தேர்தலுக்குத் தயார்! – அஸ்மின்

பிரதமர் முகிதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி (பிஎன்) அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும் உடனடி தேர்தலை நடத்த போதுமான அடித்தளத்தைக் கொண்டுள்ளது என்று அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி தெரிவித்தார். சுகாதாரம், அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் வெற்றிகரமாக கையாண்டதால் இது சாத்தியமாகியுள்ளது…

சிலாங்கூரில் அஸ்மினின் செல்வாக்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று, அரசியல் பார்வையாளர்கள்…

பி.கே.ஆர் கட்சியில் இனி இல்லை என்றாலும், கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களிடையே முன்னாள் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலியின் செல்வாக்கை குறைத்து மதிப்பிடக்கூடாது. அரசியல் பார்வையாளர் பி அன்புமணி, அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி, அரசியலில் விரிவான அனுபவங்களைக் கொண்டுள்ளார் என்றும், குறிப்பாக சிலாங்கூர்…

சினியை தக்க வைத்து பாரிசான் அபார வெற்றி

சினி இடைத்தேர்தலில் பாரிசான் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. பதிவு செய்யப்பட்ட மொத்த 15,231 வாக்காளர்களில் 13,872 வாக்குகளை பாரிசானின் முகமட் ஷாரீம் ஜெய்ன் பெற்றார். வாக்குப்பதிவு 73.87 சதவீதம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 239 வாக்குகள் செல்லாததாக பதிவாகின. தெங்கு ஜைனுல் ஹிஷாம் தெங்கு ஹுசின் மற்றும்…

கோவிட்-19: நாட்டில் மீண்டும் பாதிப்புகளில் அதிகரிப்பு

மலேசியா இன்று மீண்டும் இரட்டை இலக்க கோவிட்-19 நேர்மறை பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. இன்று 10 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, 10 புதிய பாதிப்புகளில், ஏழு பாதிப்புகள் மலேசியர்கள் சம்பந்தப்பட்ட வெளிநாட்டில் ஏற்பட்ட நோய்த்தொற்றுகள் என்றார். "நாட்டில் பரவிய…

250 அம்பாங் பி.கே.ஆர் உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்

கட்சி மீதான நம்பிக்கையை இழந்ததால் அம்பாங் பி.கே.ஆர் கிளையின் சுமார் 250 உறுப்பினர்கள் உடனடியாக பி.கே.ஆர் கட்சியை விட்டு விலகுவதாக இன்று அறிவித்தனர். கிளையின் செயற்குழு உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு கட்சியை விட்டு விலகுவதால் அம்பாங் பி.கே.ஆர் கிளை உடனடியாக கலைக்கப்படுவதாகவும் அம்பாங் பி.கே.ஆர் கிளை துணைத்…

சினி இடைத்தேர்தல்: 20,816 வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர்

சினி இடைத்தேர்தல் இன்று பகாங்கில் நடைபெறுகிறது. சுமார் 20,816 வாக்காளர்கள் மூன்று வேட்பாளர்களில் ஒருவருக்கு இன்று வாக்களிக்க உள்ளனர். பாரிசானைச் சேர்ந்த முகமட் ஷரீம் ஜெய்ன், மற்றும் தெங்கு ஜைனுல் ஹிஷாம் தெங்கு ஹுசின், மற்றும் முகமட் சுக்ரி முகமட் ராம்லி எனும் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் ஆகியோர்…

முகிலரசுவின் பிரேத பரிசோதனை அறிக்கை நாளை பெறப்படும் – வழக்கறிஞர்

நேற்று இரவு சுங்கை பூலோ சிறையில் இறந்த வி.முகிலரசுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முகிலரசுவின் உடலும் பிரேத பரிசோதனை அறிக்கையும் அவரின் குடும்பத்தினரிடம் நாளை ஒப்படைக்கப்படும் என்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் ஏ.சீலன் கூறினார். முகிலரசுவின் உடலைப் பார்க்க அவரின் சகோதரர்…

அம்னோ கட்சித் தலைவரே எனது தலைவர் – புங் மொக்தார்…

15வது பொதுத் தேர்தலில் முகிதீன் யாசினை பிரதமராக நியமிக்க அம்னோ எடுத்த முடிவு குறித்த விரிவான விளக்கத்திற்காக அதன் தலைவர் அகமட் ஜாஹித் ஹமிடியை சந்திக்கும் என சபா அம்னோ கட்சி தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தங்களுக்கு இதுவரை எந்த விரிவான தகவலும் கிடைக்கவில்லை என்று சபா…

