சிங்கப்பூரைப் பின்பற்றி ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டு போடாதீர்: நஜிப்புக்கு அறிவுறுத்தல்

பிகேஆர்  உதவித்  தலைவர்  என்.சுரேந்திரன்,  மலேசியாகினிமீது  வழக்கு  தொடுக்கும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  முயற்சியைச்  சாடினார். அது  மாற்றுக்குரல்களைக்  கட்டுப்படுத்தும்  அபாயகரமான  முயற்சி  என்றாரவர். நஜிப்  சிங்கப்பூரைப்  பின்பற்றக்கூடாது  என்று  அந்த  எதிரணி  எம்பி  கூறினார். அந்நாட்டுப்  பிரதமர்  எதிர்ப்புக்  குரல்  எழுப்பும்  ஊடகங்களை  எல்லாம்  வழக்கு …

இஸ்மா: கிட் சியாங் மலாய் இனத்தை ஒழிக்க விரும்புகிறார்

டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங்,  மலாய்  இனத்தையும்  மொழியையும்  கலாச்சாரத்தையும்  பூண்டோடு  ஒழிக்க  விரும்புகிறாராம். அந்த  மூத்த  அரசியல்வாதி,  “மலேசியர்மயம்”  என்ற  முகமூடி  அணிந்து பாவனை  செய்ய  வேண்டிய  அவசியமில்லை  என  ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா (இஸ்மா)  துணைத்  தலைவர்  அமினுடின்  யாஹயா  கூறினார். “கிட் …

‘சிஎம் சாபாவுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும், அம்னோவுக்கு அல்ல’

முதலமைச்சர்  மூசா  அமான்,  கட்சி நலனைவிட  மாநில  மக்களின்  நலனுக்கே  முன்னுரிமை  கொடுக்க  வேண்டும்  என  சாபா  மாநில  சீர்திருத்தக்  கட்சி  (ஸ்டார்)  கூறியுள்ளது. “அவர்(மூசா)  அம்னோ  பிரதிநிதி  என்ற மனப்போக்கைக்  கொண்டிருக்கக்   கூடாது.  அவர்  சாபா  மக்களின்  தலைவர்”,  என  ஸ்டார்  தலைவர்  ஜெப்ரி  கிட்டிங்கான்  கூறினார்..…

தீபா விவகாரத்தில் போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்

போலீசார்  தேவையான  நடவடிக்கைகளை மேற்கொண்டு எஸ்.தீபாவின்  மகனை  அவரிடமே  திரும்ப  ஒப்படைக்க வேண்டும்  என்று  பிரதமர்துறை  அமைச்சர்  நன்சி  ஷுக்ரி  கூறியுள்ளார். ஏனென்றால்,  மகனைப்  பராமரிக்கும்  சட்டப்பூர்வ  உரிமை  தீபாவுக்கே  உண்டு. மகனைப்  பராமரிக்கும்  உரிமையை  சிரம்பான்  உயர்  நீதிமன்றம்  தாயாருக்கு  அளித்த  பின்னரும்  தீபாவின்  மதம்   மாறிய …

மந்திரி புசாருக்கு ஆயர் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, சிலாங்கூர்  இஸ்லாமிய  விவகாரத்  துறை (ஜயிஸ்) பெட்டாலிங்  ஜெயா  கோயில்  ஒன்றில்  இந்து முறைப்படி  நடந்துகொண்டிருந்த  ஒரு  திருமணத்தைத்  தடுத்து  நிறுத்தி  மணப்பெண்ணை  விசாரணைக்காக  அழைத்துச்  சென்றதை  “வெட்கக்கேடான  செயல்”  எனக்  கண்டித்த  சிலாங்கூர்  மந்திரி  புசார்  காலிட்  இப்ராகிமை  கத்தோலிக்க ஆயர்  பால்  டான்  ச்சீ …

