதிகளையும், கட்டுப்பாடுகளையும் நடுவன்…

இளம் மலேசியர்கள் சோசலிசத்திற்குத் திரும்புவது, எழுட்சியா? புரட்சியா?

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில், சோசலிசம் என்ற வார்த்தையே  வலதுசாரி அரசியல்வாதிகளால் சர்ச்சைக்குரியதாக  பார்க்கப்படுகிறது.எடுத்துக்காட்டாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களும் அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார சேவையை உறுதி செய்வதில் அரசாங்கத்தை ஈடுபடுத்த முயன்றதற்காக அது “சோசலிசம்” என்று பராக் ஒபாமாவை தாக்கினர். இந்த கோர்ப்பாட்டோடு…