குவான் எங்: ஜிஎஸ்டி-யால் சில தொழில்கள் ஆதாயம் பெற முடியாமல்…

பினாங்கு   முதலமைச்சர்    லிம்    குவான்    எங்,   பொருள்,  சேவை   வரி  (ஜிஎஸ்டி)  அகற்றப்பட    வேண்டும்   என்று  கோரிக்கை   விடுத்திருக்கிறார்.  அவ்வரியால்  சில   தொழில்கள்  ஆதாயம்   காண  முடியாமல்  போனது  என்றாரவர். “பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்    2017  பட்ஜெட்டை   நாடாளுமன்றத்தில்   தாக்கல்    செய்யும்போது   தம்    பொருளாதாரக்   கொள்கை   தோற்றுப்போனதை  …

ஜோகூர் அரச குடும்பத்தைப் பழித்துரைத்த மேலும் ஒரு முகநூல் பயனர்…

ஜோகூர் அரச குடும்பத்தைச்  சேர்ந்த   ஒருவரை  அவமதிக்கும் வகையில் முகநூலில்    கருத்துப்   பதிவு    செய்திருந்த   25-வயது    ஆடவர்   ஒருவர்   இன்று  கைது    செய்யப்பட்டார். பத்து காஜாவைச் சேர்ந்த அவர்    கோலாலும்பூரில்   செய்யப்பட்டார்.  அவர்    விசாரனைக்காக     ஜோகூருக்கு     அழைத்து   வரப்படுவார்   என   ஜோகூர்   போலீஸ்   தலைவர்   வான்   அஹ்மட்   நஜ்முடின்  …

பினாங்கு தயாரிப்புத் துறையில் ஆள்குறைப்பு தொடர்கிறது

பினாங்கு  மாநிலத்தில்    தயாரிப்புத்  துறையில்   மேலும்  சுமார்   200  பேர்   விரைவில்   வேலை   இழப்பர். டெக்   செங்   ஹோல்டிங்ஸ்  துணை   நிறுவனமான    டிஎஸ்   சோலார்டெக்   சென். பெர்ஹாட்     நாளை   அதன்   பணியாளர்களில்  பலர்    வேலை   இழக்கலாம்    என்று    தெரிவித்திருப்பதாக    பிசினஸ்  டைம்ஸ்   அறிவித்துள்ளது. தேவைக்குமேல்   பணியாளர்கள்    இருப்பதால்      ஆள்குறைப்பு  …

மகாதிர்: எதிரணி வென்றால் முகைதின் பிரதமராவார்…… ஆனால்

14வது   பொதுத்   தேர்தலில்   எதிரணி   வெற்றி   பெற்றால்   பார்டி    பிரிபூமி   பெர்சத்து   மலேசியா (பெர்சத்து)  இடைக்காலத்   தலைவர்    முகைதின்   யாசின்    பிரதமராகும்   வாய்ப்பு   உள்ளது.  அப்படித்தான்   முன்னாள்  பிரதமர்   டாக்டர்    மகாதிர்    முகம்மட்   கூறுகிறார். “இப்போது  பிரதமர்   யார்   என்று   அறிவிப்பது   சிலருக்கு   ஏமாற்றத்தை   அளிக்கலாம்.   அது  கட்சியைப் …

பிடிபிடிஎன்: கடன் வாங்கியவர்கள் வரலாம் கலந்தாலோசிக்கலாம்

தேசிய   உயர்க்  கல்விக்  கடனுதவி   நிதி  நிறுவன (பிடிபிடிபிஎன்) த்திடம்  கடன்  வாங்கியவர்கள்   கடனைத்  திருப்பிச்  செலுத்துவதில்    சிரமங்களை   எதிர்நோக்கினால்   அது    குறித்து  பிடிபிடிஎன்னுடன்   நேரடியாக  கலந்து  பேசலாம்.  பிடிபிடிஎன்   அவர்களின்   சிரமங்களைக்   குறைக்க   முயலும். பிடிபிடிஎன்     அறிக்கை   ஒன்று,    கடனைத்  திரும்பப்  பெற        மேற்கொள்ளப்படும்     நடவடிக்கைகள்   எந்தத்  …

