கிளந்தான் காவல்துறை, அந்தக் குழுவினர் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து பேராக் மாநில அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தலை கோரி வருவதாகத் தெரிவித்தது. குவா முசாங் காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபூ கூறுகையில், அவர்கள் ஆகஸ்ட் 29 அன்று குவா முசாங், லோஜிங்கில் உள்ள போஸ் டாகோ வழியாகக்…
‘எம்ஓ1’-இன் மனைவி யார் என்பதை ரோஸ்மா விளக்க வேண்டும்: சிலாங்கூர்…
பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர், அமெரிக்க நீதித்துறை (டிஓஜே) குறிப்பிடும் “மலேசியாவின் முதன்மை அதிகாரி (எம்ஓ1)-இன் துணைவி” யார் என்பதை விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். டிஏஜே, சொத்துப் பறிமுதல் தொடர்பாக நேற்று பதிவு செய்த ஒரு வழக்கில் “எம்ஓ1-இன் மனைவிக்கு” 22-காரட் இளஞ்சிவப்பு வைரக்கல் பதக்கத்துக்காகவும் கழுத்துச் …
ஜனவரியிலிருந்து 26,384 சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்பட்டனர்
ஜனவரியிலிருந்து நேற்று வரை, மொத்தம் 26,384 சட்டவிரோத குடியேறிகள் அவர்களின் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் முஸ்தபார் அலி கூறினார். அவர்கள் நாடு முழுவதும் மேர்கொள்ளப்பட்ட 6,936 அதிரடி நடவடிக்கைகளின்போது பிடிபட்டவர்கள் என்றாரவர். அந்நடவடிக்கைகளின்போது 75, 190 வெளிநாட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. “அதே வேளையில், 21,717 …
வீட்டுப் பணியாளர்களைப் பாதுகாக்க மேலும் கடுமையான சட்டங்கள் தேவை- நிபுணர்கள்
வீட்டுப் பணிப்பெண்களைப் பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்து. இப்போதுள்ள சட்டங்கள், வழிகாட்டும் விதிமுறைகள், இரு தரப்பு ஒப்பந்தங்கள் ஆகியவை அவர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டனவாம். “கட்டுப்படுத்தும் சட்டங்கள் தேவை. இப்போதுள்ளவை வீட்டுப் பணிப்பெண்களைப் பாதுக்கவில்லை”, என எம். இராமசெல்வம் நேற்று வழக்குரைஞர் மன்றச் செயலகத்தில் …
பெட்ரோல் விலையை நிர்ணயிக்க புதிய முறை
பெட்ரோலின் சில்லறை விலையை நிர்ணயிக்க புதிய முறை ஒன்று கடைப்பிடிக்கப்படும் என்றும் அது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் அமைச்சர் ஹம்சா சைனுடின் கூறினார். உள்நாட்டு எண்ணெய்த் தொழில் திடமாக இருப்பதை உறுதிப்படுத்த அது முக்கியம் என்று குறிப்பிட்ட அமைச்சர், புதிய முறை …
டிங்-கை பூஜுட் சட்டமன்ற உறுப்பினராக நிலைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு
கூச்சிங் உயர் நீதிமன்றம், டிங் தியோங் சூனை பூஜூட் சட்டமன்ற உறுப்பினராக நிலைநிறுத்தி இன்று தீர்ப்பு அளித்தது. இதனை இன்று தம் முகநூல் பதிவில் அறிவித்திருந்த சரவாக் டிஏபி செயலாளர் ஏலன் லிங், பல காரணங்களால் டிங் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது செல்லாது என்று நீதிபதி குறிப்பிட்டதாகக் …
அமெரிக்க நீதித்துறையின் சிவில் வழக்கு பதிவு பற்றி விவாதிக்க நாடாளுமன்ற…
அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) 1எம்டிபிக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றி விவாதிக்க மலேசிய நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று எதிரணித் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் கூறுகிறார். புதிய குற்றச்சாட்டுகள் நாட்டின் நற்பெயருடன் சம்பந்தப்பட்டுள்ளதால், அக்குற்றச்சாட்டுகள் பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்தின்…
அபாண்டி, இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்?, கேட்கிறார் அம்பிகா
சட்டத்துறை தலைவர் முகமட் அபாண்டி அலி அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) 1எம்டிபி பற்றி வெளியிட்ட மிக அண்மையத் தகவல்களை அசூர வேகத்தில் நிராகரித்தது குறித்து உரிமைகள் குழுமம் ஹாகாம் தலைவர் அம்பிகா அதிர்ச்சியடைந்துள்ளார். ஹாகாம் உதவித் தலைவர் குர்தியால் சிங் நிஜாருடன் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அபாண்டி…
ஒரு தலைவரை வீழ்த்துவதற்காக பரப்பப்படும் அவதூறுகளை நம்பாதீர்கள், ரோஸ்மா
ஒரு தலைவரை, ஓர் அமைப்பை அல்லது ஒரு நாட்டையே வீழ்த்துவதற்காக வேண்டுமென்றே பரப்பப்படும் அவதூறுகளுக்குப் பலியாக வேண்டாம் என்று பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் மலேசியர்களைக் கேட்டுக்கொண்டார். அவர்கள் தங்களுடைய தவறான பிரச்சாரத்திற்கு சமூக ஊடகங்களை தங்களுடைய முக்கியமான ஆயுதங்களாகப் பயன்படுத்துகிறார். அதன் மூலம் மக்களைக்…
