அன்வார்: பிஎஸ்எம் அடையாளச் சின்னம் மக்களுக்குக் குழப்பம் தரலாம்

பார்டி சோசலிஸ் மலேசியா(பிஎஸ்எம்)-வின் கைமுட்டிச் சின்னம், மாற்றரசுக் கட்சியின் தேர்தல் பரப்புரையின்போது பயன்படுத்தப்படுவதற்கு அவ்வளவு பொருத்தமானதாக இராது என்று எண்ணுகிறார் பக்காத்தான் ரக்யாட் பெருந்தலைவர் அன்வார் இப்ராகிம். “கடந்த மாதம் சுங்கை சிப்புட் சென்றிருந்தேன். அதன்(சின்னம்) தொடர்பில் அங்கு குழப்பம் நிலவுவதைக் கண்டேன். அதைப் பார்த்து பலமாதிரியாக நினைத்துக்கொள்கிறார்கள்.…

‘வெற்றி பெற்ற 100 நாட்களில் ஹிண்டராப் பெருந்திட்டம் நடைமுறைக்கு வரும்’

பக்காத்தான் ராக்யாட் கூட்டரசு அதிகாரத்தை ஏற்குமானால் இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தீர்க்க ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு வெளியிட்டுள்ள ஐந்தாண்டு பெருந்திட்டம் 100 நாட்களுக்குள் அமலாக்கப்படும் என பக்காத்தான் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். "பக்காத்தான் புத்ராஜெயாவைக் கைப்பற்றிய 100 நாட்களுக்குள் நாங்கள்…

செயல்படவில்லை என்று அனாக் கூறுவதற்கு ஹுலு சிலாங்கூர் போலீஸ் மறுப்பு

பிப்ரவரி 4-இல், பெல்டா சுங்கை தெங்கியில் பாஸ்-ஆதரவு என்ஜிஓ ஒன்று நடத்திய ஒரு செராமாவில் குழப்பம் ஏற்படுவதை போலீசார் தடுக்கவில்லை என்று கூறப்படுவதை ஹுலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பிரிண்டெண்டண்ட் நொரெல் அஸ்மி யாஹ்யா மறுத்தார். அந்நிகழ்வுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு 30 போலீசாருக்கு  உத்தரவிட்டிருந்ததாக நெரெல் அஸ்மி…

கட்சி ஆதரவாளர்கள் முதிர்ச்சியை காட்ட வேண்டும் என்கிறார் இப்ராஹிம் அலி

அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் 13வது பொதுத் தேர்தலில் முதிர்ச்சியைக் காட்ட வேண்டும் என்றும் உணர்ச்சி வயப்பட்டு விரும்பதகாத சம்பவங்களுக்கு வழி வகுத்து விடக் கூடாது. இவ்வாறு கூறும் பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, பொதுத் தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் ஒவ்வொருவரும் அதனை திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு…

வாக்குகளை வாங்குவதற்கு எம்ஏசிசி ‘அங்கீகாரம்’ அளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது

ஊழல் மீதான 1954ம் ஆண்டுக்கான தேர்தல் குற்றங்கள் சட்டத்துக்கு எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வழங்கியுள்ள விளக்கம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அதனை அவசியம் மறுக்க வேண்டும். பிப்ரவரி 13ம் தேதி சின் சியூ நாளேட்டில் வெளியான முதல் பக்கத் தலைப்புச் செய்தி இது: "தேர்தல்…

இண்ட்ராப் அரசியல் கட்சியா அல்லது உரிமைக்காகப் போராடும் இயக்கமா?

