இந்தச் சிக்கல் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவதாகவும், இது தொடர்பாகத் தான் வழங்கிய ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா கூறுகிறார். கடந்த ஆண்டில் சிலாங்கூரில் வெள்ளத்தினால் ஏற்பட்ட இழப்புகள் ரிம 52.9 மில்லியனாக இருந்தன, இது 2024-ஆம் ஆண்டில் பதிவான ரிம 22.6 மில்லியனை விட…
ஜிஇ14 : பாஸ் 5 மாநிலங்களை இலக்காகக் கொண்டுள்ளது
எதிர்வரும் ஜிஇ14-ல், ஐந்து மாநிலங்களைக் கைப்பற்ற, பாஸ் இலக்குக் கொண்டுள்ளதாக அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்தார். கிளந்தானில் ஆட்சியைத் தக்கவைத்து கொள்வதோடு, திரெங்கானுவை மீண்டும் கைப்பற்றவும், புதிய இலக்காக பெர்லிஸ்-ஐயும் அதனோடு சிலாங்கூரையும் கெடாவையும் பாஸ் குறிவைத்துள்ளது. அரசாங்கத்தை அமைக்கவிருக்கும் தரப்பினருக்கு ஆதரவாக இருக்க, 40…
பொக்கோக் செனாவில் ஹரபான் வெல்லும், மாபுஸ் திட்டவட்டம்
பொக்கோக் செனா எம்பி மாபுஸ் ஒமார், அத்தொகுதியில் பாஸ் கெடாவின் பிரபல கால்பந்தாட்ட வீரர் ரதி முகம்மட் டினைக் களமிறக்கினாலும்கூட வெற்றி பக்கத்தான் ஹரபானுக்குத்தான் என்று உறுதியாக நம்புகிறார். “மக்கள், மாநிலத்திலும் நாட்டிலும் மாற்றத்தை விரும்புவதால் இத் தொகுதியில் பக்கத்தான் ஹரபான் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்”, என …
ஹெலிகாப்டர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டது தேர்தல் விரைவில் என்பதற்கு அறிகுறியா?
தேர்தல் ஆணையம் சாபாவில் தனியார் நிறுவனங்களின் ஹாலிகாப்டர்கள் அனைத்தையும் ஏப்ரல், மே மாதங்களுக்கு வாடகைக்கு எடுத்துக் கொண்டிருப்பதாக த ஸ்டார் ஆன்லைன் அறிவித்துள்ளது. சாபாவின் இரண்டு ஹெலிகாப்டர் நிறுவனங்களும் இத்தகவலைத் தெரிவித்தனவாம். ஹெலிகாப்டர்கள் வாடகைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை வைத்து அம்மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது. அதேவேளை …
ஊழல் குறியீடு : மலேசியா இப்போது கியூபாவுக்கு நிகராக உள்ளது
புதிய ஊழல் குறியீட்டில் (சிபிஐ) மலேசியா, கம்யூனிச அரசான கியூபாவுக்கு நிகராக உள்ளது. சுழியத்திலிருந்து 100 வரையிலான அளவில், இரு நாடுகளுக்கும் 47 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. சுழியம் என்பது ஆக மோசமான ஊழல் என்றும் 100 மிக சுத்தமான நாடு எனவும் பொருள்படுகிறது. இன்று, கோலாலம்பூரில், மலேசிய சர்வதேச…
அனைத்து எண்ணெய் விலைகளும் தொடர்ந்து சரிந்தன
கடந்த வாரம், குறிப்பிடத்தக்க அளவு குறைந்த ரோன்95, ரோன்97 மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள், இன்று நள்ளிரவு தொடக்கம் முறையே 6 சென், 7 சென் மற்றும் 6 சென் என மீண்டும் குறைகிறது. அடுத்த ஒரு வாரம், ரோன்95 லிட்டருக்கு RM2.17, ரோன்97 லிட்டருக்கு RM2.43 மற்றும்…
கேவியஸ் : பி.எஸ்.எம். போட்டியிடக்கூடாது என டிஏபி கூறுவது ஆணவம்
எதிர்வரும் ஜிஇ14-ல், கேமரன் மலையில் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தனது வேட்பாளரை நிறுத்தக்கூடாது எனக் கூறியிருக்கும் டிஏபி-யின் போக்கு ஆணவமானது என மைபிபிபி தேசியத் தலைவர் எம்.கேவியஸ் கூறியுள்ளார். பி.எஸ்.எம். போட்டியிட்டால், அது ஹராப்பானுக்குச் சாதகமாக அமையாது என, கேமரன் மலைக்கான முன்னாள் டிஏபி வேட்பாளர் எம்.மனோகரன்…
மன்றங்கள் பதிவகத்தின் மீது ஹரப்பான் வழக்கு பதிவு செய்தது
பாக்கத்தான் ஹரப்பானை பதிவு செய்வதற்கு தாக்கல் செய்திருந்த மனுவுக்கு இதுவரையிலும் எவ்வித பதிலும் அளிக்காமல் மௌனமாக இருந்துவரும் மன்றங்கள் பதிவகத்தின் பதிவாளருக்கு (ரோஸ்) எதிராக ஹரப்பானின் தலைவர்களில் பலர் இன்று நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தனர். ரோஸுக்கு எதிரான வழக்கை ஐந்து ஹரப்பான் தலைவர்கள் -…
பொருளாதாரம் சிறப்பாக உள்ளத்தை எதிரணி ஒத்துக்கொள்ள வேண்டும்- சாலே
