ஏப்ரல் 15 அன்று கிள்ளான் பள்ளத்தாக்கில் 11 இடங்களில் குடிவரவுத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், வீட்டுப் பணியாளர்களைக் குறிவைக்கும் கடத்தல் கும்பலிடமிருந்து எட்டு இந்தோனேசியப் பெண்கள் மீட்கப்பட்டனர். இந்தக் கும்பல் கடந்த ஒரு ஆண்டாகச் செயல்பட்டு வருவதாக நம்பப்படுவதாக குடிவரவுத் துறை இயக்குநர் தலைவர் ஜகாரியா ஷாபான்…
எரிபொருள் விலை கடந்த மூன்று மாதங்களில் முதல் முறையாகக் குறைகிறது
கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து விலை ஏற்றம் கண்ட எரிபொருள்கள், முதல் முறையாக இன்று நள்ளிரவிலிருந்து குறைந்த விலையில் விற்கப்படும். ரோன்95 மற்றும் ரோன்97 ஒரு லீட்டருக்கு முறையே இரண்டு மற்றும் மூன்று சென் விலை குறைந்து ரிம2.19 க்கும் ரிம2.49 க்கும் விற்கப்படும். டீசல் விலை…
ஆட்சிக் கவிழ்ப்பில் ரஹ்மான் டஹ்லானுக்கு உடன்பாடில்லை
பிஎன் வியூகத்தலைவர் அப்துல் ரஹ்மான் டஹ்லானுக்கு ஆட்சிக்கவிழ்ப்பு செய்வதில் உடன்பாடில்லை. அதுவும் இப்போதைய நிலையில் அதற்கு அவசியமுமில்லை என்று பிரதமர்துறை அமைச்சர் நினைக்கிறார். “அரசியல் புரட்சியில் எனக்கு உடன்பாடில்லை. அதுவும் ஆட்சித்தவணை முடியும் தருவாயில் இருக்கும்போது அதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டிய அவசியமும் இல்லை”, என மலேசியாகினிக்கு அனுப்பிய …
1எம்டிபி மீதான போலீஸ் விசாரணை முடிவுக்கு வந்தது
போலீஸ் 1எம்டிபிமீது மேற்கொண்ட விசாரணை முடிவுக்கு வந்தது. அதில் புதிதாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் பொதுமக்களுக்குத் தெரிவிக்க எதுவுமில்லை என இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் ஃபுசி ஹருன் தெரிவித்தார். “விசாரணை முடிவடைந்தது. மேல் விசாரணை செய்ய வேண்டிய அவசியமில்லை. “ஒருவேளை பொதுக்கணக்குக்குழு(பிஏசி) அல்லது அமைச்சரவை உத்தரவிட்டால் மேல்விசாரணை …
ரோஹிஞ்யா விவகாரம் சரியாகக் கையாளப்படாவிட்டால் ஆசியான் ‘ஐஎஸ் புகலிடமாக’ மாறும்…
மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் ரோஹிஞ்யா விவகாரத்துக்கு அவசரமாக முடிவு காணப்பட வேண்டும், தவறினால் அது தீவிரவாதிகள் வளருமிடமாக மாறி விடும் என மலேசிய வெளியுறவு அமைச்சர் அனிபா அமின் கூறினார். அவ்விவகாரம் தொடர்பில் மலேசியாவின் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக்கொண்ட அனிபா, தென்கிழக்காசியாவையும் தெற்காசியாவையும் தனது தளமாக்கிக்கொள்ள நாட்டம் கொண்டுள்ள …
தாபிஸ் தீ: விசாரணைக்குப் பின்னரே எழுவரின் நிலை தெரியவரும்
வியாழக்கிழமை கம்போங் டத்தோ கிராமாட் சமயப் பள்ளிக்குத் தீவைக்கப்பட்ட சம்பவத்தில் கைதான ஏழு இளைஞர்களின் நிலை விசாரணைக்குப் பின்னரே முடிவு செய்யப்படும் என்று இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி) முகம்மட் ஃபுசி ஹருன் கூறினார். “இரசாயனத் துறை, தீயணைப்பு மீட்புத் துறை அறிக்கைகளுக்காகவும் வேறு சில அறிக்கைகளுக்காகவும் …
பியோங்யாங் சென்றுவர டிஎம்ஜே-க்குச் சிறப்புச் சலுகை: வட கொரியா வழங்கியது
ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் எப்போது வேண்டுமானாலும் ஜோகூரிலிருந்து நேரடியாக பியோங்யாங் செல்ல முடியும். நேற்று அவருக்கும் வட கொரிய தூதர் கிம் யு சோங்-குக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பை அடுத்து அவருக்கு அச்சலுகையை பியோங்யாங் வழங்கியது. “இது மிகப் பெரிய கெளரவம் ஏனென்றால் மற்ற உலகத் …
கிட் சியாங் : ஆர்.சி.ஐ. சீக்கிரமாக விசாரணையை முடித்தது, நஜிப்…
திட்டமிடப்பட்டதற்கு முன்னதாகவே, ஆர்.சி.ஐ. தனது விசாரணையை முடித்து கொண்டது, பிரதமர் நஜிப் ரசாக் சாட்சியம் அளிப்பதிலிருந்து தவிர்ப்பதற்காகவா, என்று லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பினார். ஆர்.சி.ஐ.க்குச் சாட்சியமளித்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட், 1993- ஆம் ஆண்டு அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய வங்கி இழப்புக்கு ஆர்.சி.ஐ.…
பாஸ் மற்றும் ஹரக்காவுக்கு எதிராக சித்தி காசிம் வழக்கு தொடர்கிறார்
தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக வழக்குரைஞர் சித்தி காசிம் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் கட்சியின் நாளிதழ் ஹரக்கா டெய்லி மீது வழக்கு தொடர்வதற்காக சட்டப்பூர்வமான கோரிக்கை கடிதத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பியுள்ளார். "பாஸ் மற்றும் ஹரக்காவுக்கு எதிரான தமது வழக்கு தாம் செய்திருந்த கொர்பான்…
கசானாவிலிருந்து நோர் முகமட் யாக்கோப் பதவி விலகினார்
கசானா நேசனலின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக, நோர் முகமட் யாக்கோப் அறிவித்துள்ளார். அரசுக்குச் சொந்தமான அம்முதலீட்டு நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, காசானா இயக்குனர்கள் குழுவிலிருந்தும், கசானா ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்தும் விலகப்போவதாக நோர் கடிதம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. அவரின் பதவி விலகல் எதிர்வரும் செப்டம்பர்…
மகாதிர்: பிரதமர் மேயிடம் எதை வாங்குவதற்கு நஜிப் பேசினார்?
கடந்த வாரம் பிரதமர் நஜிப் அமெரிக்க அதிபர் டிரம்பை வாசிங்டனில் சந்தித்தது பற்றி கடுமையாக விமர்சித்திருந்த முன்னாள் பிரதமர் மகாதிர், அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பும் போது நஜிப் லண்டனில் பிரிட்டீஷ் பிரதமர் தெரெசா மேயிடம் என்ன பேசினார் என்று கேட்கிறார். குறிப்பாக, பிரிட்டீஷ் அரசிடமிருந்து ஏதாவது வாங்குவதற்கு…
அன்வார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்
சிறையிலடைக்கப்பட்டிருக்கும் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கோலாலம்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது மகள் நூருல் இஸ்ஸாவும் பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிசி ரமலியும் மலேசியாகினியிடம் இதை உறுதிப்படுத்தினர். இன்று பிற்பகல் மணி 2.00 அளவில் நிலையற்ற இரத்த அழுத்தத்தின் காரணமாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக…