கோவிட்-19: ஐந்து புதிய பாதிப்புகள், ஒன்பது மீட்புகள்

மலேசியர்கள் சம்பந்தப்பட்ட மொத்தம் ஐந்து புதிய கோவிட்-19 பாதிப்புகள் இன்று மதியம் வரை பதிவாகியுள்ளன. அந்த ஐந்து பாதிப்புகளில், மூன்று வெளிநாட்டில் ஏற்பட்ட தொற்றுகள் என சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். மற்ற இரண்டு பாதிப்புகள் உள்நாட்டில் ஏற்பட்ட தொற்றுகளாகும். "நாட்டில் பரவிய இரண்டு…

ஜி.எல்.சி பதவியில் இருந்து விலக உத்தரவு

மலேசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (எம்.பி.சி)/Perbadanan Produktiviti Malaysia (MPC) தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கட்சியின் துணைத் தலைவர் தியான் சுவாவுக்கு பி.கே.ஆர் மத்திய தலைமைக் குழு கட்டளை விடுத்துள்ளது. "ஆம், தியான் சுவா கலந்து கொண்ட கடைசி மத்திய தலைமைக் குழு கூட்டத்தின் முடிவின்படி நான் ஒரு கடிதத்தை…

“நண்பர்கள் எப்போதும் நண்பர்களே”, அன்வார் – குவான் எங் சந்திப்பு

பாக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) பிளஸ் பிரிவின் பிரதமர் வேட்பாளர் தொடர்பாக ஏற்பட்ட குழப்பங்களுக்கு இடையே, டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் இன்று அன்வார் இப்ராஹிமை சந்தித்தார். 95 வயதான டாக்டர் மகாதீர் முகமது மீண்டும் பிரதமர் பதவியை வகிக்க வேண்டும் என்ற திட்டத்தை டிஏபி கட்சி ஆதரித்த…

டிசம்பர் வரை மேலும் 3 மாதங்களுக்கு மின்சார கட்டண தள்ளுபடி

நாடு முழுவதும் உள்ள அனைத்து வீட்டு உபயோக மின்சார பயனர்களுக்கு 31 டிசம்பர் 2020 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு மின்சார கட்டண தள்ளுபடியை அரசாங்கம் நீட்டிக்கும். இது மார்ச் மாதத்தில் பிரதமர் முஹைதீன் யாசினால் அறிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் பொருளாதார ஊக்கப் திட்டம் மற்றும் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட…

கோவிட்-19: செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 85 மட்டுமே

கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது 85 மட்டுமே என்று சுகாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். நூர் ஹிஷாம் கூற்றுப்படி, 62 நோயாளிகள் இன்று மீட்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும், மொத்த குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 8,437 ஆக உள்ளது…

மலேசியாகினியின் விண்ணப்பத்தை நிராகரித்தது நீதிமன்றம்

மலேசியாகினி இணைய செய்தி ஊடகம் மற்றும் அதன் முதன்மை ஆசிரியர் ஸ்டீவன் கானுக்கு எதிராக அவமதிப்பு வழக்கை வரும் ஜூலை 13 தொடங்க உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அவமதிப்பு வழக்கைத் தொடங்குவதற்கான அனுமதியைத் தள்ளுபடி செய்ய மலேசியாகினியின் விண்ணப்பத்தை நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய குழு இன்று பிற்பகல்…

உள்ளூர் பாதிப்பு ஏதும் இல்லை

மார்ச் 2க்குப் பிறகு முதல் முறையாக இன்று மலேசியாவில் புதிய தொற்றுநோய்களின் பாதிப்புகள் ஏதும் பதிவாகாதது மனநிறைவளிக்கும்படியாக அமைந்துள்ளது. இன்று மதியம் நிலவரப்படி, வெளிநாட்டில் பாதிக்கப்பட்ட நபர் சம்பந்தப்பட்ட ஒரு புதிய கோவிட்-19 பாதிப்பு மட்டுமே பதிவாகியுள்ளது. அந்நபர் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதன் விளைவாக…

ஜூலை 15 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்

5 மற்றும் 6 ஆம் ஆண்டு மாணவர்கள் ஜூலை 15 ஆம் தேதி மீண்டும் பள்ளி தொடங்குவதாக கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் இன்று அறிவித்துள்ளார். 1 முதல் 4 ஆம் ஆண்டு வரையிலான மாணவர்கள் ஒரு வாரம் கழித்து ஜூலை 22 ஆம் தேதி பள்ளி தொடங்குவார்கள்.…

