இராகவன் கருப்பையா - சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேல் நம் நாட்டை ஆட்சி புரிந்த அம்னோ தற்பொழுது எந்த அளவுக்கு வலுவிழந்துக் கிடக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். அந்தக் கட்சி இன்னமும் ஏன் மீண்டெழ முடியாமல் பரிதவிக்கிறது என்றால் முன்னாள் பிரதமர் நஜிப் விவகாரம்தான் அதற்கான மூலக்காரணம் என்பதில் துளியளவும்…
பிலோமினா தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சியில் வியப்புள்ளது – அதோடு ஒரு திகைப்பும் உள்ளது!
பிலோமினா தமிழ்ப்பள்ளி, மலேசியாவில் புகழ் பெற்ற ஒரு தமிழ்ப்பள்ளி. அதன் உண்மையான பெயர் செயிண்ட் பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி ஆகும். இப்பள்ளி ஈப்போவில் உள்ள கான்வெண்ட் ஆங்கிலப் பள்ளியின் கிளைப் பள்ளியாக ஆங்கிலேயர் காலகட்டத்தில் இயங்கி வந்த இது 1938 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி அதிகாரப்பூர்வ தமிழ்ப்பள்ளியானது. பல சிறப்புக்களைத் தமிழ்மொழி ஆர்வலர்களின் வழி அன்று தொட்டே இந்தப்பள்ளியும் பெற்று வருவது பெருமைக்குரியது. அப்பள்ளியின் ஆழமான வளர்ச்சிக்கு…
ஜொகூரின் கையில், மலேசியாவின் எதிர்கால அரசியல் திருப்பங்கள்! – கி.சீலதாஸ்
பொதுவாக மக்களை, குறிப்பாக வாக்காளர்களைக் குழப்புவதில், குழப்ப நிலையிலேயே வைத்திருப்பதில் அரசியல்வாதிகளும், அதிகாரத்தில் இருப்பவர்களும் தயங்காது கையாளும் அரசியல் கலாச்சாரமாகும். அரசியல் வாழ்க்கையில் இந்தக் கலாச்சாரம் தவிர்க்கப்படாத மரபு என்று சொல்லலாம். அரசியல் கலாச்சாரம் அரசியல் கலாச்சாரதெளிவற்ற முறையில் பேசுவது, காலத்துக்கு ஏற்றவாறு எதையாவது சொல்லிவிட்டு பிறகு அதை…
பி.ஆர்.என். ஜொகூர் : கோத்தா இஸ்கண்டார் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை…
ஜொகூர் மாநிலத் தேர்தலில் (பி.ஆர்.என்.), N49 கோத்தா இஸ்கண்டார் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) நேற்று வெளியிட்டது. நேற்று மாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில், கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் மற்றும் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம்…
அடிப் மரண விசாரணை – கோயிலில் புகுந்தவர்களை அடையாளம் காட்ட…
நவம்பர் 2018-இல் சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கலவரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரின் விசாரணையில் சாட்சியளித்த ஒருவர், காலமான தீயணைப்பு வீரர் முகம்மது அடிப் முகமது காசிமை யாரும் தாக்கியதைக் தான் பார்க்கவில்லை என்று கூறினார். அந்த சம்பவத்தின் போது நடந்த…
காடுகளை அழிப்பதில் சட்டத்தில் ‘ஓட்டையா?’ – பிரதமரும் மாமன்னரும் தலையிடவேண்டும்
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் மேன்மை தாங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அமாட் ஷா, பகாங்கில் உள்ள வனப்பிரச்சினையைப் பற்றிப் பேசுவார்களா என்று பெக்கா மலேசியா கேட்டுள்ளது. பெக்கா என்ற அந்தச் சுற்று சூழல் அமைப்பின் துணைத் தலைவர் டேமியன் தானம்(Damien Thanam), மேம்பாட்டாளர்கள் பெரிய அளவிலான…
மதமாற்றத்தில் இந்திரா.. லோ சியூ.. இன்னும் யார்?
