இந்த வாரம் போர்ட் கிளாங்கில் மானிய விலையில் டீசல் கடத்தும் நிறுவனம் மற்றும் எண்ணெய் டேங்கர் மீது போலீசார் சோதனை நடத்தியபோது ஆறு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். புக்கிட் அமான் உள் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை இயக்குனர் ஹசானி கசாலி கூறுகையில், ஆறு பேரும் டிசம்பர்…
லீ குவான் இயூ நரம்பு நோய்க்கு எதிராகப் போராடுகிறார்
நவீன சிங்கப்பூரைத் தோற்றுவித்தவர் என போற்றப்படும் லீ குவாம் இயூ நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த நோய் காரணமாக அவர் சீராக நடப்பதற்குச் சிரமப்படுகிறார். கடந்த செப்டம்பர் மாதம் லீ-க்கு 88 வயதாகியது. அந்தத் தகவலை அவரது புதல்வி லீ வெய் லிங் தமது சண்டே டைம்ஸ் பத்தியில்…
பிரச்னைக்கு முக்கிய அம்சம்: நமது பள்ளிக்கூடங்கள் நம்மை ஏமாற்றி விட்டன
"ஒரு முறையாவது நாம் சொல்லும் பதில் உண்மையானதாக இருக்க வேண்டும். அது தனிப்பட்ட நலன்கள், குறுகிய நோக்கம், அரசியல், விரைவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது." பிபிஎஸ்எம்ஐ: அரசியலமைப்புக்கு முரணானது என்கிறார் சட்ட நிபுணர் லூ சூன் பாட்: பேராசிரியர் அப்துல் அஜிஸ் அவர்களே, ஒரு விஷயத்தில் நாம்…
கித்தா ஆளுங்கட்சியாகும் நோக்கம் கொண்டிருக்கிறது, ஜைட் இப்ராகிம்
எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் கித்தா (மக்கள் நல கட்சி) ஆளுங்கட்சியாக வேண்டும் என்ற நோக்கத்தில் கூடுதலான வேட்பாளர்களை நிறுத்தவிருக்கிறது. ஆனாலும், அது பிரதமர் பதவியை நாடவில்லை. அதோடு சில தரப்பினர் முத்திரையிட்டுள்ளது போல் அது ஓர் இடைஞ்சல் அல்ல என்று கித்தா தலைவர் ஜைட் இப்ராகிம் கூறினார்.…
இஸ்லாமிய, சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு சிலாங்கூர் தொடர்ந்து உதவும்
சிலாங்கூர் மாநில அரசு அடுத்த ஆண்டும் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளோடு இஸ்லாமிய பள்ளிகளுக்கும் தொடர்ந்து உதவிகள் வழங்கும் என்று மந்திரி புசார் காலிட் இப்ராகிம் நேற்று கூறினார். சீனப்பள்ளிகளும் இஸ்லாமியப் பள்ளிகளும் தலா ஆண்டுக்கு ரிம6 மில்லியன் உதவிகள் பெற்றன. தமிழ்ப்பள்ளிகள் ரிம4 மில்லியன் பெற்றன என்று அவர்…
உச்சநீதிமன்றத்தில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதிக்கான நிதி ஒதுக்கீடு வழக்கு
மலேசிய வரவுசெலவு அறிக்கையில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியின் மேம்பாட்டிற்காக ரிம1 மில்லியன் ஒதுக்கப்பட்ட்டுள்ளது. ஆனால், அரசாங்கம் அதனை வழங்காததால், அத்தொகுதியின் பிஎஸ்எம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தார். அவ்வழக்கு இப்போது நாட்டின் உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படவிருக்கிறது. இவ்வழக்கைத் தொடர்வதற்கான அனுமதி மனுவை…