என்யுடிபி: முகநூலில் பதிவிடும் ஆசிரியர்களைக் குறைகூறாதீர்

முகநூலில்  பதிவிடுவதற்காக  ஆசிரியர்களைக்  குறைசொல்லக்கூடாது என்பதை வலியுறுத்தும்  தேசிய  ஆசிரியர் சங்கம் (என்டியுபி)  எதைப்  பதிவிடுவது  என்பதை  முடிவுசெய்வது ஒருவரின்  தனிப்பட்ட  உரிமை என்றும் அது  சட்டத்தை  மீறாதிருக்க  வேண்டும்- அதுதான் முக்கியம் என்றும்   கூறியது. அதில்  இதைத்தான்  பதிவிடலாம்,  இதைப்  பதிவிடக்கூடாது  என்று  யாரும்  அதிகாரம்  செலுத்தக்கூடாது …

பெட்ரோலுக்கும் டீசலுக்கும் ஜிஎஸ்டி உண்டா?

2015, ஏப்ரல் 1-இல், அமலுக்குவரும்  பொருள், சேவை  வரி(ஜிஎஸ்டி)யிலிருந்து  பல  பொருள்கள்  விலக்கு  பெறும்  என  அரசாங்கம்  நீண்ட  பட்டியல்  போட்டுக் காட்டுகிறது. ஆனால்,  வாழ்க்கைச்  செலவினத்துடன்  நெருக்கமான  தொடர்புகொண்ட  பெட்ரோலும்  டீசலும்  அப்பட்டியலில்  இல்லை. இதனால், அவ்விரு  பொருள்களுக்கும் ஜிஎஸ்டி  விதிக்கப்படுமா, இல்லையா   என்பதைத்  தெரிந்துகொள்ள  விரும்புகிறார்  …

அகதிகளை அனுப்பிய ஐஜிபி-க்கு எதிராக கண்டன மனு

அகதிகளாக மலேசியாவில் தஞ்சம் புகுந்த மூன்று தமிழர்களை திருப்பி அனுப்பிய தலைமை போலிஸ் படைத்லைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் அவர்களுக்கு எதிராக கண்டன மனு வழங்கப்பட்டது. இன்று காலை சுமார் 11 மணியளவில் கோலாலம்பூர் புக்கிட் அமான் போலிஸ் தலைமையகம் முன் திரண்ட இந்திய அமைப்புகளின் பிரதிநிதிகள் அம்மனுவை…

எம்பி: ஜயிஸின் நடவடிக்கை “வெட்கக்கேடானது”

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட் இப்ராகிம்,  ஒரு  இந்து  திருமணத்தைத்  தடுத்த  சிலாங்கூர்  இஸ்லாமிய  விவகாரத்  துறையின்  செயல்  திருமணக்  “கொண்டாட்டதையே”  கெடுத்து  விட்டது  என்றும்  அது  “வெட்கக்கேடான”  செயல்  என்றும்  கூறியுள்ளார். ஜயிஸ்  மேற்கொண்டது  ஒரு  “அதிரடிச் சோதனை”யா  என்று  வினவியதற்கு   அவர்  இவ்வாறு  கூறினார்.…

மகாதிர்: ஜயிஸ் செய்தது தப்பு

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  சிலாங்கூர்  இஸ்லாமிய  சமயத் துறை(ஜயிஸ்)  மீண்டும்  குர்ஆனை   வாசிக்க  வேண்டும்  என்று  வலியுறுத்தினார். ஒரு  திருமணத்தைத்  தடுப்பது தவறான  செயல். திருக்குர்ஆன்  முஸ்லிம்-அல்லாதாரின்  உரிமைகளை  மதிக்கிறது.  மேலும்,  மற்றவர்களைக்  கண்காணிக்கவும்  கட்டுப்படுத்தவும்  சமயத்தைப்  பயன்படுத்தக்கூடாது  என்று  மகாதிர்  கூறினார். “இதெல்லாம்   குர்ஆன் …

