போர்க்குற்ற அறிக்கை பிற்போடப்பட்டமை கவலையளிக்கிறது: த.தே.கூட்டமைப்பு

இலங்கை தொடர்பான போர்க்குற்ற அறிக்கை மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்கப்படாமல் பிற்போடப்பட்டமை கவலை அளிப்பதாக தமிழத் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அரசியல் விவகாரப் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மனுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது இதனை கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். குறித்த அறிக்கை பிற்போடப்பட்ட போதிலும், அடுத்த…

இருதேசம், ஒரே நாடு! என்ற கொள்கையோடு கட்சியை வளப்படுத்தி மக்கள்…

சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட இரு தேசம் ஒரே நாடு என்ற எமது கொள்கையை அடைய, எமது கட்சியைக் கிராமம்தோறும் நிறுவி, புலம்பெயர்ந்துவாழும் எமது உறவுகளையும் தமிழக உறவுகளையும் ஒன்றிணைத்து போராடுவோம். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை…

600 காவற்துறை அதிகாரிகளின் கொலைக்கும் தமக்கும் தொடர்பில்லை – கருணா

1990ம் ஆண்டு ஜுன் மாதம் 600 காவற்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டப்பட்டமைக்கும் தமக்கு தொடர்பில்லை என்று கருணா தெரிவித்துள்ளார். அரசாங்க தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த சம்பவம் இடம்பெறும் போது தாம் வடக்கில் இருந்ததாக அவர் கூறியுள்ளார். இந்த கொலைகள் மூலம் விடுதலைப் புலிகளே…

யானைக் காட்டுக்கு நடுவே இந்திய வீட்டுத் திட்டம்!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் இந்திய அரசாங்கத்தினால் கடந்த 2012 ஆம் ஆண்டு அமைத்துக் கொடுக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் வெள்ளாங்குளம் கணேசபுரம் இந்தியன் வீட்டுத்திட்ட கிராம மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

கிழக்கில் காணி அதிகாரம் இல்லாத அமைச்சுகளை கூட்டமைப்பு கையேற்பது தேவையா?

காணி அதிகாரம் இல்லாத அமைச்சுக்களை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கையேற்பது தேவையா? யுத்தகாலத்தில் பல லட்சக்கணக்கான தமிழ்மக்களின் காணிகள் பலராலும் ஆக்கிரமிக்கப்பட்டன அல்லது சுவீகரிக்கப்பட்டன. இழந்த காணிகளை மீட்பதற்காவது காணிஅதிகாரத்தை த.தே.கூட்டமைப்பு யாருக்கும் விட்டுக்கொடுக்கக்கூடாது. இவ்வாறு கிழக்குமாகாணசபையின் த.தே.கூட்டமைப்பின் மூத்தஉறுப்பினர் துரைரட்ணம் தமது மட்டக்களப்பு பணிமனையில் நடைபெற்ற ஆதரவாளர்களுடனான கூட்டத்தில் பேசுகையில்…

அழுகண்ணீர் விடுபவர் துயரம் தீர்வது எந்நாளோ?

தமிழ் அன்னையர் விடும் கண்ணீர் கணக்கின்றிப் போகிறது. காணாமல்போன தங்கள் பிள்ளைகளுக்காக,  குடும்பத் தலைவர்களுக்காக ஆண்டுக்கணக்கில் அழுவதென்பது சாதாரணமானதன்று கண்ணீரோடு உறங்கி கண்ணீரோடு விழிக்கின்ற பரிதாபத்துக்கு என்றுதான் முடிவு கிட்டும்? பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த போது எங்கள் அன்னையர் நிலத்தில் வீழ்ந்து நீளுமோ எங்கள்…

தமிழக அகதிகளை அழைத்து வர முடியாது! – மீள்குடியேற்ற அமைச்சர்…

எவ்வித வசதிகளும் இன்றி தமிழக அகதிகளை அழைத்து வர முடியாது என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வவுனியாவுக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் சுவாமிநாதன், அங்கு மக்களுடனான சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில்…

இந்திய மீனவர்கள் 86 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது

சட்ட விரோதமான முறையில் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 86 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவின் கிழக்குப் பகுதியில் இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் இந்திக்க…

சர்வதேசம் எங்களை ஏமாற்றுவதை பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம்: போராடுவோம்!

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிட்டு தமிழ் மக்களுக்கான நீதியை வழங்க வலியுறுத்தி யாழில் மாபெரும் போராட்டம் ஒன்று யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்றது. போராட்டம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவரான அமிர்தலிங்கம் இராசகுமாரன் அவர்கள் தமிழ்…

இந்த நூற்றாண்டின் மனிதப்படுகொலைக்கும் தமிழின அழிப்புக்கும் நீதி கிடைக்குமா? கதிரவன்

இந்த நூற்றாண்டின் மனிதப் படுகொலையும் தமிழின அழிப்பும நடைபெற்று ஐந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டது. ஆனால் கண்ணீரும், இரத்தமும் தமிழன் வீட்டு முற்றத்தினை இன்னமும் ஈரமாக்கிக் கொண்டே இருக்கின்றன. வெண் நிலாவில் தண்ணீர் தேடும் விஞ்ஞான உலகம், எங்கள் கண்ணீரை இன்னமும் கண்டுகொள்ளவில்லை. கண்டுகொள்ள வேண்டிய, தேவையும், அவர்களுக்கில்லை போலும்.…

போர்க்குற்ற அறிக்கை ஒத்தி வைக்கப்பட்டமைக்கு காரணத்தை கூறும் ஐ.நா

நியாயமான காரணங்களின் அடிப்படையிலேயே இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது ஒத்தி வைக்கப்பட்டதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஐ.நா தலைவர் யோகிம் ரகர் ஜகத் இதனை கூறியுள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையின் 28 வது கூட்டத் தொடர் ஆரம்பமாக…