MCCBCHST: பள்ளிக்கூடங்களில் மாடுகளை அறுக்க வேண்டாம்
நாளை அய்டில் அட்ஹா கொண்டாடப்படவிருக்கும் வேளையில் பள்ளிக்கூடங்களிலும் இதர பொது இடங்களிம் மாடுகளை அறுக்கும் நடைமுறையை நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு MCCBCHST எனப்படும் மலேசிய பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோ ஆலோசனை மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மாடுகளை- இந்துக்கள் மிகவும் புனிதமாக கருதும்- தியாகம் செய்யும் சடங்கு கோலாலம்பூரில்…
பிபிஎஸ்எம்ஐ முடிவை வரவேற்கும் பேஜ் விவரங்களை நாடுகிறது
பள்ளிக்கூடங்களில் அறிவியல் கணிதப் பாடங்களுக்கான போதானா மொழியைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்புக்காக போராடிய பெற்றோர்கள், நேற்று அந்த விவகாரம் மீது அரசாங்க விடுத்துள்ள அறிவிப்பை வரவேற்றுள்ளனர். நேற்றிரவு தொடக்கம் பெற்றோர்களிடமிருந்து தமக்கு வாழ்த்துச் செய்திகளும் 'மகிழ்ச்சி' தெரிவிக்கும் குறுஞ்செய்திகளும் வந்து கொண்டிருப்பதாக பேஜ் எனப்படும் கல்விக்கான பெற்றோர் நடவடிக்கைக்…
பேரணியை ஏற்பாடு செய்தது அம்னோ அல்ல, “மாட் ரெம்பிட்டுகள்”
நேற்று பினாங்கு சட்டமன்ற வளாகம் வந்த நால்வர், திங்கள்கிழமை முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு எதிராக நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்தது அம்னோ அல்ல என்று அறிவித்தனர். தங்களை பாஸ் மற்றும் டிஏபி உறுப்பினர்கள் என்று பிரகடனப்படுத்திக்கொண்ட அந்நால்வரையும் அம்னோவின் தெலுக் பாஹாங் சட்டமன்ற உறுப்பினர்…
நஜிப்: ஒற்றுமை இஸ்லாத்தின் வலிமைக்கு நிலைக்களன்
முஸ்லிம்கள் ஒற்றுமையை தற்காக்க வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒற்றுமையே இஸ்லாத்தின் வலிமைக்கு நிலைக்களன் என அவர் குறிப்பிட்டார். ஒற்றுமையாக இருப்பதின் மூலம் முஸ்லிம்கள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் நிறையச் சாதிக்க முடியும் என்றார் அவர். "வெவ்வேறு நாடுகளில் வாழ்கின்ற வெவ்வேறு நிறத்தையும் பண்பாடுகளையும் …
செக்சுவாலட்டி மெர்தேகா ஏற்பாட்டாளர்கள்: எங்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டுவதை நிறுத்திக்…
செக்சுவாலட்டி மெர்தேகா நிகழ்வுகளின் போது மனித உரிமைகள் மீது கருத்துக்களையும் தகவல்களையும் பரிமாறிக் கொள்வதற்கும் கலந்துரையாடுவதற்கும் பாதுகாப்பான இடத்தை கண்டு பிடித்துள்ளவர்கள் மீது வெறுப்பைத் தூண்டுவதோடு பாகுபாடும் காட்டுகின்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் உட்பட பல மலேசியர்களின் போக்கு குறித்து நாங்கள் வருத்தமடைந்துள்ளோம். எங்கள் அடையாளத்துக்கும் சுய நிர்ணயத்துக்குமான உரிமைகள்…