உங்கள் கருத்து: ‘இப்ப.... தொகுதி கேட்பீங்க, அப்புறமா அமைச்சர் பதவி கேட்பீங்க’ இடக் கோரிக்கையால்  இண்ட்ராப்-பக்காத்தான் பேச்சுகளில் முட்டுப்பாடு. பெயரிலி #47497449: அச்செய்தி உண்மையாக இருந்தால் இண்ட்ராப் செய்வது நியாயமல்ல. அது அதன் செயல்திட்டம் பற்றியும் இந்தியர் உரிமை பற்றியும் பேசுவதைத்தான் கேட்டிருக்கிறோம். இடக் கோரிக்கை பற்றிப் பேசக் கேட்டதில்லை.…

Psy-யைக் கொல்ல முயற்சி செய்யப்பட்டதாக இப்போது தெங் சொல்லிக் கொள்கிறார்

தென் கொரிய பாப் இசைப் பாடகர் Psy-யைக் கொல்ல முயற்சி செய்யப்பட்டதாக பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் இப்போது கூறியிருக்கிறார். அதனால் தான் கடந்த திங்கட்கிழமை ஹான் சியாங் கல்லூரியில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பின் போது ‘lo shang’ நிகழ்ச்சி முடிந்ததும் மேடையிலிருந்து…

நஜிப்: ஊடுருவலுக்கு இரத்தம் சிந்தாமல் தீர்வு காணப்படும்

அரசாங்கம், லாஹாட் டத்துவில் பிலிப்பீனோ கும்பல் ஒன்று ஊடுருவல் செய்துள்ள விவகாரத்துக்கு இரத்தம் சிந்தாமல் அமைதியான முறையில் தீர்வுகாண முயலும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். சாபாவின் கிழக்குக் கரையில் நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக வருணித்த பிரதமர், பேச்சுகள் வழி அவ்விவகாரத்துக்குத் தீர்வுகண்டு சுமார் 100…

சாபா வந்த பிலிப்பினோக்கள் பற்றி மாறுபட்ட கருத்துகள்

தென் பிலிப்பீன்சின் கிளர்ச்சிப் படையிலிருந்து பிரிந்தவர்கள் என்று கருதப்படும் ஆயுதமேந்திய சுமார் 100 பேர் அடங்கிய ஒரு கும்பலைப் பிடித்து வைத்திருப்பதாக மலேசிய போலீசும் அரசாங்க அதிகாரி ஒருவரும் தெரிவித்துள்ளனர். ஆனால், பிலிப்பீன்ஸ் அதிகாரி ஒருவர், அவர்கள் ஆயுதமற்ற பிலிப்பீனோக்கள் என்றும் நிலம் கொடுக்கப்படுவதாகக் கூறப்பட்டதை நம்பி வந்தவர்கள்…

பெர்சே: அம்பிகாவுக்கு எதிரான இசி-இன் குற்றச்சாட்டு தீய நோக்கம் கொண்டது

பெர்சே 2.0, அதன் இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், மக்களிடையே விஷத்தையும் நம்பிக்கையின்மையையும் விதைத்து வருவதாக தேர்தல் ஆணைய (இசி) துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார் அண்மையில் குற்றஞ்சாட்டியிருப்பது “தீய நோக்கம் கொண்ட, பொறுப்பற்ற” செயல் என்று வருணித்துள்ளது. வான் அஹ்மட்டின் கூற்று சமூக அமைப்புகளும்…

பிஎன் ஆதரவு சபா அரசு சாரா அமைப்பு இன்னும் பார்வையாளராகவில்லை

வரும் பொதுத் தேர்தலுக்குப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள, ஆனால் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்துள்ள சபா அரசு சாரா அமைப்பு ஒன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே அதிகாரப்பூர்வமான பார்வையாளராக முடியும். FCAS என்ற சபா சீனர் சங்க சம்மேளனம் ஒர் அரசியல் கட்சிக்குப் பிரச்சாரம் செய்வதால் பார்வையாளர் தகுதியிலிருந்து அது அகற்றப்பட…

‘நஜிப் தமது ஆலோசகர்களை நீக்க வேண்டும்’

"பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கவர்ச்சிகரமான சுலோகங்களை உருவாக்குவதில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார்" நஜிப் மோசமான ஆலோசகர்களைக் கொண்ட பலவீனமான தலைவர் என்கிறார் அன்வார் சின்ன அரக்கன்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், கடந்த சில மாதங்களாக தமது தோற்றத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ள மிகவும் முக்கியமான பல பிரச்னைகள்…

போராளிகள் என்று கருதப்படும் ஆயுதமேந்திய வெளிநாட்டவர்கள் கைது

செவ்வாய்க்கிழமை, சாபா, லாஹாட் டத்துவில் மலேசிய கடலெல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஒரு கும்பலை மலேசியப் பாதுகாப்புப் படையினர் பிடித்து வைத்துள்ளனர். வெளிநாட்டவர்களான அவர்கள்  இராணுவ உடை தரித்து கையில் ஆயுதங்களையும் வைத்திருந்தனர். அவர்கள், தென் பிலிப்பீன்சில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளின் விளைவாக மலேசிய எல்லைக்குள் ஊடுருவி இருக்கலாம் என்று இன்ஸ்பெக்டர்-ஜெனரல்…

‘பொர்ன்திப்பை நிறுத்துவதற்கு நஜிப் தாய்லாந்து பிரதமருக்கு நெருக்குதல் கொடுத்தார்

போலீஸ் முரட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சி சுகுமார் மீது இரண்டாவது சவப்பரிசோதனையை தாய்லாந்து உடற்கூறு நிபுணர் டாக்டர் பொர்ன்திப் ரோஜானாசுனாந்த் நடத்துவதை தடுப்பதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சம்பந்தப்பட்டுள்ளதாக பிகேஆர் கூறிக்கொண்டுள்ளது. "நஜிப், சுகுமார் இரண்டாவது சவப்பரிசோதனை தொடர்பில் தாய்லாந்துப் பிரதமர் யிங்லுக் ஷினாவாத்ரா-உடன் தொடர்பு கொண்டார்,"…

‘பிஎன்னுக்கு மீண்டும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொடுக்க மாட்டோம்’

உங்கள் கருத்து: ‘எதிர்தரப்பு பலமற்றிருந்ததால் பிஎன் 42 தடவை வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டு அரசமைப்பில் 650 திருத்தங்களைச் செய்துள்ளது’. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொடுப்பதை எதிர்க்கிறார் ஆயர் தெளிந்தநீர்: குறைந்தபட்சம்  அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதன்வழி அரசமைப்பில் அடிக்கடி திருத்தம்…

ஹிண்ட்ராப்: பக்காத்தானுடனான பேச்சுக்கள் முறியும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றன

ஏழை இந்தியர்கள் எதிர்நோக்கும் நீண்ட காலப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கை மன்றம் வழங்கிய ஐந்தாண்டு பெருந்திட்டத்தை அங்கீகரிப்பதில் பக்காத்தான் ராக்யாட் காட்டும் நீண்ட தாமதம், வரும் பொதுத் தேர்தலில் அந்தக் கூட்டணிக்கான  ஆதரவை ஹிண்ட்ராப் மீட்டுக் கொள்ள வழிகோலி விடும் என ஹிண்டராப்…

தீபக்: பிரதமர் பற்றிய தகவலைச் சொல்வதற்கு சட்ட நடவடிக்கையிலிருந்து விலக்குக்…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் "அதிகார அத்துமீறல், ஊழல்" எனக் கூறப்படுவது மீது மேலும் தகவல்களை வழங்குவதற்கு ஈடாக தாம் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்குவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என சர்ச்சைக்குரிய கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன் கோருகிறார். புத்ராஜெயாவில் இன்று நண்பகல் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்ட…

