சிரியாவில் உடனடி சண்டை நிறுத்தத்திற்கு பஷர் அல் அசாத் ஒப்புதல்

சிரியாவில் உடனடி சண்டை நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான தனது ஆறு அம்ச பரிந்துரைகளுக்கு,  அந்நாட்டு குடியரசுத் தலைவர் பஷர் அல் அசாத் ஒப்புதல் அளித்துள்ளதாக, ஐ.நா.-அரபு லீக் சிறப்பு பிரதிநிதி கோபி அன்னான் தெரிவித்துள்ளார். அவரது இத்திட்டத்திற்கு சீனாவும், ரஷ்யாவும் ஆதரவு தெரிவித்துள்ளன. எகிப்து புரட்சியைத் தொடர்ந்து…

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் இராணுவ புரட்சி வெடித்தது

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் நேற்று முன்தினம் இராணுவ புரட்சி வெடித்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மாலியில் குடியரசுத் தலைவர் அமடேவ் தொமானி தோரேவை எதிர்த்து அந்நாட்டு வடக்கு பகுதியில் பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த பகுதியில் துவாரெக்லட் இன மக்கள் வசித்து வருகின்றனர்.…

சிரியா மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிய தடைகள்!

சிரியா மீது எதிராக புதிய தண்டனைத் தடைகளைக் கொண்டுவருவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உடன்பட்டுள்ளதாக பிரஸ்ஸல்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சிரிய குடியரசுத் தலைவர் பஷர் அல் அஸத்தின் மனைவி அஸ்மா மற்றும் அவரது குடும்பத்தினர் பிறர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் வருவதற்கு தடை விதிப்பது என்பதும்…

சிரியா மீதான தீர்மானம்: ரஷ்யா, சீனா ஒப்புதல்

ஐ.நா., பாதுகாப்பு மன்றத்தில் சிரியா மீதான தீர்மானத்திற்கு ரஷ்யாவும், சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன. சிரியா தனது வன்முறையைத் தொடர்வதை இனியும் உலகம் பொறுத்துக் கொள்ளாது என, ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். சிரியாவில் உடனடிச் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்தி, அதன் பின் அமைதி…

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: அதிமுக அமோக வெற்றி!

தமிழ்நாட்டின் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமோக வெற்றிபெற்றுள்ளது; திமுக உள்ளிட்ட ஏனைய கட்சிகள் அனைத்தும் டெபாசிட் இழந்தன. வாக்குகள் எண்ணப்பட்ட 18 சுற்றுக்களிலும் முன்னிலை வகித்த அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி மொத்தமாக 94,977 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். இரண்டாவது இடத்தில் உள்ள திமுக வேட்பாளர்…

“சிறுநீர் கழித்தால் சுட்டே புடுவேன்”: பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி

தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் அமைந்துள்ள காவல்துறை துணை கண்காணிப்பாளர் பணிமனை மற்றும் அனைத்து மகளிர் காவல் பணிமனைக்கு அருகே பேருந்து நிறுத்தம் உள்ளதால் அங்கு வரும் பயணிகள் காவல் பணிமனை சுவர்களுக்கு முன்பே சிறுநீர் கழிக்கின்றனர். இதைத் தடுக்க காவல்துறையினர் பலமுறை எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டும் தொடர்ந்து சிலர் இங்கு…

பிரதமரின் அறிவிப்பு பயனற்ற மழுப்பல்; ஜெயலலிதா சாடல்

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு ஆதரவளித்து வாக்களிக்கும் மனப்பாங்கில் இந்தியா உள்ளது என இந்தியப் பிரதமர் செய்துள்ள அறிவிப்பை விமர்சித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியப் பிரதமரின் அறிவிப்பில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி…

இந்தியாவுக்கான நிதியுதவியை நிறுத்திக்கொள்ள பிரிட்டன் முடிவு

இந்தியப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், இதுவரை அளித்து வரும் நிதியுதவியை நிறுத்த, பிரிட்டன் முடிவு செய்துள்ளது. 2015-ம் ஆண்டுக்குப் பின், இந்நிதியுதவி இந்தியாவுக்கு கிடைக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனின் அனைத்துலக மேம்பாட்டுத் துறை, பல நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, நிதியுதவி செய்து வருகிறது. பிரிட்டனின் மற்ற துறைகளைப்…

கடாபியின் மருமகனை நாடு கடத்த நெருக்கடி!

ஆப்ரிக்காவின் மாரிடானியா நாட்டில் கைது செய்யப்பட்ட கடாபியின் உளவுத்துறைத் தலைவரை, நாடு கடத்தும் முன்பே அவரிடம் விசாரணை நடத்தி முடிக்க மாரிடானியா அரசு முடிவு செய்துள்ளது. லிபியாவில், கடாபி தலைவராக இருந்த போது, அவரது மருமகனான அப்துல்லா அல் சனுஸ்ஸி, உளவுத் துறைத் தலைவராக இருந்தார். கடாபிக்கு எதிரான…

ஒரிசாவில் இத்தாலி சுற்றுலாப் பயணிகள் கடத்தப்பட்டனர்

இந்தியாவின் கிழக்கே, ஒரிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இத்தாலி நாட்டவர்கள் இருவரைக் கடத்திச் சென்றுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். கந்தாமால் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணத்தில் ஈடுபட்டிருந்த இத்தாலியர்கள் இருவரே கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக அயல்பிரதேசமொன்றில் சுற்றுலாப் பயணிகளுக்கான முகவர் நிலையமொன்றை நடத்தி வந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள்…

