இலங்கை அரசாங்கம் இன்னும் உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை!- ஐ.நா.சபை

இலங்கையில் படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் குறித்துவிசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் இலங்கையில் வெள்ளை வான் கடத்தல்கள், மக்கள் காணாமல் போதல், சிறைகளில்மரணம், சிறைச்சாலைகளின் மோசமான பராமரிப்பு போன்ற விடயங்கள் தொடர்பிலும்ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு குரல் கொடுத்துள்ளது. எனவே இந்த…

பிரபாகரனுக்கு அனுமதி ..! சிங்களவர்கள் தாக்குதல் மேற்கொள்ள வேண்டும்..! இனவாதம்…

மட்டக்களப்பு நகருக்குள் எம்மை நுழைய விடாது தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகளும் இணைந்து செயற்பட்டதாக பொதுபலசேனா குற்றம் சுமத்தியுள்ளது. எனவே, அந்த தரப்பினர் மீது சிங்களவர்களை கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என பொது பாலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரதேரர் இதனை வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று…

யதார்த்தத்தில் ஈழத் தமிழருக்கான பாதையும் – பயணமும் ..! மு.திருநாவுக்கரசு

“நாம் இப்போது எப்படி இருக்கிறோம், இனி எப்படி இருக்கவேண்டும்”: என்பதைப் பற்றியும் “இப்போது நாம் எங்கு நிற்கின்றோம், இனி எங்கு நிற்கவேண்டும்” என்பதைப் பற்றியும் சரியாக மதிப்பீடு செய்யாமல் முன்னேற்றத்தைப் பற்றிசிந்திக்க முடியாது. அரை நூற்றாண்டுக்கு மேல் அரசியற் தலைவனாக இருந்த லீ குவான்-யூ 30 ஆண்டுக்கு மேல் சிங்கப்பூரின் பிரதமராகவும், 20…

ஜெயலலிதாவின் மறைவிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இரங்கல் செய்தி

தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு துயரிலாழ்ந்த தமிழ்மக்களுடன் எமது இயக்கமும் இணைந்து கொள்கின்றது என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டினதும் இந்தியாவினதும் அரசியலில் முக்கிய புள்ளியாகத் திகழ்ந்த செல்வி…

இலங்கையிலும் பயங்கரவாத நகர்வுகளுக்கு வாய்ப்புகள் உள்ளது கடும் எச்சரிக்கை

ஐ.எஸ் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஊடுருவலும் பயங்கரவாத நகர்வுகளும் இந்து சமுத்திர பரப்பில் இருப்பதாகவும் இலங்கையிலும் பயங்கரவாத நகர்வுகளுக்கு வாய்ப்புகள் இருபதாக நம்புவதாக பாகிஸ்தான் மற்றும் இந்திய பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது. ஆசிய நாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறிவருவதாகவும் எச்சரித்துள்ளனர். ஐ.எஸ் இஸ்லாமிய பயங்கரவாத நகர்வுகளை கட்டுப்படுத்த இந்தியா -…

பொட்டு அம்மானின் அன்றைய நிலை!! கருணாவின் இறுகிய பிடியின் பின்னணியில்…

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் கைது இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவருடைய கைது ஏன் பிரதானமாக பார்க்கப்படுகின்றது? இந்த கைது தொடர்பாக எழுந்துள்ள பல குழப்பகரமான சர்ச்சைகளுக்கு இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளரும் மூத்த சட்டவாளருமான…

ஒற்றையாட்சிக்கு முற்றுப்புள்ளி : மாகாணத்தை தனி அலகாக மாற்ற திட்டம்

நாட்டில் ஒற்றையாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய அரசியலமைப்புக்கான உபகுழு அறிக்கை அமைந்துள்ளது. அதில் மாகாணங்களை தனி அலகாக மற்றும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த அறிக்கையில் மிகவும் பாதிப்பான யோசனைகளை அரசியலமைப்பில் உள்ளடக்க கூடாது. இந்தியாவிலும் இலங்கையிலும் இல்லாத கொள்கைகளை பரிசீலித்து நாட்டை சீரழிக்க வேண்டாம் என…

போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து இலங்கையை காப்பாற்றும் நாடுகள் எவை?

இலங்கைக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்புகள் தயாரிக்க முடிந்தால், நாட்டிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுகளை நீக்கிக் கொள்ள முடியும் என பிரபல 6 நாடுகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மன் பிரான்ஸ், கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளே இதனை சுட்டிக்காட்டியுள்ளது. பெரும்பான்மையினர் போன்று…

அமெரிக்க மரைன் கொமாண்டோக்களைக் கவர்ந்த கரும்புலிப் படகு

கடந்தவாரம் திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்திருந்த அமெரிக்க கடற்படையின் மரைன் கொமாண்டோ படையினர், கடற்புலிகளின் கரும்புலித் தாக்குதல் படகுகளின் செயற்பாட்டு முறையை அறிந்து கொள்வதில் ஆர்வம் காண்பித்தனர். சிறிலங்கா கடற்படையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மரைன் படைப்பிரிவுக்குப் பயிற்சி அளிக்கும் நோக்கிலும், சிறிலங்கா கடற்படையுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கிலும், யுஎஸ்எஸ் சோமசெற்…

பல இரகசியங்களை அம்பலப்படுத்தப் போவதாக கருணா தெரிவிப்பு

அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனினும் கருணாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் நியாயமில்லை என அவரின் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமகால அரசாங்கத்தின் நடவடிக்கையினால் அதிருப்தி அடைந்துள்ள கருணா, இதுவரை காலமும் மறைத்து…

போர் முடிந்ததால் தமிழர் பெட்டிப்பாம்புகளாக அடங்கிவிட்டதாக எவரும் நினைக்கக்கூடாது!

