‘தாக்குதல்’ காரணமாக, இரமலான் உதவி தொடர்பான முகநூல் இடுகையை கஸ்தூரி…

பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு, பினாங்கு ஸாகாட் மேலாண்மை மையத்தின் இரமலான் உதவி தொடர்பான இடுகையைத் தனது முகநூல் பதிவிலிருந்து நீக்கியுள்ளார். இஸ்லாம் அல்லாத அவர் ஏன் ஸாகாட் மேலாண்மை மையத்தின் உதவிகளை விநியோகிக்கிறார் என்று கேள்வி எழுப்பி, சமூக ஊடகங்களில் அவர் "தாக்கப்பட்டார்". “நான்…

RM975 நிலுவைத் தொகைக்காக ஏலம் விடப்பட்ட வீட்டுக்குத் தீர்வு கிடைத்தது

RM975 நிலுவைத் தொகை காரணமாக ஏலம் விடப்பட்ட வீட்டுப் பிரச்சனை வழக்கு ஒன்று, கடன் கொடுத்த வங்கிக்கும் சொத்து உரிமையாளருக்கும் இடையில் ஒரு  தீர்வு எட்டப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிகரமாக தீர்க்கப்பட்டது. முன்னதாக, இந்தப் பிரச்சினையை எழுப்பிய மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்), அவ்வீட்டில் துண்டிக்கப்பட்ட நீர் மற்றும் மின்சார…

இன்று 2,340 புதிய நேர்வுகள், 11 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 2,340 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இன்று 11 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 1,400 பேர் பலியாகியுள்ளனர். இன்று இறந்தவர்களில் 9 நோயாளிகள்…

டாக்டர் ஆடாம் : கல்வித்துறையில் 4,868 கோவிட் -19 நேர்வுகள்

2021 ஜனவரி 1 முதல் 2021 ஏப்ரல் 20 வரை, நாட்டின் கல்வித்துறை சம்பந்தப்பட்ட மொத்தம் 4,868 நேர்வுகளுடன், மொத்தம் 83 கோவிட் -19 திரளைகள், சுகாதார அமைச்சின் தேசிய சிபிஆர்சி-ஆல் புகாரளிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார். "மொத்த 83 திரளைகளில், 2,617 நேர்வுகள்…

RM2 மில்லியன் கையூட்டு : கு நானின் மேல்முறையீட்டை நீதிமன்றம்…

ஒரு தொழிலதிபரிடமிருந்து, RM2 மில்லியன் கையூட்டு வாங்கியதற்கான குற்றத்தீர்ப்பு மற்றும் தண்டனைக்கு எதிராக, முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோரின் மேல்முறையீட்டை மேன்முறையீட்டு நீதிமன்றம் நாளை செவிமடுக்கும். ஏப்ரல் 22 மட்டுமின்றி, ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 26 ஆகியத் தேதிகளையும் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.…

`தலைவரும் துணைத் தலைவரும் போட்டியின்றி தேர்வு`, தீர்மானத்திற்குக் கெடா ம.இ.கா…

ம.இ.கா. தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரனும் துணைத் தலைவர் எம் சரவணனும் கட்சி தேர்தலில் போட்டியின்றி தேர்வுபெற வேண்டும் என்றத் தீர்மானத்தைக் கெடா ம.இ.கா. ஏகமனதாக ஆதரித்தது. கெடா ம.இ.கா. தொடர்புகுழு தலைவர் எஸ் ஆனந்தன், நேற்று பெக்கன் செர்டாங் ம.இ.கா. கிளை பொதுக் கூட்டத்தில் அந்தப் பிரேரணையைச் சமர்ப்பித்தார்.…

அகோங்கை எதிர்கொள்ள அனுமதி கேட்டு, மகாதீரும் மாட் சாபுவும் அரண்மனைக்குச்…

யாங் டி-பெர்த்துவான் அகோங் முன்னிலையில் ஆஜராக அனுமதி பெற, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமதுவும் அமானா தலைவர் மொஹமட் சாபுவும் இன்று இஸ்தானா நெகாராவுக்குச் சென்றனர். பிரதமர் முஹைதீன் யாசின் அறிவுறுத்திய அவசரநிலையை உடனடியாக நிறுத்துமாறு, மாமன்னருக்குக் கோரிக்கை விடுக்க இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது. அவசரகால நிறைவுக்…

2 வாரங்களில், 250-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கோவிட் -19 தொற்று

கிளந்தானில், கோவிட் -19 தொற்று கண்ட 464 பேரில், 259 அல்லது 56 விழுக்காடினர் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் என்று மாநிலச் சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஜெய்னி ஹுசின் தெரிவித்தார். மீதமுள்ளவர்கள் ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள், தொடக்கப்பள்ளி மாணவர்கள், ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 19 வயதுக்கு…

ஆறுமுகத்தின் இரண்டாவது அவதூறு வழக்கு முடிவுக்கு வந்தது!