நோ ஒமார், நீர் விநியோகத் தடையை அரசியலாக்கக் கூடாது

சிலாங்கூரைத்    தொல்லைக்குள்ளாக்கியுள்ள   நீர்  விநியோகத்   தடையை   வைத்து  அரசியல்  ஆட   வேண்டாம்  என   அமைச்சர்  நோ   ஒமாருக்கு    அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப்   பிரச்னையைப்     பயன்படுத்தி   நோ  ஒமார்       சிலாங்கூர்  மந்திரி    புசார்    அஸ்மின்  அலியை  மட்டம்  தட்டவும்      சுய     அரசியல்  ஆதாயம்  தேடவும்   முனைந்துள்ளார்   என   டமன்சாரா   உத்தாமா   சட்டமன்ற  …

குவான் எங்: பினாங்கில் நீர்ப் பங்கீடு அவசியமில்லை

பினாங்கில்   நீர்ப்  பங்கீட்டுக்கு    அவசியமில்லாதபடி    நீர்  விநியோகம்   தடையின்றிக்  கிடைப்பதற்கு    ஆவன   செய்யப்படும். வறட்சிக்  காலத்தில்கூட   பினாங்கில்   நீர்ப்  பங்கீட்டை   அமல்படுத்தியதில்லை   என  முதலமைச்சர்   லிம்   குவான்  எங்  கூறினார். இதற்கு   பினாங்கு  நீர்  விநியோக   கார்ப்பரேசனின்(பிபிஏபிபி)   திறமையான   நிர்வாகம்தான்   காரணம். “பல   மாநிலங்கள்  தண்ணீர்  பற்றாக்குறையை    எதிர்நோக்குகின்றன. …

சாபாவில் கடத்தப்பட்டவர்கள் மோசமான நிலையில் உள்ளனர்; அரசாங்க உதவியை நாடுகிறார்கள்

அபு   சாயாவ்   கடத்தல்காரர்கள்    ஜூலை   18-இல்   அபு   சாயாவ்      ஜோலோ   தீவிலிருந்து  கடத்திச்   சென்ற     ஐந்து   மலேசியர்களில்    ஒருவரை   இன்று    த  ஸ்டார்   நாளேட்டுடன்   பேச   அனுமதித்தனர். அதை  ஒரு   சிறப்புச்   செய்தியாக    த   ஸ்டார்    வெளியிட்டிருந்தது. அபு   சாயாவ்   பேச்சாளர்   அபு  ரமி,   அந்த   நாளேட்டை   அழைத்து  …

முக்ரிஸ் கெடாவில்தான் போட்டியிடுவார்; புத்ரா ஜெயாவில் அல்ல

கெடாவின்   முன்னாள்   மந்திரி   புசார்   முக்ரிஸ்   மகாதிர்   அடுத்த   பொதுத்   தேர்தலில்   கெடாவில்தான்   போட்டியிடுவார். இதை   முக்ரிஸ்   சினார்   ஹரியானுக்கு   வழங்கிய    சிறப்பு   நேர்காணல்  ஒன்றில்   வலியுறுத்தினார். “சிலர்   நான்  புத்ரா  ஜெயாவில்   போட்டியிட  வேண்டும்    என்கிறார்கள்.  ஆனால்,  நான்  கெடாவைத்தான்   விரும்புகிறேன். “கெடாவில்   எந்த  இடம்   என்றால், …

மலாய்க்காரர்கள் நஜிப்பையும் அம்னோவையும் ஆதரிக்கிறார்களா? யார் சொன்னது? ரபிசி வினவுகிறார்

