நேற்றிரவு லாஹாட் டத்து, லெம்பா மக்சினாவில் ஏற்பட்ட நீர் பெருக்கத்தைத் தொடர்ந்து மூன்று பேர் நீரில் மூழ்கி இறந்தனர், மேலும் மூவரைக் காணவில்லை. பாதிக்கப்பட்டவர்கள், 25 மற்றும் 58 வயதுடையவர்கள், மலையேற்றத்திற்காக அந்தப் பகுதிக்குள் நுழைந்த 17 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்தவர்கள் என்று வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.…
ஜோகூர் மந்திரி பெசார் தொகுதியில் ஹரப்பான் நடத்திய பெரும் செராமா
நேற்றிரவு ஜோகூர் மந்திரி பெசார் காலெட் நோர்டின் தொகுதி பாசிர் கூடாங்கில் பக்கத்தான் ஹரப்பான் அதன் 4,000 த்திற்கு மேற்பட்டோர் பங்கேற்ற பிகேஆரின் சின்னம் "கண்" பொரித்த கொடிகளுடன் மலாய் சுனாமியின் தொடக்கத்தைக் காட்டிற்று.. 4,000 த்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட அந்தச் செராமில் பெரும்பாலானோர் மலாய்க்காரர்கள்.…
மகாதிர் 14 ஆவது பொதுத் தேர்தலில் பிகேஆர் சின்னத்தின் கீழ்…
இருபது ஆண்டுகளுக்கு முன்பு மகாதிர் முகமட்டும் அன்வார் இப்ராகிமும் விரோதிகள். ஆனால், எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் அவர்களுக்கிடையில் புதிய உறவு மலர்ந்துள்ளது. அன்வாரின் பிகேஆர் கட்சி சின்னத்தின் கீழ் மகாதிர் போட்டியிடவிருக்கிறார். பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியை மன்றங்கள் பதிவகம் (ரோஸ்) பதிவு செய்யாததைத் தொடர்ந்து…
மகாதிர்: மலாய் சுனாமி இல்லையா? காத்திருந்து பாருங்கள்
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக, பக்கத்தான் ஹரப்பான் ஜொகூரில் அம்மாநில மந்திரி பெசார் காலிட் நோர்டினின் தொகுதியான பாசி கூடாங்கில் ஒரு பெரும் பேரணியை நடத்துகிறது.. அப்பேரணிக்கு முன்னதாக பேசிய பக்கத்தான் ஹரப்பான் அவைத் தலைவர் மகாதிர் ஆளும் அம்னோ-பிஎன் அரசாங்கத்திற்கு எதிராக ஹரப்பான் ஒரு…
ஜிஇ14 : நஜிப்பின் முகத்தில் பயம் தெரிந்தது, முஹைடின் கூறுகிறார்
முஹைடின் யாசினின் மனதில் இன்னமும் புதிதாகவே உள்ளது. 60 மாதங்கள் கடந்துவிட்டது, நீண்ட காலமாகக் கருதப்படக்கூடியதாக இருந்தாலும்கூட. 2013, ஏப்ரல் 3-ம் தேதி, முஹைடின் நஜிப்பின் வலது பக்கம் சாதாரணமாக நின்றிருந்தார், அப்போது நஜிப்பின் உண்மையான வலது கரம் முஹைடின்தான். இன்று அந்த இடத்தில் டாக்டர் அஹ்மாட் ஷாஹிட்…
நாளை நாடாளுமன்றம் கலைக்கப்படும், நஜிப் அறிவிப்பு
14-வது பொதுத்தேர்தலுக்கு வழிவிடும் வகையில், மலேசிய நாடாளுமன்றம் நாளை, சனிக்கிழமை கலைக்கப்படும் எனப் பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்திருக்கிறார். பேரரசர், சுல்தான் முஹம்மட் V-ன் ஒப்புதலைப் பெற்ற பின்னர், புத்ராஜெயாவில் இன்று, மதியம் 12 மணியளவில், ஆர்டிஎம் வழியாக நேரலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் நஜிப். நாளை…
மகாதிர்: பெர்சத்துவில் எல்லாம் வழக்கம்போல் நடந்து கொண்டிருக்கிறது, ஆர்ஓஎஸ்ஸுக்கு எதிராக…
