அன்வார்: இஸ்லாமிய சமய அதிகாரிகள் ‘அதிகார ஆணவம் நிறைந்தவர்கள்’

சிலாங்கூரிலும்  பினாங்கிலும்  சமய  அதிகாரிகள்  அதிகார  ஆணவத்துடன்  நடந்துகொண்டிருப்பதாக  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  குறைகூறினார். “மற்ற இனத்தாரை இழிவுபடுத்துவதுபோன்ற  தோற்றத்தை  உருவாக்க  வேண்டாம்”,  என்றவர்  எச்சரித்தார். சிலாங்கூர்  இஸ்லாமிய  துறை (ஜாயிஸ்) இந்து திருமணம்  ஒன்றைத்  தடுத்து  நிறுத்திய  சம்பவம்  பற்றியும்  பினாங்கில்  சமய  அதிகாரிகள்,  மதமாறிய …

மகாதீர்: சுல்தான்களிடம் முழு அதிகாரம் இருந்தபோது இலாபமடைந்தவர்கள் அந்நியர்களே

  சுல்தான்கள் அரசாங்க விவகாரங்களில் தலையிடுவதைக் கடுமையாகச் சாடி வந்த முன்னாள் பிரதமர் மகாதீர், சுல்தான்கள் முழு அதிகாரத்தோடு ஆட்சி புரிந்த காலத்தில் பெருமளவிலான நிலங்களை அவர்கள் அந்நியர்களுக்கு கொடுத்துள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார். சர்ச்சைக்குள்ளான ஜோகூர் மசோதாவைப் பற்றி இதற்கு முன்னர் கருத்துரைத்த மகாதீர் அந்த மசோதாவில் அந்நியர்கள்…

ரிம100 மில்லியன் சலுகைக் கடனுதவித் திட்டம் எங்கே?

2014 பட்ஜெட்டில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  இரவுநேரச்  சந்தை   வியாபாரிகளின்  சலுகைக்  கடனுதவித் திட்டத்துக்கு ரிம100 மில்லியன்  ஒதுக்கப்படும்  என வாக்குறுதி  அளித்திருந்தார்.  ஆனால், அப்படி  ஒதுக்கப்பட்ட  பணம்  எங்கிருக்கிறது  என்பதுதான்  தெரியவில்லை  என  டிஏபி-இன்  ஆயர் குரோ  சட்டமன்ற  உறுப்பினர்  கூ  போய்  தியோங்  கூறினார்.…

எம்எச்370: குடும்பத்தாரின் தேடும் முயற்சிக்கு வரவேற்பு

காணாமல்போன எம்எச் 370 விமானத்தில்  பயணித்த  சீனப்  பயணிகளின்  குடும்பத்தார் தாங்களே  விமானத்தைத்   தேடும்  முயற்சியில்  இறங்கி  இருப்பதை  சிவில்  விமானப்  போக்குவரத்துத்  துறை (டிசிஏ) வரவேற்றுள்ளது. “அதை  நாங்களும் கேள்விப்பட்டோம். அவர்கள்  போக்குக்கு  விட்டுவிட  விரும்புகிறோம்”, என்று  டிசிஏ  தலைவர்  அஸ்ஹாருடின்  அப்துல்  ரஹ்மான்  கூறினார். அவர்கள் …

ராம்கர்பாலும் மா-வும் புதிய எம்பிகளாக பதவியேற்பு

கடந்த  மாதம் இடைத்  தேர்தல்களில்  வெற்றிபெற்ற  ராம்கர்பால் சிங்கும், மா  சியு  கியோங்கும்    நாடாளுமன்றத்தின்  புதிய  உறுப்பினர்களாக  இன்று  பதவியேற்றனர். மக்களவைத் துணைத்  தலைவர்  ரோனால்ட்  கியாண்டி  முன்னிலையில்  அவர்கள்  பதவி  உறுதிமொழி  எடுத்துக்கொண்டனர். ராம்கர்பால் மே 25-இல்  புக்கிட்  குளுகோரில்  வெற்றி  பெற்றார்.  மா  மே  31-இல் …

ஷஹிடான்: மாநில நிர்வாகத்தில் சுல்தான் தலையிடக் கூடாது

பிரதமர்துறை  அமைச்சர்   ஷஹிடான்  காசிம்  ஹோகூர்  வீட்டுவசதி  சொத்து  சட்டவரைவுமீது  அதிருப்தி  தெரிவித்துள்ளார். அச்சட்டவரைவு  தொடக்கத்தில்  மற்றவற்றோடு  வாரிய  உறுப்பினர்களை  நியமனம்  செய்யும்  அதிகாரத்தையும்  சுல்தானுக்கு  வழங்கியது. அதுதான்  அவருக்குப்  பிடிக்கவில்லை. கூட்டரசு  அரசமைப்புக்கு  முரணான  எதையும்  அரசாங்கம்  பொறுத்துக்கொள்ளாது  என்று,  நாடாளூமன்ற வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  பேசியபோது  ஷஹிடான் …