மலேசிய நண்பன் நாளிதழ் மீது வழக்கறிஞர் கா. ஆறுமுகம் இரண்டு அவதூறு வழக்குகளைப் பதிவு செய்திருந்தார். இரண்டாவதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு நேற்று (19.4.2021) கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அக்தார் பின் தகிர் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு முன்பாக ஒரு சுமூகமான ஒப்புதல் தீர்ப்புக்கு (consent judgement)…

மஸ்லி : கல்வி நிறுவனங்கள் தொடர்பான திரளைகளை விரிவாகக் கூறுங்கள்

இந்த அதிநவீனக் கல்வி நிறுவனத்தில், கோவிட் -19 நோய்த்தொற்றின் வீதம் அதிகரித்து வருவது குறித்து விளக்கம் அளிக்குமாறு, முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் அரசாங்கத்திடம் கோரினார். பள்ளிகள், பாலிடெக்னிக்ஸ், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் (ஐபிஜி), பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இப்போது ஆபத்தான தொற்றுநோய் பாதிக்கப்படக்கூடிய எந்தத் திரளைகள்…

மாநில எல்லைகளைக் கடக்கும் அனுமதி : திங்கள் முதல் வியாழன்…

வேலை, மருத்துவம் மற்றும் கல்வி நோக்கங்களுக்கான மாநில எல்லைகளைக் கடக்கும் அனுமதி, திங்கள் முதல் வியாழக்கிழமை வரை மட்டுமே வழங்கப்படும் என்று காவல்துறையின் துணைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்தார். மூன்று பிரிவுகளையும் உள்ளடக்கிய மாநிலங்களில், வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படாது…

போலிசாரால் தாக்கப்பட்டு, ஐ.சி.யு.-வில் இருந்தவர் மரணம்

காவலில் இருந்தபோது, கால் துண்டிக்கப்படும் அளவிற்குக் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவர், நேற்று முன்தினம், செலாயாங் மருத்துவமனை அவசரச் சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.) மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார். கடந்த மார்ச் 8-ஆம் தேதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது சகோதரர் கணபதி (40) இறந்ததை, மருத்துவமனை உறுதிப்படுத்தியதாக அவரது சகோதரி…

இன்று 2,078 புதிய நேர்வுகள், 8 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 2,078 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முந்தைய வாரங்களுடன் ஒப்பிடும்போது சரவாக் மற்றும் கிளந்தானில் புதிய நேர்வுகளீன் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சரவாக் மீண்டும் 589 நேர்வுகளுடன், அதிக எண்ணிக்கையிலான புதிய வழக்குகளைக்…

ம.இ.கா. : ஐ.பி.எஃப். ஆதரிக்கவில்லை என்றாலும் பிரச்சனை இல்லை

ம.இ.கா.-உடன் இணைந்து செயல்பட முடியாது என்றத் தேசிய முன்னணி (பி.என்.) நட்பு கட்சியான மலேசியா இந்தியர் மேம்பாட்டு முன்னணியின் (ஐ.பி.எஃப்) முடிவு, அடுத்தப் பொதுத் தேர்தலில் அக்கட்சியின் போராட்டத்தைப் பாதிக்காது. பி.என். கூட்டணியின் ஓர் அங்கமான ம.இ.கா.விற்கு ஆதரவளிக்க முடியாது என்று ஐ.பி.எஃப். முடிவு செய்தால், அதனால் ம.இ.கா.…

ஜோமோ : ஆணவத்துடன் செயல்படாமல், அண்டை நாடுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

கோவிட் -19 தொற்றுநோயைக் கையாளும் மேற்கத்திய வழியைப் பின்பற்றாமல், அதைக் கையாள்வதில் மிகவும் வெற்றிகரமான விளங்கும் மூன்றாம் உலக நாடுகளின் உதாரணத்தை மலேசியா பின்பற்ற வேண்டுமென பொருளாதார நிபுணர், பேராசிரியர் ஜோமோ குவாமே சுந்தரம் கூறினார். மலேசியா ஆணவத்துடன் இருக்கக்கூடாது என்றும், தொற்றுநோயை நிர்வகிப்பதில் அதன் அருகிலுள்ள அண்டை…