இராகவன் கருப்பையா - கடந்த ஒரு மாத காலமாக உள்நாட்டு ஊடகங்களை ஜொகூர் மாநில இடைத் தேர்தல் தொடர்பான செய்திகள் ஆக்கிரமித்து வருகிற போதிலும் தனித்து வாழும் தாயான லோ சியூ ஹோங்ஙின் பாசப் போராட்டம் ஒரு பிரதான அங்கமாகவே மக்களின் கவனத்தை ஈர்த்து வந்தது. மூன்று ஆண்டுகளுக்கு…
குள்ளநரி அரசியலும் நாட்டு மக்களும் – கி.சீலதாஸ்
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் மலேசியர்களிடையே இரண்டு விதமான மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஜொகூரைப் பொருத்த வரை முதன் முதலாக இந்தத் தேர்தலில் பதினெட்டு வயதினரின் வாக்களிப்பைக் காண்கிறது. ஜொகூரின் பதினெட்டு வயதினர் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கின்றனர். யாருக்கு வாக்களிப்பது என்பதல்ல; அவர்களால் வாக்களிக்க முடிகிறதே என்பதே அந்த மனநிலையின்…
நஜிப்பும்-ஸாஹிட்டும் ஏன் முஹிடினிடம் கெஞ்சினர்?
இராகவன் கருப்பையா- உலகையே உலுக்கிய மேகா ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் நஜிபும் அவருடைய அமைச்சரவையில் துணைப் பிரதமராக இருந்த அஹ்மட் ஸாஹிட்டும் தன்னிடம் வந்து மன்றாடியதாக முன்னாள் பிரதமர் முஹிடின் அம்பலப்படுத்தியது தேசிய அரசியலில் தற்போது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிரடி அறிவிப்பில் உண்மை…
எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான அரசின் திட்டம் என்ன? -ஓங் கியான்…
ஒரு வாரத்திற்கு முன்பு, பிப்ரவரி 8, 2022 அன்று, தேசிய மீட்பு கவுன்சிலின் (NRC) தலைவர் முஹிடின் யாசின், மார்ச் மாத தொடக்கத்தில் நாட்டின் எல்லைகளை திறக்க கவுன்சில் முன்மொழிந்ததாக அறிவித்தார். இந்த கூட்டத்தில் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் உட்பட என்.ஆர்.சி.யின் அமைச்சர்கள் மற்றும் நிதியமைச்சர் தெங்கு…
இளைஞர்களின் வாக்குகள் ஜொகூரில் வரலாறு படைக்கட்டும் – கி.சீலதாஸ்
ஜொகூர் மாநில பொதுத் தேர்தல் புது இலக்கைக் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. தேர்தல் முடிவுகள் இளைஞர்களின் பங்களிப்பைப் பிரதிபலிக்கும். இது ஜொகூரின் எதிர்காலம் மட்டுமல்ல இளைஞர்களின் பங்கு நாட்டின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் தன்மை வாய்ந்ததாகும். கடந்த ஜனவரி திங்கள் 22ஆம் நாள் ஜொகூர் மாநில மந்திரி புசார் (முதலமைச்சர்)…
போலீஸ் காவலில் 7 இறப்புகள் : விசாரணை நடத்தி ஐ.பி.சி.எம்.சி.…
2022-ம் ஆண்டின் முதல் ஐந்து வாரங்களில், போலிஸ் தடுப்புக்காவலில் ஏழு இறப்புகள் பதிவாகியுள்ளதற்குக் கண்டனம் தெரிவித்து, 50 சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இன்று (11.02.2022), புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்தில் வழங்கிய குறிப்பாணையின் முழு விவரம் பின்வருமாறு :- போலிஸ் காவலில் நிகழ்ந்த இறப்புகளின் சமீபத்திய அதிகரிப்பு…
குற்றவாளிக்குத் தண்டனை இல்லை – அம்பலப்படுத்தினால் தண்டனை
இராகவன் கருப்பையா -நம் நாட்டில், ஒரு குற்றத்தை அம்பலப்படுத்துவோர் அனாவசியமாக அழைத்து விசாரணை செய்யப்படுவதும் ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ்த் தண்டிக்கப்படுவதும் புதிய விசயம் ஒன்றுமில்லை. இத்தகைய சூழலில் குறிப்பாக ஊடகவியலாளர்கள் சிக்கித் தவிப்பது காலங்காலமாக இயல்பாகிவிட்ட ஒன்றாகவே தெரிகிறது. 'தும்பை விட்டு வாலைப் பிடிப்பதைப் போல' பல…
பதவிகளுக்கான அரசியல் போரட்டத்தில் பலியாகுவது சாதரண மக்களே!
