100 நாட்களில் மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்: பி.திகாம்பரம்

நானும் இராஜங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணனும் சேர்ந்து மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி மக்களை சுபீட்சமாக வாழவைப்போம் என தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி.திகாம்பரம் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டிற்கான தைப்பொங்கல் விழா தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் ஹட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில் நடைபெற்றபோது அவர் கலந்து கொண்டு உரையாற்றும்…

இலங்கை சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பை வழங்கும்!- பிரித்தானிய பிரபுக்கள் சபை…

சர்வதேச பங்காளிகள் சகிதம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட தாம் தயாராக உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது பிரித்தானிய பிரபுக்கள் சபையின் பேச்சாளர் வலெஸ் ஒப் சல்டைரி வெளியிட்டார். பிரித்தானிய பிரபுக்கள் சபையில் இன்று இலங்கை தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தின்போது இந்த கருத்து வெளியிடப்பட்டது. இலங்கை…

தனியார் காணிகளை மீள ஒப்படைக்குமாறு முப்படைகளுக்கும் ஜனாதிபதி உத்தரவு

வடக்கு, கிழக்கில் படையினர் வசம் உள்ள தனியார் காணிகளில், பாதுகாப்புக்கு உரியவை தவிர்ந்த ஏனையவற்றை பொதுமக்களிடம் மீள ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ஆயுதப்படைகளின் தளபதிகளுக்கு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் செயலர் பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.…

வீரத்தின் பலம் அழிந்தாலும் எமது வாக்குகளின் பலம் ஓங்கி நிற்கும்…

ஈழத் தமிழர்களின் தமிழர்களின் வீரத்தின் பலம் அழிந்தாலும் எமது வாக்குகளின் பலன் ஓங்கி நிற்கும் புத்துணர்வோடு இவ்வாண்டின் தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை பெருமையோடு கொண்டாடுவோம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வெளியிட்டுள்ள பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தினச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழ் பண்பாட்டு…

தேர்தல் முடிந்தது! கூட்டமைப்பு முன்னால் உள்ள கேள்விகள்?

2005 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டதால் மஹிந்த ராஜபக்‌ஷ வெற்றியடைந்தார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்ததால் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்துள்ளார் என கூறமுடியுமா? என மாணவன் ஒருவர் கேட்டான். அதற்கு பதிலளித்த அரசியல் விஞ்ஞான விரிவுரையாளர், அப்படியானால் 2010ஆம்…

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி இந்த முறை விட்டுக் கொடுக்கப்படமாட்டாது…

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை இந்த முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டுக் கொடுக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.கூட்டமைப்பின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 20ம் திகதி கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன இணைந்து, கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்கவுள்ளன. இதன்…

அமைச்சர் பதவிகளை ஏற்க போவதில்லை! 100 நாள் வேலைத்திட்டத்திற்காக காத்திருக்கிறேன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய அரசாங்கத்தில் தனக்கு எந்தவிதமான அமைச்சர் பதவிகளையும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார். 100 நாள் வேலைத்திட்டத்திற்காக எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்த அவர்…

வெள்ளை வானுக்கும் கொலை பயமுறுத்தலுக்கும் முடிவு கட்டப்பட்டுவிட்டது: ஊடக அமைச்சர்

இலங்கையில் வெள்ளை வான் அச்சுறுத்தல் மற்றும் கொலை அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டப்பட்டு விட்டதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு இன்று காலை கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் இனி வெள்ளை வான் பின் தொடர்வது மற்றும்…

மகிந்தவுடன் இருந்த தமிழ் துரோகிகளை அரசில் இணைக்க வேண்டாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசில் அமைச்சர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், பதவி வகித்து தமிழர் விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட வடக்கு, கிழக்கைச் சேர்ந்தோரை புதிய அரசில் எக்காரணம் கொண்டும் இணைத்துக் கொள்ள வேண்டாம். என ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர் நேற்று திங்கட்கிழமை புதிய ஜனாதிபதி மைத்திரிபால…

பிள்ளையானுக்கு ஆரம்பித்தது “ஏழரை சனி” ஆரம்பம்: வீட்டை அடித்து நொருக்கினார்கள்…

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் குற்றம் சுமத்தியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் தமது கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பழிவாங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் தினமன்று முதல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள்…

ஒரே உறையில் பல பேரினவாதக் கூர் வாள்கள். – இதயச்சந்திரன்…

மைத்திரியும் ரணிலும் சேர்ந்து மந்திரி சபையை அமைத்தாலும் நாடாளுமன்றில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டும். இப்போது தொண்டமானுக்கும், ஏனைய 'மனம் மாறாத' மகிந்த விசுவாச எம்.பிக்களுக்கும் சந்திரிகா வலைவீசிக் கொண்டிருக்கிறார். ஆறுமுகன் சென்னைக்கு எஸ்கேப். முதல் விசிட் இந்தியாவிற்கு என்று சொல்லியிருக்கிறார் 'ஜனநாயகக் காவலன்' மைத்திரி. அனேகமாக எம்.பிக்களின் எண்ணிக்கையை…

வடக்கில் உள்ள சிங்கள ராணுவ முகாம் மீது கற்கள் வீசப்பட்டது-…

கடந்த தேர்தல் காலத்தில் வடக்கின் இராணுவ முகாம்களுக்கு கற்கள் வீசப்பட்டமை போன்ற எந்தவொரு வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறவில்லை என, இராணுவ ஊடகப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். தேர்தல் பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர், கடந்த வௌ்ளிக்கிழமையில் இருந்து இவ்வாறான வதந்திகள் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றின் மூலம் பரப்பப்பட்டு வந்தன.…