வாக்கு18-இன் நீதித்துறை மறுஆய்வு மே 6-க்கு ஒத்திவைக்கப்பட்டது

கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், பிரதமர், மலேசிய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் (இசி) ஆகியவற்றுக்கு எதிரான இளம் வாக்காளர் சங்கத்தின் (வாக்கு18) நீதி மறுஆய்வு விசாரணையை மே 6-ஆம் தேதிக்கு நிர்ணயித்துள்ளது. சட்டத்துறை தலைவரின் அலுவலகம் ஆரம்ப ஆட்சேபனைகளுக்குப் பதிலளிக்க வாக்கு18-க்கு வாய்ப்பு வழங்குவதற்காக விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. வாக்கு18-இன்…

கேலியால் விளைந்த சண்டை : எட்டு பேர் கைது

நேற்று அதிகாலை, ரவாங்கில் உள்ள ஓர் உணவகத்தில் நடந்த சண்டை சம்பவ விசாரணைக்கு உதவ, 8 பேர் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 23 முதல் 29 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்களில் நால்வர், சாட்சியம் அளிக்க கோம்பாக் காவல் நிலையத்திற்கு வந்தபோது தடுத்து வைக்கப்பட்டதாகவும், மேலும் நான்கு பேர் அதே காவல்நிலையத்தில்…

பள்ளியை மூடுவதற்கான முடிவு பி.கே.டி., கே.பி.எம். மற்றும் மாநில அரசுடன்…

கோவிட் -19 நேர்வுகள் அதிகரிப்பைத் தொடர்ந்து, பள்ளி மூடப்படுவது குறித்த முடிவு கல்வி அமைச்சு (கே.பி.எம்.) மற்றும் மாநில அரசுடன் இணைந்து, மாவட்டச் சுகாதார அலுவலகம் (பி.கே.டி.) மேற்கொள்ளும் கூட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் அமையும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார். கோவிட் -19 தொற்றுக்கு…

இன்று 2,195 புதிய நேர்வுகள், 8 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 2,195 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக நான்காவது நாளாக புதிய வழக்குகளின் எண்ணிக்கை 2,000-ஐ தாண்டியுள்ளது. சரவாக் 508 நேர்வுகளுடன், அதிக புதிய தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில்…

ஷாஹிடான் : முதலீட்டாளர்கள் நுழைவதற்குச் சாதகமான கருத்தை வெளியிடுங்கள்

பெர்லிஸ் அம்னோ தலைவர் ஷாஹிடான் காசிம், தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கம் குறித்து சாதகமான அறிக்கையை வெளியிடுமாறு நஜிப் ரசாக்கிற்கு அறிவுறுத்தினார். ஷாஹிடானின் கூற்றுப்படி, முன்னாள் பிரதமர் என்ற வகையில், நஜிப்பின் எதிர்மறையான பார்வை நாட்டிற்குள் முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சிகளைத் தடுக்க முடியும். "முன்னாள் பிரதமர் (நஜிப்) அரசாங்கத்தைப்…

கிட் சியாங் : இது மகாதீரைப் பற்றியது அல்ல, நாட்டின்…

டாக்டர் மகாதீர் மொஹமட் மற்றும் சில டிஏபி தலைவர்களுக்கு இடையேயான பிளவுக்கு மத்தியில், முன்னாள் பிரதமர் "தீவிரமானவர்" என்று விவரித்த, இஸ்கண்டார் புத்ரி எம்.பி. லிம் கிட் சியாங், இந்தப் பிரச்சினை மகாதீரைப் பற்றியது அல்ல, தேசத்தைக் கட்டியெழுப்புவது பற்றியது என்றார். டிஏபியில் சில தலைவர்கள் தீவிரமானவர்கள் என்றும்,…

கோபிந்த் : உள்விசாரணை போதாது, எம்ஏசிசி கையாள வேண்டும்

அண்மையில், காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி.பி) அப்துல் ஹமீட் படோர் வெளிப்படுத்திய கார்டெல் மற்றும் ஊழல் பிரச்சினைகளுக்குப் போலீசாரின் உள்விசாரணையினால் மட்டும் தீர்வுகாண முடியாது என்று பூச்சோங் எம்.பி. கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். எனவே, இந்த விவகாரம் குறித்த முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணையைத் தொடங்குமாறு அந்த டிஏபி…

கிளாந்தான் பி.கே.பி. பகுதியில் உள்ள பள்ளிகள் 5 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன

கிளாந்தானில், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் (பி.கே.பி.) உள்ள ஏழு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று முதல் வியாழக்கிழமை வரை மூடப்பட்டுள்ளன. இத்தகவலை, ​​மாநிலத்தின் உள்ளாட்சி, வீட்டுவசதி மற்றும் சுகாதார ஆட்சிக்குழு தலைவர் டாக்டர் இஸானி ஹுசின் உறுதிப்படுத்தினார். தொற்று தொடர்பான தகவல்களைப் பற்றி கேட்டபோது, அவர்…