சிரியாவுக்கு மேலும் பல கடுமையான தடைகள்

சிரியா மீது நேற்று ஐரோப்பிய யூனியன் அமைப்பு மேலும் பல கடுமையான தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், சிரியாவின் இத்லிப் மாகாணம் மற்றும் ஹோம்ஸ் நகர் மீது இராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. சிரியா தலைவர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டம் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.…

கிறிஸ்தவராக மாறிய இஸ்லாமியருக்கு தூக்குத் தண்டனை!

ஈரானில் இஸ்லாம் மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்தினை தழுவிக்கொண்டதுடன் போதகராகவும் மாறிய நபரொருவருக்கு அந்நாட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யூசெப் நதார்கனி (34) என்ற குறித்த நபர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டார். இஸ்லாம் மதத்தினை அவமதித்தார் மற்றும் கிறிஸ்தவ மதத்தினை கைவிட மறுத்தார் போன்ற காரணங்களுக்காகவே அவருக்கு…

ஒசாமாவை காட்டிக் கொடுத்த மருத்துவருக்கு தங்கப் பதக்கம்?

பாகிஸ்தான் அபோதாபாத்தில் ஒசாமா பின் லாடன் ஒளிந்திருந்ததைக் காட்டிக் கொடுத்ததாக கூறப்படும் மருத்துவர் ஷகீல் அப்ரிடிக்கு, அமெரிக்க காங்கிரசின் தங்கப் பதக்கம் அளித்து கௌரவிக்க வேண்டும் என, காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கோரியுள்ளார். அமெரிக்க குடியரசுக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் டனா ரோரபேச்சர், அண்மையில் பலுசிஸ்தானுக்கு சுயாட்சி உரிமை…

பிரபல ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் கொலை

மேற்குலக நாடுகளைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்கள் சிரியாவின் ஹோம்ஸ் நகரில் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது நடந்த எறிகணைத் தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டதாக அரச எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 'சண்டே டைம்ஸ்' பத்திரிகையின் மேரி கோல்வின் மற்றும் பிரஞ்சு புகைப்பட நிபுணர் ரெமி ஒச்லிக்…

குரான் எரிப்பு: ஆப்கானில் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க இராணுவத் துருப்பினர் ஒரு இராணுவ முகாமில் தவறுதலாக இஸ்லாமிய புனித நூல்களை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் தலைநகர் காபூல் மற்றும் நாட்டின் கிழக்குப் பகுதி நகரமான ஜலாலாபாத் ஆகிய நகரங்களில் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ஆப்கானிய காவல்துறையைச் சேர்ந்த நால்வர் உட்பட…

பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்…!

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி (வயது 85) சென்னையில் காலமானார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் போன்றவர்களுக்கு அம்மாவாக நடித்தவர் எஸ்.என்.லெட்சுமி. நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இவர், கமல்ஹாசனின் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மைக்கேல் மதன காமராசன், மகாநதி, விருமாண்டி உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு…

வகுப்பில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே திருமணம்: சவுதியில் புது சட்டம்

சவுதி அரேபியாவில் “குடும்பம் நடத்துவது எப்படி” என்ற வகுப்பில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இனிமேல் திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற புதிய சட்டம் ஒன்று சவுதி அரேபிய நீதித்துறை அமைச்சகம் முன்வைத்துள்ளது. இச்சட்டத்தை அனுமதிப்பதா, இல்லையா என சவுதி அரேபிய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. சவுதி அரேபியாவில்…

ஹாண்டுரஸ் சிறையில் பயங்கர தீ விபத்து; 300 பேர் பலி

ஹாண்டுரஸ் நாட்டின் சிறை ஒன்றில் செவ்வாய்கிழமை (14.2.2012) ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் முன்நூறுக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நாட்டின் தலைநகர் தெகுசிகல்பாவுக்கு வடக்கேயுள்ள கோமயாகுவா நகரில் 1850 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறையில் இருந்த நாநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் விபத்தை பயன்படுத்திக் கொண்டு…

காதலர் தினத்தில் இளம்காதலன் கொலை; பெண் வீட்டார் நடத்திய வக்கிர…

உலகம் முழுவதும் அன்பை பறிமாறும் இவ்வேளையில் இளம் காதலன், தனது காதலியை சந்திக்க சென்ற போது அந்த பெண் வீட்டார் அடித்து உதைத்து அவனது உயிரை பறித்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் உ.பி. மாநிலம் மீரட் நகர் அருகே இச்சம்பம் நடந்துள்ளது. கேத்வான் நகரை…

சிரியாவில் அனைத்துலக அமைதிப் படை: அரபு லீக் முடிவு; ரஷ்யா…

சிரியாவில், தொடர்ந்து மக்களுக்கு எதிராக, அந்நாட்டு தலைவர் பஷர் அல் அசாத் நடத்தி வரும் இராணுவ வன்முறையைத் தடுத்து நிறுத்துவதற்காக, ஐ.நா.-அரபு லீக் இணைந்த, அனைத்துலக அமைதிப் படையை சிரியாவுக்கு அனுப்ப வேண்டும் என, அரபு லீக் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், இக்கோரிக்கையை சிரியா நிராகரித்துள்ளது. சிரியாவில், கடந்த 11…

ஐரோப்பாவின் ஒசாமா பிணையில் விடுதலை!