அண்மையில்   தேர்தல்   ஆணையம்   மேற்கொண்ட    தேர்தல்   தொகுதிச்  சீரமைப்பு    நடவடிக்கை    மலாய்   வேட்பாளர்களைப்  பெரும்பான்மையாகக்  கொண்ட   தொகுதிகளை    அதிகமாக  உருவாக்கும்   நோக்கம்    கொண்டது    என்று   பலரும்    கவலை  தெரிவித்தார்கள். ஆனால்,  பிகேஆர்   தலைமைச்   செயலாளர்  ரபிசி  ரம்லிக்கு  அந்தக்  கவலை  இல்லை. “மலாய்க்காரர்களை   ஒன்று  சேர்ப்பதன்   மூலமாகவும்   சீனர்கள் …

சமூக வலைத்தளச் செய்திகள் வேத உண்மைகள் அல்ல: ஜாஹிட்

வெளிநாடுகளில்    உள்ள    மலேசிய  மாணவர்கள்     வெளிவரும்   செய்திகளைக்   குறிப்பாக    சமூக  வலைத்தளங்களில்    இடம்பெறும்   செய்திகளை   அப்படியே   நம்பிவிடக்   கூடாது    என்று   துணைப்  பிரதமர்    ஜாஜிட்   ஹமிடி   கூறினார்.   சொல்லப்படுவதெல்லாம்   உண்மைதானா  என்பதை   நுணுகி   ஆராய  வேண்டும். சமூக     வலைத்தளங்களில்   ஜிஎஸ்டி,  பெட்ரோல்   விலை,  மலேசியாவில்  உள்ள   வங்காள  தேசிகள்     …

1எம்டிபி மீது நூல்: ரியுகாசல் எழுதுகிறார்

 1எம்டிபி  ஊழல்களை   விவரிக்கும்   ஒரு  நூலை  எழுதிக்  கொண்டிருக்கும்    சரவாக்  ரிபோர்ட்     ஆசிரியர்  கிளேய்ர்   ரியுகாசல்-  பிரவுன்,       தம்  புலனாய்வு   இதழியல்   வாழ்க்கையில்   அதுவே  மிகப்  பெரிய   சாதனையாக   அமையும்   என்று   நம்புகிறார். “இப்போதைக்கு   நான்  சரவாக்  ரிப்போர்டில்   எழுதுவது    கொஞ்சமாக   இருக்கலாம்    ஏனென்றால்,        1எம்டிபி   புலனாய்வு   குறித்த …

தான் ஊழல் செய்யவில்லை என்று நம்பும் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்…

 டிஏபி  50ஆம்  ஆண்டு  நிறைவு   விருந்துபசரிப்பில்    கலந்துகொண்ட    கட்சித்  தலைவர்களும்   ஆதரவாளர்களும்     தலைமைச்   செயலாளர்   லிம்-முக்கு    உறுதியான   ஆதரவைத்    தெரிவித்துக்  கொண்டனர். நேற்றிரவு  பாயான்   பாரு   ஸ்பைஸ்  அரினா-வில்    நடைபெற்ற   விருந்து   நிகழ்வில்  சுமார்  3,000  பேர்   கலந்துகொண்டார்கள். அதில்   ரிம12,144.30   நன்கொடையும்   திரட்டப்பட்டது. விருந்து   முடிவில்   லிம்முக்கு   …

கோடீஸ்வரர் ஆனந்தகிருஷ்ணனுக்குக் கைது ஆணை: இந்தியா பிறப்பித்தது

புது டில்லி   நீதிமன்றம்   ஒன்று   மலேசியக்   கோடீஸ்வரர்   டி.ஆனந்தகிரூஷ்ணனையும்   அவரின்   உதவியாளர்  ரால்ப்   மார்ஷலையும்  பிடிப்பதற்குக்   கைதாணை   வெளியிட்டிருக்கிறது.  இவ்விவகாரத்தில்   இண்டர்போலின்    உதவியும்   நாடப்பட்டுள்ளது. கடந்த    ஈராண்டுகளாக   அவர்களை   நீதிமன்றத்துக்கு    அழைத்து   வர  மேற்கொள்ளப்பட்ட   முயற்சிகளுக்கு   மலேசிய     அதிகாரிகள்  ஒத்துழைக்காததால்   கைது  ஆணை  பிறப்பிக்க   வேண்டிய    அவசியம்   நேர்ந்தது   …