தலைவா, முட்டைகளை 10 நிமிடம் வேகவைக்க வேண்டும்: நஜிப்புக்கு பெய்ஜிங்கின்…

சீனாவில்  இருந்தபோது  அந்நாட்டு  அரசாங்கம்  தம்  நலனில்  மிகுந்த  அக்கறை  காட்டியது  எனப்  பெருமையாகக்  கூறிக்  கொண்டிருக்கிறார்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக். பாதுகாப்பு  ஏற்பாடுகள்  எல்லாம் தடபுடலாக  இருந்தனவாம். அவரது  பாதுகாப்புக்காக  ஒரே  மாதிரியான  தோற்றம்கொண்ட  மூன்று  சொகுசு  கார்கள்  பயன்படுத்தப்பட்டன. கோலாலும்பூரில்  முதலீட்டாளர்கள்,  வணிகர்கள்  அடங்கிய …

‘மந்திரி புசார் ஆட்சியாளருக்கு அடங்கிப் போவார்’-அதுதான் மகாதிரின் கவலை

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  ஜோகூர்  வீட்டுவசதி  சட்டவரைவு  தொடர்பிலான  சர்ச்சையில்  மாநில  சுல்தானுக்கு  ஆலோசனை கூறுமளவுக்கு   ஜோகூர்  மந்திரி  புசார்  காலிட்  நோர்டின்  திறமைப்படைத்தவர்  அல்ல  என்று  நினைக்கிறார். சட்டவரைவில்  திருத்தங்கள்  செய்யப்பட்டாலும், காலிட்  மலாய் மரபைப்  பின்பற்றி  சுல்தானுக்கு  அடங்கிப்  போவார்  என  முன்னாள் …

நல்லிணக்க சட்டமுன்வரைவு இஸ்லாத்துக்கும் ஆட்சியாளருக்கும் எதிரானதல்ல

தேச நிந்தனைச் சட்டத்துக்குப்  பதிலாக  வரையப்பட்டுள்ள புதிய  சட்டங்கள்  இஸ்லாத்துக்கும்  ஆட்சியாளர்களுக்கும்  குழிபறிப்பன  என்று  கூறப்படுவதைத்  தேசிய  ஒற்றுமை  ஆலோசனை  மன்றம் (என்யுசிசி) மறுத்துள்ளது. அவ்வாறு  கூறுவதில்  “உண்மையில்லை”  என என்யுசிசி-இன் “இந்தச்  சட்டவரைவுகள்  கூட்டரசு  அரசமைப்புக்கு  முரணானவை  அல்ல  என்பதுடன் அரசமைப்பில்  குறுக்கிடுவதையோ, அதைச்  சிறுமைப்படுத்துவதையோ, அதன்…

எம்எச்370: கண்டுபிடித்தால் ரிம16 மில்லியன் பரிசு

IndieGogo என்னும் வலைத்தளம் காணாமல்போன  மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்370-ஐக்  கண்டுபிடிக்கத்  தேவையான  முக்கிய  தகவலை  வழங்குவோருக்கு  அல்லது  நிறுவனத்துக்கு  வெகுமதி  வழங்க  முன்வந்துள்ளது. இதற்காக  பொதுமக்களிடமிருந்து  யுஎஸ்$5 மில்லியன்  நன்கொடை  திரட்டும்  இயக்கமொன்றை  அது  தொடங்கியுள்ளது. நன்கொடை வழங்குவதற்கான  இணையப் பக்கம் இன்றிரவு  8  மணிக்கு  மலேசியாவில்…

ஸரினா, வயதுக்கு வந்தவர். சமயத்தைத் தேர்வுசெய்யும் உரிமை அவருக்கு உண்டு

உங்கள்  கருத்து:  ‘சமயம்  ஒரு தனிப்பட்ட  விவகாரம்.  அதை  ஏன்  நீதிமன்றம் தீர்மானிக்க  வேண்டும்?’ ஸரினா  நீதீமன்றம்  செல்ல  வேண்டும்  என்பது  அரசமைப்புக்கு  விரோதமானது துபாய்பீசி:  இந்து  மணப்பெண்  ஸரினா  அப்துல்  மஜித்  வயதுக்கு  வந்தவர்.  தன்  சமயத்தை  அவரே  முடிவுசெய்யலாம்.  அதற்குத்  தாய்  அல்லது  தந்தையின்  அனுமதி …

