பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களையும் விடுவிக்கக் கோரிக்கை
போதைப் பொருள் கடத்திய குற்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் இன்று இந்திய மீனவர்கள் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதைப் போன்று, அவர்களுடன் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மண்டைதீவு மற்றும் குருநகர் ஆகிய இடங்களைச் சேர்ந்த இலங்கை மீனவர்கள் மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என அவர்களது…
மலையகத் தமிழர் மத்தியிலும் இனச்சுத்திகரிப்பு: பாராளுமன்றில் சிறீதரன் எம்.பி
மலையகத் தமிழர் மத்தியிலும் இனச்சுத்திகரிப்பு இடம்பெற்று வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றில் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் தெரிவுக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும்…
20 இலங்கைத் தமிழ் அகதிகள் திருச்சியில் தற்கொலை முயற்சி!
திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த 20 இலங்கைத் தமிழர்கள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். திருச்சியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில், பல்வேறு குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஏராளமான இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், தங்களை வேறு முகாமிற்கு…
போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து ஒரு தீபம்கூட ஏற்றமுடியாத நிலையில் தமிழினம்:…
போரில் உயிரிழந்த 145,000 தமிழ் மக்களையும் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி உயிரிழந்த 40000 ற்கும் மேற்பட்ட விடுதலை போராளிகளையும் நினைவுகூர்ந்து ஒரு தீபம்கூட ஏற்றமுடியாத நிலையில் இலங்கையில் தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என பா.அரியநேத்திரன் எம்.பி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று 11 அமைச்சுக்களுக்கான குழு நிலை விவாதத்தில் கலந்து…
மருத்துவர்களும் மருந்துகளும் இல்லாத நிலையில் மலையக மருத்துவமனைகள்! தொடர் துன்பத்தில்…
மனிதர்களுக்கு நோய்கள் ஏற்படும் போது முதலில் வைத்தியர்களை நாடுவதோடு, அவர்களை கடவுளாகவும் கருதுகின்றார்கள். எமது அரசாங்கங்கத்தில் அரச வைத்தியசாலைகள் உருவாக்கப்பட்டு இலவச சிகிச்சைகள், மருந்துகள் நோயாளர்களுக்கு வழங்கினாலும் அது எந்த அளவுக்கு மக்களுக்கு சாதகமாக அமைகின்றது? மலையக பகுதிகளில் பல இடங்களில் அரச வைத்தியசாலைகள் இயங்கி வருகின்ற போதிலும்…
எமது காணி எமக்கு வேண்டும் இல்லாவிட்டால் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருந்து…
எமது காணி எமக்கு வேண்டும் இல்லாவிட்டால் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருந்து மடிவோம் என மாதகல் காணி உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். யாழ். மாதகல் துறைமுக பகுதியில் உள்ள 4 பரப்பு காணியினை கடற்படை முகாம் அமைக்கும் நோக்குடன் சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யும் பணிகள் இன்றைய தினம் மோற்கொள்ளப்பட இருந்தன.…
இலங்கையின் உள்விவகாரங்களில் எந்த விதத்திலும் தலையிடுவதில்லை: பா.ஜ.க
இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா எந்த விதத்திலும் தலையீடுகளை மேற்கொள்ளாது என அந்நாடு தெரிவித்துள்ளது. பொருளாதார மற்றும் அபிவிருத்தி தொடர்பில் சுதந்திரமான தீர்மானங்களை எடுக்கும் உரிமையை இந்தியா மதிப்பதாக பாரதீய ஜனதா கட்சியின் பேச்சாளரான எம்.எஸ்.அக்பர் கூறியுள்ளார். இந்தியாவின் புதிய பிரதமரான மோடியின் பதவியேற்பில் கலந்து கொள்ள இலங்கை ஜனாதிபதி…
விக்னேஸ்வரன் சென்னையில் ஆற்றிய உரை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது
கடந்த 25 ஆண்டுகளின் பின்னர் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட தமிழர் சமூகத்தின் தலைவர் என்ற வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்தியாவின் சென்னையில் மக்கள் மத்தியில் எடுத்துக்கூறிய முதலாவது அரசியற் தலைவராக விக்னேஸ்வரன் நோக்கப்படுகிறார். இவரால் சென்னையில் ஆற்றப்பட்ட உரையானது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இவ்வாறு THE…
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு பொய்யன் – எரிக்…
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு அப்பட்டமான பொய்யன் என்றும், தேர்தலுக்காகப் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார் என்றும் இலங்கைக்கான நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இன்று கடுமையாகச் சாடியிருக்கிறார். இறுதி யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னர், இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்…
சவேந்திர சில்வாவுக்கு எதிரான சாட்சியமளித்தவரின் விபரங்கள் சேகரிப்பு
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சாட்சியமளித்தவரின் விபரங்கள் அரசாங்கத்தினால் சேகரிக்கப்பட்டுள்ளன. ஐ.நா.வுக்கான இலங்கையின் துணை நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக தற்போது கடமையாற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இறுதிக் கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரியொருவரும்…
தமிழகத்தில்தான் பாதுகாப்பு! இலங்கை செல்லமாட்டோம்: விக்கியின் அழைப்பை ஏற்க மறுக்கும்…
'தமிழகத்தில் நிம்மதியாக, பாதுகாப்பாக உள்ளோம்; இலங்கை சென்றால், எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இருக்காது; அங்கு செல்ல விரும்பவும் இல்லை; இந்திய குடி உரிமை கிடைத்தால் போதும்' என, தமிழகத்தில், அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்; இலங்கை வடக்கு மாகாண முதல்வர், விக்னேஸ்வரனின் அழைப்பை, அவர்கள்…