கி.சீலதாஸ் - மலேசியா எப்படிப்பட்ட இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதைச் சுதந்திரத்திற்கு முன்னமே தீர்மானிக்கப்பட்டது. அது சமுதாய நீதி, நேர்மை, திறமை மிகுந்த ஆட்சி, நாட்டில் எல்லா இனங்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வது, பகைமை, வெறுப்புணர்வு போன்றவற்றிற்கு இடமளிக்காத சமுதாய உறவு, சட்டத்தின் முன் அனைவரும் சமம்; ஒரு சிலருக்குப்…
திக்கற்ற நிலையில் ஏழ்மை இந்தியர்கள் – அரசாங்கம் தலையிட வேண்டும்
கா. ஆறுமுகம் - கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏழ்மை நிலையிலுள்ள இந்தியர்கள் மேலும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் வாழும் இவர்களின் வாழ்வாதாரம் எந்த நிலையில் உள்ளது என்பதை அரசாங்கம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். மேலோட்டமாக பார்த்தாலே போதும் கீழ்மட்டத்தில் இருக்கும் இந்தியர்கள் திக்கற்ற நிலையில் உள்ளது தெரியும். இந்தியர்களை…
ஊழலுக்கு வக்காளத்தா? – கி.சீலதாஸ்
ஊழலால் விளையும் கேடுகளைப் பற்றி உணராத, உணர மறுக்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை; ஆட்சி அவர்கள் கையில் இருக்கும் வரை ஊழல் நடவடிக்கைகளை, ஊழல் கலாச்சாரத்தை ஒடுக்கவோ, ஒழிக்கவோ முடியாது; முடியும் என்று நினைப்பது வெறும் பகற்கனவாகும். இலஞ்சம் வாங்குவோர்க்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என்று சட்டம் சொல்கிறது.…
கேலிக் கூத்தாகியுள்ளது அஸாம் பாக்கி மீதான ஊழல்!
இராகவன் கருப்பையா- ஊழல் மிகுந்த நாடுகளில் ஒன்று என அனைத்துலக ரீதியில் முத்திரை குத்தப்பட்டுள்ள மலேசியா அப்பட்டமான ஒரு ஊழல் விவகாரத்தை எப்படிக் கையாள்கிறது என்பதற்கு அஸாம் பாக்கி தொடர்பான சர்ச்சையை விட வேறு சிறப்பான உதாரணம் ஏதும் இருக்க முடியாது. இவ்விவகாரம் தொடர்பாகச் சுடச்சுட அன்றாடம் வெளியாகும்…
நிலத்தை மீட்டது விவேகானந்தப் பள்ளிவாரியம், மேல்முறையீட்டில் விவேகானந்த ஆசிரமம் தோல்வி!
சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்பு பெட்டாலிங்ஜெய விவேகானந்தத் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக்காக மத்திய அரசாங்கம் வழங்கியதாகக் கருதப்படும் ரிம 60 இலட்சத்தின் ஒரு பகுதியையும், தற்போது அந்தப்பள்ளி அமைந்துள்ள நிலத்தையும், பள்ளி வாரியத்திடம் ஒப்படைக்கக் கோரி விவேகானந்த ஆசிரமத்தின் மீது அந்தப் பள்ளியின் வாரியத்தினர் 2019-இல் வழக்கு தொடுத்தனர். அந்த…
வெள்ளப் பிரச்சினை: மக்கள் மீது பழியா?
