மலேசிய மருத்துவச் சங்கம், வழக்குகள் தீர்வு காணப்படாமலும் அல்லது எந்தவித முன்னேற்றத் தகவலும் வழங்கப்படாமலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படக் கூடாது என்று கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கம், புகாரளித்தவர் அல்லது சாட்சியாளர் ஒருவர் தனது புகாரைத் திரும்பப் பெறவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும்…
இபிஎப்: சந்தாதாரர்கள் சேமிப்புகள், தரவுகள் பாதுகாப்பாக உள்ளன
இன்று காலை சிலாங்கூர் ஊழியர் சேமநிதி (இபிஎப்) வாரிய தலைமையகக் கட்டிடத்தில் மூண்ட தீயில் சந்தாதாரர்களின் சேமிப்புகள், தரவுகள் பாதிக்கப்படவில்லை அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறது. இதனைத் தெரிவித்த இபிஎப் கார்ப்பரேட் தொடர்புத் துறை அந்த பெட்டாலிங் ஜெயா அலுவலகம் மறு அறிவிப்பு வரை மூடப்படுவதாக தெரிவித்தது. “வாடிக்கையாளர்கள், பணியாளர்களின் …
இபிஎப் தலைமையகத்தில் தீ
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஊழியர் சேமநிதி (இபிஎப்) தலைமையகக் கட்டிடத்தில் தீ பற்றிக்கொண்டது. அக்கட்டிடத்தின் பல மாடிகளில் தீ பற்றிக் கொண்டது. தீயைக் கட்டுப்படுத்த தீ அணைப்பு, மீட்புத் துறையினர் கடுமையாக போராடுகிறார்கள். தீ விபத்துக் காரணமாக அவ்வட்டாரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலை மணி 11.50 …
ஆட்ட நிர்ணய மோசடி: மலேசிய பூப்பந்து ஆட்டக்காரரிடம் விசாரணை
போட்டிக்கு முன்னரே முடிவுகளை நிர்ணயம் செய்யும் மோசடி தொடர்பில் மலேசிய பூப்பந்து வீரர் ஒருவருக்கு எதிராக உலகப் பூப்பந்து சம்மேளனம்(பிஎம்எப்) விசாரணை செய்து வருவதாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் இன்று கூறியது. விசாரணை முடியும்வரை அந்த ஆட்டக்காரர் போட்டிகளில் கலந்துகொள்ளத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்நாளேடு கூறியது. அனைத்து …
‘போலிச் செய்திகளை ஒடுக்குவது உண்மையென்றால் ஜாசாவை இழுத்து மூடுவீர்’
புத்ரா ஜெயா “போலிச் செய்திகளை’ ஒடுக்குவதில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால் முதலில் சிறப்பு விவகாரத் துறையை இழுத்து மூட வேண்டும் என்கிறார் செனாய் சட்டமன்ற உறுப்பினர் வொங் ஷு கி. “போலிச் செய்திகள்” சட்டவிரோதமானவை என்றால், அவற்றைப் பரப்பும் ஜாசா இயக்குனர் முகம்மட் புவாட் ஸ்கார்ஷியைத்தான் முதலில் கைது …
வசந்தப்பிரியா தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வார், குற்றச்சாட்டை அவரது தந்தை…
தனது மகள், சுயமாக தன்னைக் காயப்படுத்திகொள்வார் எனும் குற்றச்சாட்டை வசந்தபிரியாவின் அப்பா, ஆர். முனியாண்டி மறுத்துள்ளார். இன்று நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், 2016-ல் வசந்தப்பிரியா தனது மணிகட்டை வெட்டிக்கொண்டு, தன்னைத் தானேக் காயப்படுத்திக் கொண்டுள்ளார் என்று புகார் கூறியுள்ள துணைக்கல்வி அமைச்சர் பி.கமலநாதனை அவர் சாடினார். "கமலநாதனிடம்…