எதிரணியினர் மலேசியா நல்ல நிலையில் உள்ளதையும் அரசாங்கக் கொள்கைகள் சிறப்பாக செயல்படுவதையும் ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் வந்தாயிற்று என்கிறார் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக். மலேசியா நொடித்துப் போகும் நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் புளுகி வந்துள்ளன. அவற்றின் கூற்று பொய் என்பதை அனைத்துலக செய்திகள் நிரூபித்தாலும்கூட …
மலேசியாவின் சிறந்த கோல்காவலர் சீ கியோங் காலமானார்
மலேசிய கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவராக விளங்கியவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்தார். கோல்காவலில் சிறந்து விளங்கிய செள சீ கியோங் சிறுநீர்ப்பை புற்றுநோயால் இன்று காலை கோலாலும்பூர் யுனிவர்சிடி மருத்துவ மையத்தில் காலமானார். சீ கியோங் மலேசியாவின் மிகச் சிறந்த கோல் காவலர் என்பதில் ஐயமில்லை. வரும் நவம்பர் …
டிஏபி : கேமரன் மலையிலும் ஹராப்பான் வாய்ப்பைப் பி.எஸ்.எம். பாழாக்கும்
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியைப் பாரிசானிடமிருந்து கைப்பற்றும் பக்காத்தான் ஹராப்பான் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்க வேண்டாம் என, கேமரன் மலை நாடாளுமன்றத்தின் முன்னாள் டிஏபி வேட்பாளர், எம்.மனோகரன் மலேசிய சோசலிசக் கட்சியைக் (பி.எஸ்.எம்.) கேட்டுக்கொண்டார். பேராக் மாநிலத்தில், டிஏபியின் ஒரு நாடாளுமன்றம் மற்றும் 5 சட்டமன்றத் தொகுதிகளில் பி.எஸ்.எம்.…
கெராக்கான் மகளிர் தலைவர் பேராக்கில் போட்டி
கெராக்கான் மகளிஎ அணி தலைவர் டான் லியான் ஹோ, 14வது பொதுத் தேர்தலில் பேராக், ஜாலோங்கில் களமிறக்கப்படுவார். ஜாலோங், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். அத்தொகுதியை டான் திரும்பக் கைப்பற்றுவார் என்ற முழு நம்பிக்கை தமக்குண்டு எனக் கட்சித் தலைவர் மா சியு …
இன்று பிரதமரின் ‘சிறப்பு அறிவிப்பு’ இல்லை
14வது பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் இன்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் “சிறப்பு அறிவிப்பு” ஒன்றைச் செய்வார் என்று கூறும் பழைய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அக்காணொளி இன்று “சிறப்பு அறிவிப்பு” செய்யப்படும் என்று கூறுவதை …
மன்றங்கள் பதிவாளர் மீது ஹரப்பான் சட்ட நடவடிக்கை எடுக்கும்
அதிகாரப்பூர்வமான கூட்டணியாக பதிவு செய்வதற்கு பாக்கத்தான் ஹரப்பான் தாக்கல் செய்திருந்த மனுவுக்கு பதில் அளிக்க தவறிவிட்ட மன்றங்கள் பதிவாளரை (ரோஸ்) நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஹரப்பான் தீர்மானித்துள்ளது. இந்த வார இறுதிக்குள் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹரப்பான் தலைவர் மகாதிர் கூறுகிறார். ரோஸுடன் தொடர்பு கொண்டிருந்தும் அதனிடமிருந்து எந்த…
அபராதத்தைச் செலுத்த, தான் வரைந்த கோமாளி படத்தை விற்க விரும்புகிறார்…
வரைகலை வடிவமைப்பாளர் ஃபாமி ரேஸா, தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்த, தான் வரைந்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கோமாளி ஓவியத்தை விற்க உள்ளதாகக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஜூனில் , அக்கேலிச் சித்திரத்தை மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் அடையாளச் சின்னத்தோடு பதிவேற்றம் செய்ததற்காக, தொடர்பு, பல்லூடகச் சட்டம் (சிஎம்ஏ) பிரிவு 233(1) (ஏ) இன்கீழ் ஃபாமி மீது குற்றஞ்சாட்டப்பட்டு, இன்று ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு …
பாஸ்: இந்திரா வழக்கு முடிவில், ஹராப்பானுக்கு மகிழ்ச்சி
சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்திவரும் சட்டப்பிரிவு 164 பிரச்சனையை, குறிப்பாக இந்திரா காந்தி மற்றும் அவரது முன்னாள் கணவர் முகமட் ரித்வான் அப்துல்லா ஆகியோரை உள்ளடக்கிய ஒருதலைபட்ச மத மாற்ற வழக்கு போன்றவைக் குறித்து பாஸ் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்ட பின்னர், அனைத்தும் நீதிமன்றத்…