பள்ளிவாசலில் அரசியல் பேசியதாகக் குற்றஞ்சாட்டும் கூ நான்மீது சிவராசா வழக்கு
பிகேஆர் எம்பி ஆர்.சிவராசா, தாம் பள்ளிவாசலில் அரசியல் பேசியதாகக் கூறியுள்ள கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். வேடிக்கை என்னவென்றால் தெங்கு அட்னானும் அக்குற்றச்சாட்டை செராஸ் பள்ளிவாசல் ஒன்றில்தான் கூறியிருக்கிறார் என்று குறிப்பிட்ட சிவராசா அக்குற்றச்சாட்டு பொய்யானது, தீய நோக்கத்துடன் …
1எம்டிபி: டிஓஜே குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை
1எம்டிபி, அதிலிருந்து பணம் கையாடப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை (டிஓஜே) சுமத்தும் குற்றஞ்சாட்டுகளை நிறுவுவதற்கு ஆதாரங்கள் இல்லை என்று கூறுகிறது. “1எம்டிபி அந்த சிவில் வழக்கில் டிஓஜே சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக ஆவணச் சான்றுகளோ சாட்சிகளின் வாக்குமூலங்களோ குறிப்பிடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறது”, என அந்நிறுவனத்தின் அறிக்கை கூறியது. சொத்துகளைப் …
கும்பலால் தாக்கப்பட்ட நவீன் மரணமடைந்தார்
இளவயதினர் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்ட டி. நவீன் மூளைச் சாவு அடைந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில் பினாங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் இப்போது இறந்து விட்டார். வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் அனுவார் ஓஸ்மான் அளித்த தகவலின்படி நவீன் இன்று மாலை மணி 6.00 அளவில் இறந்து போனார்.…
குவான் எங்: டிஎபி டிக்கெட் விற்ற பணத்திலிருந்து விருந்து நடத்துகிறது
இந்த ஆண்டில் டிஎபி மூன்று விருந்துகளை மட்டுமே நடத்தியுள்ளது. அதற்கான பணம் பொதுமக்களிடம் டிக்கெட் விற்கப்பட்டதன் மூலம் பெறப்பட்டது என்று கட்சியின் தலைமைச் செயலாளர் குவான் எங் கூறினார். "ஏன் இப்படிப்பட்ட பொய்கள் சொல்லுகிறீர்கள்?", என்று வினவிய குவான் எங், மாநில அம்னோ இணைப்புத் தலைவர் ஸைனால்…
காணாமல் போன ஆர்எம்எஎப் ஜெட் கண்டுபிடிக்கப்பட்டது, இரு விமானிகளும் இறந்த…
முன்னதாக காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்ட ஹாக் 108 இன் இரு விமானிகளும் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். இன்று,பின்னேரம் 2.20 அளவில், திரங்கானு, கெமமான், சுகாய்க்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் அந்த ஹாக் 108 விமானத்தின் இரு விமானிகளும் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். அஸ்ட்ரோ அவானி அவ்விருவரையும் யாஸ்மி…
நஜிப்பிடம் பணம் பெற்றதாக சொய் லெக் கூறியதை நினைவுகூர்கிறார் டிஏபி…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் ரிம10 மில்லியன் பெறவில்லை என்ற சிலாங்கூர் மசீச-வின் மறுப்பை ஈராண்டுகளுக்குமுன் மசீச முன்னாள் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் ஒரு நேர்காணலின்போது கூறிய செய்தி பொய்யாக்கலாம் என்கிறார் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர். 2015 அக்டோபரில், cari.com.my வலைத்தளத்தில் வெளியான ஒரு …
ஆகாயப் படை விமானத்தைக் காணோம்
அரச மலேசிய ஆகாயப் படை (ஆர்எம்ஏஎப்) ஜெட் விமானமொன்று குவாந்தான் ஆகாயப்படைத் தளத்திலிருந்து புறப்பட்ட அரை மணி நேரத்தில், காலை மணி 11.30க்கு, அதனுடன் தொடர்புகள் அறுந்ததை அடுத்து காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது. அந்த ஹாக் 108 ரக விமானம் குவாந்தானுக்கு வடக்கில் பகாங்-திரெங்கானு எல்லைக்குயரே பறந்து சென்றபோது …
மகாதிரை ஹராபான் நிர்வாகத் தலைவராக நியமிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுவதை பிகேஆர்…
பிகேஅர், நேற்றிரவு கூடிய அதன் அரசியல் பிரிவு, டாக்டர் மகாதிர் முகம்மட் பக்கத்தான் ஹராபானின் நிர்வாகத் தலைவராக நியமிக்கப்படுவதற்கு ஒப்புதல் தெரிவித்ததாகக் கூறும் செய்திகளை மறுத்தது. “அச்செய்தி உண்மையல்ல. அதன் தொடர்பில் ஹராபான் தலைவர் மன்றம் முறையான அறிவிப்பைச் செய்யும்”, என பிகேஆர் தொடர்பு இயக்குனர் பாஹ்மி பாட்சில் …
போதைப் பொருள் கைதிகளுக்காக ஆண்டுதோறும் ரிம425 மில்லியன் செலவு
அரசாங்கம் நாடு முழுவதும் போதைப் பொருள் குற்றங்களுக்காக சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்காக ஆண்டுதோறும் ரிம 425 மில்லியனைச் செலவிடுகிறது. நாடு முழுவதும் சிறையில் உள்ள 59,600 கைதிகளில் 33,500 பேர் அதாவது 56 விழுக்காட்டினர் போதைப் பொருள் தொடர்பான குற்றம் புரிந்தவர்கள். நேற்று, தேசிய போதைப் பொருள்- எதிர்ப்பு …
ஹனிபா: பொய்களை வெளியிடும் சரவாக் ரிப்போர்ட்டை எண்ணி அஞ்சுவது ஏன்?