ஹரபான்: சிலாங்கூரில் 15, 20 தொகுதிகள்மீது பேச்சுகள் தொடர்கின்றன
சிலாங்கூர் பக்கத்தான் ஹரபானின் பொதுத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுகள் இன்னும் முடிவுபெறவில்லை. 15-20 தொகுதிகள் யாருக்கு என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்கிறார் சிலாங்கூர் பக்கத்தான் ஹரபான் தேர்தல் இயக்குனர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார். “இன்னும் முடிவு பெறவில்லை. பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். “15, 20 தொகுதிகள்மீது …
திடமாய் இருப்பீர்: ரபிசிக்கு மகாதிர் அறிவுரை
டாக்டர் மகாதிர் முகம்மட், ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றம் 30மாதச் சிறைத்தண்டனை விதித்தது குறித்து மனம் தளர்ந்துவிடக் கூடாது என பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லிக்கு அறிவுறுத்தியுள்ளார். “ரபிசி திடமாய் இருக்க வேண்டிய தருணம் இது. மனம் தளர்ந்து விடாதீர்கள்”, என பக்கத்தான் ஹரபான் தலைவர் இன்று …
முகைதின்: ஹரபான் நிகழ்வில் அம்னோ குண்டர்கள் அட்டகாசம்
வார இறுதியில் ஜோகூரில் பக்கத்தான் ஹரபான் நிகழ்வு ஒன்றில் புகுந்து அட்டூழியம் புரிந்தவர்களை “அம்னோ குண்டர்கள்” என பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் வருணித்தார். “சீனப் புத்தாண்டை ஒட்டி நடத்தப்பட்ட எங்கள் நிகழ்வு ஒன்றில் அட்டூழியம் செய்த அம்னோ/பிஎன் குண்டர்களின் செயலைக் கண்டித்து ஜோகூர் பக்கத்தான் ஹரபான் அறிக்கை …
இபிஎப் ஈவுத் தொகைக்கும் ஜிஇ 14-க்கும் சம்பந்தமில்லை -சாலே
அண்மையில் தொழிலாளர் சேமநிதி (இபிஎப்) ஈவுத் தொகை - கடந்த 20 ஆண்டுகளில் மிகப் பெரிய ஈவுத்தொகை இதுதான் - அறிவித்ததற்கும் 14வது பொதுத் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறினார். அறிவிக்கப்பட்ட மாத்திரத்தில் எதிர்க்கட்சிகள் அதைத் “தேர்தல்கால ஈவுத்தொகை” என்று …
‘பிஎன் பொய் சொல்ல முடியாது, தேர்தல் செயல்முறை மிகவும் இறுக்கமானது’
வரவிருக்கும் பொதுத் தேர்தலில், மோசடிகள் நடக்கும் என்ற குற்றச்சாட்டுகளைப் பிரதமர் நஜிப் ரசாக் மீண்டும் மறுத்தார். தேர்தல் ஆணையத்தின் மேம்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு அமைப்பு, அதை அனுமதிக்காது என்று அவர் கூறினார். "தேர்தல் நடைமுறை மிகவும் இறுக்கமாக இருப்பதால், நம்மால் பொய் சொல்ல முடியாது. நாம் ஏமாற்றி இருந்தால், தற்போதய…
பாலியல் துன்புறுத்தல் – #உண்டி ரோசாக் ஆர்வலர் போலிஸ் புகார்…
#உண்டி ரோசாக் பிரச்சார ஒருங்கிணைப்பாளர், மரியாம் லீ, தனக்கெதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் உடல் அச்சுறுத்தல்களுக்கு எதிராக, இன்று காலை, உலு கிள்ளான் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். பேஸ்புக் மலேசியா கெக்ஸ்-இல் இடம்பெற்ற, #உண்டி ரோசாக் கலந்துரையாடல் மன்றத்தில், அவரின் பங்கேற்பைக் காட்டிய வீடியோ காட்சிகளிலுள்ள அனைத்து கருத்துகளையும் வாசித்ததாக…