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து) தற்காலிகமாகக் கலைக்கப்படுவதாக சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) அறிவித்திருந்தாலும் அந்த அறிவிப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதால் அக்கட்சி எப்போதும்போல் தொடர்ந்து செயல்படும் என்கிறார் அதன் அவைத் தலைவர் மகாதிர் முகம்மட். . “ஆர்ஓஎஸ் அறிவிக்கை கலைக்கப்படுவதாகத்தான் குறிப்பிடுகிறது, அது கட்சியை ரத்து செய்தல் ஆகாது.…
ராய்ஸ் : ஆர்.ஓ.எஸ். ஜனநாயகத்தைப் ‘படுகொலை’ செய்கிறது
பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியை (பெர்சத்து), தற்காலிகமாகக் கலைத்த சங்கங்கங்கள் பதிவு இலாகாவின் (ஆர்.ஓ.எஸ்.) செயலுக்குப் பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ரஃபீடா அஸிஸ்-இன் கடுமையான விமர்சனத்திற்குப் பின்னர், டாக்டர் ராய்ஸ் யாத்திம், பெர்சத்து கட்சியின் தற்காலிக கலைப்பை அறிவிக்க ஆர்.ஓ.எஸ். ஒரு பத்திரிக்கையாளர் மாநாட்டை ஏற்பாடு…
சரியான கொசு கடித்தால் உயிருக்கே ஆபத்து, மறந்து விடாதீர்: ரபிடா…
கொசுக்கடி சில வேளைகளில் உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடாலாம் என்று எச்சரிக்கிறார் முன்னாள் அமைச்சர் ரபிடா அசிஸ். “பெர்சத்து கட்சியைக் கொசுக் கட்சி என்று குறிப்பிட்டவருக்குச் சொல்லிக் கொள்கிறேன். ஒரு வகை கொசுவால் மரணமே நேரலாம்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார். அவர் யாருடைய பெயரையும் கூறவில்லை ஆனால், சுற்றுலா, …
“அவரது (சாமிவேலுவின்) கட்சி ஒழித்துக்கட்டப்பட வேண்டும்”, மகாதிர் கூறுகிறார்
மகாதிர் பிரதமராக இருந்த 22 ஆண்டு காலத்தில் அவர் நம்பிய மிக முக்கியமான ஒருவரை நேற்று மாலை பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற இந்தியர்களுக்கான பக்கத்தான் ஹரப்பானின் தேர்தல் அறிக்கையை வெளியீடு நிகழ்ச்சியில் அவர் சாடினார். மஇகாவின் முன்னாள் தலைவர் ச. சாமிவேலுவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய மகாதிர்,…
ஜொகூர் டிஏபியின் இந்திய வேட்பாளர்கள் யார், ஆதரவாளர்கள் கேள்வி
நாட்டின் 14-வது பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படவிருக்கும் சூழலில், ஜொகூர் மாநிலத்தைக் கைப்பற்ற வேண்டும் எனும் வேட்கையில் எதிர்க்கட்சி கூட்டணியினர் பம்பரமாய் சுழன்று வருகின்றனர். இவ்வேளையில், ஜொகூர் டிஏபியைச் சேர்ந்த சில இந்திய ஆதரவாளர்கள், இதுவரை ஜொகூரில் களமிறங்கவிருக்கும் இந்திய வேட்பாளர்களைத் தெரிவிக்காத நிலையில், கட்சியின் மீது…
1969-ஆம் ஆண்டு தொடக்கம், முதல் முறையாக ‘ராக்கெட்’ தீபகற்பத்தில் இல்லை
மலேசியாவில் மிகவும் பிரபலமான அரசியல் கட்சி சின்னங்களில் ‘ராக்கெட்’ ஒன்றாகும், மேலும் 1969-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் இச்சின்னம் தோற்றமளிக்கிறது. இருப்பினும், எதிர்வரும் பொதுத் தேர்தலில், அக்கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்த போவதில்லை என்பதை ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் உறுதிப்படுத்தினார். இன்று, நாடாளுமன்றத்தில் நடந்த…
பெர்சத்து தற்காலிகமாகக் கலைக்கப்படுகிறது