பிரிட்டிஷ்-ல் சிறை வைக்கப்பட்டிருந்த பயங்கரவாதியான ஐரோப்பாவின் ஒசாமா கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதியான அபு கொத்தடா (வயது 51) ஐரோப்பாவின் ஒசாமா என அழைக்கப்படுகிறார். பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக சிறையில் இருந்த அவரின் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இங்கிலாந்து…

சிரியாவின் அரச எதிர்ப்பாளர்களுக்கு அல்-கைதா ஆதரவு

சிரியாவில் அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் கிளர்ச்சிக்கு அல்கைதா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஷவாரி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். காணொளி செய்தி ஒன்றில் உரையாற்றியுள்ள அவர், சிரியாவில் உள்ள எதிர்த்தரப்பினர் மேற்கு நாடுகளிலோ அல்லது ஏனைய அரபு நாடுகளிலோ உதவிக்கு தங்கியிருக்கவில்லை என்று கூறியுள்ளார். சுதந்திரமான சிரியாவின்…

சிரியாவுடன் ரஷ்யா பேச்சுவார்த்தை; வெளியேறும் தூதர்கள்!

சிரியாவில் நடந்துவரும் வன்முறைகள் தொடர்பில் அந்நாட்டு தலைவர் பஷர் அல் அஸ்ஸத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்ததாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்ஜி லாவ்ரோ கூறியுள்ளார். அனைத்து அரசியல் சக்திகளுடனும் பேச்சு நடத்த தயார் என்றும் சிரியாவுக்கான விரிவுபடுத்தப்பட்ட அரபு லீக் கண்காணிப்புப் பணியில் தான் ஆர்வம் கொண்டுள்ளதாகவும்…

ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் மீது காலணி வீச்சு!

ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் மீது இஸ்ரேல்-பாலஸ்தீன எல்லையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் காலணி மற்றும் கற்களை வீசினர். இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு எட்டப்படமால் உள்ளது. இந்நிலையில், ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன், நேற்று இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் எல்லைப் பகுதியான காஸா பகுதிக்கு…

எகிப்து கால்பந்து போட்டியில் கலவரம்: 73 பேர் பலி

எகி்ப்து நாட்டில் கால்பந்து போட்டியின் போது நடைபெற்ற மோதலி்ல் சுமார் 73 பேர் பலியாயினர்; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். எகிப்து நாட்டில் உள்ளூர் கால்பந்து அணிகளான அல் அலி மற்றும் அல் மாஸ்ரி ஆகிய இரு அணிகளுக்கும் பலத்த ரசிகர்கள் ஆதரவு இருந்து வந்தது. இந்நிலையில் சிட்டி ஆப்…

தாலிபன்களுடன் ஆப்கன் அரசு அமைதிப் பேச்சு

தாலிபன் தரப்பினர் ஆப்கானிய அரசைச் சேர்ந்தவர்களை அடுத்த சில வாரங்களில் சவுதி அரேபியாவில் சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பும் முதற்தடவையாக நேரடியாக சந்திக்கும் இந்தப் பேச்சுவார்த்தைகள் திட்டமிட்டபடி நடந்தால், ஆப்கான் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியில் அது முக்கிய கட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து…

லிபிய ஆயுதக்குழுக்களின் அட்டகாசம் குறித்து ஐநா கவலை

லிபியாவில் செயற்படுகின்ற கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஆயுதக்குழுக்கள் அங்கு அமைதியீனத்தை அதிகரிக்கச் Read More

“ஓட்டுப் போட பணம் கேட்டால் கன்னத்தில் அடி கொடுங்கள்”: ராமதாஸ்

"தேர்தல் செலவுக்கும், ஓட்டுப் போடவும் பணம் கேட்டால் அவர்களது கன்னத்தில் பளார் என அடி கொடுங்கள்,'' என்று ஓசூரில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK) நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசினார். அக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய ராமதாஸ்; "கடந்த 15 ஆண்டுக்கு முன் தனித்துப் போட்டியிட்டபோது,…

ஈராக்கில் ஒரே நாளில் 34 பேருக்கு மரண தண்டனை

ஈராக்கில் ஒரே நாளில் பெண்கள் உட்பட 34 பேருக்கு  தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சம்பவமானது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் மட்டுமின்றி பொருட்களுக்குச் சேதம் விளைவிக்கும் குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்ட 2 பெண்கள் உட்பட 34…

அதிரடித் தாக்குதல் நடத்தி பானி வாலிட்டை மீளக்கைப்பற்றிய கடாபி ஆதரவுப்…

லிபியாவின் முன்னாள் தலைவர் கர்ணல் கடாபி கொல்லப்பட்ட பின்னர் அவரது ஆதரவு படை அழிக்கப்பட்டு கடாபி ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில் லிபியாவின் மேற்குப் பகுதி நகரான பானி வாலிட்டை கடாபி ஆதரவுப் படையினர் மீளக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடாபி ஆதரவு படைகள் நடத்திய எதிர்பாராத தாக்குதலில் லிபிய இடைக்கால…

நொடிக்கும் நிலையில் புகழ்பெற்ற கொடாக் நிறுவனம்!

அமெரிக்காவின் புகழ் பெற்ற புகைப்பட தயாரிப்பு நிறுவனமான கொடாக் நொடிக்கும் நிலையிலிருந்து சட்டரீதியான Read More