அமைச்சர்: சாபா பிரிவினைக்கு தூபம்போடுவது‘ஆபத்தானது’

முகநூலில்,  சாபா  மலேசியாவிலிருந்து  பிரிந்துசெல்ல  தூண்டிவிடுவோருக்கு  எதிராக  அதிகாரிகள்  கடுமையாக  நடந்துகொள்ள  வேண்டும்  என  நகர்ப்புற,  வீடமைப்பு,  ஊராட்சி  அமைச்சர்  அப்துல்  ரஹ்மான்  டஹ்லான்  நேற்று வலியுறுத்தினார். இது,  தேசிய  பாதுகாப்பையும்  நிலைத்தன்மையையும்  பாதிக்கும்  என்பதால் ஆபத்தானது  என   அம்னோ  உச்சமன்ற  உறுப்பினரும்  சாபா  பாரிசான்  நேசனல்  செயலாளருமான …

கிடெக்ஸ் இன்னும் போக்குவரத்து அறிக்கை சமர்பிக்கவில்லை

சர்ச்சைக்க்குரிய  கின்ராரா- டமன்சாரா  விரைவுச்சாலை (கிடெக்ஸ்)க்கு  அங்கீகாரம் பெற  தேவையான ஆவணங்கள்  அனைத்தும்  தாக்கல்  செய்யப்பட்டிருப்பதாக கிடெக்ஸ்  சென். பெர்ஹாட்  திரும்பவும்  வலியுறுத்தி  இருப்பதை  பெட்டாலிங்  ஜெயா  மாநகர்  மன்ற (எம்பிபிஜே)  கவுன்சிலர்கள்  மூவர்  மறுத்தனர். “முழுமையாக்கப்பட்டு  இறுதிசெய்யப்பட்ட  போக்குவரத்து  தாக்க  மதிப்பீடு  அறிக்கை (டிஐஏ)  இன்னும்  தாக்கல் …

தீபாவின் குழந்தை பராமரிப்பு சச்சரவு: போலீஸ் நடவடிக்கை இன்னும் முடிவு…

  மத மாற்றம் காரணமாக கிளம்பும் குழந்தை பராமரிப்பு சச்சரவுகளை தீர்த்து வைப்பதற்கு போலீஸ் நடவடிக்கையில் இறங்குமா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த ஒரு முடிவுக்கும் வரவில்லை என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். எஸ். தீபாவுக்கு அவரது குழந்தையை பராமரிக்கும் உரிமை இருக்கிறது.…

ஸாரினா முஸ்லிம்தான், அப்படியே இருக்க வேண்டும் என்கிறார் தகப்பனார்

  ஓர் இந்து கோயிலில் நடந்த திருமணத்தை சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா அதிர்நடவடிக்கையின் வழி நிறுத்தியது. அத்திருமண நிகழ்ச்சியின் மணமகளான ஸரினா மேல்விசாரணைக்காக ஜாயிஸ் அவரை வலிய இழுத்துச் சென்றது. அம்மணமகளின் தந்தை அப்துல் மஜிட் குலாம் காடீர் அவரது மகள் ஸரினா ஒரு முஸ்லிம்தான் என்று…

ஸாரினாவை நீதிமன்றத்திற்கு போகச் சொல்வது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதாகும்

  தாம் ஒரு முஸ்லிம் அல்ல என்ற ஒரு ஷரியா நீதிமன்ற பிரகடனத்தைப் பெற்று வருமாறு தேசிய பதிவு இலாகா ஸாரினா அப்துல் மஜிட்டுக்கு ஆலோசனை கூறியிருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது. இதற்கு காரணம் அரசமைப்புச் சட்டம் ஒருவர் தமது சமயத்தை தேர்வு செய்துகொள்வதற்கு அனுமதிக்கிறது என்று பெருவாஸ்…

ஜாயிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி பட்டறை

  சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா அதிகாரிகள் தங்களுடைய கடமையை செவ்வனே ஆற்றுவதற்கும், அவர்களால் தகராறுகள் ஏற்படுவதை நிருத்துவதற்கும் அவர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்தப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் காலிட் இப்ராகிம் கூறுகிரார். இந்தப் பயிற்சி பட்டறையில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் சட்ட நிபுணர்களும்…

பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட ஆடவனுக்கு நீதிமன்றத்தில் பிரம்படி தண்டனை