கடந்த ஆண்டிலும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன! வருடாந்த…

கடந்த ஆண்டிலும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டில் 160…

தற்கொலை செய்து கொண்டால்தான் யுத்த குற்றவாளிகள் தப்பலாம் – சம்பந்தன்

யுத்தக்குற்றவாளிகள் தற்கொலை செய்து கொண்டால் மாத்திரமே அவர்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகளில் இருந்து அவர்களால் தப்ப முடியும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தக்குற்ற அறிக்கை தாமதிக்கப்பட்டுள்ளமையானது, யுத்தக்குற்றவாளிகளைத் தப்பிக்க இடமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து…

குற்றவாளியே நீதிபதியாக இருக்கும் போது எப்படி நீதி கிடைக்கும் –…

குற்றவாளியே நீதிபதியாக இருக்கும் போது எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஜோசப் ஆண்டகை அவர்கள். ஜ.நா அறிக்கை தாமதப்படுத்தியமைக்கு கண்டனம தெரிவித்து யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் நடத்தப்பட்ட பேரணியில் கலந்துகொண்டு மனுவைப் பெற்றுக்கொண்ட பின் ஊடகவியலாளரிடம் கருத்துரைக்கும் போதே…

ஜ.நா அறிக்கை பிற்போடப்பட்டமை எமக்குக் கிடைத்த பாரிய வெற்றி –…

ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை ஆறு மாங்களுக்குப் பின்போடப்பட்டமை எமக்குக் கிடைத்த பாரிய வெற்றி என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளார். கட்டுநாயக்கவில் இடம்பெற்ற செயலமர்வில் பங்கெடுத்து உரையாற்றுப் போதே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார். ஜக்கிய நாடுகள் சபையின்…

இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மக்களுக்கு வெளிப்படுத்துங்கள்!- ஜே.வி.பி மாற்றுக்குழு

இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென ஜே.வி.பி.யின் மாற்றுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் சில ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் என்ன என்ன என்பது குறித்து வெளிப்படுத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி. கட்சியின் மாற்றுக் குழு அழைப்பாளர் அனுருத்த பொல்கம்பொல தெரிவித்துள்ளார்.…

நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார். புதிய அசராங்கத்தின் ஊடாக இலங்கையில் மீண்டும் நல்லிணக்கம் மற்றும் ஜனநயாகம் கட்டியெழுப்பப்பட வேண்டியது இன்றியமையாததாகும். நம்பகத்தன்மையுடன் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கையின் புதிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் இன நல்லிணக்க முயற்சிகள்…

ஐ.நா.வின் அறிக்கை பிற்போடப்பட்டமை தமிழருக்கு பின்னடைவா? ச.பா.நிர்மானுசன்

சிறீலங்காவில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து சர்வதேச ஆதரவு அலை மீண்டும் சிறீலங்காவை நோக்கி திரும்பியுள்ளது. தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமான கோரிக்கைகள் இதனால் மீண்டும் பின்தள்ளப்படுகின்றன. இதன் ஒரு உச்சக்கட்டமே, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இருபத்தெட்டாவது கூட்டத் தொடரில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் பணியகத்தின்,…

போரின்போது விஸ்வமடு அருகே 30,000ற்கும் அதிகமான சடலங்கள்: மன்னார் ஆயர்…

இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதியில், நாட்டின் வடக்கே விஸ்வமடு அருகில் 30,000 முதல் 35,000த்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக அந்த சடலங்களுக்கு பிரேதபரிசோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் மூலம் அறிந்ததாக மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்திருக்கிறார். இரண்டு கிழமைகளுக்கு முன்னரே தமக்கு இந்த தகவல் தெரியவந்ததாக பிபிசி…

இலங்கை விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: தமிழக அரசியல் கட்சிகள்…

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை (பிப்ரவரி 23) தொடங்குகிறது. இதையொட்டி, நாடாளுமன்ற விவகாரத் துறை…

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய விசேட குழு…

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் 182 தமிழ்க் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்றில் தெரிவித்த நீதி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ­, இவர்களது குற்றச் செயல்கள் தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அந்தக் குழுவின் தீர்மானத்திற்கமைய குற்றம் நிரூபிக்கப்படாத கைதிகள் இன்னும் 3 வாரங்களுக்குள் விடுவிக்கப்படுவர் என்றும் உறுதியளித்தார். நாடாளுமன்றில்…

அனைத்துலகத்தைப் பகைத்துக் கொண்டு நாம் செயற்பட முடியாது என்பதால் தான்…

அனைத்துலக சமூகத்தைப் பகைத்துக் கொண்டு நாம் செயற்பட முடியாது என்பதால், அவர்களின் இணக்கப்பாட்டுடன், உள்ளகப் பொறிமுறையின் ஊடாக போர்க்குற்ற வவிசாரணைகளை முன்னெடுப்போம் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். போர்க்குற்ற விசாரணை தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் எழுதிய கடிதத்தை…

யுத்தக்குற்ற அறிக்கை தாமதிக்கப்பட்டமை சரியானதே – பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்

சிறிலங்காவுக்கு எதிரான யுத்தக்குற்ற விசாரணை அறிக்கை சமர்பிக்க காலம் தாமதிக்கப்பட்டமையானது, சரியான முடிவே என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தாயினாவின் சிறிலங்காவுக்கான உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவிஸ் இதனைத் தமது வலைபதிவில் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளுக்கு சாட்சி மற்றும் தகவல்களை வழங்கியவர்களுக்கு இந்த தீர்மானம் கடினமானதாக இருக்கும். குறிப்பாக மனித…