கிழக்கு மாகாணம் கூட்டமைப்பின் ஆட்சிக்கு வரும்: எஸ்.தண்டாயுதபாணி

கிழக்கு மாகாண சபையில் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பே மாகாணத்தின் புதிய அரசாங்கத்தினை அமைக்கும் என மாகாண சபை உறுப்பினர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார். இன்று கிழக்கு மாகாண சபையில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில்…

‘மைத்திரி அரசாங்கம் நல்லெண்ணத்தை செயலில் காட்டவேண்டும்’

இலங்கையில் நடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ள நல்லெண்ணத்தின் அடிப்படையிலான வெற்றியைப் புரிந்து கொண்டு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம், செயல் வடிவில் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்…

‘மைத்திரி அரசாங்கம் மனித உரிமைப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும்’

இலங்கையில் முன்னைய அரசாங்கத்தினால் தீர்க்கப்படாது விடப்பட்ட மனித உரிமைப் பிரச்சனைகளை புதிய அரசாங்கம் அவசரமாகத் தீர்க்க வேண்டும் என்று அம்னஸ்டி இண்டர்நேஷனல் என்ற சர்வதேச மனித உரிமைகள் நிறுவனம் கூறியுள்ளது. இலங்கையின் இறுதிப் போரில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐநாவின் முன்னெடுப்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஐநாவின்…

‘மாற்றுக் கருத்தாளர்கள் நாடு திரும்ப வேண்டும்’: மைத்திரி

இலங்கையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் காணாமல்போனதாக கூறப்பட்ட ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் நினைவாக நடத்தப்பட்ட போராட்டம் ஒன்று   அரசியல் மாற்றுக் கருத்தாளர்கள் நாடு திரும்பவேண்டும் என்றும்…

தமிழர்களை மறந்து போன புதிய ஜனாதிபதி! மனோ!

தேர்தல் காலங்களில் தமிழர்களின் ஆதரவைக் கோரிப் பெறுவது. தேர்தல் முடிந்ததும் தமிழர்களை உதாசீனம் செய்து உதறித் தள்ளுவது. இதுதான் தென்னிலங்கை அரசுகளின் காலாகால பரவணிப் பழக்கம். அதை இன்று ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடனேயே செயலில் காட்டத் தொடங்கி விட்டீர்களே!" என்று புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது சீறி…

மீண்டும் ஜனாதிபதியாகும் எண்ணம் இல்லை: ஜனாதிபதி மைத்திரிபால

எதிர்கால சந்ததியினரை கவனத்திற்கொண்டு செயற்படுவோம். நாட்டு மக்களுக்கு கொடுத்த 100 நாள் வேலைத்திட்டத்தினை நிறைவேற்றுவேன். அத்தோடு மீண்டுமொருமுறை ஜனாதிபதியாகும் எண்ணம் எனக்கு இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கையின் 6வது ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அவர், தனது கன்னி உரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்…

யார் இந்த மைத்திரி? – ஒரு கண்ணோட்டம்

இலங்கையின் 7வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மைத்திரிபால சிறிசேனவின் வாழ்க்கைக் குறிப்பு, குறித்த ஒரு கண்ணோட்டம் பிறப்ப: 1955, செப்டம்பர் 3 ஆம் திகதி, கனேமுல்லவில் உள்ள விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பக்கல்வி: பொலன்னறுவ தோபா வெவ கல்லூரி, பொலன்னறுவ ரோயல் கல்லூரி. உயர்கல்வி:  ரஷ்யா மார்க்சிம் கோர்க்கி…

மைத்திரியோடு புதிய பிரதமராக ரணிலும் இன்று பதவியேற்பு

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதிவுயேற்றவுடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பிரதமர் தி.மு.ஜயரத்ன உள்ளிட்ட அமைச்சரவை செயலிழந்துவிடும்.…

தேர்தலில் தாம் தோற்றுவிட்டதாக உணர்ந்த ராஜபக்ஷ, அழுதவாறு அலரிமாளிகையில் இருந்து…

இன்று (09) அதிகாலை அழுத வண்ணம் அலரி மாளிகையில் இருந்து புறப்பட்டார் மகிந்த ராஜபக்ஷ: சகோதரர்கள் எவரும் பக்கம் இல்லை நடந்து முடிந்த தேர்தலில் தாம் தோற்றுவிட்டதாக உணர்ந்த ராஜபக்ஷ, அழுதவாறு அதிகாலை வேளை அலரிமாளிகையில் இருந்து வேறு இடம் ஒன்றுக்குச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும்…

‘தெரிந்த பிசாசு’ ராஜபக்சேவை ஓட ஓட “வாக்குகளால்” விரட்டியடித்த ஈழத்…

யாழ்ப்பாணம்: இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராஜபக்சே மிக மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மைத்ரிபால ஸ்ரீசேன மிக மிக அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். இலங்கை அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது தமிழர் பகுதிகளில் தீவிர பிரசாரம்…

இலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சே படுதோல்வி- மைத்ரிபால ஸ்ரீசேன அதிபராகிறார்!!

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே படுதோல்வியைத் தழுவி வருகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட 49 எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்ரிபால ஸ்ரீசேன முன்னிலை வகித்து வருவதால் இலங்கையின் அடுத்த அதிபராகிறார். மைத்ரிபாலவுக்கு 53%; ராஜபக்சேவுக்கு 45.6%; வாக்குகள் கிடைத்துள்ளன. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று…