சுரேந்திரன்: நாடாளுமன்றத்தால் பொதுப்பணம்தான் வீணாகிறது

நாடாளுமன்றம்  அரசாங்கத்தின்  சட்ட  வரைவுகளையும்  தீர்மானங்களையும்  நிறைவேற்றும்  ஒரு  ரப்பர்  முத்திரையாக  மட்டும்  தொடர்ந்து  செயல்பட்டுக்  கொண்டிருந்தால்  அது பொதுப்பணத்தை  விரயமாகும்  அமைப்பாகத்தான்  விளங்கும். “பக்காத்தான்  ரக்யாட் எம்பிகள்  முன்வைக்கும்  பரிந்துரைகள்  ஏற்கப்படுவதில்லை.  கேள்விகள்  கேட்பதற்கு  மட்டுமே  அனுமதிக்கப்படுகிறோம். நிறைய  எம்பிகள்  இருப்பதால்  கேள்விகள்  கேட்கும்  வாய்ப்புக்காக  காத்திருக்க …

பாஸ் இளைஞர்கள்: தெலோக் இந்தான் தோல்விக்கு டிஏபி-இன் உள்கட்சிப் பூசல்களே…

பேராக்  டிஏபி-இல்  நிலவும்  உள்கட்சிப்  பூசல்களால்தான்  டிஏபி  தெலோக் இந்தானில்  தோற்றதே  தவிர  பாஸின்  ஹுடுட்  திட்டத்தால்  அல்ல. இவ்வாறு  கூறிய கூட்டரசு  பிரதேச  பாஸ்  இளைஞர்  தலைவர்  நுருல்  இஸ்லாம்  முகம்மட்  யூசுப்,  பிஎன்  வேட்பாளர்  மா  சியு  கியோங், 2013-இல்  பெற்றதைவிட  கூடுதல்  வாக்குகளைப்  பெறவில்லை …

மலேசியாகினி: “அன்புள்ள பிரதமரே, வாருங்கள் நீதிமன்றத்தில் சந்திப்போம்”

  மலேசியாகினி வாசகர்கள் தெரிவித்திருந்த கருத்துகளை பதிவு செய்ததற்காக அதன் மீது பிரதமர் நஜிப்பும் அம்னோவும் வழக்கு தொடர்ந்துள்ளன. அதற்கான நீதிமன்ற ஆணை இன்று மலேசியாகினியிடம் சார்வு செய்யப்பட்டது. மலேசியாகினியை வெளியிடும் எம்கினி டோட் கோம் செண்டிரியான் பெர்ஹாட், ஆசிரியர் குழு தலைவர் ஸ்டீபன் கான், தலைமை ஆசிரியர்…

பிஎன்னுக்குத் திரும்பி வாருங்கள்- ஆசிரியர்களை அழைக்கிறார் அமைச்சர்

ஆசிரியர்கள்  அரசியலுக்குத்  திரும்ப  வேண்டும்  அதுவும்  பிஎன்னில்  இணைய  வேண்டும்  என்று  கூட்டரசு  பிரதேச  அமைச்சர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்  வலியுறுத்தினார்.  ஆசிரியர்கள்  அரசியலில்  ஈடுபடுவதைத்   தடுத்தது  தவறு  என்றும்  அவர்  ஒப்புக்கொண்டார். “அம்னோவோ, மஇகாவோ,  மசீசவோ,  பிஎன்னோ  ஆசிரியர்களே  அக்கட்சிகளை  முன்னுக்குக்  கொண்டுசெல்வோர். “10, 12 …

