ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது குற்றமல்ல அது தண்டனை!

ராஜீவ் காந்தியை கொலை செய்தது ஒரு தண்டனை வழங்கலே அன்றி அது ஒரு குற்றமல்ல என ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நினைத்ததாக இந்தியாவின் முன்னாள் மத்திய புலனாய்வு அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார். ரகோத்தமன் இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்த…

தமிழர்களை சிறுபான்மை சமூகமாக கருத முடியாது : ராஜபக்சே

இலங்கையில் வாழும் தமிழ் மக்களை சிறுபான்மை சமூகமாக கருத முடியாது என இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் மற்றும் ஏனைய சமூகத்தினரை ஒன்றிணைத்து ஐக்கிய நாடொன்றை உருவாக்குவதே இலங்கையின் ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான நோக்கம் என ராஜபக்சே…

ராஜிவ் கொலை வழக்கு: மூவரையும் தூக்கிலிட 8 வாரம் தடை!

இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் ராஜீவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இம்மூவரின் தூக்குத்தண்டனையை குறைக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜீவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன்…

சிறார்களை காணவில்லை; பெற்றோர் கண்ணீருடன் தவிப்பு

இலங்கையில் போர் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இறுதி போரின் போது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற சிறுவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொடர்பான விவரங்கள் இதுவரை தெரியவரவில்லை. காணாமல்போனவர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக இலங்கை அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஐநாவின் சிறார்கள் நல அமைப்பாகிய 'யுனிசஃப்'…

மரண தண்டனையை ரத்துச் செய்து மனிதநேயத்தை வெளிப்படுத்துங்கள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்து பாரத தேசத்தின் அன்பையும் மனிதநேயப் பண்பையும் பெருமைப்படுத்துமாறு இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் தமிழக முதல்வர் ஊடாக…

வன்னி மருத்துவர்கள் தவறான அறிக்கை கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்

வன்னிப்போரின் பின்னர் கைதுசெய்யப்பட்ட மருத்துவர்கள், கொழும்பில் செய்தியாளர்களுக்கு எதனை Read More

நெடுந்தீவில் மனிதப் புதைகுழி; 8 மண்டையோடுகள் கண்டெடுக்கப்பட்டன

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் நெடுந்தீவில் மனித புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள உதவி மாவட்ட ஆணையர் பணிமனைக்கு அருகில் புதிய கட்டட நிர்மாணத்துக்கான அடிக்கட்டுமான வேலைக்கென நிலத்தை தோண்டியபோது, மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து இந்த மனித புதைகுழி பற்றிய விவரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது பற்றிய தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ…

போர்குற்றம் குறித்து விசாரணை நடத்தவேண்டும்: இந்திய மத்திய அரசு

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும்படி அந்த நாட்டு அரசை வலியுறுத்த இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அளித்த பதிலுக்கு அதிருப்தி தெரிவித்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் நேற்றும் நாடாளுமன்றத்திலிருந்து…

இலங்கையில் அவசரக்காலச் சட்டம் நீக்கப்பட்டது!

கடந்த 3 தசாப்த காலங்களாக இலங்கையில் அமலில் இருந்த அவசரகாலச் சட்டம் இனி நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது இலங்கை குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சே இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்துள்ளார். எனவே, அவசரகால சட்டம் நீடிப்பு தொடர்பான தீர்மானம் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் வழக்கப்படமாட்டாது என்று நாடாளுமன்றத்தில் இன்று விசேட…

இலங்கை போர்க்குற்றம்: இந்திய நாடாளுமன்றத்தை முற்றுகையிடத் திட்டம்

இலங்கைத் தமிழினப் படுகொலைக்கு கராணமான அனைவர் மீதும் அனைத்துலக நீதிமன்றத்தில் போர்க் குற்ற விசாரணை நடத்தக்கோரி வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 26ம் திகதி புதுடெல்லியில் இந்திய நாடாளுமன்றம் நோக்கி இந்த ஆர்பாட்டப் பேரணி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஜெர்மனி காற்பந்தாட்ட அணிவகுப்பில் தமிழீழத் தேசியக் கொடி