பெர்சத்து கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டம் செப்டம்பர் 27 அன்று…

கோவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட பின்னர், முகிதீன் யாசின் தலைமையில் செப்டம்பர் 27 அன்று பெர்சத்து கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டம் (ஏஜிஎம்) நடைபெறவுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் ஹம்சா ஜைனுதீன் இன்று இந்த தேதியை அறிவித்தார். பெர்சத்துவின் சர்ச்சைக்குரிய தலைவர் டாக்டர் மகாதீர் முகமட், அதன் பொதுச்செயலாளர்…

கோவிட்-19: இரண்டு புதிய பாதிப்புகள் மட்டுமே, மேலும் 20 மீட்புகள்

இரண்டு புதிய கோவிட்-19 நேர்மறையான பாதிப்புகள் மட்டுமே இன்று பதிவாகியுள்ளன. இது மலேசியாவில் மொத்த பாதிப்புகளை 8,639 ஆக கொண்டுவந்துள்ளது. செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 164 ஆக கொண்டு வந்துள்ளது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். "இரண்டு புதிய பாதிப்புகளில், ஒரு…

அசார் ஹாருன் – தேர்தல் ஆணையத்திலிருந்து நாடாளுமன்ற சபாநாயகரா?

முகமட் ஆரிஃப் யூசோப் அவருக்கு பதிலாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் அசார் அஜீசான் ஹாருன் நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சிலாங்கூர் பாரிசான் தகவல்தொடர்பு தலைவர் இஷாம் ஜாலீல் இன்று பிரதமர் முகிதீன் யாசினுக்கு சமூக ஊடகங்களில் பகிரங்கமாக ஒரு கடிதம்…

தனிமைப்படுத்தல் செயல்முறைக்கு இணங்கத் தவறும் தனிநபர்களுக்கு சிறைத் தண்டனை

14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முன்பு, மீண்டும் கோவிட்-19 பிணிப்பாய்வு சோதனை செய்ய தவறும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. இதுவரை 5,909 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மேலும் 14 நாள் தனிமைப்படுத்தலை…

ஹம்சாவுடன் ஒத்துழைப்பு கூடாது – சிவராசா, மரியா திட்டவட்டம்

பெர்சத்து கட்சியின் பொதுச்செயலாளர் ஹம்சா ஜைனுடினுடனான எந்தவொரு ஒத்துழைப்பையும் நிராகரிக்கும் என்ற டிஏபி மற்றும் அமானாவின் நிலைப்பாட்டிற்கு இரண்டு பி.கே.ஆர் பிரதிநிதிகள் ஆதரவளித்துள்ளனர். சுங்கை புலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா மற்றும் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் அப்துல்லா ஆகியோர் முறையே டிஏபி மற்றும்…

கோவிட்-19: இன்று 16 பாதிப்புகள் மீட்கப்பட்டன, 3 புதிய பாதிப்புகள்

கோவிட்-19 இன் மூன்று புதிய பாதிப்புகளை சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது. அவற்றில் ஒன்று வெளிநாட்டில் பாதிக்கப்பட்ட மலேசியர் ஆவார். மேலும் இரண்டு மலேசியர் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் சபா சண்டகானில் கண்டறியப்பட்டதாகும். வெளிநாட்டில் பாதிக்கப்பட்டவர் பிஜி மற்றும் நியூசிலாந்திற்கான பயண வரலாற்றைக் கொண்டுள்ளார். ஆனால் இரு நாடுகளிலும் அனுமதி…

1எம்.டி.பி வழக்கில் ஸ்ரீ ராமை நீக்கும் விண்ணப்பம் ஒத்திவைப்பு

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் 1 எம்.டி.பி தொடர்புடைய நீதிமன்ற வழக்குகளில் தொடருவதிலிருந்து கோபால் ஸ்ரீ ராமை நீக்குவதற்கான நஜிப்பின் விண்ணப்பத்திற்கு ஆதரவாக முன்னாள் வழக்கறிஞர் முகமட் அபாண்டி அலி பிராமணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். இந்த தாக்கலின் மூலம், இன்று திட்டமிடப்பட்டிருந்த கோபால் ஸ்ரீ ராம் நீக்கம்…