என்ஜிஓ: ஜிஎஸ்டி விளம்பரப் பலகைகளை அகற்றுவீர்

பொருள், சேவை  வரியை(ஜிஎஸ்டி)  விளக்குவதற்காக  நிறுத்திவைக்கப்பட்டுள்ள  கேலிச் சித்திரங்கள்  கொண்ட  விளம்பரப் பலகைகள்  அந்த  வரியைப்  பற்றிச்  சரியான  முறையில்  விளக்கமளிக்கவில்லை  என்று    ஜாரிங்கான்  மலாயு  மலேசியா(ஜேஎம்எம்)  கூறியுள்ளது.  அத்துடன்,  அவற்றுக்கு  நிறைய  செலவும்  ஆவதாகக்  கூறியது. அவற்றில்  எழுத்துகள்  சிறியவை  என்பதால்  சாலைகளில்  செல்வோரால் படிக்க  முடிவதில்லை …

டியானா தாயாருக்கு விளக்கம்கேட்டு அம்னோ கடிதம் அனுப்பியது

மே 31  தெலோக்  இந்தான்  இடைத் தேர்தலில்  டிஏபி  வேட்பாளராக  போட்டியிட்ட  தம்  மகள்  டியானா  சோபி  முகம்மட்  டாவுட்டுக்கு  ஆதரவாக  செயல்பட்டது  ஏன்  என்று  விளக்கம்  கேட்டு  யம்மி  சமத்துக்கு  அம்னோ  கடிதம்  அனுப்பியுள்ளது. “தெலோக் இந்தான்  இடைத்  தேர்தலில்  அவர்  நடந்துகொண்ட விதத்துக்காக  ஏன்  அவரைத் …

கேட்பரியைச் சாப்பிட்டு அதை ஹலாலானது என்பதைக் காண்பிக்க ஜாகிம் தயார்

மலேசிய  இஸ்லாமிய  மேம்பாட்டுத்  துறை (ஜாகிம்)  கேட்பரி  சாக்லெட்டுகள்  ஹலாலானவை  என்று  சான்றளித்திருப்பதை  நிரூபிக்க  அதன்  அதிகாரிகள்  அதைச்   சாப்பிட்டுக்  காட்டவும்  தயாராக வுள்ளனர். அவை  ஹலாலானவை  என்பதில்  தங்களுக்குச்  சிறிதும்  ஐயமில்லை  என  ஜாகிம் முதுநிலை இயக்குனர்  முகம்மட்  அம்ரி அப்துல்லா  கூறினார். “கேட்பரி  ஹலாலானது  என …

‘பன்றி டிஎன்ஏ’ அறிக்கை கசிந்தது எப்படி? அமைச்சு ஆராய்கிறது

கேட்பரி  சாக்லெட்டுகளில் பன்றி  டிஎன்ஏ  கலந்திருப்பதாகக்  கூறிய  தொடக்கநிலை  அறிக்கையைச்  கசியவிட்டது  யார்  என்பதைக்  கண்டுபிடிக்க  சுகாதார  அமைச்சு  உள்விசாரணை  ஒன்றை  நடத்தி  வருகிறது. இதைத்  தெரிவித்த  துணை  அமைச்சர்  ஹில்மி  யாஹயா, அந்த  அறிக்கையை  உறுதிப்படுத்துவதற்குமுன்  யாரோ  அவரசப்பட்டு விட்டார்கள்  என்றார். இவ்விவகாரத்தில்  ஜாகிமின்  விசாரணையையே  முடிந்த …

கட்சித் தேர்தலில் குழப்பம் ஏற்படுத்தாதீர்: வெளியாருக்கு பிகேஆர் தலைவர் எச்சரிக்கை

பிகேஆர்  தலைவர்  டாக்டர் வான்  அசீசா  வான்  இஸ்மாயில், “வெளியார்கள்” கட்சித்  தேர்தல்களில்  குறுக்கிட்டு  குழப்படி  செய்வதை   நிறுத்திக்கொள்ள வேண்டும்  என  எச்சரித்துள்ளார். “தேர்தல்களில்  தொல்லை  விளைவித்தவர்கள்  உறுப்பினர்-அல்லாதார்  என்பதும்  அவர்கள்  இரகசிய  கும்பல்களின்  ஆதரவுடன்  செயல்படுபவர்கள்  என்பதும்  தொடக்கநிலை  தகவல்களில்  தெளிவாக  தெரியவந்துள்ளன”, என  வான்  அசீசா …