பெர்சே : தேர்தல் மோசடிகளைத் தோற்கடிக்க வாக்களியுங்கள்
14-வது பொதுத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தூய்மையான மற்றும் நியாயமான தேர்தலுக்கான கூட்டணி (பெர்சே) தேர்தல் மோசடிகளைத் தோற்கடிக்கும் முயற்சியாக அனைத்து மலேசியர்களும் வாக்களிக்க வேண்டுமென அழைப்பு விடுத்து, இன்று தனது புதிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, காப்பி கடைகளில் கலந்துரையாடல்கள் மற்றும்…
குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஜொகூர் பாருவில் ஹராப்பான் கூட்டம் இரத்து
நேற்றிரவு, கம்போங் பாக்கார் பத்து, ஜொகூர் பாருவில் பக்காத்தான் ஹராப்பான் ஏற்பாடு செய்திருந்த கூட்டம், அவ்வட்டாரக் குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தப்பட்டது. ஸ்துலாங் சட்டமன்ற உறுப்பினர் எண்ட்ரு சென் கா ஏங், அம்னோ மற்றும் பிஎன்-னின் இடையூறு காரணமாக அது ஏற்பட்டது என்று கூறினார். “அரசாங்கம் என்ற வகையில்,…
ரஃபிசி : “உண்மைதான் பாதிக்கப்பட்டது நான் அல்ல, மாடுகளும் அதன்…
நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேஷன் (என்.ஃப்.சி.) ஊழலில் பாதிக்கப்பட்டது ரஃபிசி அல்ல என்ற அம்னோ மகளிர் தலைவர் ஷரிசாட்டின் கூற்றை, பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிசி ரம்லி ஒப்புக்கொண்டார். “அவர் (ஷரிசாட்) சொல்வது உண்மைதான் என்று நான் நினைக்கிறேன்.” “வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் உண்மையாக் பாதிக்கப்பட்டது அந்த மாடுகள்தான், அவை…
5 நாடாளுமன்றம், 12 சட்டமன்றங்களில் பி.எஸ்.எம். போட்டி, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்
14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தனது நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பி.எஸ்.எம். மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வன் கருத்துப்படி, இது இறுதி பட்டியல் ஆகும், ஆனால் பி.எஸ்.எம். சின்னத்தில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர் அல்லாதவர்கள், பின்னர்…
வீ கா சியோங்கை எதிர்த்து டிஎபி போட்டியிடும்
அடுத்த பொதுத் தேர்தலில் மசீச துணைத் தலைவர் வீ கா சியோங்கை எதிர்த்து ஜோகூர் ஆயர் ஹீத்தாம் நாடாளுமன்ற தொகுதியில் டிஎபி போட்டியிடும் என்பதை அக்கட்சி உறுதி செய்துள்ளது. முன்னதாக, ஆயர் ஹீத்தாம் தொகுதியில் அமனா வேட்பாளர் டிஎபி சின்னத்தின் கீழ் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், அமனாவுக்கு…
பெல்டா நில மோசடி: பெல்டாவுடன் ‘எனக்குச் சம்பந்தமில்லை’-இசா சமட்
இசா சமட்டிடம் அவர் பெல்டா தலைவராக இருந்த காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கோலாலும்பூர் வெர்டிகல் சிட்டி(கேஎல்விசி) திட்டம் தொடர்பில் நிலவும் சர்ச்சைகள் குறித்து வினவப்பட்டதற்கு அது தமக்குச் சம்பந்தமில்லாத விவகாரம் என்றார். “பெல்டாவுடன் எனக்கு இப்போது சம்பந்தமில்லை. நடப்பு பெல்டா தலைவரைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்”, என்று இசா சொன்னதாக …