கடந்த  ஆண்டு  பதின்ம  வயது  பெண்ணொருவரிடம்  பாலியல்  வல்லுறவு  கொண்ட  19-வயது கல்லூரி  மாணவனுக்கு  இன்று  அம்பாங்  செஷன்ஸ்  நீதிமன்றம்   பிரம்படி  தண்டனை  கொடுத்து  தீர்ப்பளித்தது. ஒரு  மருத்துவர்,  அவனின்  பெற்றோர்,  சில  பார்வையாளர்கள்  முன்னிலையில்  அய்னுர்  அஸ்ரிக்  ஐஸாமுடினுக்கு  எட்டு  பிரம்படிகள்  கொடுக்கப்பட்டன. “ஜீன்ஸ்  அணிந்திருந்தாலும்  ஒவ்வொரு …

மணப்பெண் முஸ்லிம்- அல்லாதவர் என்று ஷியாரியா உயர் நீதிமன்றத்தால் அறிவிக்க…

மணப்பெண்  முஸ்லிம்  பெயரைக்  கொண்டிருந்ததால்  இஸ்லாமிய  சமய  அதிகாரிகள் இந்து  திருமணத்தை  தடுத்து  நிறுத்திய  விவகாரத்துக்கு  எளிதாகத்   தீர்வுகாண  முடியும்  என்கிறார்  ஷியாரியா  வழக்குரைஞர்  சங்கத்  தலைவர்  மூசா ஆவாங். 32-வயது  ஸரினா  அப்துல்லா  மஜித், தம்மை  முஸ்லிம்- அல்லாதவர்  என்று அறிவிக்கக்  கோரி   ஷியாரியா  நீதிமன்றத்திடம்  விண்ணப்பம் …

‘மலாய்க்காரர்-அல்லாதவருக்கு’ வேலை என்ற விளம்பரம் கண்டு கேஜே ஆத்திரம்

அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடின், வேலை வாய்ப்பு  விளம்பரமொன்றைக்  கவனப்படுத்தியுள்ளார். உற்பத்தி  பொறியாளருக்கான  அந்த விளம்பரத்தில்  பூமிபுத்ரா- அல்லாதாரே  விரும்பப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. “இந்த விளம்பரம்  உண்மையானால், அது  பணியிடத்தில்  பாகுபாடு  காட்டப்படுவதற்கு  ஓர்  எடுத்துக்காட்டாகும்.  இந்த  விவகாரத்தை  ஏற்கனவே  எழுப்பி இருக்கிறேன். ஆனால், பலர்  அதை  மறுத்தனர்”, …

‘மகளைத் திருப்பி அனுப்பாத முன்னாள்-கணவரைக் கைது செய்க’

நீதிமன்ற  உத்தரவைப்  பின்பற்றி  தன்  மகளைத்  திருப்பி அனுப்ப  மறுக்கும்  மதமாறிய  முன்னாள் கணவரைக்  கைது  செய்ய  வேண்டும்  என்று  இந்திரா  காந்தி  விரும்புகிறார். மகளைத்  திருப்பிக்  கொடுக்க   கே.பத்மநாதன் @ முகம்மட்  ரித்துவான்  அப்துல்லாவுக்கு  வழங்கப்பட்டிருந்த  கெடு  இன்றுடன்  முடிவுக்கு  வருகிறது. இதுவரை  அவர்  திருப்பி  அனுப்பவில்லை.  …

பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி உண்டா, இல்லையா?

இது  பற்றி இன்னும்  முடிவாகவில்லை  என்கிறார்  நிதி  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான். செப்டம்பரில்  புதிய  எரிபொருள்  உதவித்தொகை  திட்டம்  செயல்படும்போது  பெட்ரோலுக்கும்  டீசலுக்கும்  பொருள்,  சேவை  வரி (ஜிஎஸ்டி) விதிப்பது  பற்றி  முடிவு  செய்யக்கூடும்  என்றாரவர். இவ்விவகாரத்தை  நிதி  அமைச்சு,  உள்நாட்டு  வாணிக, கூட்டுறவு,  பயனீட்டாளர்  அமைச்சு…

டிஏபி: தலைமையகத்தைத் தாக்கிய கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?

டிஏபி, தன்  தலைமையகத்துக்கு  வெளியில்  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  அம்னோ  இளைஞர்களுக்கு  எதிராக  போலீஸ்  நடவடிக்கை  எடுக்காமலிருப்பது  குறித்து  அமலாக்க  அமைப்பு நேர்மை கண்காணிப்பு  ஆணையத்திடம் (இஏஐசி)  புகார்  செய்துள்ளது. போலீசார் நடைமுறை விதிகளை  மீறி  இருப்பதாக  செகாம்புட்  எம்பி  லிம்  லிப்  எங்  குற்றஞ்சாட்டினார். “கைது  செய்யப்பட்ட  14…