பாஸ் இளைஞர் பிரிவு: திருநங்கைகள் வாழ்க்கை முறை மனித உரிமைகளுக்கு…
தடை செய்யப்பட்டுள்ள செக்சுவாலட்டி மெர்தேகா விழா ஆதரவாளர்கள் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூக்குரலிடும் வேளையில் அவர்கள் சொல்வது தவறு என்பதற்கு ஆதாரமாக பாஸ் இளைஞர் பிரிவு 1948ம் ஆண்டுக்கான அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தை எடுத்துக் காட்டுகிறது. அந்தப் பிரகடனத்தின் 16வது பிரிவில் அதனைக் காணலாம் என அந்த…
பினாங்கு தகவல் சுதந்திர மசோதாவை ஏற்றுக் கொண்டுள்ளது
பினாங்கு மாநிலச் சட்டமன்றம், தகவல் சுதந்திர மசோதாவை நேற்று ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த மசோதாவுக்கு ஆதரவாக 24 வாக்குகளும் எதிர்ப்பாக 2 வாக்குகளும் செலுத்தப்பட்டன. மொத்தம் 40 உறுப்பினர்களைக் கொண்ட அந்த சட்டமன்றக் கூட்டத்தில் நேற்று 14 பேர் கலந்து கொள்ளவில்லை. நேற்று பிற்பகல் அந்த மசோதா சமர்பிக்கப்பட்டு…
மலேசியப் பெற்றோர்களுக்குக் கிடைத்த சிறுவெற்றி
"நமது இளைஞர்கள் மேல் நிலையை அடைவதற்கு வாய்ப்பளிக்கும் கல்வி முறையே நமக்குத் தேவை. கீழ் நிலைக்குச் செல்வதற்கான போட்டியில் அல்ல." ஆங்கிலத்தில் கணித, அறிவியல் பாடங்களை கற்கும் மாணவர்களுக்கு அதில் தொடர வாய்ப்பு பார்வையாளன்: இப்போது முதலாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு கணித அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் கற்கும்…
பிபிஎஸ்எம்ஐ அரசமைப்புக்கு முரணானது, சட்ட வல்லுனர்
அரசமைப்பு வல்லுனர் அப்துல் அசீஸ் பாரி, கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிப்பதை ஒரு விருப்பத்தேர்வாக தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என்று டிஏபி வாதிடுவது தப்பு என்கிறார். அது அரசமைப்புக்கு முரணானது என்பது அவருடைய வாதம். “(அரசமைப்பின்) 152வது பகுதி அதிகாரப்பூர்வ விவகாரங்கள் எல்லாமே தேசிய மொழியான…
பிபிஎஸ்எம்ஐ:மசீச, மஇகா,கெராக்கான் ஆகியவற்றின் நிலைப்பாட்டை புவாட் சாடினார்
அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கும் கொள்கையை மசீச, மஇகா, கெராக்கான் ஆகியவை ஆதரிப்பது மலாய்மொழிக்குக் குழிபறிப்பதாகும் எனக் கல்வி துணை அமைச்சர் முகம்மட் புவாட் ஜர்காஷி சாடியுள்ளார். “அவர்களின் நிலைப்பாடு மலாய்மொழியைப் பலவீனப்படுத்தி விடும். எம்பிஎம்எம்பிஐ(மலாய்மொழியின் மேன்மையை நிலைநிறுத்தி ஆங்கிலமொழிப் புலமையை வலுப்படுத்தும் கொள்கை) வழியாக…
லிம்முக்கு எதிராகப் போராட்டமா?