போர் முடிந்ததால் தமிழர் பெட்டிப்பாம்புகளாக அடங்கிவிட்டதாக எவரும் நினைக்கக்கூடாது! – அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள் என்கிறது கூட்டமைப்பு. “போர் முடிவடைந்ததால் தமிழர்கள் பெட்டிப் பாம்புகளாக  அடங்கிக் கிடப்பார்கள் என எவரும் நினைக்கக்கூடாது. எமது மக்களிடம் நேர்க்குணமும் இருக்கிறது; போர்க்குணமும் இருக்கின்றது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு…

ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் புதிய அரசியல் சாசனம்?

புதிய அரசியல் சாசனம் குறித்த அறிக்கை ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியல் அமைப்பு பற்றிய விசேட அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்…

“தமிழரின் எதிர்காலம்” என்ற தலைப்பில் சம்பந்தன் கொழும்பில் உரை

அகில இலங்கை இந்து மாமன்றமும், இந்து வித்தியாவிருத்திச் சங்கமும் இணைந்து நடாத்தும் கொழும்பு மாநகர முன்னாள் முதல்வர் அமரர் க.கணேசலிங்கத்தின் பத்தாவது ஆண்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு, கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நாளை (04) மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்து மாமன்றத் தலைவர் சட்டத்தரணி…

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு அமெரிக்கா இடமளித்துள்ளது!

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு அமெரிக்கா இலங்கைக்கு இடமளித்துள்ளது. பெயரளவில் செய்ய வேண்டியவற்றினை செய்யாமல் விடுவதற்கு ஒத்துழைப்புத் தருமாறு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் ஜனாதிபதி கேட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (01) நடைபெற்ற…

சர்வதேச ரீதியாக தமிழீழம் அமைக்க திட்டம் – அமெரிக்காவின் கைப்பாவையாக…

தமிழீழமும், தனி இராச்சியமும் அமைக்க பல்வேறு வகையிலும் திட்டமிடப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், மாவீரர்களை நினைவுகூருவதற்கோ அல்லது மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கோ எந்தவிதமான எதிர்ப்புகளையும் நாம் தெரிவிக்கவில்லை. ஆனாலும்…

கருணாவின் கைதால் புலிகளின் முக்கிய தலைவர்கள் இரகசியம் வெளிவருமா?

தற்போது இலங்கையில் கருணாவின் கைது தொடர்பில் பல்வேறு வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இலங்கையில் ஏற்பட்ட திடீர் திருப்பு முனையாகவே இந்த கைது அமைந்துள்ளது எனலாம். இலங்கை மக்களும் ஏன் சர்வதேசமும் கூட இவ்வாறானதொரு கைதினை எதிர்ப்பார்க்கவில்லை. ஆனாலும் சாதூரியம் மிக்க இந்தக் கைதின் பின்னணி அனைத்து வகையிலும் மஹிந்தவை…

கருணாவுடன் இணைந்து ரணில் மேற்கொண்ட சதி..! வெளிவந்த இரகசியம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய இருவரும் இணைந்து விடுதலைப் புலிகளை இரண்டாகப் பிளவுபடுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்…

முழு நாடும் புலிகளின் கட்டுப்பாட்டிலா? கருணா கைது செய்யப்பட்டது தவறு!…

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் கைது குறித்து தென்னிலங்கை அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் கருத்து வெளியிட்டனர். இந்த சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, உதய கம்மன்பில, ரஞ்சித் த சொய்ஸா ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு…

ஏழு முறை இருப்பிடத்தை மாற்றிய புலிகளின் தலைவர்!! கருணாவின் கைதால்…

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி மஹிந்த அரசுடன் இணைந்து, முன்னாள் அமைச்சராக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இதன் உண்மைத்தன்மை என்ன? இந்தக் கைதின் பின்னணி எப்படி பார்க்கப்படுகின்றது பற்றி இலங்கையின் மூத்த அரசியல் ஆய்வாளரும்,…

நாங்கள் எதிர்பாராத அதிர்ச்சி தரக்கூடிய மாற்றமொன்று இடம்பெற்றுள்ளது..! இரா.சம்பந்தன்

நாங்கள் எதிர்பார்க்காத அதிர்ச்சி தரக்கூடிய அரசியல் மாற்றமொன்று இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் விஷேட கூட்டம் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது. தமிழரசு…

விடுதலைப் புலிகளை அழிக்க இராணுவத்தினருக்கு உதவிய கருணா..! அம்பலமான உண்மை

கருணாவின் அறிவுறுத்தலின் பேரில் அவர் சார்பான குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரபாகரன் சார்பு உறுப்பினர்களைக் கொலை செய்வதற்கு இராணுவத்திற்கு உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரித்தி விராஜ் மனம்பேரி…

கருணா கைது!

முன்னாள் பிரதியமைச்சர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதியமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் பயன்படுத்திய வாகனம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக கருணா இன்று அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே இவர் கைது…

கார்த்திகை 27இல் மனம் மாறிய கருணா….

எங்கள் தமிழுக்காக தமிழ் மண்ணுக்காக மடிந்தவர்களை நினைவுகூரவேண்டியது தமிழ்மக்களின் தலையாய கடமையாகும் என மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பாக தகது முகநூலில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். அக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது; மாவீரன் சிவகுமாரன் தொடக்கிய பணியில் பல்லாயிரக்கணக்கான மைந்தர்கள் இந்த மண்ணுக்காக மடிந்து போனார்கள். என்னைப் பொறுத்தவரையில்…