சரவாக் ரிப்போர்ட் பொய்களை மட்டுமே வெளியிடும் ஒரு வலைத்தளம் என்றால் அதை நினைத்து அஞ்சுவானேன்? அதைத் தடுப்பது ஏன்? சிப்பாங் எம்பி முகம்மட் ஹனிபா அவரது முகநூலில் இவ்வாறு வினவியுள்ளார். அந்த வலைத்தளத்தில் வெளிவரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கும் அமைச்சரை நினைத்தால் “பரிதாபமாக” இருக்கிறது …
பொறுக்கியெடுத்து விரைவுபடுத்தப்படும் தேர்தல் எல்லை வரைவு வழக்குகள் கவலையளிக்கிறது, வழக்குரைஞர்…
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான தேர்தல் தொகுதி எல்லை மறுவரைவு வழக்குகளை விரைவுபடுத்தும்படி தலைமை நீதிபதி முகமட் ராவுஸ் ஷரீப் விடுத்துள்ள உத்தரவு கவலையளிக்கிறது என்று மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் தலைவர் ஜோர்ஜ் வர்கீஸ் கூறுகிறார். தேர்தல் ஆணையத்திற்கு எதிரான சிலாங்கூர் மற்றும் மலாக்கா வழக்குகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. அந்த வழக்குகளால்…
ஜோகூர் அடுத்த பொதுத்தேர்தலில் இரண்டாவது ‘பினாங்கு’ ஆகும் என்கிறார் கிட்…
மலேசிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி பினாங்கில் செய்ததைப் போல் ஜோகூர் மாநிலத்தைக் கைப்பற்றி அதை ஒரு முன்நிலை மாநிலமாக்க முடியும் என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் நம்புகிறார். பினாங்கைப் போல், ஜோகூர் ஒரு முன்நிலை மாநிலமாக வெற்றி பெற்றால் இதர மாநிலங்களான கெடா, பேராக்,…
ஹராபான் ராயாவுக்குமுன் பதிவு செய்யப்படும்
பக்கத்தான் ஹராபான் நோன்புப் பெருநாளுக்கு முன்னதாக சங்கப் பதிவகத்தில் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி தொடர்பான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் அதன் அடையாளச் சின்னத்துக்கும் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் பார்டி அமனா நெகரா (அமனா) துணைத் தலைவர் சலாஹுடின் ஆயுப் கூறினார். இறுதிக்கட்ட ஏற்பாடுகளைச் …
14வது பொதுத் தேர்தலில் வாழ்வாதார விவகாரங்களுக்கே வாக்காளர்கள் முக்கியத்துவம் அளிப்பர்
அடுத்த பொதுத் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கப் போவது வாழ்வாதார பிரச்னைதானே தவிர 1எம்டிபி ஊழல்களோ சீன முதலீட்டாளர்களுடன் செய்து கொள்ளப்பட்ட வர்த்தக உடன்பாடுகளோ அல்ல என்று ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் இன்று கூறியது. நேற்று சிங்கப்பூரில் நடந்த “மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தல்: ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும்” என்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட …
ஐஜிபி: சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் இங்கு வரலாம் ஆனால், அவரின்…
சரவாக் ரிப்போர்ட் பத்திரிகையின் ஆசிரியர் கிளேர் ரியுகாசல்- பிரவுன், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவுக்கு ரிம9.5 மில்லியன் கொடுத்தார் என்று அப்பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தி தொடர்பான போலீஸ் விசாரணைக்கு உதவ மலேசியா வர வேண்டும் என இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் …