இன்று பிற்பகல் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கிற்கு எதிராக "அதிருப்தி அடைந்துள்ள" சில கூட்டத்தினர் பினாங்கு அரசாங்க அலுவலகங்கள் இருக்கும் கொம்டாரில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர் - ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அப்பெரிய ஆர்ப்பாட்டத்தை தோல் பை வியாபாரியும் சுவாரா அனாக்-அனாக் மலேசியாவின் தலைவருமான…
பொருள் வாங்கிய செய்திக்குத் திருத்தம் வெளியிட்டது ஆசி நாளேடு
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மகள் பொருள் வாங்கிக் குவித்தார் என்று செய்தி வெளியிட்டு ஒரு சலசலப்பை உண்டுபண்ணிய ஆஸ்திரேலிய நாளேடு ஒன்று அச்செய்தி தப்பு என்று நேற்றுத் தெரிவித்தது. வெஸ்ட் ஆஸ்திரேலியன் என்னும் அந்நாளேடு குறிப்பிட்ட அந்நேரத்தில் பிரதமரின் புதல்வி பெர்த் நகருக்குச் செல்லவே இல்லை என்பது…
செக்சுவலிடி மெர்டேகா கருத்தரங்கை போலீஸார் தடுத்தனர்
நேற்றிரவு கோலாலம்பூரில், சுமார் 30 போலீசார், தடை செய்யப்பட்ட செக்சுவலிடி மெர்டேகா விழா தொடர்பான ஒரு கருத்தரங்கைத் தடுத்து நிறுத்தினர். இரவு மணி 7.30 அளவில் பசார் சினியின் அன்னெக்ஸ் கேலரிக்கு வந்ததாக செக்சுவலிடி மெர்டேகா ஒருங்கிணைப்பாளர் பாங் கீ தெய்க் கூறினார். “இரவு 8 மணிக்கு அதன் கதவுகளை…
சிறுபான்மையினருக்கும் உரிமைகள் உண்டு என்கிறார் அம்பிகா
வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், செக்சுவாலட்டி மெர்தேகா ஏற்பாட்டாளர்களை தற்காத்துப் பேசியுள்ளார். சிறுபான்மை மக்களுடைய உரிமைகளையும் மதிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் சொன்னார். தாம் அந்த விழாவுக்கான ஏற்பாட்டாளர் அல்ல என்பதைத் தெளிவுபடுத்திய அவர், நவம்பர் 9ம் தேதி அந்த நிகழ்வைத் தொடக்கி வைக்குமாறு…
PPSMI மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் தொடர வாய்ப்பு வழங்கப்படும்
அறிவியல் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் கற்கத் தொடங்கி விட்ட மாணவர்களுக்கு அவர்கள் அந்த மொழியில் அந்தப் பாடங்களை தொடர்ந்து கற்பதற்கான வாய்ப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது. பல பெற்றோர் அமைப்புக்கள் ஆட்சேபம் தெரிவித்ததைத் தொடர்ந்து அரசாங்கம் அவ்வாறு அறிவித்துள்ளது. என்றாலும் அந்தத் தீர்வு, ஆங்கில மொழிக் கொள்கையைக் கைவிடுவது என…
அம்பிகா இசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும், பெர்க்காசா
செக்சுவாலட்டி மெர்தேகாவுக்கு எதிராக தேசியப் பள்ளிவாசலில் பெர்க்காசா ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் அம்பிகா ஸ்ரீனிவாசன் எதிர்ப்பு ஊர்வலமாக மாறியது. அம்பிகா உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என ஆர்ப்ப்பாட்டக்காரர்கள் கோரினர். பெர்சே 2.0 தலைவருமான அம்பிகா, நவம்பர் 9ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் செக்சுவாலட்டி மெர்தேகாவில்…
சான் கொங் சாய் வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஏப்ரல்…
போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதித் திட்டம் தொடர்பில் ஏமாற்றியதாக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் சான் கொங் சாய் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு மீதான விசாரணை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2ம் தேதி தொடங்கும். அந்த விசாரணையில் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட்…
இலங்கையின் உள்விவகாரங்களில் மலேசியா தலையிடாது: கோகிலன்
மனித உரிமை மீறல் உள்ளிட்ட பிரச்னைகளை இலங்கையின் உள்விவகாரங்களாக மலேசியா கருதுவதால் அந்த விவகாரங்களில் மலேசிய அரசாங்கம் தலையிடாது. அப்பிரச்னையை இலங்கையே தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று வெளியுறவுத் துறைத் துணை அமைச்சர் கோகிலன் பிள்ளை தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கோகிலன் இவ்வாறு குறிப்பிட்டார். அதேவேளை, பொருளாதாரம்,…