ஜயிஸின் நடவடிக்கையை ஆதரிக்கிறார் பாஸ் தலைவர்

மணப்பெண்  முஸ்லிம்  என்று  தெரிந்ததும், பெட்டாலிங்  ஜெயாவில்  இந்து  திருமணம் ஒன்றைத்  தடுத்து  நிறுத்திய  சிலாங்கூர்  இஸ்லாமிய  விவகாரத்  துறை (ஜயிஸ்)யின்  செயலை  பாஸ்  தலைவர்  ஒருவர்  தற்காத்துப்  பேசியுள்ளார். காதலும்  கல்யாணமும்  முஸ்லிம்களின்  சமய  நம்பிக்கைகளுக்குக்  குழிபறிக்கும்  கருவிகளாக  மாறிவருவதாக பாஸ்  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  ரித்வான் …

இஸ்மா: டிஏபி ஒரு புற்றுநோய்; அதை ஒழித்துக்கட்டுங்கள்

சில  நாள்கள்  ஓய்ந்திருந்து விட்டு  இப்போது  டிஏபிமீதான  தாக்குதல்களை மறுபடியும்  தொடங்கியுள்ள ஈக்காத்தான்  முஸ்லிமின்   மலேசியா (இஸ்மா),  டிஏபி-யை ஒருவகை  புற்றுநோய்  என  வருணித்துள்ளது. தெலோக்  இந்தான்  இடைத்  தேர்தலில்  டிஏபி  வேட்பாளர்  டியானா  சோபியா  முகம்மட்  சோபியா  தோல்வி  அடைந்தது பற்றிக்  கருத்துரைத்த  இஸ்மா-வின் அரசியல்  பிரிவுச் …

முகநூல் பதிவுக்காக அமைச்சின் கண்காணிப்பில் ஆசிரியை

தம் முகநூல்  பக்கத்தில்   தெலோக்  இந்தான்  டிஏபி  வேட்பாளர்  டியானா  சோபியாவின்  பரப்புரை  சுவரொட்டிகளைப்  பதிவிட்டிருந்த  ஆசிரியை  ஒருவர்  அரசின்  கோபத்துக்கு  ஆளாகியுள்ளனர். கல்வி  அமைச்சின்  உயர்  அதிகாரி  ஒருவர்  ஆசிரியையைத்  தொடர்புகொண்டு அது  “அரசாங்க- எதிர்ப்பை”க்  காட்டுவதாகவும்  அதை  அகற்றும்படியும்  “அறிவுறுத்தியுள்ளார்”. “தொடர்ந்து  கண்காணித்து  வருவோம்  என்றாரவர்” …

இந்து திருமணத்தில் அதிரடியாக புகுந்த ஜயிஸுக்கு இண்ட்ராப் கண்டனம்

சிலாங்கூர்  இஸ்லாமிய  விவகாரத் துறை   “ஆர்வக்கோளாற்றால்” எல்லைமீறி  நடந்துகொள்வதைத்  தடுக்க  சட்டத்தில்  திருத்தம்  கொண்டுவர  வேண்டும்  என    நாடாளுமன்ற  உறுப்பினர்களை  மலேசிய  இண்ட்ராப்   கேட்டுக்கொண்டுள்ளது. மணப்பெண்  ஒரு  முஸ்லிம்  என்ற  சந்தேகத்தின்பேரில்  ஞாயிற்றுக்கிழமை  ஒரு கோயிலில்  நடந்துகொண்டிருந்த  திருமணத்தை  ஜயிஸ்  தடுத்து  நிறுத்தியதை  இண்ட்ராப்  தலைவர்  பி.வேதமூர்த்தி  கண்டித்தார்.…