மருத்துவமனையில் மகாதிர்
பக்கத்தான் ஹரபான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் நேற்றிரவு தேசிய இருதயச் சிகிச்சைக்கழக (ஐஜேஎன்)த்தில் சேர்க்கப்பட்டார். “இப்போது பொது வார்டில் உள்ள மகாதிருக்கு மார்புச் சளிக்கும் இரூமலுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது”, என முன்னாள் பிரதமரின் முகநூலில் வெளியிடப்பட்டுள்ள மருத்துமனை அறிக்கை கூறிற்று. “சில நாள்களுக்கு டாக்டர் மகாதிர் இங்கு …
போலிச் செய்திகளை ஒடுக்குவதும் பேச்சுரிமையைக் கட்டுப்படுத்துவதும் ஒன்றல்ல- லியோ
அரசாங்கம் போலிச் செய்திகளை ஒடுக்கும் சட்டத்தைக் கொண்டு வருவது பேச்சுரிமையைக் கட்டுப்படுத்துவதற்கு அல்ல என்கிறார் மசீச தலைவர் லியோ தியோங் லாய். பேச்சுரிமையைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அது நாட்டின் நல்லிணக்கத்தையும் வளப்பத்தையும் கெடுத்து விடும் என்றாரவர். “ நாட்டில் நல்லிணக்கமும் ஒற்றுமையும் மேம்பாடும் தொடர்வதை உறுதிப்படுத்த …
மார்கோஸைவிட மோசமான நஜிப் வெற்றி பெற்றால் நாடு திவாலாகிவிடும், மகாதிர்…
பிரதமர் நஜிப் ரசாக் நடத்தும் தவறான ஆட்சி பிலிப்பைன்ஸ் நாட்டின் சர்வாதிகாரியும் கொள்ளைக்காரருமான பெர்டினனட் மார்கோஸின் ஆட்சியைவிட "மிகக் கடுமையானது" என்று மகாதிர் முகமட் அறிவித்துள்ளார். நஜிப் புரிந்துள்ள குற்றங்களுக்கு "தெளிவான ஆதாரங்கள்" இருக்கின்றன என்று மகாதிர் அவரது வலைத்தளத்தில் இன்று பதிவு செய்துள்ளார். உலக மக்களின்…
உடல் நலமற்ற மகாதிர் பெந்தோங் வருகையைத் தள்ளிப்போட்டார்
பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட் நாளை பெந்தோங்கிற்கு வருகையளிக்க இருந்தார். அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிய ஆலோசனைப்படி அவரது வருகை தள்ளிப்போடப்பட்டுள்ளது. பெர்சத்துவின் பெந்தோங் தொகுதி இன்று மாலை வெளியிட்ட ஓர் அறிக்கையில் மகாதிர் ஓய்வு எடுக்க…
பகோவை மீண்டும் கைப்பற்றுவோம், நஜிப் சூளுரைத்தார்
நாடு முன்னேற்றகரமானதாக இருப்பதை உறுதிசெய்ய மக்கள், குறிப்பாக பெல்டா குடியேற்றக்காரர்கள், பிஎன் மற்றும் அம்னோவை ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் இன்று மக்களுக்கு நினைவூட்டினார். நாம் மற்றவர்களை நம்பி இருக்கும் கட்சிகளின் தயவில் இருக்கக்கூடாது. நாம் நமது நம்பிக்கையை ஓர் உண்மையான கட்சியின்மீது வைக்க வேண்டும்,…
ஜொஹாரி – பயனீட்டாளர்களின் செலவு இவ்வாண்டு 5-6 விழுக்காடு உயரும்
பயனீட்டாளர்களின் செலவினம், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப, இந்த ஆண்டு ஐந்து முதல் ஆறு விழுக்காடு அதிகரிக்கும் என இரண்டாம் நிதி அமைச்சர் ஜொஹாரி அப்துல் காணி தெரிவித்தார். இந்த ஆண்டு, மலேசியப் பொருளாதாரம் 5 முதல் 5.5 விழுக்காடு வரை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர்…