நஜிப்: மற்றவர்களை வெறுப்புக்குரியவர்களாக சித்திரிப்பது எளிது, ஆனால் அது மகா…

“வெறுப்பு   அரசியலை”க்  கண்டித்துப்   பேசிய  பிரதமர்    நஜிப்    அப்துல்   ரசாக்    அது    நாட்டுக்கு   முன்னேற்றத்தைக்  கொண்டுவராது   என்றார். “எதிர்தரப்பு    வெறுப்பு    அரசியலை  வைத்துதான்  விளையாடுகிறார்கள்.   அவர்கள்   நல்ல   திட்டங்களை   முன்வைப்பதில்லை”,  என  நஜிப்   தெரிவித்தார்.  அவர்  யாருடைய   பெயரையும்    குறிப்பிடவில்லை. “மற்றவர்களை  வெறுப்புக்குரியவர்களாக    சித்திரிப்பது     எளிது. ஆனால்,  அது  …

தேர்தல் தொகுதிச் சீரமைப்புக்கு எதிராக சிலாங்கூர் சட்ட நடவடிக்கை

சிலாங்கூர்     அரசு,     தேர்தல்  தொகுதிச்   சீரமைப்பு    தொடர்பில்  எழுப்பிய   கேள்விகளுக்குத்   தேர்தல்   ஆணையம்  (இசி)   தகுந்த   விளக்கமளிக்கத்    தவறியதால்   அதற்கு  எதிராக   சட்ட  நடவடிக்கை  எடுக்கவுள்ளது. குறிப்பாக,   தொகுதிச்  சீரமைப்பு   அரசமைப்பில்  சொல்லியபடிதான்   மேற்கொள்ளப்பட்டதா    என்று  சிலாங்கூர்    அரசு    அறிந்துகொள்ள  விழைந்தது. “நேற்று  இசி   பதில்    அனுப்பியிருந்தது.  ஆனால், …

‘எனக்குக் கடனட்டைகள் மூலம் பண உதவியா?’- சிரிக்கிறார் சரவாக் ரிப்போர்ட்…

சரவாக்  ரிப்போர்ட்    செய்தியாசிரியர்  கிளேய்ர்    ரியுகாசல்- பிரவுன்,    மூடி    மறைக்கப்படும்   தகவல்களை   அம்பலப்படுத்தும்   தம்முடைய    வலைத்தளத்தை     நடத்த  நிறைய   பணம்  பெறுவதாகக்   கூறப்படுவதைக்   கேட்டு  வாய்விட்டுச்    சிரிக்கிறார். அவர்,   அடையாளம்     தெரியாதவர்களின்     கடனட்டைகள்  மூலமாக   வலைத்தளத்தை      நடத்துவதற்குத்    தேவையான  பணத்தைப்  பெறுகிறார்   என    ஒரு    புதிய    இணையச்  செய்திதளமான   …

தொகுதிச் சீரமைப்பை அடுத்து நோ ஒமார்தான் சிலாங்கூரின் அடுத்த எம்பி:…

தேர்தல்   ஆணைய(இசி)த்தின்    தொகுதிச்   சீரமைப்புத்     திட்டம்    அமல்படுத்தப்படுமானால்   சிலாங்கூர்   அம்னோ   தலைவர்  நோ  ஒமார்தான்    அம்மாநிலத்தின்    அடுத்த  மந்திரி  புசார்  என    சிலாங்கூர்  வாக்காளர்கள்   எச்சரிக்கப்பட்டுள்ளனர். “சிலாங்கூரில்   பிஎன்  பொதுமான   இடங்களைக் கைப்பற்றும்   பட்சத்தில்   நோ   ஒமார்தான்   மந்திரி   புசாராவார்  என்பது    தெளிவு. “நம்   பிள்ளைகளின்    கல்விக்கு  முன்னுரிமை   …