குவான் எங் : ஜிஎஸ்டி அகற்றப்படாவிட்டால், தொடர்ந்து உயரும்
நாட்டில் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) தற்போதையப் போக்குகளுக்கு ஏற்ப தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார். இது, 2021 மற்றும் 2025-க்கு இடையில், சிங்கப்பூர் அதன் ஜிஎஸ்டி-யை 7 விழுக்காட்டிலிருந்து 9 விழுக்காடாக உயர்த்த உள்ளதாக, நேற்று…
பொதுத் தேர்தல்14 – ‘நான் பெக்கானுக்கு போக விரும்புகிறேன்’, மகாதிர்…
14 ஆவது பொதுத் தேர்தலில் எங்கே போட்டியிடப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் ஒரு புலனாகாத பதிலை அளித்தார். பிரதமர் நஜிப் ரசாக் மீதான அவரது தாக்குதலில், தாம் நஜிப்பின் நாடாளுமன்ற தொகுதியான பெக்கானில்கூட தோன்றக்கூடும் என்று மகாதிர் எச்சரிக்கை விடுத்தார். "நாங்கள்…
நஜிப்பைக் கோமாளியாக வரைந்த ஓவியருக்கு ஒரு மாதச் சிறை, ரிம30,000…
ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றம், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கோமாளியாக்கி ஓவியம் வரைந்த வரைகலை வடிவமைப்பாளர் ஃபாமி ரேஸாவுக்கு ஒரு மாதச் சிறையும் ரிம 30,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. அக்கேலிச் சித்திரத்தை மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் அடையாளச் சின்னத்தோடு பதிவேற்றம் செய்ததற்காக தொடர்பு, பல்லூடகச் சட்டம்…
‘வேற வேலை இருந்தா போய்ப் பாருங்க’- கைக்கூலிகளுக்கு அபாண்டியின் காட்டமான…
சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி, இரண்டு இணைய செய்தித்தளங்களில் தம்மை நேரடியாகத் தாக்கி வெளிவரும் செய்திகளைக் குப்பைகள் என்று ஒதுக்கித்தள்ளினார். பணத்துக்காக அவை அப்படி எழுதுவதாக அவர் சொன்னார். “அவை கைக்கூலிகளால் நடத்தப்படுபவை, பணம் கொடுத்தால் அவர்கள் எழுதுவார்கள். “அவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால் ‘வேற வேலை …
பதிவு செய்துகொள்ளாதிருக்கும் குடியேறிகளுக்கு எதிராக ‘ஓப்ஸ் மெகா 2.0’ நடவடிக்கை
குடிநுழைவுத் துறை பதிவு செய்துகொள்ளாதிருக்கும் குடியேறிகளுக்கு எதிராக “ஓப்ஸ் மேகா 2.0” நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. அதன்கீழ் இதுவரை 1725 பேர் சோதிக்கப்பட்டு 604பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலாளிகள் அறுவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பிப்ரவரி 19இல் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் முஸ்தபார் அலி தலைமையில் முதலாவது அதிரடிச் சோதனை …
பெந்தோங்கில் போட்டியிடுவது பற்றி நினைத்துக்கூட பார்த்ததில்லை: லியோவுக்கு லிம் பதிலடி
டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், மசீச தலைவர் லியோ தியோங் லாய் நேற்று கூறியதுபோல் 14வது பொதுத் தேர்தலில் பெந்தோங்கில் போட்டியிடும் எண்ணம் தமக்கு அறவே இல்லை என்று மறுத்துள்ளார். விளம்பரத்துக்கு ஆசைப்பட்டு லியோ அப்படிக் கூறியிருக்கலாம் என்றாரவர். “மசீச துணைத்தலைவர் வீ கா சியோங் …
பெந்தோங்கில் கிட் சியாங்: வரட்டும், கவலையில்லை என்கிறார் லியோ
டிஎபியின் மூத்த தலைவரும் கேலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் அடுத்த பொதுத் தேர்தலில் பெந்தோங்கில் போட்டியிடும் நோக்கம் கொண்டிருப்பது உண்மையானால், அவரை எதிர்கொள்ள தயார் என்கிறார் மசீசவின் தலைவர் லியோ தியோங் லாய். மக்கள் பிரதிநிதியாக 1999 ஆம் ஆண்டிலிருந்து பெந்தோங் தொகுதியில்…
குவான் எங்கிற்கு ரிம185,000 இழப்பீடு கொடுக்க எப்இஸட்டிற்கு நீதிமன்றம் உத்தரவு
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மற்றும் வணிகர் டான் கோக் பிங் ஆகிய இருவருக்கும் தற்போது மூடப்பட்டுவிட்ட செய்தித் தளம் எப்இஸட்.கோம் (FZ.com) மற்றும் அதன் நிருவாக ஆசிரியர் டெரன்ஸ் பெர்ணான்டஸ் மொத்தம் ரிம320,000 இழப்பீடு கொடுக்கும்படி பினாங்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த அவதூறு…