பெரிபூமி பெர்சத்து மலேசியா கட்சி, சங்கங்கள் சட்டம் 14 (5) கீழ் தற்காலிகமாக கலைக்கப்படுவதாக, சங்கங்கள் பதிவு இலாகா (ஆர்.ஓ.எஸ்.) அறிவித்துள்ளது. அந்த அறிவுறுத்தல் இன்று முதல் அமலுக்கு வருகிறது. ரோஸ்-இன் தலைமை இயக்குநர் சூரயாத்தி இப்ராஹிம், இன்று புத்ராஜெயாவில் உள்ள ரோஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த ஒரு…
மகாதிர் சுவரொட்டிக்குத் தடை: தேர்தல் நெருங்கிவர பிஎன்னுக்குப் பயம் வந்து…
சுவரொட்டிகளில் மகாதிர் படத்துக்கு இசி தடை போடுகிறதாம், ஹரப்பான் கூறுகிறது குவெக்: எதிர்க்கட்சிகள் அடங்கிய பக்கத்தான் ஹரப்பான் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாக இருந்து வருகிறது. இப்போது அது அனைவரும் அறிந்த பெயராகி விட்டது. வரும் ஜிஇ 14-இல் அரசாங்கத்தைக் கைப்பற்றவும் தயாராகி வருகிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் - அதைப் பதிவு …
நாடாளுமன்றத்துக்கு வெளியில் வீடு கேட்டு ஆர்ப்பாட்டம்: ஒருவர் கைது
இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்தது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தங்களுக்கு வாக்குறுதி அளித்தபடி வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஜிஞ்சாங் உத்தாரா ஏ, பி, சி, டி பகுதிகளில் உள்ள நீண்ட வீடுகளின் குடியிருப்பாளர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் …
மலேசியா பத்திரிகைச் சுதந்திரம் மீதான ஐநா கருத்தைப் புறக்கணிக்கிறது :ஆர்எஸ்எப்
உலக அளவில் ஊடகச் சுதந்திரத்தைக் கண்காணித்து வரும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு ஐநா மனித உரிமை மன்ற(யுஎன்எச்ஆர்சி)த்தில் தாக்கல் செய்த அதன் அறிக்கையில் சர்ச்சைக்குரிய 2018 பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டத்தையும் சேர்த்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், யுஎன்எச்ஆர்சி-இன் கடந்த காலப் பரிந்துரைகளைப் புறக்கணித்து விட்டதாக …
பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் கொள்கை அறிக்கையில் இந்தியர்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள்…
பக்காத்தான் ஹராப்பான் அதன் தேர்தல் கொள்கை அறிக்கையில் இந்தியர்கள் நலன் குறித்த சிறப்பு திட்டங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை, ஏப்ரல் 5 ஆம் தேதி, மாலை 5.00 மணிக்குப் பெட்டாலிங் ஜெயா சிவிக் மையத்தில் நடைபெறுவதால் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ளும்படி பக்காத்தான் ஹராப்பானை…
டாக்டர் எம் இசா சட்டத்தைப் புதுப்பிப்பார், நல்லக்கருப்பன் நம்பிக்கை
பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் உட்பட, அனைவரையும் ஒடுக்க டாக்டர் மகாதிர் முகமட் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தை (இசா) மீண்டும் கொண்டுவருவார் என செனட்டர் எஸ்.நல்லக்கருப்பன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தங்கள் சொந்தத் தலைவராலேயே ஏமாற்றப்படலாம் என, அந்த முன்னாள் இசா தடுப்புக்காவல் கைதி ஹராப்பான் தலைவர்களை எச்சரித்தார். “மகாதீரின் நடவடிக்கைகளை…
ஜிஇ14: சுனாமியை ஏற்படுத்த, மலாய்க்காரர்கள் போதிய கோபத்துடன் இருக்கிறார்களா?