இராகவன் கருப்பையா- கடந்த வாரம் நடைபெற்ற சிறப்பு மக்களவைக் கூட்டத்தின் போது வெள்ளப் பேரிடர் தொடர்பாகப் பிரதமர் சப்ரி ஆற்றிய உரை எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களையும் வேதனைக்குள்ளாக்கியது என்றே சொல்ல வேண்டும். அப்பேரிடரை எதிர்கொண்ட விவகாரத்தில் அரசாங்கத்தின் கையாலாகாத்தனமும் அதனாலான குளறுபடிகளும் மக்களுக்கு எவ்விதமான பாதிப்பையும சங்கடத்தையும் ஏற்படுத்தியது…
தாய்மொழிப் பள்ளிகள் – தேசியத்தின் அச்சாணி – பகுதி 3
கி.சீலதாஸ் - இந்த உண்மைகளை மறந்து செயல்படுவோரைத்தான் நாம் காண்கிறோம். ஆட்சியில் இருப்பவர்கள் உண்மையை மறைப்பதில் காட்டும் உற்சாகம் கல்வி தரத்தில் முன்னேற்றம் காண முற்படாதது வரலாற்றுக்கும், ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கும் மரியாதை செலுத்த மறுக்கும் குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறது. இந்த நிலையைத்தான் இலக்கியவாதி சினுவா அச்சிபே நினைவுகூர்ந்தார். இன்று மட்டுமல்ல…
தாய்மொழிப் பள்ளிகள் – தேசியத்தின் அச்சாணி – பகுதி 2
கி.சீலதாஸ் - வரலாறு யாரால் எழுதப்படுகிறது? வெள்ளையர்களின் ஆட்சியின்போது வெற்றி கண்ட வெள்ளையர்களே வரலாறு எழுதினார்கள். கொள்ளையடிக்கப்பட்ட நாட்டின் பெருமையை, வரலாற்று உண்மைகளை மறைத்து பொய்மைக்கு முதலிடம் தந்தார்கள். இன்று உலக நாடுகள் தங்களின் உண்மையான வரலாறு என்ன என்ற ஆய்வில் இறங்கியிருக்கிறார்கள். இங்கே கவனிக்க வேண்டியது…
தாய்மொழிப் பள்ளிகள் – தேசியத்தின் அச்சாணி – பகுதி 1
கி.சீலதாஸ் - நைஜீரியாவின் தலைசிறந்த இலக்கியப் படைப்பாளர் சினுவா அச்சிபே (1930-2013) பத்திரிக்கை நேர்காணலின்போது, “சிங்கங்கள் தங்களுக்கெனச் சொந்த வரலாற்று ஆசிரியர்களைக் கொண்டிருந்தாலன்றி வேட்டையாடல் வரலாறு வேட்டைக்காரனையே பெருமிதப்படுத்தும்" என ஓர் அற்புதமான வாய்மொழியைச் சுட்டிக்காட்டினார். பொதுவாக கருப்பர்களை ஏளனமாகப் பேசுவது, சித்தரிப்பது வழக்கமாக இருந்தது. ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு…
மலேசியப் பூப்பந்து வானில் பூத்திருக்கும் தாரகைகள்!
இராகவன் கருப்பையா - கடந்த 70ஆம் மற்றும் 80ஆம் ஆண்டுகளில் நம் நாட்டின் பூப்பந்துத் துறையில் கொடி கட்டிப் பறந்த பஞ்ச் குணாளன் மற்றும் ஜேம்ஸ் செல்வராஜ் ஆகிய இரு ஜாம்பவான்களையும் நம்மில் நிறையப் பேர் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை. மலேசியாவைப் பொறுத்த வரையில் பூப்பந்து விளையாட்டு சீனர்களால் ஆதிக்கம்…
நாட்டின் நாசத்துக்கு – ஊழலும், அரசியல்வாதிகளும் காரணம் – கி. சீலதாஸ்
நாட்டில் நேர்மையான, திறமையுடைய, ஊழலற்ற நிர்வாகம் தேவை என்பது மனித குலத்தின் எதிர்பார்ப்பாகும். பொதுவாகவே நிர்வாகம் எனும்போது அது அரசின் பல துறைகளைக் குறிக்கிறது. நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் தற்காப்பு, நாட்டினுள் சட்ட ஒழுங்கு, மக்களிடையே முரண்பாடும், பூசலும் இல்லாத வாழ்வு எனப் பற்பல இலக்குகளை அடையும் நோக்கத்துடன்தான்…
