செலாயாங் மன்றத்துடன் பேசுங்கள்: டோலோமைட்டுக்கு மந்திரி புசார் அறிவுறுத்தல்

செலாயாங்கில் பார்க் அவென்யு கொண்டோமினியம் கட்டுவதன் தொடர்பில் மேம்பாட்டு நிறுவனமான டோலமைட் புரொபர்டிஸ் சென். பெர்ஹாட் விளக்கமளிக்க சிலாங்கூர் அரசாங்கம் ஒரு வாய்ப்பு வழங்கத் தயாராகவுள்ளது. அந்நிறுவனம் செலாயாங் முனிசிபல் மன்றத்தைச் சந்தித்து விளக்கமளிக்கலாம் என்று மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கூறினார். “அவர்கள் மன்றத்தைச் சந்தித்து விளக்கமளிக்கலாம்.…

தமிழின அழிப்பிற்காக ஐநா மீதான கண்டனமும் பரிந்துரைகளும்

2009-ஆம் ஆண்டில் நடந்த போரின் போதும் அதற்கு முன்பும் பின்பும் நடந்த இன அழிப்பு,  இன ஒழிப்பு, போர்க்குற்றம் ஆகியவற்றை விசாரணை செய்வதற்குச் சுயேட்சை ஆணையம் ஒன்றை அமைக்க ஐநா செயலாளருக்கு அதிகாரம் உள்ளதாக கடந்த ஆண்டு ஐநா வெளியிட்ட சார்ல்ஸ் பெட்றே அறிக்கை கூறுகிறது என்ற வற்புறுத்தலுடன்…

நொங் சிக் பொது விவாதம் செய்ய வர வேண்டும்: நுருல்…

பிகேஆர் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார், தம்மைப் பற்றி ராஜா நொங் சிக் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துரைக்க அவரைத் தம்முடன் விவாதமிட அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார். கடிதம் இன்று காலை புத்ரா ஜெயாவில் உள்ள கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சுக்கு அனுப்பப்பட்டு அமைச்சின்…

சிலாங்கூர் சட்டமன்றத்தைக் கலைப்பது மீது பக்காத்தான் பேராளர்களை மந்திரி புசார்…

சாப் கோ மே கொண்டாட்டங்களுக்குப் பின்னர் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்கும் சாத்தியம் குறித்து விவாதிப்பதற்காக அந்த மாநில மந்திரி புசார் காலித் இப்ராஹிம்  இந்த வாரம் பக்காத்தான் ராக்யாட் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பார். "நாங்கள் பின்னர் அறிவிப்பு கொடுப்போம். நாங்கள் அவர்களை இந்த வாரம் சந்திப்போம்," என…

பெக்கானில் கத்தியை வைத்திருந்த இளைஞர்கள் மாணவர்களை மருட்டினர்

பெக்கானுக்கு அருகில் உள்ள பெல்டா சினி 4-யில் இன்று காலை அங்குள்ள மக்களுக்கு தாங்கள் கடிதங்களை விநியோகம் செய்து கொண்டிருந்த போது கத்திகளை வைத்திருந்த இளைஞர் கும்பல் ஒன்று தங்களை மிரட்டியதாக பல பல்கலைக்கழக மாணவர்கள் கூறிக் கொண்டுள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து இளைஞர்கள் தங்களைச் சூழ்ந்து…

அன்வாருக்கு ‘ஹுகுவான் சியோவ்’ பட்டம் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு

மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு கடாசான்டுசுன் சமூகத்தின் ‘ஹுகுவான் சியோவ்(பிரதான தலைவர்) பட்டம் வழங்கப்பட்டதற்கு சாபாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அப்பட்டம், நடப்பு பிபிஎஸ் தலைவர் ஜோசப் பைரின் கிட்டிங்கானுக்கு 28 ஆண்டுகளுக்குமுன் கொடுக்கப்பட்டு பின்னர் அவரே ஆயுளுக்கும் அச்சமூகத்தின் தலைவர் என்றும் அறிவிக்கப்பட்டார். அப்பட்டம் அன்வாருக்கு…