ஒபாமாவை கொல்ல ஒசாமா திட்டம் : பகீர் தகவல் அம்பலம்

அமெரிக்க மண்ணில் மிகப்பெரிய தற்கொலைப் படை தாக்குதல் நடத்த கடந்த ஆண்டு கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் திட்டமிட்டிருந்ததாகவும், அதோடு மட்டுமல்லாது அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமாவையும் கொல்ல சதித்தீட்டம் தீட்டியிருந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்க ஊடகங்களில் சிஎன்என் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பீட்டர்…

ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து: 15 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பணியில் ஈடுபட்டிருந்த, நேட்டோ வானூர்தி கீழே விழுந்து நொறுங்கியதில், 15 பேர் பலியாயினர். ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளின் சார்பில், துருக்கி நாட்டு வானூர்தி மனிதாபிமான உதவிகள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தன. காபூலில், இந்த வானூர்தி தரையிறங்க முற்பட்டபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில்…

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் : சிறிய அளவில் உருவான சுனாமி

ஜப்பானில் நேற்று, 6.8 ரிக்டர் புள்ளி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடலில் மிகச் சிறியளவில் சுனாமியும் உருவானது. நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. கடந்தாண்டு மார்ச் 11-ம் தேதி ஜப்பானில், 9 ரிக்டர் புள்ளி அளவிலான பயங்கர நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியும் பேரழிவை ஏற்படுத்தின.…

அமெரிக்க சிப்பாய் சுட்டதில் குழந்தைகள் உட்பட 15 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணத்தில் வகைதொகையின்றி துப்பாக்கித் தாக்குதல் நடத்திய ஒரு அமெரிக்க சிப்பாய் வீடுவீடாகச் சென்று சுட்டதில் குறைந்தபட்சம் 15 பேரைக் கொன்றிருக்கிறார். அவர்களில் 9 பேர் குழந்தைகளாவர். ஞாயிறன்று காலையில் இந்தத் சம்பவம் நடந்திருக்கிறது. அந்தச் சிப்பாய் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். அந்தக் கொலைகளுக்கு முன்னதாக அவர்…

தமிழ்நாட்டில் கருத்தரங்கத்திலிருந்து விரட்டப்பட்ட சிங்களப் பேராசிரியை!

சிறீலங்காவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஏதும் நடக்கவில்லை, அவ்வாறு குற்றம்சாட்டுவது சரியல்ல என்று தமிழ்நாட்டில் உரையாற்றிய கொழும்புப் பல்கலைக்கழக சிங்களப் பேராசிரியை ஒருவர் கருத்தரங்கு மண்டபத்தில் இருந்து விரப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை சார்பில்…

சிரியாவில் இராணுவத் தலையீடு கூடாது என்கிறார் கோபி அனான்

சிரியாவில் எந்தவொரு வெளிநாட்டு இராணுவ தலையீடும் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று சிரியாவுக்கான ஐ.நா மற்றும் அரபு லீக்கின் சிறப்புத் தூதுவரான கோபி அனான் அவர்கள் எச்சரித்திருக்கிறார். இராணுவத்தை அங்கு பயன்படுத்துவது குறித்து எவரும் தீவிரமாக யோசிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். டமாஸ்கசுக்கான தனது பயணத்திற்கான திட்டம் குறித்து…

கொள்ளையரை பிடிக்கச் சென்ற போலீஸ் மீது கொலை வழக்கு!

தமிழ்நாட்டின் திருப்பூர் நகைக் கடை கொள்ளை வழக்கில் துப்பு துலக்கப் போய் கொலை வழக்கில் சிக்கிக் கொண்ட தமிழக போலீசார், "தலை தப்பியது மம்தா புண்ணியம்" என மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாடு திரும்பினர். கடந்த பிப்ரவரி, 20-ம் தேதி, திருப்பூரில் உள்ள குமரன் சாலை ஜோஸ் ஆலுக்காஸ்…

இந்தியாவில் 4 மாநிலங்களில் மண்ணைக் கவ்வியது காங்கிரஸ்

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில், நான்கு மாநிலங்களில் மண்ணைக் கவ்வியுள்ளது காங்கிரஸ். அரசியல் செல்வாக்கை இழந்து விட்டதாகக் கூறப்பட்ட முலாயம் சிங் யாதவ், உ.பி., மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார். பெரும் ஊழல், ஆடம்பரங்களால் மக்கள் செல்வாக்கை இழந்த மாயாவதி, ஆட்சியைப்…

மொட்டையடித்து தெருவில் ஊர்வலம்; பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

கிறிஸ்துவப் பெண் ஒருவர் கடுமையாக அடித்துத் துன்புறுத்தப்பட்டு, மொட்டையடிக்கப்பட்டு, தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடந்துள்ளது. லாகூரில் இருந்து, 80 கி.மீ., தொலைவில் உள்ள சியால்கோட் மாவட்டத்தில், கோட் மீரட் கிராமத்தை சேர்ந்த 30 பேர், சீமா பீபி என்ற பெண்ணை, கடந்த…