நேற்றைய முக்கிய செய்திகளின் சுருக்கத் தொகுப்பு

முன்னாள்  ஏஜி  மெளனம்  கலைந்தார் தாம்    சட்டத்றைத்   தலைவர்   பதவியிலிருந்து   நீக்கப்பட்டது   குறித்து    இதுவரை   மெளனம்    காத்து     வந்த   முடிவாக,  அப்துல்  கனி    பட்டேய்ல்    முடிவாக   அது   பற்றிக்     கருத்துரைத்துள்ளார்.  அப்பதவியிலிருப்ப்போரை    நீக்குவது   பிரதமரின்   “விருப்புவெறுப்பை”ப்  பொருத்தது  என்றாரவர். இதனிடையே,   முன்னாள்   பிரதமர்   டாக்டர்  மகாதிர்   முகம்மட்,   பிரதமரே …

தமது பதவி நீக்கம் சரியானதுதான், கனி வாய் திறந்தார்

ஒரு வருடத்திற்கு முன்பு பதவியிலிருந்து நீக்கப்பட்ட சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேயில், தமது பதவி நீக்கம் அரசாங்க விதிமுறைகளுக்கு ஏற்ப செய்யப்பட்டது என்று இன்று கூறினார். மலேசிய வழக்குரைஞர்கள் மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் கனி அவரது பதவி நீக்கம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

சட்ட ஆளுமையைப் பின்பற்றாதவர் நஜிப், மகாதிர் கூறுகிறார்

  சட்ட ஆளுமையைப் பின்பற்றாதவர் பிரதமர் நஜிப்தான், மக்கள் அல்ல என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கூறுகிறார். மகாதிரின் தலைமையிலான மக்கள் பிரகடனத்தை பேரரசர் ஏற்றுக்கொள்ளாததற்கு காரணம் அது அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்றவாறு இல்லாததிருப்பதுதான் நஜிப் தெரிவித்திருந்த கருத்துக்கு மறுமொழியாக மகாதிர் இவ்வாறு கூறினார். நாடு எதிர்கொள்ளும் பல்வேறு…

‘பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக’ மூன்று வெளிநாட்டவரும் ஒரு மலேசியரும் கைது

சிலாங்கூரிலும்   பகாங்கிலும்  பயங்கரவாதம்   தொடர்பான    நடவடிக்கைகளில்   ஈடுபட்டதாக     நம்பப்படும்    ஒரு  மலேசியரையும்   மூன்று   வெளிநாட்டவரையும்  போலீசார்   கைது     செய்தனர். மலேசியரான   முகம்மட்  வாண்டி   முகம்மட்  ஜெடி     ஐஎஸ்  தொடர்புள்ளவர்    என்று    போலீஸ்    படைத்    தலைவர்      காலிட்   அபு   பக்கார்    கூறினார்.   அவரே   ஜூன்  மாதம்  பூச்சோங்கில்    நிகழ்ந்த  …

முன்னாள் மலாக்கா சிஎம்-முக்கு அபராதம் ரிம1,900 விதிக்கப்பட்டது சரியா?

சமூக  வலைத்தளத்தில்   எதிர்மறையான   கருத்தைப்  பதிவிட்டதற்காக   ஆகக்   கடைசியாக    தண்டிக்கப்பட்டிருப்பவர்   மலாக்காவின்    முன்னாள்   முதலமைச்சர்   ரஹிம்   தம்பி    சிக். சிலாங்கூர்  பட்டத்திளவரசர்    தெங்கு    அமிர்   ஷா-வின்   மனம்  புண்படும்  வகையில்    கருத்துரைத்தார்  என   ரஹிம்மீது   குற்றம்   சாட்டப்பட்டது.  அவர்  மறுத்து   எதிர்வாதம்   செய்தார்.  முடிவில்   அவருக்கு  ரிம1,900  அபராதம்  …