ஜனாதிபதி தேர்தலில் ஆதரளிப்பதற்கு தமிழ் கூட்டமைப்பு ஆறு நிபந்தனை
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆறு நிபந்தனைகளை பிறப்பித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு கிழக்கிற்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்குதல், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 புலி உறுப்பினர்களை விடுதலை செய்தல் உள்ளிட்ட ஆறு முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.…
ஐ.நா. மனித உரிமைப் பேரவை ஆணையாளருடன் சமாதானப் பேச்சுவார்த்தை?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசெய்னுடன் அரசாங்கம் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் வாரத்தில் அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவொன்று சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளது. இந்தப் பிரதிநிதிகள் குழுவிற்கு பெரும்பாலும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய…
இலங்கை அகதிகளை மீள அழைப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை
இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீள அழைப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் இந்திய அகதி முகாம்களில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை மீளவும் நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் விரைவில் இலங்கை மற்றும் இந்திய…
இளைஞர்களை நாட்டை விட்டு விரட்டவே முன்னாள் போராளி சுட்டுக் கொலை
மன்னார், வெள்ளங்குளத்தில் முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இரு சூழ்ச்சித் திட்டங்கள் இருக்கின்றன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டினார். யுத்தம் முடிந்த பின்னர் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படகுகளில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றனர். இவாறான சட்டவிரோத பயணத்தில் சில அமைச்சர்களும், கடற்படை அதிகாரிகளும்…
கமரூன் 2014 ல் கூட இலங்கைக்கு ஆயுதங்களை விற்கிறார்: அதிரும்…
இலங்கைக்கு அதி நவீன ஆயுதங்களை விற்பனை செய்து வரும் நாடுகளில், பிரிட்டனும் முதலிடம் வகிக்கிறது என்பது பெரும் அதிர்சி தரும் விடையமாக அமைந்துள்ளது. பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள், சமீபத்தில் இலங்கை சென்று யாழ்பாணமும் சென்று மக்களை சந்தித்தார். மேலும் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடைபெறவேண்டும் என்று…
சிறீலங்கா அரசாங்கம் விரைவில் போர்குற்றச் சட்டங்களின் கீழ் தண்டிக்கப்படும்!! உலக…
சிறிலங்கா அரசாங்கம் விரைவில் போர்க்குற்ற சட்டங்களின் கீழ் தண்டிக்கப்படும் என்று உலக போர்க்குற்றங்களை ஆவணப்படுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரிவு தெரிவித்துள்ளது. அதன் பேச்சாளர் ஒருவர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு இந்த விடயத்தை கூறியுள்ளார். இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளே தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள்…
புலம்பெயர் தமிழர்களுடன் அராசங்கம் போராடுகின்றது! சஜின் வாஸ்
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களுடன் அரசாங்கம் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருப்பதாக சஜின் வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கான நிதியொதுக்கீட்டின் விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். விடுதலைப்…
இந்தியாவை புறம் தள்ளி சீனாவுடன் உறவைப் பேணுவது ஆபத்தானது: பாராளுமன்றில்…
குறுகிய அரசியல் நோக்கத்துக்காக இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான உறவைப் புறம் தள்ளி சீனாவுடன் உறவைப் பலப்படுத்துவதன் ஊடாக இலங்கை ஆபத்தையே எதிர்கொள்ளும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் நடைபெற்றது. இந்த விவாதத்தில்…
விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவிலிருந்து இலங்கை வந்த விமானப் பயணி ஒருவரே விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளையன் ராசகுமார் என்ற பெயருடைய இவர் விடுதலைப் புலிகளின்…
முன்னாள் போராளி சுட்டுக் கொலை! இராணுவமே பொறுப்பு என்கிறது கூட்டமைப்பு…
மன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் முன்னாள் போராளியான, கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் வன்மையாகக் கண்டித்துள்ளார். கொடிய போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்த ஆயுததாரிகள் முயற்சிப்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளரான நகுலேஸ்வரன் ஆயுததாரிகளால்…
இலங்கையின் இறுதிக்கட்ட போர் ஆதாரங்களை ஐ.நா சபை திட்டமிட்டு மறைத்துள்ளது!-…
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது நிகழ்ந்த போர் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை ஐ.நா சபை திட்டமிட்டு மூடிமறைத்துள்ளதாக ஐ.நா சபையின் உள்ளகத் தகவல்களை வெளியிடும் ஊடகமான இன்னர் சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கையில் இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற காலப்பகுதியான 2009 ஜனவரி 20ம் திகதி முதல் 2009…
பான் கீ மூனின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பு
ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கைப் படையினருக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு சாட்சியம் திரட்ட அனுமதிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் பான் கீ மூன் கோரியுள்ளார். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள…