பக்காத்தான் ஹராப்பானை ஆதரிக்கும் மலாய் சுனாமி சாத்தியமானதுதான், ஆனால் 14-வது பொதுத் தேர்தலில் வாக்களிக்க, மலாய்க்காரர்கள் வீடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என ‘இல்ஹாம்’ நிர்வாக இயக்குநர் ஹிசோமுடின் பாக்கார் கூறியுள்ளார். டாக்டர் மகாதீர் ‘உணர்வலை’ குறித்து கருத்துரைத்த அவர், வாக்களிக்க வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத்…
ஹரப்பான் பொது அடையாளச் சின்னம் : அடுத்த வாரம் முடிவு
பக்கத்தான் ஹரப்பான் அதன் பொது அடையாளச் சின்னம் குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யும் என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார். தலைமைத்துவ மன்றம் செவ்வாய்க்கிழமைகளில் கூடுவது வழக்கம் அதில்தான் இதுபோன்ற விவகாரம் விவாதிக்கப்படும் என்று டிஏபி தலைமைச் செயலாளரான லிம் கூறினார். “இப்போதைக்கு அடுத்த …
அம்னோ தொகுதித் தலைவர்: நான் போதைப் பித்தனல்ல. அது ஒரு…
பண்டார் துன் ரசாக் அம்னோ தொகுதித் தலைவர் ரிசல்மான் மொக்தார் திங்கள்கிழமை காலை ஒரு கேளிக்கை மையத்தில் போலீசார் தன்னைக் கைது செய்தது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டார். ஆனால், போதைப் பொருள் உட்கொண்டிருந்ததாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார். அச்சம்பவம் முழுவதுமே தன்னைச் சிக்கவைப்பதற்காக நடத்தப்பட்ட சதி என்று கூறிய …
சிங்கையில் அரசியல் பரப்புரை செய்யாதீர்: மலேசியர்களுக்கு அறிவுறுத்து
சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டவர், அரசியல் பரப்புரை செய்வதற்கு அனுமதி இல்லை என சிங்கை போலீசார் கூறியுள்ளனர். “ மலேசியப் பொதுத் தேர்தலில் குளோபல் பெர்சே உள்பட பலரும் வெளிநாடுவாழ் மலேசியர்களின் ஆதரவுக்குக் கோரிக்கைகள் விடுப்பதை சிங்கை போலீசார் அறிவர். “சிங்கப்பூரில் வேலை செய்யும் அல்லது வசிக்கும் அல்லது சிங்கப்பூருக்கு …
மாட் சாபு சரவாக் நுழையத் தடை
அமனா தலைவர் முகம்மட் சாபு சரவாக்குக்குள் நுழைவதினின்றும் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் இப்படித் தடுக்கப்பட்டது இது முதல்முறை அல்ல. “அங்கு கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காலை மணி 9.30க்கு கூச்சிங் விமான நிலையம் வந்தடைந்த அவரைக் குடிநுழைவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்”, என முகம்மட் சாபுவின் அரசியல் செயலாளர் …
பூகிஸ் மாவீரர் எங்கே தம்முடன் விவாதத்திற்கு வந்துவிடுவாரோ என்ற வியப்பில்…
பிரதமர் நஜிப்பைக் கண்டு தாம் அஞ்சுவதாக ஹரப்பான் தலைவர் மகாதிர் ஏளனமாகக் கூறினார். ஆனால் அந்த "பூகிஸ் மாவீரர்" தம்முடன் விவாதம் நடத்துவதற்கான துணிச்சல் உடையவரா என்று அவர் வியந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, பூகிஸ் மாவீரருக்கு எதிராகச் சவால் விட வேண்டாம் என்று அவரது எதிர்ப்பாளர்களுக்கு நஜிப்…