போரெக்ஸ் மீதான ஆர்சிஐ முடிவுக்கு வந்தது
அன்னிய செலாவணி வணிகத்தில் பேங்க் நெகாராவுக்கு ஏற்பட்ட பில்லியன் கணக்கான ரிங்கிட் இழப்பு குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட அரச ஆணையத்தின் நடவடிக்கைகள் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன. வியாழக்கிழமை அதன் நடவடிக்கைகளை முடித்துக்கொள்ள முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. எட்டாவது நாளான இன்று விசாரணைகள் முடிவுக்கு வருவதாக ஆர்சிஐ தலைவர் முகம்மட் …
பிகேஆர் உதவித் தலைவர்: கட்சித் தாவல் ஆருடங்களில் உண்மையில்லை
சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்சிமாறத் திட்டமிடுகிறார்கள் என்ற ஆருடத்தை மறுத்த பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, அதில் எள்ளளவும் உண்மையில்லை என்றார். டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் பத்து எம்பி, அது மாநில அரசுக்குக் குழிபறிப்பதற்காக பிஎன் மேற்கொள்ளும் “விஷமத்தனமான பிரச்சார”த்தின் ஒரு பகுதி என்றார். “சிலாங்கூர் அரசு …
பாஸ்: நஜிப் அறிவிப்பு தொடர்பாகக் கூறப்படும் கருத்துக்கோட்பாடு சாத்தியமற்றது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், ஞாயிற்றுக்கிழமை முக்கியமான அறிவிப்பு ஒன்றைச் செய்வார் என்றும் அதில் சிலாங்கூரில் பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்சிவிலகி அம்னோவில் சேர்வார்கள் என்ற செய்தியும் உள்ளிட்டிருக்கும் என்று கூறப்பட்டது. அக்கூற்றின்படி, அச்சட்டமன்ற உறுப்பினர்கள் அம்னோவில் சேர்வதன்வழி அது பாஸுடன் இணைந்து சிலாங்கூர் அரசைப் பிடிக்க …
போயிங் விமானம் வாங்கும் திட்டம்: கவலையில் பயண உதவியாளர்கள் சங்கம்
புதிய போயிங் விமானங்கள் அமெரிக்காவிடமிருந்து வாங்க மலேசியன் ஏர்லைன்ஸ் சிஸ்டம் (மாஸ்) திட்டமிட்டிருப்பது குறித்து மலேசிய தேசிய பயண உதவியாளர்கள் சங்கம் (நுபாம்) வேதனையடைந்துள்ளது. புதிய விமானங்கள் வாங்குவது என்றால் அவை செல்வதற்கான புதிய பயணப்பாதைகள் மற்றும் அவற்றை இயக்குவதற்கு கூடுதல் தொழிலாளர்களைச் சேர்த்தல் என்பதாகும் என்று…
ஆர்சிஐ விசாரணையின் நோக்கம் என்னையும் ஒரு திருடனாகக் காட்டுவதே, மகாதிர்
பேங்க் நெகாரா அதன் அந்நியச் செலவாணி நட்டத்திலிருந்து மீட்சி கண்டுவிட்டது. இப்போது நடந்து கொண்டிருக்கும் அந்நியச் செலவாணி வர்த்தகத்தில் (போரெக்ஸ்) ஏற்பட்ட நட்டம் குறித்த அரச ஆணைய விசாரணை (ஆர்சிஐ) அந்த நட்டம் பற்றி விசாரிப்பதற்கல்ல என்று மகாதிர் கூறுகிறார். "அது பணத்தை இழந்தது பற்றியதல்ல, ஏன்றால்…
ஆர்சிஐ விசாரணையில் மகாதிர்
இன்று பிற்பகல் மணி 12.15 அளவில் முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் பேங்க் நெகாராவின் அன்னிய செலாவணி இழப்புகள் மீது விசாரணை நடத்தும் அரச விசாரணை ஆணைய(ஆர்சிஐ)த்திடம் சாட்சியமளித்தார். முதலில் தம் வாக்குமூலத்தை வாசித்த மகாதிர், பேங்க் நெகாரா தனித்து செயல்படும் ஓர் அமைப்பு என்றார். அதன் கவர்னர்தான் …
ஏஜி: எஸ்ஆர்சி மீதான விசாரணை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை
சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி, எஸ்ஆர்சி இண்டர்நேசனல் பெர்ஹாட் மீதான விசாரணை அறிக்கை இன்னும் தமக்குக் கிடைக்கவில்லை என்று கூறினார். முன்னர் அபாண்டி, மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) விசாரணையை மே மாதத்துக்குள் முடித்துக்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியிருந்தார். இந்த விசாரணை எஸ்ஆர்சி-இடமிருந்து ரிம42 மில்லியன் பிரதமர் நஜிப் …
திரும்பி வந்த மாட் தயிப் அம்னோவுக்கு என்ன செய்யப்போகிறார்? தெரியவில்லை…
அம்னோவுக்குத் திரும்பிவந்த முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் முகம்மட் தயிப்புக்குக் கோலாகலமான வரவேற்பு கொடுக்கப்பட்டிருப்பது உண்மைதான் என்று கூறும் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசீசுக்கு, அவர் அம்னோவில் என்ன செய்யப்போகிறார் என்பது உறுதியாகத் தெரியவில்லை . “அது எனக்குத் தெரியாது. நீங்கள் அவரிடம்தான் கேட்க …
ஜிஎஸ்டி சட்டத்துக்குத் திருத்தம் கொண்டுவரப்படும்
2014 பொருள், சேவைச் சட்ட(ஜிஎஸ்டி)த்தில் விரைவில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. இத்திருத்தம், மலேசியாவில் இலக்கவியல் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பில்லியன் கணக்கான ரிங்கிட் அரசாங்கத்துக்கு வரியாகக் கிடைப்பதற்கு வழிவகுக்கும். திருத்தம் செய்வதற்கான பரிந்துரை அடுத்த மாதம் நாடாளுமன்றம் கூடும்போது தாக்கல் செய்யப்படும் எனச் சுங்கத்துறை தலைமை இயக்குனர் …
டயிம்: எனக்குத் தெரியாது, சிடிக்: ஆனால், எல்லாருக்கும் தெரிந்திருக்கிறதே
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இன்று பேங்க் நெகராவின் அன்னிய செலாவணிமீதான அரச விசாரணை ஆணைய(ஆர்சிஐ)த்தில் சாட்சியமளிக்கவுள்ளார். அவருக்குமுன் முன்னாள் நிதி அமைச்சர் டயிம் சைனுடின் 23-வது சாட்சியாக சாட்சியம் அளித்தார். டயிம், அன்னிய செலாவணி இழப்புப் பற்றித் தெரிந்திருந்தால் பேங்க் நெகராவின் அன்னிய செலாவணி வாணிகம் …
சிறுபான்மையினருக்கு புதிய அரசியல் கட்சியாக, நியூஜென் கட்சி!
கடந்த 2013-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 28-ல், நியூஜென் கட்சியின் பதிவு அங்கீகரிக்கப்பட்டது. கட்சியின் பதிவுக்கு இராஜரத்தினம் ஆறுமுகன் மற்றும் எஸ். கோபி கிருஷ்ணன் இருவரும் முயற்சி செய்தனர். கட்சி பதிவு பெறுவதற்கு முன், ராப்பாட் மலேசியா (RAPAT) , பவர் மலேசியா (POWER) , மலேசிய இந்திய இளைஞர்…
மகாதீர் : மீண்டும் அம்னோவில் முகமட் தாயிப் , ‘வாழ்த்துகள்’…
பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மகாதீர் , சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி பெசார், முகம்மட் முகமட் தாயிப் மீண்டும் அம்னோவிற்குத் திரும்பியதற்கு ‘வாழ்த்து’ தெரிவித்தார். “மாட் தாயிப் மீண்டும் அம்னோவிற்குத் தாவியது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார் அவர். “அவர் தவளை மாதிரி. அம்னோவிலிருந்து பாஸுக்குத்…