ஜெர்மனியின் மிகப் பிரபல்யம் வாய்ந்த 'வெஸ்ட்பேலன்' திடலில் இலங்கை, பிரேசில், ஜப்பான் மற்றும் 40 உலக நாடுகளின் கொடிகளின் மத்தியில் தமிழீழத் தேசிய கொடியும் அணிவகுப்பிற்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை சுமார் 80,000 மக்கள் அமர்ந்திருந்த ஜெர்மனியின் 'வெஸ்ட்பேலன் ஸ்டேடியன்' திடலில் நடைபெற்ற காற்பந்தாட்ட போட்டி ஆரம்ப அணிவகுப்பில் தமிழீழ…

வன்னியின் உண்மை நிலை : அல் ஜசீரா ஊடகம்

இலங்கையின் தசாப்தகால உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள காயங்கள் இன்னமும் மாறாமல் உள்ளதாகவும் அந்தக் காயங்களை ஆற்றுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என அனைத்துலக செய்தி ஊடகமான அல் ஜசீரா குற்றம் சாட்டியுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவுக்குச் சென்ற அல் ஜசீரா செய்தியாளர் இது தொடர்பில்…

கிழக்கில் பாதுகாப்பு படையினரின் கெடுபிடி அதிகரிப்பு

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் காவல் துறையினரால் புதிதாக வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு இராணுவ உதவியுடன் சோதனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மர்ம மனிதர்கள் என்று கூறப்படும் அடையாளம் தெரியாத ஆட்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக மக்கள் மத்தியில் ஒருவித பீதி காணப்படும் சூழ்நிலையில்,…

போர்க்குற்ற தடயங்களை அழிக்க அரசு முயற்சி : த.தே.கூ

முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை மீள்குடியமர்த்தாதது ஜனநாயகப் பண்புகளையும் மனித உரிமைகளையும் மீறும் செயலாகும். பரம்பரை பரம்பரையாக அந்தப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை அந்தப் பிரதேசங்களிலேயே குடியமர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இலங்கை…

முள்ளிவாய்க்காலில் மக்கள் குடியமர முடியாது : இலங்கை அரசு

வன்னியில் நடந்த இறுதிப் போரின் போது பெருமளவில் மனித உரிமை மீறல்களும் போர்க் குற்றங்களும் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகி இருக்கும் புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் மக்களை மீளக்குடியமர அனுமதிக்கப்போவதில்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. போர் முடிவடைந்த பகுதிகளான முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை…

இலங்கையில் பெரிய துறைமுகம் சீனா அமைக்கிறது

இலங்கையில் 500 மில்லியன் டோலர் செலவில் பெரிய துறைமுகத்தை சீனா அமைக்கவுள்ளது. கடந்த வாரம் சீனாவுக்கு இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே சென்றுவந்தார். அப்போது இத்துறைமுகம் அமைப்பதற்கான ஒப்பந்தம் இலங்கை - சீனா இடையே கையெழுத்தானது. இலங்கையில் புதிதாக அமைக்கப்படும் இத்துறைமுகத்தின் 55 சதவீத பங்குகள் சீனாவின்…

கிழக்கு மகாணத்தில் அரச படைகளுக்கு பலத்த எதிர்ப்பு!

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ள மர்மமனிதர்களின் குற்றச் செயல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் மீது பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொள்ளை, பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளுதல், பொதுமக்களை மறைந்திருந்து தாக்குதல் போன்ற குற்றச் செயல் சம்பவங்கள் அண்மைக் காலமாக கிழக்கு மகாணம் உட்பட…

நெருக்கடியில் இடைத்தங்கல் முகாம் மக்கள்

வவுனியா பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் இடம் பெயர்ந்தோருக்கான இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை அவர்களின் சொந்த மாவட்டங்களுக்குச் செல்லுமாறு கூறியுள்ள அரசாங்கம், அடிப்படை வசதிகளை நிறுத்தி தங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றார்கள். முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா போன்ற பல மாவட்டங்களையும் சேர்ந்த 300க்கும்…